Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி

இந்தியாவில் கொரோனா வரைஸ் தொற்றால் ஒரேநாளில் 4,529 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2,83,248 ஆக உயர்ந்துள்ளது.

இதுவே கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பு பதிவான முதல் நாளாகும்.

இந்நிலையில், ஒரே நாளில் 2,67,334 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்றாவது நாளாகவும் 3 இலட்சத்தையும் விட குறைவாக பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,54,96,330  ஆகும்.

இந்தியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை வரும் நிலையில், உயிரிழப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா (5,433,506), கர்நாடகா (2,272,374), கேரளா (2,200,706), உத்தரபிரதேசம் (1,637,663), தமிழ்நாடு (1,664,350), மற்றும் டெல்லி (1,398,391) ஆகியன இந்தியாவில் மொத்த தொற்றாளர்களில்  அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆறு மாநிலங்களாகும்.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 2,19,86,363 பேர் குணமடைந்துள்ளார்கள்.

 

https://www.virakesari.lk/article/105862

 

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மட்டும் 110 விமானங்களில் இந்தியர்கள் ஹீத்ரோ வந்து இறங்கி உள்ளனர். இந்தியாவில் இருந்து தப்பி ஓடுகிறார்களா அல்லது, பிரித்தானியாவை அடைந்து விட்டால், தடுப்பு மருந்தினை எடுத்துக் கொள்ளலாம் என்ற நோக்கமோ தெரியவில்லை.

அதிர்ந்து போயுள்ள பிரித்தானிய அரசு, இது குறித்து  ஆய்வு செய்கிறது. சிலவேளை, இந்தியாவில் உள்ள, பிரித்தானிய குடிகளுக்கு, அங்கேயே ஊசியை போட்டு விடலாம் என்று முடிவு செய்வார்களோ தெரியவில்லை. இதனை தான் சீனா, இலங்கையில் உள்ள தனது குடி மக்களுக்கு செய்தது.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

நேற்று மட்டும் 110 விமானங்களில் இந்தியர்கள் ஹீத்ரோ வந்து இறங்கி உள்ளனர். இந்தியாவில் இருந்து தப்பி ஓடுகிறார்களா அல்லது, பிரித்தானியாவை அடைந்து விட்டால், தடுப்பு மருந்தினை எடுத்துக் கொள்ளலாம் என்ற நோக்கமோ தெரியவில்லை.

அதிர்ந்து போயுள்ள பிரித்தானிய அரசு, இது குறித்து  ஆய்வு செய்கிறது. சிலவேளை, இந்தியாவில் உள்ள, பிரித்தானிய குடிகளுக்கு, அங்கேயே ஊசியை போட்டு விடலாம் என்று முடிவு செய்வார்களோ தெரியவில்லை. இதனை தான் சீனா, இலங்கையில் உள்ள தனது குடி மக்களுக்கு செய்தது.

அவுஸில் மட்டும் இதுவரை நூற்றித் தொண்ணூறு குழந்தைகள் , அவர்களைக் கொண்டு வர ஆட்களில்லாமல் இருக்கின்றன! தாய்களும், தகப்பன்களும் இந்தக் குழந்தைகளை தாத்தா, பாட்டிகளுடன் வளர விட்டுள்ளனர்! இப்போது அவர்களைக் கொண்டு வர வேண்டும் என அரசாங்கத்தை நெருக்குகின்றனர்! பிள்ளை வளர்ப்பில் காசு சேமிக்கப் போய், இப்படி ஒரு நிலை..! அவுஸ் இப்போது வடிகட்டித் தான் , இவர்களை உள்ளே விடுகின்றது! இவர்கள் படும் பாட்டைப் பார்க்கும் போது, இந்தியா வல்லரசு தான் என்பது மேலும், மேலும் உறுதியாகின்றது!

கேவலம் கெட்ட தேசம்...!

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, புங்கையூரன் said:

கேவலம் கெட்ட தேசம்...!

நாடு நல்ல நாடு, மக்களும் கடும் உழைப்பாளிகள்.

ஆனால் அரசியல் தலைவர்களை தேர்ந்து எடுக்கும் போது, முட்டாள்தனம் அல்லவா செய்கிறார்கள்.

டீ ஆத்தி வித்தவர், பிரதமராக வர முடியும் என்றால், இரண்டு கொலைகள் செய்ததாக சந்தேகிக்கப்படும் சர்க்கரை ஆலை வைத்திருந்தவர், சினிமா வசனம் எழுதினவர், அந்த வசனத்தை பேசி நடித்தவர், அவருடன் சேர்ந்து நடித்த அம்மணி எல்லாம் தமிழக முதல்வராகவும்,  கொஞ்சம், நீதித்துறை தாமதித்து இருந்தால், அந்த அம்மாவுக்கு, சமைத்து கொடுத்த அம்மணியும், மாட்டு மூத்திரம் குடித்தால், கொரோனா ஓடும் என்று சொல்லும் துறவி உத்தர பிரதேச முதல்வர், கணவர் லல்லு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழலில் உள்ளே போக, சமையல் கட்டில் இருந்த, படிப்பே இல்லாத ரப்பிரி தேவி பீகார் முதல்வர் ஆகலாம் எண்டால் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

உண்மையில், 19ம் நூறாண்டு வரை பிரித்தானியாவில் இருந்த, வாக்குரிமை முறைமை (படித்தவர்கள், நிலம் சொந்தமாக வைத்திருந்து வரி கட்டுபவர்கள் மட்டுமே வாக்களிக்கலாம்) இந்தியாவுக்கு அறிமுகமாகவிடில் இதுவே நிலைமை. ஆனால் அது நடக்காது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நாடு நல்ல நாடு, மக்களும் கடும் உழைப்பாளிகள்.

ஆனால் அரசியல் தலைவர்களை தேர்ந்து எடுக்கும் போது, முட்டாள்தனம் அல்லவா செய்கிறார்கள்.

டீ ஆத்தி வித்தவர், பிரதமராக வர முடியும் என்றால், இரண்டு கொலைகள் செய்ததாக சந்தேகிக்கப்படும் சர்க்கரை ஆலை வைத்திருந்தவர், சினிமா வசனம் எழுதினவர், அந்த வசனத்தை பேசி நடித்தவர், அவருடன் சேர்ந்து நடித்த அம்மணி எல்லாம் தமிழக முதல்வராகவும்,  கொஞ்சம், நீதித்துறை தாமதித்து இருந்தால், அந்த அம்மாவுக்கு, சமைத்து கொடுத்த அம்மணியும், மாட்டு மூத்திரம் குடித்தால், கொரோனா ஓடும் என்று சொல்லும் துறவி உத்தர பிரதேச முதல்வர், கணவர் லல்லு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழலில் உள்ளே போக, சமையல் கட்டில் இருந்த, படிப்பே இல்லாத ரப்பிரி தேவி பீகார் முதல்வர் ஆகலாம் எண்டால் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

உண்மையில், 19ம் நூறாண்டு வரை பிரித்தானியாவில் இருந்த, வாக்குரிமை முறைமை (படித்தவர்கள், நிலம் சொந்தமாக வைத்திருந்து வரி கட்டுபவர்கள் மட்டுமே வாக்களிக்கலாம்) இந்தியாவுக்கு அறிமுகமாகவிடில் இதுவே நிலைமை. ஆனால் அது நடக்காது.

அத்துடன் அந்த மக்களை... சினிமாவும், கனவு உலகத்தில் வைத்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.