Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டின் மொழி கொள்கையை... பின்பற்ற வேண்டும் – சீன நிறுவனங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் நாளினை அறிவித்தார் கல்வியமைச்சர்

நாட்டின் மொழி கொள்கையை... பின்பற்ற வேண்டும் – சீன நிறுவனங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல்

நாட்டின் மொழி கொள்கையை பின்பற்றுமாறு கொழும்பு துறைமுக நகர நிறுவனத்திற்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினை குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும் இது கவலைக்குரிய விடயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆங்கிலம், சீன மற்றும் சிங்களத்துடன் அடையாளப்படுத்தப்பட்ட பெயர் பலகைகள் காரணமாக கொழும்பு துறைமுக நகர நிறுவனம் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

கொழும்பு துறைமுக நகரம் கட்டுமானத்தில் உள்ளது என்றும் தள ஊழியர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பார்வையாளர்களின் நலனுக்காக அடையாள பெயர் பலகைகளும் ஒப்பந்தக்காரரால் அமைக்கப்பட்டன என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், இந்த நாட்டின் மொழி கொள்கையுடன் கட்டாயம் கொழும்பு துறைமுக நகர நிறுவனம் இணக்கம் இருக்க வேண்டும் என கூறினார்.

https://athavannews.com/2021/1219247

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் மொழிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளை இலங்கை அரசின் கொள்கைகளை மீறிய செயற்பாடாக மட்டும் அமைச்சர் திரு. பீரிஸ் இனங்காண்பது இங்கு வேடிக்கை.  சீனா தமிழ் மொழியை புறக்கணித்ததன்மூலம் இலங்கை அரசிலமைப்பின் மொழிச் சட்டங்களை மீறியிருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிவைக்க சிங்கள இனவெறி அரசுக்கு நாதியில்லை.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, vanangaamudi said:

சீனாவின் மொழிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளை இலங்கை அரசின் கொள்கைகளை மீறிய செயற்பாடாக மட்டும் அமைச்சர் திரு. பீரிஸ் இனங்காண்பது இங்கு வேடிக்கை.  

இதில் என்ன வேடிக்கை?
 

34 minutes ago, vanangaamudi said:

சீனா தமிழ் மொழியை புறக்கணித்ததன்மூலம் இலங்கை அரசிலமைப்பின் மொழிச் சட்டங்களை மீறியிருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிவைக்க சிங்கள இனவெறி அரசுக்கு நாதியில்லை.

சொல்லிவைத்தவுடன் இலங்கை அரசை சிங்கள பௌத்த மக்கள் ஏற்றுக் கொண்டது போல அனைத்து ஈழத்தமிழரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்பத்தகுந்த உத்தரவாதம் தந்தால் தாரளமாக அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம், உத்தரவாதம் ஆயத்தமா?😇

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vanangaamudi said:

 சீனா தமிழ் மொழியை புறக்கணித்ததன்மூலம் இலங்கை அரசிலமைப்பின் மொழிச் சட்டங்களை மீறியிருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிவைக்க சிங்கள இனவெறி அரசுக்கு நாதியில்லை.

எப்படிச் சொல்ல முடியும்? அவர்களே தங்கள் அரசமைப்பில் உள்ள மொழிச் சட்டத்தை மீறி செயற்படுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

இதில் என்ன வேடிக்கை?
 

சொல்லிவைத்தவுடன் இலங்கை அரசை சிங்கள பௌத்த மக்கள் ஏற்றுக் கொண்டது போல அனைத்து ஈழத்தமிழரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்பத்தகுந்த உத்தரவாதம் தந்தால் தாரளமாக அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம், உத்தரவாதம் ஆயத்தமா?😇

 

என்னை பொறுத்தவரை

தமிழரை விட இலங்கையை  விரும்புபவர்கள்  எவருமே  இல்லை

அது இராமநாதன் பொன்னம்பலத்திலிருந்து இருந்து பிரபாகரன் வரை.............

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.