Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில், மிகப்பெரிய நீதித்துறை அநீதி ஒன்றுக்கு நீதி கிடைத்தது. 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில், மிகப்பெரிய நீதித்துறை அநீதி ஒன்றுக்கு நீதி கிடைத்தது. 

39 மேற்ப்பட்ட பிரித்தானிய தபால்துறை உப தபால் அதிபர்களை திருடர்கள் என்று பட்டமும் சுமத்தி, சிலரை சிறைக்கும் அனுப்பிய பெரும் வரலாற்று தவறுக்கு இன்று தீர்ப்பு வழக்கப்படுள்ளது.

நீதி தேடும் நெடும் பயணத்தில், சிலர் திருட்டு பட்டத்துடன், மறைந்தும் போனார்கள்.

சிலர், திருட்டு காரணமாக, காப்புறுதிகள் ரத்தானதால், தமது சொந்த வீடுகளை விற்பனை செய்தே வழக்கு பேசினார்கள். பலர் சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டார்கள். அவர்கள் திருடர்கள் இல்லை என்று நினைத்த சில மட்டும், வீட்டு துப்பரவு, தோட்டம் துப்பரவு என்று வேலைகளை கொடுத்தார்கள். ஆனாலும் அவர்கள் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டே வேலை வாங்கினார்கள்.

என்ன நடந்தது?

தபால் துறை 1999ல் புதிய ஜப்பானிய மென்பொருள் நிறுவனமான fijutsu நிறுவிய horizon என்னும் IT சிஸ்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தியது. 

அது, நடந்த வியாபாரத்தினை கூடுதலாக நடந்ததாக கணக்கு காட்டி, கல்லாவில் இல்லாத பணத்தினை, அந்த வேலை ஆட்களும், கணவன் மனைவியாக வேலை செய்த இடங்களில், யார் உப அதிபராக இருந்தாரோ அவர்கள் அந்த பணத்தினை திருடி விட்டார்கள் என்று முறைப்பாடு செய்து சிறைக்கு அனுப்பியது.

கிழக்கு லண்டன் பகுதியில் ஒரு கோவில் நிர்வாக சபையில் இருந்த , தமிழர் ஒருவர் கூட சிறைக்கு போனார்.

சமுதாயத்தில், திருட்டு நாய்க்கள், என்று கேவலமான பெயர்களும், கிரிமினல் பதிவு காரணமாக வேறு வேலைகளும் எடுக்க முடியாத நரக வாழ்வு வாழ்ந்து வந்தார்கள் அவர்கள்.

சீமா மிஸ்ரா என்னும் பெண், இரண்டாவது குழந்தை பெறும் நிலையில் கூட சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இவ்வளவுக்கும், அவர்கள், தமக்கும், திருட்டுக்கும் சம்பந்தமே இல்லை என்று சொன்னபோது, அப்படியானால், அந்த பணம் எங்கே என்று கேள்வி கேட்கப் பட்டதே அன்றி, அவர்கள் முறைப்பாடான, புதிய IT சிஸ்டம் பிழையானது என்பதை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

அது, மிகவும் நம்பகமானது, அதில் பிழை இல்லை என்று, உயர் அதிகாரிகள் சாதித்தனர்.

ஒருவர், இருவர் என்றால் பரவாயில்லை, எப்படி 736 பேர் வரை (சிறிய தொகை உள்பட), புதிய தொழில் நுட்பம் வந்த பின்னர் சிக்கினார்கள் என்ற கேள்வி வந்தபோது, முந்தியும் நடந்து இருக்கிறது. நூதனமாக திருடி இருக்கிறார்கள், இப்போது பிடி பட்டு விட்டார்கள் என்ற ரீதியில் பதில் அளித்து இருந்தார்கள்.

ஆனால், இந்த IT சிஸ்டம் அறிமுகப்படுத்தியது முதல், பல bugs, error போன்ற பிரச்சினைகளினால் திணறியது.

