Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயக்குனர் ஜீவா மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபல ஒளிப்பதிவு இயக்குனரும், 12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே போன்ற வெற்றி படங்க்ளை இயக்கியவருமான இவர் இலண்டனில் இவரது அடுத்த படமான "தாம் தூம்" படப்பிடிப்பின் போது மாரடைப்பால் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும் போது இவருக்கு வயது 42.

ஒளிப்பதிவு இயக்குனர் ஜீவா அவர்களே, நாம் இழந்தது ஒரு மனிதனை அல்ல, தமிழ் சினிமாவின் ஒரு நல்ல தூரிகையை.

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...june/260607.asp

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றேன். அவரின் படங்கள் எல்லாமே நெஞ்சைத்தொட்ட படங்கள்!.

ஆழ்ந்த அனுதாபங்கள்

அழுத்தமான..அழகான...இளமை உணர்வுகளை ஒலியோவியமாக்கிய திறமைசாலி ஜீவா..

நல்ல கலைஞனை இழந்திருக்கிறது தமிழ்த்திரையுலகம்..

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாருக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றேன்

அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது குடும்பசார்பான அனுதாபங்கள்.

இவர் சங்கரின் பல படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக கடமையாற்றியவர். ஜீவா ரஷ்யாவில் மாரடைப்பால் காலமாகியதாகவே நான் அறிந்தேன்.

இயக்குநர் ஜீவா ரஷியாவில் மரணம்

தாம் தூம் படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்த பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவா அங்கு ஹோட்டல் அறையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் ஜீவா(44). இவர் மலையாளப் படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கியவர்.

தமிழில் அக்னி நட்சத்திரம், தேவர் மகன், ஜென்டில்மேன் உள்ளிட்ட படங்களில் அவர் உதவி ஒளிப்பதிவாளராக இருந்தார்.

பின்னர் காதலன் படம் மூலம் ஒளிப்பதிவாளரானார். அதன் பின்னர் இயக்குநர் ஷங்கரின் பெரும்பலான படங்களுக்கு ஜீவாதான் கேமராமேனாக இருந்துள்ளார்.

ஒளிப்பதிவில் பல உத்திகளைப் புகுத்தி தமிழ் சினிமாவுக்கு புது கெளரவத்தைத் தேடிக் கொடுத்தவர் ஜீவா. ஒளிப்பதிவாளராக விளங்கி வந்த ஜீவா பின்னர் இயக்குநராக அவதாரம் எடுத்தார். 12பி, உள்ளம் கேட்கமே, சமீபத்தில் வெளியான உன்னாலே உன்னாலே ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது தாம்தூம் என்ற படத்தை இயக்கி வந்தார். ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ரஷ்யாவில் நடந்து வந்தது. இதற்காக படப்பிடிப்புக் குழுவினருடன் ரஷ்யா சென்றிருந்தார் ஜீவா.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் தங்கியிருந்த அவர் இன்று படப்பிடிப்பு முடிந்து அவர் சென்னை திரும்புவதாக இருந்தார். இந்த நிலையில் நேற்று ஜீவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்புக் குழுவினர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜீவா பரிதாபமாக இறந்தார்.

ஜீவாவுக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். ஜீவா இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். 40 விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார். இந்தியில் 10 படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழில் அவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பிரபல படங்களில் காதலன், இந்தியன், ஜென்டில்மேன், வாலி, குஷி ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

பிரியதர்ஷன் இயக்கிய பெரும்பாலான படங்களில் ஜீவாதான் கேமராமேனாக இருந்தார். ஜீவாவின் மனைவி அனீஷா, ஜீவாவின் படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியுள்ளார்.

ஜீவாவின் உடல் நாளை சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது.ஜீவாவின் மரணத்தால் தமிழ்த் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

--thatstamil-

யாரப்பா இவர்............இவருக்கு அஞ்சலி எல்லாம் ஒரு பக்கம் வைக்கீனம் ஒரு பக்கம் சிவாஜியை புறகணிக்கீணம்................நண்பா டங்கு எங்கே இருந்தாலும் இங்கே வாங்கோ நல்லா தமாசா இருக்கு

அப்ப நான் வரட்டா.............

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரப்பா இவர்............இவருக்கு அஞ்சலி எல்லாம் ஒரு பக்கம் வைக்கீனம் ஒரு பக்கம் சிவாஜியை புறகணிக்கீணம்................நண்பா டங்கு எங்கே இருந்தாலும் இங்கே வாங்கோ நல்லா தமாசா இருக்கு

அப்ப நான் வரட்டா.............

:P

என்னங்க ஜமுனா,

இறந்த ஒரு ஆத்மாவை தாங்கள் அப்படிச்சொல்லலாமா?! இது நகைப்புக்குரிய விடயமா? எதிரிகளாயினும் இறந்த உடல்களை மரியாதையுடன் அரசிடம் ஒப்பிக்கும் எங்கள் விடுதலைப்போராட்ட வீரர்களிடம் இருந்து நாம் எத்தனையோ கற்றுக்கொள்ள வேண்டும்?!!

