Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது - அமெரிக்க உளவுத்துறை அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது - அமெரிக்க உளவுத்துறை அறிக்கை
 
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது - அமெரிக்க உளவுத்துறை அறிக்கை
 

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது என அமெரிக்க அரசின் தேசிய உளவுத்துறை கவுன்சில் அறிக்கை தெரிவித்து உள்ளது.
பதிவு: ஏப்ரல் 14,  2021 16:56 PM
புதுடெல்லி: 

கடந்த காலத்தைப் போல் இல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு , இந்தியா உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாக அமெரிக்க உளவு அமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசின் தேசிய உளவுத்துறை கவுன்சில் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளாவிய அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது.தற்போது தேசிய புலனாய்வு இயக்குனரின் அலுவலகத்தால் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. 

 அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

படைகள் பின்வாங்கினாலும் இந்தியா-சீனா எல்லை பதற்றங்கள் அதிகமாகவே இருக்கின்றன. எல்லை மோதலை அமெரிக்கா நெருக்கமாகப் கண்காணித்து சீனாவின் ஆக்கிரமிப்பை கடுமையாக கண்டித்துள்ளது. இந்தியா கோரிய சில ராணுவ தளவாடங்களையும் வழங்கி உள்ளது.

 இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் “சாத்தியமில்லை” என்றாலும், அவர்களுக்கு இடையிலான நெருக்கடிகள் இன்னும் அதிகமாகி  போர் ஏற்படும் சூழல் ஏற்படும்.

இருநாடுகளிடையே உள்ள சிக்கல்களால் பதற்றம் மேலும் அதிகரித்தால் போர் மூளும் அபாயம் உள்ளது.

இந்தியாவில் கடந்த காலத்தைப் போல் இல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, உளவுத்துறை சமூகம் சீனாவை "ஒரு நெருக்கமான போட்டியாளராகக் கண்டது, பல அரங்கங்களில் அமெரிக்காவை சவால் விடுத்தது. ரஷ்யா  உலகளவில் அமெரிக்காவுக்கு எதிராக தந்து சக்தியைப் பயன்படுத்துவது உட்பட நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. ஈரான் ஒரு பரந்த பிராந்திய செல்வாக்கு நடவடிக்கைகளுடன் "பிராந்திய அச்சுறுத்தல்" என்று விவரிக்கப்பட்டது; மற்றும் வட கொரியா ஒரு "பிராந்திய மற்றும் உலக நிலைகளில் சீர்குலைக்கும் நிலையில் உள்ளது.

சீனா தனது வலிமையை நிரூபிக்கவும், பிராந்திய அண்டை நாடுகளை சீனாவின்  விருப்பங்களை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தவும் ஒருங்கிணைந்த, முழு அரசாங்க கருவிகளையும் பயன்படுத்த முற்படுகிறது என அதில் கூறப்பட்டு உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/04/14165621/Crises-Between-India-Pak-Likely-To-Intensify-US-Intelligence.vpf

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. விரைவில் ஆரம்பிக்க வேண்டும். 👍🏼

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
50 minutes ago, உடையார் said:

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது - அமெரிக்க உளவுத்துறை அறிக்கை

சித்திரை திருநாளில் நல்ல சேதி சொன்ன உடையாருக்கு இனிப்பான நன்றிகள்.😄

Anime Sweet GIFs - Get the best GIF on GIPHY

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, உடையார் said:

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது என அமெரிக்க அரசின் தேசிய உளவுத்துறை கவுன்சில் அறிக்கை தெரிவித்து உள்ளது.

இந்தியாவை யாரோடையாவது மோதவிடுவதென்று அமெரிக்கா முடிவெடுத்துவிட்டது.

இப்போதுள்ள நிலமையில் ஆயுதங்கள் விற்றால்த் தான் இந்தப் பொருளாதாரத்திலிருந்து தப்பலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.