Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் துயரம் -பா.உதயன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் துயரம் -பா.உதயன் 

 

வைத்திய சாலைகள் நிரம்பி வழிகின்றன நாளுக்கு நாள் பெரும் தொற்று அதிகரிக்கிறது .சுவாசிக்க வளி இன்றிஒக்சியன் பற்றாக்குறையால் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். எரிப்பதற்காகவும் புதைப்பதற்காகவும்மனித சடலங்கள் அடிக்கி வைக்கப்படுகின்றன. இந்தியா பெரும் துயரோடு பயணிக்கிறது. வழமை போலவேமக்கள் எந்தப் பொறுப்பும் இன்றி சாலைகளில் கூடுகிறார்கள். இந்திய மக்கள் சுகாதார துறை பெரும் சிக்கலைஎதிர் நோக்கியுள்ளது. என்ன செய்து கொண்டிருக்கிறது இந்திய அரசு. பல நாடுகள் ஓரளவேனும் இந்த பெருநோயில் இருந்து கட்டுப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையிலே இந்தியாவுக்கு ஏன் திடீரென இவ்வளவுசடுதியான அதிகரிப்பு.ஏன் இவ்வளவு துன்பம். 

சமூக,குடும்ப,அரசியல்,சமய, கலாச்சார களியாட்டங்களில் பெரும் தொகையிலான மக்கள் ஏன் இப்டிக் கலந்துகொள்கிறார்கள்.அறிவும் ஆற்றலும் கொண்ட மக்கள் ஏன் இப்படி சிந்திக்காமல் நடக்கிறார்கள். இதுவேஇன்றைய கேள்வியாக சமூக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. எங்கே போகுறது இந்தியா.

கோவிட்-19 நோய்க்கு எதிரான தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கின்றது. பலஆசிய ஆபிரிக்க நாடுகள் உட்பட 100 க்கு மேற்பட்ட நாடுகளுக்கு கொடுத்து உதவியிருக்கிறது.இருந்தபோதும்இன்று இந்த நோயில் இருந்து வெளி வரமுடியாமல் மிகவும் ஓர் இக்கட்டான நிலைக்கு இந்தியா வந்திருக்கிறதுகாரணம் என்ன. அந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் மாத்திரம் இன்றி அந்த மக்களும் பொறுப்பற்றேஇருக்கிறார்கள்.எந்த வித நாட்டுப் பொறுப்பு சமூகப் பொறுப்பின்றி செயல் படுகின்றார்களா என்ற கேள்வியேஎல்லோர் மனதிலும் எழுகின்றது.

தற்பொது நிலைமை கட்டுக்கடங்காமல் போய் விட்டது.பல ஆயிரம் மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் ஒக்சியன் பற்றாக்குறையால் மக்கள்பரிதாபகரமாக இறந்து கொண்டிருக்கிறார்கள்.  சரியான ஆரோக்கியமான திட்டங்கள் எதுகும் இல்லாமல்இந்திய அரசு மக்களை காப்பாற்ற முடியாமல் இருக்கின்றதா.

இந்த பெரும் தொற்று நோயின் பெரும் அவலம் தெரிந்தும் கூட பொறுப்புடன் செயல் பட அரசியல்தலைவர்களோ அந்த மக்களோ சரியான  சமூகப் பொறுப்புடன் செயல் பட்டதாக தெரியவில்லை.பாரிய சனத்தொகையை  கொண்ட பாரதத்தில் இதை கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் இருந்த போதும் மக்கள் சரியான வழிமுறைகளை பின் பற்றவில்லை என்பது மட்டும் பார்க்கக் கூடியதாகவுள்ளது. மக்களுக்கு இடையில் சமூக இடைவெளியை கடைப் பிடிப்பதோ அல்லது முக்கியமாக முகக் கவசம் அணிவதோ எதுகும் இன்றி ஆலயநிகழ்வுகளிலும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களில் பல்லாயிரக் கணக்கானோர் எந்தப் பொறுப்பும்இன்றி கூடுவதையும் பார்க்கிறோம். 

மாநில அரசுகளின் தேர்தல்களையோ சமய சம்பிருதாய நிகழ்வுகளையோ தள்ளிப் போடாமல் இதைநடத்தியதன் மூலம் மேலும் இந்த நோய் பரவி பொருளாதார மானிட இழப்புகளுக்கு இவர்களோ காரணமாகிப்போனார்கள்.இந்த பெரும் கொள்ளை நோய் கட்டுப்பாட்டுக்கு வரும் வரையிலாவது தேர்தல்களையோ அல்லதுசமய நிகழ்வுகளையோ தள்ளிப் போட மோடி அரசு தவறி விட்டது.

பொறுப்பற்ற அரச தலைவர்களினாலும் மதத் தலைவர்களினாலும் இதை கட்டுப் படுத்த முடியாமல் போனதுபெரும் அவலமே. கட்சித் தலைவர்கள் கூட ஆட்சியை எட்டி பிடித்து விட வேண்டும் என்ற கண்ணாய்இருந்தனறேயன்றி மக்களை பற்றி சிந்தித்ததாக தெரியவில்லை. உலகத்தின் மூத்த ஜனநாயக நாடு என்றுகூறிக் கொள்பவர் அப்படி நடந்ததாக தெரியவில்லை. இதனால் இன்று மக்கள் பொருளாதார சிக்கல் மனிதஇழப்பென்று நாளாந்தம் பெரும் துயரத்தை இந்தியா எதிர் கொள்கிறது. எங்கே போகுறது இந்தியா. இத்தனைதுயரங்களையும் கடந்து மனித துன்பம் இல்லாமல்  உலகம் மீளெழவேண்டும். எல்லாமே கடந்து போகும் என்றநம்பிக்கையோடும் பிராத்தனைகளுடனும்.