மிகச்சிறந்த இயக்குனர், மிக நல்ல தரமான படங்களை வாழ்வியல் யதார்த்தத்தை மீறாதவாறு படைத்தவர்.

இவரின் மரணத்திற்கு அஞ்சலி செய்யாமல் போனால் கூட பரவாயில்லை ஆனால் பரிகாசம் செய்யாதீர்கள். வேதனை அளிக்கிறது.

சினிமா என்பது வேறு கலைஞன் என்பவன் வேறு

இங்கு நாம் இந்த இறந்தும் கோடி ரசிகர்களின் மனதில் வாழும் கலைஞனிற்கு கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்கவேண்டும்.

வித்தியாசமான பார்வையுயை ஒரு ஒளிப்பதிவாளன். சினிமாத்துறை ஒரு அளப்பரிய சொத்தை இழந்து நிற்கின்றது

என்னங்க ஜமுனா,

இறந்த ஒரு ஆத்மாவை தாங்கள் அப்படிச்சொல்லலாமா?! இது நகைப்புக்குரிய விடயமா? எதிரிகளாயினும் இறந்த உடல்களை மரியாதையுடன் அரசிடம் ஒப்பிக்கும் எங்கள் விடுதலைப்போராட்ட வீரர்களிடம் இருந்து நாம் எத்தனையோ கற்றுக்கொள்ள வேண்டும்?!!

மிகச்சிறந்த இயக்குனர், மிக நல்ல தரமான படங்களை வாழ்வியல் யதார்த்தத்தை மீறாதவாறு படைத்தவர்.

இவரின் மரணத்திற்கு அஞ்சலி செய்யாமல் போனால் கூட பரவாயில்லை ஆனால் பரிகாசம் செய்யாதீர்கள். வேதனை அளிக்கிறது.

இறந்தவரை நான் நகைப்புகிடமான் விசயம் என்று சொல்லவில்லை அக்கா ஆனால் நம்ம்வர்கள் அங்கே எதிர்கிறார்கள் இங்கே அஞ்சலி செலுத்து போது இதை பார்க்கும் வேறு ஒருவருக்கு எப்படி இருக்கும்.............ஒரு தவறான அபிப்பிராயம் ஏற்படும் என்ற எண்ணத்தில்............

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்தவரை நான் நகைப்புகிடமான் விசயம் என்று சொல்லவில்லை அக்கா ஆனால் நம்ம்வர்கள் அங்கே எதிர்கிறார்கள் இங்கே அஞ்சலி செலுத்து போது இதை பார்க்கும் வேறு ஒருவருக்கு எப்படி இருக்கும்.............ஒரு தவறான அபிப்பிராயம் ஏற்படும் என்ற எண்ணத்தில்............

ஜம்மு! நீங்கள் சொல்ல வருவது புரிகின்றது. உங்களோடு கோவிச்சுக்க முடியுமா?!!

சினிமா என்பது எமக்கு பொழுது போக்கு ஆனால் அங்கு அதுதான் பலருக்கு வாழ்க்கை, இலட்சியம், கனவு, உழைப்பு எல்லாமே!.புறக்கணிப்பென்று சொல்பவர்கள் 'அவலை நினைத்து உரலை இடிப்பவர்கள்"!

அவலை நினைத்து உரலை இடித்தால் பரவாயில்லை..

டிக்கெட்டுக்காக நின்றால்.. அவளை (ஸ்ரேயாவை நினைத்தோ என்னமோ) நினைத்து

இடித்து தள்ளிவிட்டார்கள்.... :)

எனக்கொரு சந்தேகம்.. சிவாஜி இந்தியாவலா..யாழிலா கூட ஓடும்?.. :lol:

Edited by vikadakavi

ஜம்மு! நீங்கள் சொல்ல வருவது புரிகின்றது. உங்களோடு கோவிச்சுக்க முடியுமா?!!

சினிமா என்பது எமக்கு பொழுது போக்கு ஆனால் அங்கு அதுதான் பலருக்கு வாழ்க்கை, இலட்சியம், கனவு, உழைப்பு எல்லாமே!.புறக்கணிப்பென்று சொல்பவர்கள் 'அவலை நினைத்து உரலை இடிப்பவர்கள்"!

ஆமாம் நிச்சயமாக நானும் இவர்களுக்கு எதிர் இல்லை ஆனால் நம்ம ஆட்களின்ட கதையை கேட்க விசரா இருக்கும்...........

B)

அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

:angry: :angry:

ஜீவா உடல் நாளை அடக்கம்

------------------------------------

ரஷ்யாவில் மாரடைப்பால் மரணமடைந்த பிரபல இயக்குநர், கேமராமேன் ஜீவாவின் உடல் நாளை சென்னையில் அடக்கம் செய்யப்படுகிறது.