 

Harjinder Butoy (left) hugs his father outside court

உன்னை நேர்மையாளனாகத்தான் வளர்த்தேன் என்று உலகுக்கு சொல்லத்தான், நான் உயிருடன் இருந்தேனடா என்கிறார்,  தனது மகனை ஆறுதல் படுத்தும் சீக்கிய தந்தை. 2008ல் 3 வருடங்கள் 8 மாதம் சிறை சென்ற, அவரது மகன் ஹாஜீண்டர், தபால் துறை, ஒரு 'தேசிய அவமானம்' என்றார், நீதிமன்றுக்கு வெளியே. எம்மை இப்படி அவமானப்படுத்திய, சம்பந்த பட்டவர்கள் தண்டிக்க பட்டே ஆகவேண்டும் என்றார் அவர், கோபத்துடன். 

Former post office worker Janet Skinner (centre) speaks to the media outside the Royal Courts of Justice, London, after having her conviction overturned by the Court of Appeal

இன்னுமோர் முன்னாள் உப தபால் அதிபர் ஜேனட் ஸ்கின்னர், 2007ம் ஆண்டில், £59,000 பணத்தினை திருடியதாக 9 மாதம் சிறை சென்றவர் -
நீதிமன்றுக்கு வெளியே, உறவினர்கள், நண்பர்களுடன்

மென்பொருள் மீதான நம்பகத்தன்மை குறித்து விசாரணை செய்த வேறு ஒரு நிறுவனம், அந்த மென்பொருள் தான், பிழையான கணக்குகளை காட்டி இருந்தது எனவும், அதனையே, தபால்துறையும், போலீசாரும், அரச வழக்கு தொடரும் துறையும், நீதிமன்றும் சார்ந்து இருந்தது என்றும் லண்டன் மேல் நீதிமன்றில் உறுதிப்படுத்திய பின்னர், தபால் துறை, £50மில்லியன் இடைக்கால இழப்பீடாக கொடுக்க சம்மதித்து இருந்தது.

தமது பெயர்களை, கிரிமினல் database ல் இருந்து நீக்க கோரி மேல்முறையீடு செய்து இருந்தனர் அவர்கள் அனைவரும்.

இன்று லண்டனின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், ஒரு வேலை தருபவராக, வேலை செய்பவர்களின் நலன் மீது கரிசனை கொள்ளாமல், ஒரு மென்பொருள் மீதான அபார நம்பிக்கையினால், தபால் துறை பெரும் தவறை செய்துள்ளது என்று தீர்ப்பு அளித்து உள்ளது..

தபால் துறையின் இன்றைய நிறைவேற்று அதிகாரி,நிக் ரீட், அவர்களது வலியினை தான் உணர்வதாகவும், தன்னை மிகவும் வருத்துகிறது, என்றும், கூறினாலும், சம்பந்த பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

பிரிட்டிஷ் பிரதமர், இந்த தீர்ப்பினை வரவேற்று செய்திக்குறிப்பினை வெளியிட்டு, அவர்களது, நீதிக்கான நீண்ட போராட்டம் வென்று உள்ளது என்று கூறி, பல படிப்பினைகளை இந்த விவகாரம் தந்துள்ளது என்று கூறி உள்ளார்.

இன்னும் பல மில்லியன் பவுண்ட் இழப்பீடுகள் கிடைக்கக்கூடும் ஆனாலும், அவமானத்துக்கும், சிறைவாழ்வுக்கும் அது ஈடாகாது.

இறந்து போய் விட்ட ஒரு சிறைக்கு சென்று வந்த ஒருவரின், விதவை கரென், தான் ஒரு போதுமே, அவர்களை மன்னிக்க போவதில்லை என்று கூறுகின்றார். வருத்தத்துடன் போராடி இறக்கும் போது கூட, குடும்பத்துக்கு பெரும் அவமானத்தை சேர்த்து வைத்து போகின்றேனே என்று தவித்தார் என்கிறார் அவர். 

***

பிரித்தானிய முடிக்குரிய வழக்கு தொடரும்  அமைப்பு, தபால் உயர் அதிகாரிகள், மீது கிரிமினல் வழக்கு தொடுப்பது குறித்து ஆராய்வதாக அறிவித்துள்ளது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

பிரித்தானியாவில், மிகப்பெரிய நீதித்துறை அநீதி ஒன்றுக்கு நீதி கிடைத்தது. 

39 மேற்ப்பட்ட பிரித்தானிய தபால்துறை உப தபால் அதிபர்களை திருடர்கள் என்று பட்டமும் சுமத்தி, சிலரை சிறைக்கும் அனுப்பிய பெரும் வரலாற்று தவறுக்கு இன்று தீர்ப்பு வழக்கப்படுள்ளது.

