Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை – கஜேந்திரன் திட்டவட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை – கஜேந்திரன் திட்டவட்டம்

 
Kajendrakumar.jpg
 14 Views

தமிழ் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார் அந்தக் கட்சியின் செ. கஜேந்திரன்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி பேசின. ஆரம்பத்தில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், இந்தப் பேரவையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைந்து பயணிக்குமா? என்று அந்தக் கட்சியின் செயலாளர் செ. கஜேந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டது. இதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:

“பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்டம் வெற்றிகரமாக மக்கள் எழுச்சி போராட்டமாக இடம் பெற்றது. இதற்கு தமிழ் அரசுக் கட்சியும் ஆதரவளித்தது. ஆனால், இந்தப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் விதமாக பச்சைத் துரோகத்தனமாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

இன்று தமிழ் மக்களுக்கு பலவீனமான ஐ. நா. வின் அறிக்கை ஒன்று வந்துள்ளது என்றால் அதை முழுமையாக தமிழ் அரசுக் கட்சிதான் ஏற்க வேண்டும். ‘சுமந்திரனின் இந்தத் துரோகத்தனத்தை நியாயப்படுத்தும் விதமாகவே எம்.கே.சிவாஜிலிங்கமும் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்தத் தரப்புக்கள் கூடித்தான் இந்தப் பேரவையை அமைக்கின்றன. இது முழுக்க முழுக்க கண்துடைப்பு நாடகம். மக்களை ஏமாற்றி தாங்கள் செய்யும் துரோகத்தை மறைக்கும் விதமாகவே நாங்கள் இதனைப் பார்க்கிறோம்.

தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரான சுமந்திரன் அந்தக் கூட்டில் இருந்து கொண்டு கோட்டாபயவை பாதுகாப்பதற்காக நாடகமாடுகிறார் என்பதே எமது கருத்து” என்றார்.

 

https://www.ilakku.org/?p=42837

  • கருத்துக்கள உறவுகள்

இது வேற...

😴

தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசிய பட்டியல் சலுகை மூலம் பாராளுமன்றம் சென்றவர் தானே இந்த கஜேந்திரன். இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது இது முதல் தடவை அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியப் பேரவையில் இணைய மாவைக்கு சம்பந்தன் முட்டுக்கட்டை.!

Screenshot-2021-02-23-09-00-36-927-com-a

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்தனிக் கட்சிகளை அமைத்தவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியினதோ கட்சி, கட்டமைப்பு ரீதியான முடிவு எடுக்கப்படாத நிலையில் தன்னிச்சையாகப் புதுக்கூட்டு எதையும் உருவாக்கும் தீர்மானத்தை எடுக்கவோ, அறிவிக்கவோ வேண்டாம்."

- இவ்வாறு மிகத் திட்டவட்டமான, தெளிவான அறிவுறுத்தலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவுக்குத் தொலைபேசி மூலம் வழங்கியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி.

'தமிழ்த் தேசியப் பேரவை' அமைவது குறித்து ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் கூட்டாகத் தாம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தமை குறித்து நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்புத் தமிழ் தொலைக்காட்சிச் சேவை ஒன்றில் வெளியான செய்தித் தொகுப்பை கேட்டறிந்த பின்னரே மாவை சேனாதிராஜாவுடன் நேற்று திங்கட்கிழமை காலை சம்பந்தன் தொடர்புகொண்டார் என அறியவந்தது.

தாம், அந்தக் கூட்டத்தில் இருக்கவில்லை என்றும், தமக்குத் தெரியாமல் இடம்பெற்ற சம்பவம் அது என்றும் சாரப்பட மாவை சேனாதிராஜா பதிலளித்தார்.

"செய்தியாளர் மாநாட்டில் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சிவஞானமும் இருந்திருக்கின்றார். நானே நேரடியாக விடயங்களைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். கூட்டமைப்பிலிருந்து விலகி, கூட்டமைப்பை நலிவுபடுத்தியோரே அல்லோ மற்றெல்லோரும்.

அவர்கள் எல்லோருமே விரும்பினால் கூட்டமைப்புக்குள் வரலாம். நாங்கள் அவர்கள் யாரையும் வெளியே அனுப்பவில்லை. தாங்களாகவே வெளியேறினார்கள். அவர்கள் விரும்பினால் எல்லோரும் கூட்டமைப்புக்குள் வரலாம்.

அப்படி இருக்கையில் ஏன் தனியாக அவர்களுடன் இன்னொரு கூட்டு? கூட்டமைப்பை நலிவுபடுத்தவா? அதுவும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியின் தலைவர்களுடன் கலந்து பேசி ஒரு முடிவு எட்டாமல் எப்படி கூட்டமைப்பையும் சேர்த்து புதிய கூட்டுச் செயற்பாடு குறித்து ஒரு தலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்க முடியும்? அதுபோலவேதான் தமிழரசுக் கட்சிக்கும்.

கட்சி உரிய முறையில் அமைப்பு ரீதியாகக் கூடி ஒரு முடிவு எடுக்காமல், கட்சியிலிருந்து வெளியேறியோருடன் ஒரு தலைப்பட்சமாக நீங்கள் எப்படி கூட்டுச் செயற்பாடு, கூட்டு என்று நடவடிக்கைகளை எடுக்க முடியும்? உடனடியாகச் சம்பந்தப்பட்டோருக்கு அறிவித்து, உரிய வழிகாட்டுதல்களை வழங்கி, இந்த நடவடிக்கைகளை நிறுத்தச் சொல்லுங்கள்.

