Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகத்தில் வாழும் எமது உறவுகளின் புனர்வாழ்விற்கு புலத்திலிருந்து நிதிசேகரிப்பதற்குரிய வழிமுறைகள்!

Featured Replies

போட்டியை திறமையாக நடத்தி செல்லும் குருவிற்கு சிஷ்யனின் வாழ்த்துகள்........ஆக 6 பேர் மட்டுமா அடுத்த சுற்றுக்கு போகீனமோ..................குருவே நீங்க ஒரு சினிமாபோட்டி அல்லது வேற ஒருநாட்டில இருக்கும் ஒருவரை காப்பாற்றுறது என்று தலைப்பு போட்டு ஒரு போட்டி அல்லது ஆக்கம் எழுதி இருந்தா இல்லாவிடில் மற்றவர்களை பிழை பிடித்து இருந்தா அதற்கு பல பேர் வந்திருப்பீனம் ஆனா நீங்க நல்லது செய்ய நினைச்சீட்டீங்க சோ 6 பேர் தான் வருவீனம்..........ஆனா கதைக்க விட்டா கதைப்பீனம் பாருங்கோ நீங்க தொடர்ந்து சிறப்பாக நடத்தி செல்லுங்கள் குருவே........... :o

பி.கு -நான் இதை எழுதிபோட்டேன் என்று என்னோட சண்டை பிடிக்க இந்த பக்கத்தை பயன்படுத்த வேண்டாம் அதை வேறோருபகுதியில் வைத்து கொள்ளுவோம்,என்னடா இவன் ஓவரா கதைகிறான் என்று கேட்கிறது தெரியுது நாமளும் பங்குபற்ற இல்லையுங்கோ அது தான் சொன்னேன்.............. :huh:

  • தொடங்கியவர்

யமுனா, உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!

போட்டியில் இவர்கள் போட்டியாளராக கலந்துகொள்ளாவிட்டால்கூட பரவாயில்லை. ஏனெனில், பலருக்கு பல பிரச்சனைகள் சிரமங்கள் இருக்கக்கூடும். நேரப்பிரச்சனைகள் இருக்கக்கூடும்.

ஆனால்...

இவர்கள் கருத்துக்கணிப்பில் பங்குபற்றாததுவே மிகவும் கவலை தருகின்றது. இதிலிருந்து இவர்கள் இங்கு என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை வாசிக்ககூட இல்லை என்று தெரிகின்றது.

இந்தபோட்டியில் கலந்துகொள்வது சககள உறவுகள், எனவே இவர்களிற்கு உற்சாகம் அளிக்க இவர்கள் ஏன் முன்வரவில்லை?

  • தொடங்கியவர்

அனைவருக்கும் வணக்கம்!

வரும் வெள்ளிக்கிழமையுடன் ஆய்வுப்போட்டி பகுதி 02 இற்கான கருத்துக்கணிப்பு மூடப்படும். அதன்முன் கருத்துக்கணிப்பில் பங்குபற்ற விரும்பும் கள உறவுகள் உங்கள் தெரிவை இடவும்.

நன்றி!

குருவே மன்னிகவும் நான் மீண்டும் இதில் எழுதுவதிற்கு ஆனால் எழுதாம இருக்க என்னால் முடியவில்லை............ஆமாம் ஒரு பக்கத்தில் பார்தேன் கலைஞர்கள் பற்றி பின்னூட்டல் இடவில்லை என்று ஒருவர் வருத்தபட்டிருந்தார் அவரின் கோபம் நியாமானது கூட அவருக்கு இருந்திருக்கலாம்.............அதே போல் என்று எடுக்க முடியாது அதை விட பல மடங்கு பிரயோசனமான இந்த நிகழ்விற்கு போட்டியில் பங்க பற்றாவிடிலும் பரவாயில்லை கடைசி கருத்து கணிப்பில் ஆவது பங்குபற்றி இருக்கலாம் அது எங்களுக்கு முடியவில்லை...........நினைக்க வேதனையாக இருக்குது............ :lol::lol::lol:

நன்றி குருவே..............

  • கருத்துக்கள உறவுகள்

குருவே மன்னிகவும் நான் மீண்டும் இதில் எழுதுவதிற்கு ஆனால் எழுதாம இருக்க என்னால் முடியவில்லை............ஆமாம் ஒரு பக்கத்தில் பார்தேன் கலைஞர்கள் பற்றி பின்னூட்டல் இடவில்லை என்று ஒருவர் வருத்தபட்டிருந்தார் அவரின் கோபம் நியாமானது கூட அவருக்கு இருந்திருக்கலாம்.............அதே போல் என்று எடுக்க முடியாது அதை விட பல மடங்கு பிரயோசனமான இந்த நிகழ்விற்கு போட்டியில் பங்க பற்றாவிடிலும் பரவாயில்லை கடைசி கருத்து கணிப்பில் ஆவது பங்குபற்றி இருக்கலாம் அது எங்களுக்கு முடியவில்லை...........நினைக்க வேதனையாக இருக்குது............ :lol::lol::lol:

நன்றி குருவே..............