நீதி தேடும் நெடும் பயணத்தில், சிலர் திருட்டு பட்டத்துடன், மறைந்தும் போனார்கள்.

சிலர், திருட்டு காரணமாக, காப்புறுதிகள் ரத்தானதால், தமது சொந்த வீடுகளை விற்பனை செய்தே வழக்கு பேசினார்கள். பலர் சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டார்கள். அவர்கள் திருடர்கள் இல்லை என்று நினைத்த சில மட்டும், வீட்டு துப்பரவு, தோட்டம் துப்பரவு என்று வேலைகளை கொடுத்தார்கள். ஆனாலும் அவர்கள் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டே வேலை வாங்கினார்கள்.

என்ன நடந்தது?

தபால் துறை 1999ல் புதிய ஜப்பானிய மென்பொருள் நிறுவனமான fijutsu நிறுவிய horizon என்னும் IT சிஸ்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தியது. 

அது, நடந்த வியாபாரத்தினை கூடுதலாக நடந்ததாக கணக்கு காட்டி, கல்லாவில் இல்லாத பணத்தினை, அந்த வேலை ஆட்களும், கணவன் மனைவியாக வேலை செய்த இடங்களில், யார் உப அதிபராக இருந்தாரோ அவர்கள் அந்த பணத்தினை திருடி விட்டார்கள் என்று முறைப்பாடு செய்து சிறைக்கு அனுப்பியது.

கிழக்கு லண்டன் பகுதியில் ஒரு கோவில் நிர்வாக சபையில் இருந்த ஒருவர் கூட சிறைக்கு போனார்.

சமுதாயத்தில், திருட்டு நாய்க்கள், என்று கேவலமான பெயர்களும், கிரிமினல் பதிவு காரணமாக வேறு வேலைகளும் எடுக்க முடியாத நரக வாழ்வு வாழ்ந்து வந்தார்கள் அவர்கள்.

சீமா மிஸ்ரா என்னும் பெண், இரண்டாவது குழந்தை பெறும் நிலையில் கூட சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இவ்வளவுக்கும், அவர்கள், தமக்கும், திருட்டுக்கும் சம்பந்தமே இல்லை என்று சொன்னபோது, அப்படியானால், அந்த பணம் எங்கே என்று கேள்வி கேட்கப் பட்டதே அன்றி, அவர்கள் முறைப்பாடான, புதிய IT சிஸ்டம் பிழையானது என்பதை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

அது, மிகவும் நம்பகமானது, அதில் பிழை இல்லை என்று, உயர் அதிகாரிகள் சாதித்தனர்.

ஒருவர், இருவர் என்றால் பரவாயில்லை, எப்படி 736 பேர் வரை (சிறிய தொகை உள்பட), புதிய தொழில் நுட்பம் வந்த பின்னர் சிக்கினார்கள் என்ற கேள்வி வந்தபோது, முந்தியும் நடந்து இருக்கிறது. நூதனமாக திருடி இருக்கிறார்கள், இப்போது பிடி பட்டு விட்டார்கள் என்ற ரீதியில் பதில் அளித்து இருந்தார்கள்.

ஆனால், இந்த IT சிஸ்டம் அறிமுகப்படுத்தியது, பல bugs, error போன்ற பிரச்சினைகளினால் திணறியது.

 

Harjinder Butoy (left) hugs his father outside court

உன்னை நேர்மையாளனாகத்தான் வளர்த்தேன் என்று உலகுக்கு சொல்லத்தான், நான் உயிருடன் இருந்தேனடா என்கிறார்,  தனது மகனை ஆறுதல் படுத்தும் சீக்கிய தந்தை. 2008ல் 3 வருடங்கள் 8 மாதம் சிறை சென்ற, அவரது மகன் ஹாஜீண்டர், தபால் துறை, ஒரு 'தேசிய அவமானம்' என்றார், நீதிமன்றுக்கு வெளியே. எம்மை இப்படி அவமானப்படுத்திய, சம்பந்த பட்டவர்கள் தண்டிக்க பட்டே ஆகவேண்டும் என்றார் அவர், கோபத்துடன். 