இயக்குநர் ஜீவா, தாம் தூம் படத்தை இயக்கி வந்தார். இப்படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் நடந்து வந்தது. இதற்காக ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் முகாமிட்டிருந்தார் ஜீவா.

செவ்வாய்க்கிழமை படப்பிடிப்பு முடிந்து ஊருக்குக் கிளம்புவதற்குத் தயாராக இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் ஜீவா. ஆனால் வழியிலேயே உயிர் பிரிந்தது.

இதையடுத்து அவரது உடல், புதன்கிழமையன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் தாம் தூம் படக்குழுவினரிடம் ஜீவாவின் உடலை ரஷ்ய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து ஜீவாவின் உடலை சென்னைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடங்கின. அன்றைய தினமே உடலைக் கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. ஆனால் அது முடியவில்லை.

இதையடுத்து வருகிற வெள்ளிக்கிழமை ஜீவாவின் உடலை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு ஜீவாவின் உடல் ஃபின் ஏர் விமானம் மூலம் சென்னைக்குப் பயணிக்கிறது. வெள்ளிக்கிழமை காலை உடல் மும்பை வந்து சேரும்.

மும்பை விமான நிலையத்தில், ஜீவாவின் உடலை அவரது மைத்துனரும், இயக்குநருமான வசந்த் பெற்றுக் கொள்வார் (ஜீவாவின் மூத்த சகோதரியைத்தான் வசந்த் திருமணம் செய்து கொண்டுள்ளார்)

பின்னர் ஜீவாவின் உடலுடன் வசந்த் காலை 10.45 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். அன்று மாலை 4 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. ஜீவாவின் உடல் ராயப்பேட்டை மசூதி வளாகத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

ஜீவா இந்து மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் தனது மனைவி அனீஷாவைத் திருமணம் செய்து கொள்வதற்காக முஸ்லீம் மதத்திற்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவா ஆரம்பித்தார் ..

ஜெயம் ராஜா முடிக்கிறார்!

ஜீவாவின் இயக்கத்தில் வளர்ந்து வந்த தாம் தூம் படத்தின் மீதப் பகுதியை ஹீரோ ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கவுள்ளார்.

திறமையான கேமராமேனாக மட்டுமல்லாமல் நல்ல இயக்குநராகவும் ஜொலித்த ஜீவா யாரும் எதிர்பாராத வகையில், தாம் தூம் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்தபோது மரணமடைந்தார்.

அவரது திடீர் மரணத்தால் திரையுலகமே அதிர்ந்து போனது. இந்த நிலையில் தாம் தூம் படத்தின் எதிர்காலம் குறித்த கேள்வியும் கூடவே எழுந்தது.

ஆனால் ஜீவா இயக்கி வந்த தாம் தூம் படத்தை ஜெயம் ரவியின் அண்ணனான இயக்குநர் ஜெயம் ராஜா முடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜீவாவின் உதவி இயக்குநர் ஒருவர் கூறுகையில், படத்தின் 60 சதவீதப் பகுதி முடிவடைந்து விட்டது. அத்தனைக் காட்சிகளும் ரஷ்யாவிலேயே படமாக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ளப் பகுதியை இந்தியாவில் படமாக்க திட்டமிட்டிருந்தார் ஜீவா. ஆனால் ஜீவா மரணமடைந்து விட்டதால் அது முடியாமல் போய் விட்டது. இப்போது அந்தப் பகுதியை ஜெயம் ராஜா இயக்கக் கூடும். ஆனால் இந்தியாவுக்குப் பதில் அமெரிக்காவில் சில காட்சிகளை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

ஜெயம் ராஜாவும், ரவியும் இணைந்த படங்கள் மெகா ஹிட் ஆகியுள்ளன. ஜெயம், எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் ஆகியவை அவை.

இந்த நிலையில் தாம் தூம் படத்தின் மீதப் பகுதியையும் ராஜாவே இயக்கவுள்ளார். இதைத் தொடர்ந்து ரவியும், ராஜாவும் இணைந்து பொம்மரிலு தெலுங்குப் படத்தின் ரீமேக்கில் பணியாற்றவுள்ளனர்.

தாம் தூம் படத்தின் மீதப் பகுதியை இயக்கப் போவதாக அடிபடும் செய்திகள் குறித்து ராஜாவிடம் கேட்டபோது, இதுகுறித்து இன்னும் நான் முடிவு செய்யவில்லை. படம் குறித்த ஐடியாவுக்குள் வர எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால் மறைந்த ஜீவா நினைத்தபடி நல்ல படமாக தாம் தூம் வெளிவரும் என்றார் ராஜா.

ஜீவாவின் ஆத்மா திருப்திப்படும் வகையில் தாம் தூம் இருக்கும் என்று நம்புவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.