Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எறிகணை தாக்குதலிற்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் இறுதி அழுகுரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்- நவநீதம் பிள்ளை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
காயமடைந்தவர்களிற்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவேளை எறிகணை தாக்குதலிற்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் உதவிக்கான இறுதிஅழுகுரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம் என முன்னாள் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
navi-pillay2-300x196.jpg
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி ஆறுமாதங்களும் பல முறை சர்வதேச தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன.
நாங்கள் பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் என குற்றம்சாட்டப்படுபவர்களை இலங்கை இராணுவம் அவர்கள் வெள்ளை கொடியை காண்பித்தவேளையிலும் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம்.
தமிழ்பொதுமக்கள் மீதான கடுமையான விமான குண்டுவீச்சுகளையும் அவர்களின் வீடுகள் மருத்துவமனைகள் கோவில்கள் அடைக்கலம் கோரிய இடங்கள் அழிக்கப்பட்டதையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம்.
பயங்கரவாதிகள் என குற்றம்சாட்டப்படுபவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னரும் இந்த தாக்குதல் இடம்பெற்றது.
காயமடைந்தவர்களிற்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவேளை எறிகணை தாக்குதலிற்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் உதவிக்கான இறுதிக்குரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பிழம்பு said:

இறுதிஅழுகுரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்

3 hours ago, பிழம்பு said:

தலைவர்கள் என குற்றம்சாட்டப்படுபவர்களை இலங்கை இராணுவம் அவர்கள் வெள்ளை கொடியை காண்பித்தவேளையிலும் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம்.

3 hours ago, பிழம்பு said:

தமிழ்பொதுமக்கள் மீதான கடுமையான விமான குண்டுவீச்சுகளையும் அவர்களின் வீடுகள் மருத்துவமனைகள் கோவில்கள் அடைக்கலம் கோரிய இடங்கள் அழிக்கப்பட்டதையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

3 hours ago, பிழம்பு said:

காயமடைந்தவர்களிற்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவேளை எறிகணை தாக்குதலிற்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் உதவிக்கான இறுதிக்குரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்.

பார்த்திருக்கின்றோம், செவிமடுத்திருக்கின்றோம். இருந்தும் இன்றுவரைக்கும் எதுவுமே செய்ய முடியவில்லை. சுருக்கமாக சொல்லப்போனால் அவர்களை எதிர்க்கக்கூட திராணியற்றவர்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பார்த்திருக்கின்றோம், செவிமடுத்திருக்கின்றோம். இருந்தும் இன்றுவரைக்கும் எதுவுமே செய்ய முடியவில்லை. சுருக்கமாக சொல்லப்போனால் அவர்களை எதிர்க்கக்கூட திராணியற்றவர்கள்.

 

 

உங்கள் ஆலாபனைகளை நாங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை, மகா சங்கத்தினரின் பிரித்தால் எங்களை மயக்கமுடியாது, நாங்கள்  கண்டதையும், கேட்டதையும், விசாரித்து அறிந்து கொண்டதையும்  கொண்டு உங்கள் மேல் நடவடிக்கை எடுக்க  தயாராகி விட்டோம் என்று சொல்கிறா. இவர்கள் பல அறிக்கைகளோடும், திட்டங்களோடும், கால அவகாசம் கேட்டு வருகிறார்கள்  என்று யாரோ சொல்லிபோட்டினம் இவாவுக்கு என்று நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் விடும்  அறிக்கைகளை பார்க்கும்போது; இந்தமுறை ஐ . நாவை கையாளுவது இலங்கைக்கு  அவ்வளவு இலகுவானதாக  இருக்கப்போவதில்லை எனத் தோன்றுகிறது. இருந்தாலும் இலங்கை இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் உதவியுடனும், பொய்களுடனும் சமாளித்து விடுவேன் என்று  ஆரவாரிக்கிறது. இலங்கைக்கு ஆதரவாக குரல் எழுப்பும் நாடுகளின் மனித உரிமை மீறல்களையும் நோண்ட வெளிக்கிட்டால் எதுக்குடா வம்பு என்று அந்த நாடுகள்  ஒதுங்கும் நிலைமைகளை ஏற்படுத்தக் கூடிய நிலை வராதா என்றும் பாழாய்ப்போன என் மனம் ஏங்குகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பார்த்திருக்கின்றோம், செவிமடுத்திருக்கின்றோம். இருந்தும் இன்றுவரைக்கும் எதுவுமே செய்ய முடியவில்லை. சுருக்கமாக சொல்லப்போனால் அவர்களை எதிர்க்கக்கூட திராணியற்றவர்கள்.

 

 

அண்ணை, 

இதை இவாவின்ர வாக்குமூலமா எடுத்தால் என்ன? போர்க்குற்ற விசாரணையென்றோ இனவழிப்பென்றோ ஆராவது ஒரு காலத்தில விசாரிக்க வெளிக்கிட்டல் இதைச் சாட்சியாக எடுக்கலாம்.

ஆனால், நீங்கள் சொன்னதுபோல, பார்த்துக்கொண்டிருந்துபோட்டு இப்ப வந்து கண்டம், கேட்டம் எண்டு அழூறதில ஒரு பிரியோசனமும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

உங்கள் ஆலாபனைகளை நாங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை, மகா சங்கத்தினரின் பிரித்தால் எங்களை மயக்கமுடியாது, நாங்கள்  கண்டதையும், கேட்டதையும், விசாரித்து அறிந்து கொண்டதையும்  கொண்டு உங்கள் மேல் நடவடிக்கை எடுக்க  தயாராகி விட்டோம் என்று சொல்கிறா. இவர்கள் பல அறிக்கைகளோடும், திட்டங்களோடும், கால அவகாசம் கேட்டு வருகிறார்கள்  என்று யாரோ சொல்லிபோட்டினம் இவாவுக்கு என்று நினைக்கிறன்.

என்னது .....காந்தி செத்துட்டாரா ...?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.