Former post office worker Janet Skinner (centre) speaks to the media outside the Royal Courts of Justice, London, after having her conviction overturned by the Court of Appeal

இன்னுமோர் முன்னாள் உப தபால் அதிபர் ஜேனட் ஸ்கின்னர், 2007ம் ஆண்டில், £59,000 பணத்தினை திருடியதாக 9 மாதம் சிறை சென்றவர் -
நீதிமன்றுக்கு வெளியே, உறவினர்கள், நண்பர்களுடன்

மென்பொருள் மீதான நம்பகத்தன்மை குறித்து விசாரணை செய்த வேறு ஒரு நிறுவனம், அந்த மென்பொருள் தான், பிழையான கணக்குகளை காட்டி இருந்தது எனவும், அதனையே, தபால்துறையும், போலீசாரும், அரச வழக்கு தொடரும் துறையும், நீதிமன்றும் சார்ந்து இருந்தது என்றும் லண்டன் மேல் நீதிமன்றில் உறுதிப்படுத்திய பின்னர், தபால் துறை, £50மில்லியன் இடைக்கால இழப்பீடாக கொடுக்க சம்மதித்து இருந்தது.

தமது பெயர்களை, கிரிமினல் database ல் இருந்து நீக்க கோரி மேல்முறையீடு செய்து இருந்தனர் அவர்கள் அனைவரும்.

இன்று லண்டனின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், ஒரு வேலை தருபவராக, வேலை செய்பவர்களின் நலன் மீது கரிசனை கொள்ளாமல், ஒரு மென்பொருள் மீதான அபார நம்பிக்கையினால், தபால் துறை பெரும் தவறை செய்துள்ளது.

தபால் துறையின் இன்றைய நிறைவேற்று அதிகாரி,நிக் ரீட், அவர்களது வலியினை தான் உணர்வதாகவும், தன்னை மிகவும் வருத்துகிறது, என்றும், கூறினாலும், சம்பந்த பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

பிரிட்டிஷ் பிரதமர், இந்த தீர்ப்பினை வரவேற்று செய்திக்குறிப்பினை வெளியிட்டு, அவர்களது, நீதிக்கான நீண்ட போராட்டம் வென்று உள்ளது என்று கூறி, பல படிப்பினைகளை இந்த விவகாரம் தந்துள்ளது என்று கூறி உள்ளார்.

இன்னும் பல மில்லியன் பவுண்ட் இழப்பீடுகள் கிடைக்கக்கூடும் ஆனாலும், அவமானத்துக்கும், சிறைவாழ்வுக்கும் அது ஈடாகாது.

இறந்து போய் விட்ட ஒரு சிறைக்கு சென்று வந்த ஒருவரின், விதவை கரென், தான் ஒரு போதுமே, அவர்களை மன்னிக்க போவதில்லை என்று கூறுகின்றார். வருத்தத்துடன் போராடி இறக்கும் போது கூட, குடும்பத்துக்கு பெரும் அவமானத்தை சேர்த்து வைத்து போகின்றேனே என்று தவித்தார் என்கிறார் அவர். 

நானும் இன்றைய செய்தியில் பார்த்தேன். காலம் தாழ்த்தியேனும் நீதி கிடைத்திருக்கிறது. இதற்கு நீதி பெற இவர்கள் பல வருடங்கள் போராட வேண்டி இருந்தது. இவ்வளவு பேர் சிறை செல்லும் போது, தபால் நிறுவனம் தனது முதுகை ஒருக்கால் தடவி பார்த்திருக்கலாம். இந்த மென்பொருளை 90களில் தயாரித்த நிறுவனம் ICL என்ற பெரிய கணனி நிறுவனத்தை வாங்கி இருந்தார்கள். இதில் ஆச்சரியம் போலீசும் அரசும் மாத்தி யோசிக்க தவறி விட்டார்கள். பலரின் வாழ்க்கை பாழாகி விட்டது.தபால் அதிபர் என்பது ஒரு சமூக மதிப்புள்ள தொழில் என்று சென்ற இவர்கள் சேறடிக்க பட்டார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொம்பியூட்டர் பிழைவிடாது எண்டதும் அறுந்து விழுந்து போச்சுது.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2021 at 18:36, குமாரசாமி said:

கொம்பியூட்டர் பிழைவிடாது எண்டதும் அறுந்து விழுந்து போச்சுது.

அப்ப தமிழ்நாட்டிலை மீளவும் அ.தி.மு.க வரும்....அப்பிடித்தானே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.