Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த ஆயரின் திருவுடல் இன்று நல்லடக்கம்- கறுப்பு கொடி கட்டி துக்க தினம் அனுஸ்டிப்பு

 
1-7-696x392.jpg
 61 Views

மறைந்த மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர்  இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அவரது திருவுடல் தற்போது மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரின் திருவுடல் மன்னார் ஆயர் இல்லத்திலிருந்து மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

இன்று பிற்பகல் 2 மணி வரையில் அவரது திருவுடல் அங்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்டு 3 மணியளவில் இலங்கையில் உள்ள மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன், ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IMG_0906.jpeg

இந்நிலையில், மன்னார் மறைமாவட்டத்தின் ஆஜராக சேவைபுரிந்து காலமான  இராயப்பு யோசெப்பிற்கு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

IMG_0956.jpeg

வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், கறுப்புகொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கதினமும் அனுஸ்டிக்கப்பட்டது.

IMG_0951.jpeg

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், எமது இனத்திற்காகவும், நீதிக்காவும் போராடிய உன்னதமான மனிதராக அவர் இருந்தார். பாதிக்கப்பட்ட மக்கள் என்றவகையில் அவரது மரணம் எமக்கு பேரிழப்பாகவே இருக்கிறது. அதனை ஈடுசெய்ய எவராலும் முடியாது. அவரது உயிர் பிரிந்தாலும் அவர் எம்மோடு என்றும் பயணிப்பார்” என்றனர்.

 

 

https://www.ilakku.org/?p=46497

  • Replies 58
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டகையின் திருவுடல் விதைக்கப்பட்டது..

 
1-46-696x522.jpg
 83 Views

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று  மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

May be an image of one or more people and people standing

May be an image of one or more people, people standing and people sitting

May be an image of one or more people, people standing and indoor

 

https://www.ilakku.org/?p=46596

 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2021 at 01:06, ரஞ்சித் said:
On 3/4/2021 at 14:54, satan said:

முக்கியமான  ஒருவரின் அனுதாபச் செய்திக்காக காத்திருக்கிறேன்.  

யார் அது?

 முக்கியமான அந்த மனிதரை நீங்கள் இன்னும் இனங்காணவில்லைபோலுள்ளது. ஒருவேளை அவரை முக்கியமானவராக கருதாமல் இருந்திருக்கலாம். இறுதிவரை அவரை முக்கியமானவராக,  பாசாங்குக்காகவாவது ஒரு இரங்கற் செய்தி விடுப்பாரென காத்திருந்தேன். உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்பதை நிருபித்து விட்டார். அவர் தம் ஆயனை இழந்து தவிக்கும் மந்தைக்கு ஆறுதல் சொல்ல விரும்பாத இனத்துவேஷம் கொண்டவர்கள் எல்லாம்  ஒரு மதத்தின் தலைவர் என்று பீற்றிக்கொள்கிறார். இதில கிறிஸ்தவ தமிழ் மக்களுக்கு இவர் வெட்டிக்கிழிக்கப்போறார் என்று பிரச்சாரம் செய்தவர்களின் அனுதாபச் செய்தியையும் காணோம். இத்தனைக்கும் மறைந்த ஆயரின் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். சிலரின் வேஷங்கள் கலைந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் சந்தித்த நெருக்கடியான நேரங்களில் எல்லாம் மக்களின் குரலாக ஒலித்த ஒரு மாமனிதர் இந்த ஆயர் மட்டுமே.

யாழ்.. மட்டக்களப்பு.. கொழும்பு.. ஆயர்கள் எல்லாம்.. சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல்.. சிங்கள அரச அட்டூழியங்களுக்கு தலையாட்டும் வகைக்கு.. குரலை மாற்றிய போதும்..  இவர் ஒருவர் மட்டுமே மக்களின் உள்ளக்கிடக்கைகளை.. மக்கள் சந்தித்த துன்பங்களை மறைக்காமல்.. ஒளிக்காமல்.. வெளிக்கொணர்ந்தவர். 

ஆழ்ந்த இரங்கல்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, satan said:

 முக்கியமான அந்த மனிதரை நீங்கள் இன்னும் இனங்காணவில்லைபோலுள்ளது. ஒருவேளை அவரை முக்கியமானவராக கருதாமல் இருந்திருக்கலாம். இறுதிவரை அவரை முக்கியமானவராக,  பாசாங்குக்காகவாவது ஒரு இரங்கற் செய்தி விடுப்பாரென காத்திருந்தேன். உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்பதை நிருபித்து விட்டார். அவர் தம் ஆயனை இழந்து தவிக்கும் மந்தைக்கு ஆறுதல் சொல்ல விரும்பாத இனத்துவேஷம் கொண்டவர்கள் எல்லாம்  ஒரு மதத்தின் தலைவர் என்று பீற்றிக்கொள்கிறார். இதில கிறிஸ்தவ தமிழ் மக்களுக்கு இவர் வெட்டிக்கிழிக்கப்போறார் என்று பிரச்சாரம் செய்தவர்களின் அனுதாபச் செய்தியையும் காணோம். இத்தனைக்கும் மறைந்த ஆயரின் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். சிலரின் வேஷங்கள் கலைந்தது.

சுமந்திரன்???

  • கருத்துக்கள உறவுகள்

 அடடா....! அவரைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்ததால்  இவரைப்பற்றி மறந்தே போய்விட்டேன். நல்லவேளை நினைவுபடுத்தி விட்டீர்கள் நன்றி. இவரும் அதே அவரின் அணிதான். 

  • கருத்துக்கள உறவுகள்

வந்திட்டாரய்யா வந்திட்டார் இதற்கும் வரேல்லையென்றால் மரியாதை என்னாகிறது? 

  • கருத்துக்கள உறவுகள்

ஓ மல்கம் ரஞ்சித்தா?

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரஞ்சித் said:

ஓ மல்கம் ரஞ்சித்தா?

அவரேதான் இவர் பாராட்டுக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.