Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் காணி அபகரிப்பு – மக்கள் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் காணி அபகரிப்பு – மக்கள் போராட்டம்

 
IMG-20210303-WA0076-696x521.jpg
 16 Views

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புகளை கண்டித்து ஏறாவூர் புன்னக்குடா பிரதேசத்தில் இன்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவடடத்தின் பல பகுதிகளில் பொதுமக்களின் காணிகளை சட்டவிரோதமானமுறையில் அபகரிக்கும் காணி மாபியாக்களின் செயற்பாடுகளைக்கண்டித்து மட்டக்களப்பில் கவணஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

IMG-20210303-WA0071.jpg

மக்கடக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கிரான், ஏறாவூர்பற்று-செங்கலடி, ஆகிய பிரிவுகளில் உள்ள அரசகாணிகளுடன் இணைந்து பொது மக்களின் மற்றும் வெளிநாடுகளில் உள்ள காணிகளை ஒரு குழுவினர் விற்பனை செய்துருவருவதாகவும் அதற்கு அதிகாரிகள் துணை போவதையும் கண்டித்தும் குறித்த ஆரர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

IMG-20210303-WA0070.jpg

குறிப்பாக இப்பகுதியில் உள்ள காணிகளை அரச அதிகாரிகளுக்கு பணத்தினைக்கொடுத்து ஒரு குழுவினர் நீண்டகாலமாக இவ்வாறான காணி அபகரிப்பினை முன்னெடுத்துவருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

IMG-20210303-WA0073.jpg

இப்பகுதியில் தமிழ் மக்களின் காணிகள் நீண்டகாலமாக அபகரிக்கப்பட்டு இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுவருவதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி முறையான விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

IMG-20210303-WA0076-1.jpg

தமக்கு வழங்கப்பட்ட காணிகள் இவ்வாறு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

https://www.ilakku.org/?p=43668

 

பிள்ளையான், கருணா, அமல் ஆகியோர் எல்லாம் எங்கே போயிட்டினமா? இவர்களில் நம்பிக்கை இல்லாமல் சனம் நேரடியாக கோத்தாவை தலையிடச் சொல்லுகினம்.

  • கருத்துக்கள உறவுகள்

வி. முரளிதரன், சி. சந்த்திரகாந்தன், வியாழேந்திரன், இத்தியாதி குழுக்களெல்லாம் அபிவிருத்தி செய்யப்போய்; அதை சனம் புரியாமல் காணி அபகரிப்பு என்று மாறி விளங்கிகொண்டுதுகள் கண்டியளோ! கொஞ்சம் பொறுங்கோ, எல்லாம் முடிய சனமும் ஊமையாய் ஆக்கப்பட்டு தானாகவே அடங்கி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச்சனம் படும் அவலம் வார்த்தைகளில் வடிக்கமுடியாதது. சுற்றிச் சுற்றி நில அபகரிப்பும் சிங்களக் குடியேற்றங்களும். கருணாவினாலோ பிள்ளையானினாலோ அமலினாலோ இதனைத் தடுக்கவியலாது. புலிகள் இருந்தபோது இவர்களுக்கு ராஜமரியாதை. இப்போது இவர்கள் வேண்டாமென்று சொன்னாலும் அரசு கேட்கப்போவதில்லை. 

நடப்பதைத் தடுக்க எவராலும் முடியாது. ஒருவர் இருந்தார், அவரையும் நாங்கள்  கொன்றுவிட்டோம். இனி எவரும் இல்லை. 

இந்த மக்களிடம் அபிவிருத்தி நடக்கிறதுதானே, நிலம் பறிபோனால் என்னவென்று எவராவது கேட்டீர்களா? ஓ, இதுகூட தேசிக்காய்களின் உந்துதலால் நடக்கிறது போலும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.