உங்கள் வேதனை புரிகிறது யமுனா. கலைஞர்களை பின்னூட்டல் இடவில்லை என்று வருத்தப்பட்டிருந்தார் என்று குறிப்பிட்டிங்கள். உண்மைதான் ஆனால் அந்த கலைஞர்கள் கூட மற்ற வளர்ந்து வரும் உறவுகளை, அல்லது கலைஞர்களை தட்டிக்கொடுப்பது இல்லை என்பது வேதனையான விடயம்.

இதை வாசித்துவிட்டாவது பங்குபற்றினால் நல்லா இருக்கும்.

திறமையாக வழிமுறை எழுதிய உறவினை தேர்ந்தெடுத்து தங்கள் பங்களிப்பை செய்தால் நல்லம்.

  • தொடங்கியவர்

யமுனா, கறுப்பி உங்கள் கருத்துக்களிற்கு நன்றி!

போட்டி பகுதி 03 இல் போட்டியாளர்களிடம் நீங்கள் யாராவது கேள்வி கேட்க விரும்பினால் அவற்றை எனக்கு அனுப்பி வைக்கவும். ஒரு போட்டியாளரிடம் 03 கேள்விகள் பகுதி 03 இல் கேட்கப்படும்.

உங்கள் கேள்விகள் போட்டியாளர்கள் பகுதி 02 இல் கூறிய அவர்களது கருத்துக்கள் சம்மந்தமாக இருக்கவேண்டும். அனுப்பப்படும் கேள்விகளில் சிறந்த கேள்விகள் பகுதி 03 இல் சேர்க்கப்படும்.

நாளை பகுதி03 இற்கான கேள்விகள் பிரசுரிக்கபடும்.

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

யம்மு.. இதில் பங்குபெற்றாததற்குப் பலருக்கும் பல காரணங்கள் இருக்கலாம்..

நாம் பங்கு பற்றாததற்குக் காரணங்கள்..

1. திட்டமிட்ட வகையில் கள உறவுகள் சிலர் கலைஞன் என்பவரால் புறக்கணிக்கப்படும் வகையில் அவருடைய செயற்பாடுகள் அமைந்திருத்தல்.. அவருடைய நோக்கங்களின் நியாயத்தன்மையை.. கேள்விக்குறியாக்கி நிற்கின்றன.

உ+ம்: இதேபோன்ற இன்னொரு தலைப்பில் அவர் இட்ட பட்டியல்.. அநாவசியமான ஒன்று. தமிழர்கள் தமிழர்களுக்குள் சேவையாற்ற ஏன் பிரிவினைகளைப் பேண வேண்டும்..??!

பெயர் பட்டியலை இட்டவர்.. தவறவிடப்பட்டவர்கள் குறை நினைக்க வேண்டாம் என்று சொல்லிக் கொள்கிறார்.. அப்படி குறை நினைக்க சந்தர்ப்பம் உள்ளது என்று தெரிந்து ஏன் அந்தப் பட்டியல்..??!

2. தேவைக்கு அதிகமான சொல்லாடல்கள்.

3. தேவைக்கு அதிகமான சொல்லாடல்கள் கொடுக்கும் செயற்பாட்டு அழுத்தங்கள்.

உ+ம்: இதென்னப்பா பெரிய தொந்தரவா போயிடுமோ என்ற அச்சம்.

4. ஏலவே உள்ள பல அமைப்புக்களுக்கு மேலதிகமாக இவை எத்துணை சாத்தியமானது. தனித்து ஒரு கட்டமைப்பை உருவாக்கி.. அதை மக்கள் முன் நிலைநிறுத்த முயலுவதிலும்.. இப்படியான பொது நோக்கொன்றில் ஏன் ஏலவே உள்ள அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கூட்டுத் திட்டங்கள் மூலம் ஒரு ஒப்பந்த அடிப்படையில் செயற்பாட்டு சாத்தியத்துக்கு முன்னுரிமை அளிக்கவில்லை.

5. தேர்வாளர்கள் பற்றிய சூனிய நிலை. எவர் என்ன அடிப்படையில்.. போட்டியாளர்களைத் தேர்வு செய்வர். ஏலவே பாகுபாட்டு அடிப்படையில் கள உறவுகளை நோக்கும் ஒருவரின் திட்டத்தில்.. எப்படி நியாயமான செயற்பாட்டுத் தன்மையை காண முடியும். தேர்வாளர் குழுவின் நடுவுநிலைமைக்கான உத்தரவாதம் என்ன..??!