நாங்கள் கலந்து பேசி பின்னர் தீர்மானங்களை எடுக்கலாம். அவசரப்பட்டு தம்மிஷ்டப்படி யாரும் முடிவுகளை எடுத்து அறிவிக்க அனுமதியாதீர்கள்" என்று சாரப்பட இரா.சம்பந்தன் அறிவுறுத்தலை வழங்கினார்.

சம்பந்தரின் கருத்தை மாவை சேனாதிராஜா எதிர்த்துப் பேசாமல் செவிமடுத்து, இணக்கம் தெரிவித்தார் என்றும் அறியவந்தது.

http://aruvi.com/article/tam/2021/02/23/22942/

டிஸ்கி: 

tenor.gif

  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் நிராகரிக்கப்பட்டவர் பொறுப்பற்றவர் என்பதா இல்லை  மக்களால் தெரிவு செய்யப்பட்டவரும் பொறுப்பற்றவர் என்பதா?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழ்த் தேசியப் பேரவையில் இணைய மாவைக்கு சம்பந்தன் முட்டுக்கட்டை.!

Screenshot-2021-02-23-09-00-36-927-com-a

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்தனிக் கட்சிகளை அமைத்தவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியினதோ கட்சி, கட்டமைப்பு ரீதியான முடிவு எடுக்கப்படாத நிலையில் தன்னிச்சையாகப் புதுக்கூட்டு எதையும் உருவாக்கும் தீர்மானத்தை எடுக்கவோ, அறிவிக்கவோ வேண்டாம்."

- இவ்வாறு மிகத் திட்டவட்டமான, தெளிவான அறிவுறுத்தலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவுக்குத் தொலைபேசி மூலம் வழங்கியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி.

'தமிழ்த் தேசியப் பேரவை' அமைவது குறித்து ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் கூட்டாகத் தாம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தமை குறித்து நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்புத் தமிழ் தொலைக்காட்சிச் சேவை ஒன்றில் வெளியான செய்தித் தொகுப்பை கேட்டறிந்த பின்னரே மாவை சேனாதிராஜாவுடன் நேற்று திங்கட்கிழமை காலை சம்பந்தன் தொடர்புகொண்டார் என அறியவந்தது.

தாம், அந்தக் கூட்டத்தில் இருக்கவில்லை என்றும், தமக்குத் தெரியாமல் இடம்பெற்ற சம்பவம் அது என்றும் சாரப்பட மாவை சேனாதிராஜா பதிலளித்தார்.

"செய்தியாளர் மாநாட்டில் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சிவஞானமும் இருந்திருக்கின்றார். நானே நேரடியாக விடயங்களைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். கூட்டமைப்பிலிருந்து விலகி, கூட்டமைப்பை நலிவுபடுத்தியோரே அல்லோ மற்றெல்லோரும்.

அவர்கள் எல்லோருமே விரும்பினால் கூட்டமைப்புக்குள் வரலாம். நாங்கள் அவர்கள் யாரையும் வெளியே அனுப்பவில்லை. தாங்களாகவே வெளியேறினார்கள். அவர்கள் விரும்பினால் எல்லோரும் கூட்டமைப்புக்குள் வரலாம்.

அப்படி இருக்கையில் ஏன் தனியாக அவர்களுடன் இன்னொரு கூட்டு? கூட்டமைப்பை நலிவுபடுத்தவா? அதுவும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியின் தலைவர்களுடன் கலந்து பேசி ஒரு முடிவு எட்டாமல் எப்படி கூட்டமைப்பையும் சேர்த்து புதிய கூட்டுச் செயற்பாடு குறித்து ஒரு தலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்க முடியும்? அதுபோலவேதான் தமிழரசுக் கட்சிக்கும்.

கட்சி உரிய முறையில் அமைப்பு ரீதியாகக் கூடி ஒரு முடிவு எடுக்காமல், கட்சியிலிருந்து வெளியேறியோருடன் ஒரு தலைப்பட்சமாக நீங்கள் எப்படி கூட்டுச் செயற்பாடு, கூட்டு என்று நடவடிக்கைகளை எடுக்க முடியும்? உடனடியாகச் சம்பந்தப்பட்டோருக்கு அறிவித்து, உரிய வழிகாட்டுதல்களை வழங்கி, இந்த நடவடிக்கைகளை நிறுத்தச் சொல்லுங்கள்.

நாங்கள் கலந்து பேசி பின்னர் தீர்மானங்களை எடுக்கலாம். அவசரப்பட்டு தம்மிஷ்டப்படி யாரும் முடிவுகளை எடுத்து அறிவிக்க அனுமதியாதீர்கள்" என்று சாரப்பட இரா.சம்பந்தன் அறிவுறுத்தலை வழங்கினார்.

சம்பந்தரின் கருத்தை மாவை சேனாதிராஜா எதிர்த்துப் பேசாமல் செவிமடுத்து, இணக்கம் தெரிவித்தார் என்றும் அறியவந்தது.

http://aruvi.com/article/tam/2021/02/23/22942/

டிஸ்கி: 

tenor.gif

இந்தியாவின் கட்டளையை சிரமேற் பணிந்து.....சம்பந்தன் ஐயா...

🤣

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

மக்களால் நிராகரிக்கப்பட்டவர் பொறுப்பற்றவர் என்பதா இல்லை  மக்களால் தெரிவு செய்யப்பட்டவரும் பொறுப்பற்றவர் என்பதா?

இலங்கை அரசியலில் தமிழர் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துவோர்  பொறுப்பற்று நடப்பது இது முதற் தடவை அல்ல. இந்த இரண்டுமே  மிகச்சிறிய உதாரணங்கள் மட்டுமே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.