 

பா.உதயன்✍️

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை.

4 hours ago, uthayakumar said:

சமூக,குடும்ப,அரசியல்,சமய, கலாச்சார களியாட்டங்களில் பெரும் தொகையிலான மக்கள் ஏன் இப்டிக் கலந்துகொள்கிறார்கள்.

இந்த பெரும் தொற்று நோயின் பெரும் அவலம் தெரிந்தும் கூட பொறுப்புடன் செயல் பட அரசியல்தலைவர்களோ அந்த மக்களோ சரியான  சமூகப் பொறுப்புடன் செயல் பட்டதாக தெரியவில்லை.

மிகச்சரியாகச் சொன்னீர்கள்.
அத்துடன் அவர்கள் தமது நாட்டு சனத்தொகை பெருக்கத்தையும் குறைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் கொரோனா கொடூரம், அந்த நாட்டுக்கு மட்டுமானது அல்ல, உலக நாடுகள் அனைத்துக்கும் என்ற நிலைப்பாடு எடுத்திருக்கும், பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகிய நாடுகள் தேவையான பிராணவாயு, கொரோனா தடுப்பு மருந்து, மருந்து தயாரிப்பதற்குரிய மூல பொருட்கள் மீதான ஏற்றுமதி தடை நீக்கி, உதவ முன்வந்துள்ளன. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசு அதனை பிராந்திய வல்லரசாக ஏற்க வேண்டும் என்று முழு உலகையும் எதிர்பார்பார்ப்பது   மட்டுமன்றி அதனை வேண்டிய இடத்தில அழுத்தி வலியுறுத்தி வருகிறது.

எல்லா வல்லரசுகளும் தாமாகவே இந்த பிரச்சனையை அவைகளளின் காலிலேயே நின்று கையாளுகின்றன.

இதில் ஈரான், தன்னை பிராந்திய வல்லரசாக நிலைநாட்ட எத்தனையோ, இரானின் உண்மையான முன்னேற்றத்தையும் பாதுகாப்பியும் தடுக்கும் ஆலது  அழிக்கும் மற்ற வல்லரசுகளின் தடைகளை எதிர் கொண்டு இருந்தாலும், தன்னையுடைய காலிலேயே நிற்கிறது.  கொரன எதிர்ப்பு மருந்து கூட தடைகளில் இருந்து தெளிவாக விலக்களிக்கப்படாமல், இரான் தானாகவே கொன்றன எதிர்ப்பு மருந்தை ஆராய்ந்து, இப்பொது 3ம் கட்ட பரிசோதனையில் நிற்கிறது. 

இந்தியா என்ற வல்லரசு உந்துதலில் உள்ள ஒரு அரசே மற்றவர்களை எதிர்பார்க்கிறது.  

கோரணவின் ஆரம்பத்தில், கொனறன மேற்கை பாரட்ணத்து ஆழ்ந்து பாதிக்க முதல்,  சீனாவை மேற்கு sick man of asia என்றது. இது சீனாவை பொறுத்தவரையில் அதன் வரலாற்றில் அரசியல், சமூக, உடல் நலம், சுகாதாரம் போன்றவற்றில்  நோயுற்று இருந்த நினைவுகளை மீட்பதாக  இருந்தது.

மேற்கின் இந்த ஒரேவார்த்தை, சீனாவை முடியில் இருந்து அடிவரை சீண்டி, சீன தனது மேலாதிக்கத்தை காட்ட வேண்டிய இடத்துக்கு கொண்டு சென்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விளங்க நினைப்பவன் said:

மிகச்சரியாகச் சொன்னீர்கள்.
அத்துடன் அவர்கள் தமது நாட்டு சனத்தொகை பெருக்கத்தையும் குறைக்க வேண்டும்.

 

13 hours ago, Nathamuni said:

கொரோனா தடுப்பு மருந்து, மருந்து தயாரிப்பதற்குரிய மூல பொருட்கள் மீதான ஏற்றுமதி தடை நீக்கி, உதவ முன்வந்துள்ளன. 

 

8 hours ago, Kadancha said:

இந்திய அரசு அதனை பிராந்திய வல்லரசாக ஏற்க வேண்டும் என்று முழு உலகையும் எதிர்பார்பார்ப்பது   மட்டுமன்றி அதனை வேண்டிய இடத்தில அழுத்தி வலியுறுத்தி வருகிறது.

அரசியல் பிராந்திய வல்லாதிக்கம் ,தனி நலன் ,புதிய காலனித்துவம் ,அதை விட ஈழத் தமிழர் நிலைப்பாட்டில் இந்தியாவின் நிலைப்பாடு இவைகள் எல்லாம் கடந்து மனிதம் என்ற தார்மீகக் கடமையோடு மட்டும் நான் இதில் பேசி இருக்கிறேன்.உங்கள் அனைவரினது கருத்துக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.