Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆக்சிஜன் தேடி அரசமரத்தை நாடும் நோயாளிகள் உத்தரப்பிரதேசத்தில் கொத்து கொத்தாக பரவும் கொரோனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனாவால் 30,983 பாதிக்கப்பட்டுள்ளனர். 36,650 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 290 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 2,95,752 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,13,361 பேராக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,162 பேராக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவில் இருந்து 10,04,447 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா நோயாளிகளும் மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது நம்பிக்கை இழந்து அரசமரத்தை நம்பத் தொடங்கியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் பகதூர்கஞ்ச் பகுதியில் கொரோனா பாசிட்டிவ் என்றால் நேராக அரசமரத்துக்கு வந்து விடுகின்றனர். 2 குடும்பத்தின் ஆறுபேருக்கு கொரோனா பாசிட்டிவ். இவர்கள் அனைவரும் ஆக்சிஜனுக்காக அரச மரத்தினடியில் தஞ்சம் புகுந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா புதிய உச்சம்... 20,768 பேர் பாதிப்பு - 153 பேர் பலி இதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஊர்மிளா என்ற பெண் செய்தியாளர்களிடம் பேசும் போது, "எனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவமனையும் இல்லை, ஆக்சிஜனும் இல்லை. அரச மரத்தின் கீழ் இருந்தால் ஆக்சிஜன் கிடைக்கும் என்று சிலர் சொன்னார்கள். என் குடும்பம் என்னை இங்கே கொண் வந்து விட்டனர். இப்போது நான் கொஞ்சம் நன்றாக உணர்கிறேன் மூச்சு விடுதல் இயல்பாக உள்ளது என்று கூறினார். பாஜக எம்.எல்.ஏ. ரோஷன்லால் வர்மா அந்த இடத்துக்கு வந்து மக்களைச் சந்தித்தார். அரசமரத்தடியில் இருப்பவர்களை உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறினார். ஆனால் ஊர்மிளா மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார். அரசமரத்தடியே நிம்மதியாக உள்ளது எனக்கு மூச்சுத் திணறல் இப்போது இல்லை மருத்துவமனை வேண்டாம் என்று மறுத்து விட்டேன் என்கிறார். அரச மரம் அதிக ஆக்சிஜன் கொடுக்கிறது. அதனால் இங்கு கொண்டு வந்தோம் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இப்போது ஆக்சிஜன் ஆதரவு தேவையில்லை. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போகட்டும், என்கிறார் ஊர்மிளாவின் உறவினர். ஆனால் மருத்துவ நிபுணர்களோ, அரச மர நம்பிக்கை உளவியல் ரீதியானதே தவிர அறிவியல் உண்மை அல்ல என்கின்றனர். அதாவது புத்துணர்வான காற்றை சுவாசிக்கும் போது அவர்களுக்கு சுவாசம் சீராக இருப்பதாக தோன்றுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/lucknow/uttar-pradesh-reports-30-983-fresh-covid-19-cases-290-deaths-419605.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

பாஜக எம்.எல்.ஏ. ரோஷன்லால் வர்மா அந்த இடத்துக்கு வந்து மக்களைச் சந்தித்தார். அரசமரத்தடியில் இருப்பவர்களை உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறினார். ஆனால் ஊர்மிளா மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார். அரசமரத்தடியே நிம்மதியாக உள்ளது எனக்கு மூச்சுத் திணறல் இப்போது இல்லை மருத்துவமனை வேண்டாம் என்று மறுத்து விட்டேன் என்கிறார். அரச மரம் அதிக ஆக்சிஜன் கொடுக்கிறது. அதனால் இங்கு கொண்டு வந்தோம் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இப்போது ஆக்சிஜன் ஆதரவு தேவையில்லை. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போகட்டும், என்கிறார் ஊர்மிளாவின் உறவினர். 

ஊர்மிளாவைப் போல.... எத்தனை பேர் வட இந்தியாவில், மருத்துவ மனைக்குச் செல்லாமல்.... அரச மரத்துக்கு கீழ் இருக்கிறார்களோ.... 😮

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2021 at 15:56, தமிழ் சிறி said:

ஊர்மிளாவைப் போல.... எத்தனை பேர் வட இந்தியாவில், மருத்துவ மனைக்குச் செல்லாமல்.... அரச மரத்துக்கு கீழ் இருக்கிறார்களோ.... 😮

அண்மை குஜராத் கூத்துகள்..

Screenshot-2021-05-06-08-24-33-887-com-a

பலியாதேவ் கோயிலாம் .. பெயருக்கு ஏற்ற மாதிரி எத்தனை பலி எடுக்க போகிறதோ தோழர்..😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அண்மை குஜராத் கூத்துகள்..

Screenshot-2021-05-06-08-24-33-887-com-a

பலியாதேவ் கோயிலாம் .. பெயருக்கு ஏற்ற மாதிரி எத்தனை பலி எடுக்க போகிறதோ தோழர்..😢

இப்படியான கோவில்களும், மக்களை விழித்தெள விடாமல் வைத்திருப்பதில், முக்கியமான பங்கு வகிக்கின்றன என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது!
குடி மக்களைப் பற்றிக் கவலைப் படாத ஒரு அரசாங்கம், எவ்வாறு ஜனனாயக் கேள்விகளிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது?
தங்களை அவுஸ்திரேலிய அரசு தடை செய்ததானது...மிகவும் தவறானது என்று அவுஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள ( இந்திய அவுஸ்திரேலியர்களால்) தங்களது அரசானது, தனது குடி மக்களை நிராதவராக விட்டது பற்றி....ஒரு கேள்வியும் கேட்காமல் இருப்பது தான் ஆச்சரியமாக உள்ளது! அவசரத் தேவை கருதி....வெளினாடுகள் அனுப்பி வைத்த, சிலிண்டர்கள் மற்றும் அவசியான உபகரணங்கள் எதுவும், இந்தியாவை வந்தடைந்து ஒரு வாரமாகியும் எந்த பிரதான வைத்திய சாலைகளுக்கும் இன்னும் வழங்கப் படாது இருப்பது ஆச்சரியமாக உள்ளதுடன், சுனாமி காலத்தில் வெளினாடுகளால் அனுப்பி வைக்கப்பட்ட உதவிகள் எதுவுமே, மக்களைச் சென்றடையாமையை நினைவு  படுத்துகின்றது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.