காரணம்.. பலருக்கு உதவ மனமிருக்கிறது. அர்ப்பணிப்புடன் பணியாற்ற மனம் இருக்கிறது. ஆனால்.. பலர் சிலரைப் பாவித்து தங்களுக்கு புகழீடுவதில்.. காலத்தைச் செலவிடுகின்றனர். இது பொதுப்பணியில் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கான எந்த உத்தரவாதத்துக்கும் இங்கு இடமில்லை. ஒரு பொதுப்பணியாளன் மனம் கோணாத வகையில் நடத்தப்படும் போதே அவனின் அர்ப்பணிப்புள்ள ஈடுபாடான திறனை அவனால் வெளிப்படுத்த வகை செய்ய முடியும்.

உ+ம்: நாம் பல்கலையில் கற்கும் போது ஒரு நூலை தயாரித்தோம். அது முழுக்க முழுக்க விளம்பரதாரரின் உதவியோடு வடிவமைக்கப்பட்ட நூல். அதில் எவரின் தலையீடுகளுக்கும் இடமளிக்காமல் நூலமைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் அவரவர் திறனுக்கு ஏற்ப சுதந்திரமாக பங்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அந்த இடத்தில் அந்த நூல் பல்கலை நிர்வாகத்தால் கூட மிகவும் பாராட்டத்தக்க வகையில் வெளியானது. ஏன் இதனைச் சொல்கிறோம் என்றால்..ஒரு எதிர்பார்ப்பில்லா பொதுப்பணியில் ஈடுபட அழைக்கும் போது.. ஒவ்வொரு செயற்பாட்டாளனின் பங்களிப்பும் மதிக்கப்படவும் பேணப்படவும் ஒவ்வொருவரும் முனைய வேண்டும். இன்றேல் பொதுப்பணியில்.. பெரிய சாதனைகளை அடைவது கடினம். :rolleyes:

6. முடிவுகளை செயற்படுத்தும் வழிமுறைகள் எதுவும் முன்மொழியப்படாமை..! அவற்றிற்கு எப்படி அங்கீகாரம் பொறுவது என்பது கூட.. சூனிய நிலையில்..! செயற்பாட்டு உத்தரவாதமில்லாத வசனங்களாகிடுமோ.. என்ற நிலையின் அளவு அதிகரித்திருத்தல். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

தமிழர் புனர்வாழ்வு நிதி சேகரிப்பு ஆய்வுப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்யப்படும்.

போட்டி பகுதி 02 இற்கான கருத்துக்கணிப்பு வரும் வெள்ளி இரவு 11.59 (மத்திய ஜரோப்பிய நேரம்) க்கு மூடப்படுவதோடு, பகுதி 03 - போட்டியாளர்களிற்கான கேள்விகள் வெள்ளி காலை பிரசுரிக்கப்படும். போட்டியாளர்கள் விடையை சனி இரவு 11.59 முன் (மத்திய ஜரோப்பிய நேரம்) தந்தால் போதுமானது.

பகுதி 03 கருத்துக்கணிப்பு ஞாயிறு மாலை 06 மணியுடன் நிறைவுக்கு கொண்டுவரப்படும் (மத்திய ஜரோப்பிய நேரம்).

நன்றி!

பி/கு: நெடுக்காலபோவான் வணக்கம்! தாங்கள் ஏன் போட்டிக்கு ஆதரவு தரவில்லை என்பதற்கான காரணங்களை தெரியப்படுத்திமைக்கு நன்றி!

  • 1 year later...

இதில பலரால் முன்வைக்கப்பட்ட அணுகுமுறைகளில் சில தற்போதைய தேவைகளிற்கு உதவலாம். கலைஞனை கனகாலமாக களத்தில் காணவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞன் இனிமேல் வரமாட்டார்.அவர் அண்மையில் முரளி எனும் பெயரில் உலா வந்தவர்.தற்போது வேறு ஒரு பெயரில் உலாவுவதாக கேள்வி :wub:

இங்கள்ள சில அலயங்கள் தமது சமூகப் பணியைச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கின்றன. (பல சட்டச் சிக்கல்களுக்கு மத்தியிலும்) அந்த வகையில் நாம் எவ்வளவு பணத்தைக் கொடுத்து எந்த இடத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்ற விபரத்தையும் கொடுத்தால் முழுமையாக அந்தப் பணம் சில தினங்களுக்கள்ளாக ( அனுப்புவதற்கான செலவு எதுவும் கழிக்கப்படுவதில்லை) குறித்த நலன்புரி நிலையத்தைச் சென்றடைகிறது. பணம் கிடைத்தமை குறித்த பற்றுச்சீட்டு அல்லது கடிதம் தாயகத்திலிருந்து குறித்த நிலையத்திலிருந்து வந்து சேருகின்றது.

பல சிரமங்கள் சட்டச் சிக்கல்களுக்கு மத்தியிலும் இந்தத் திட்டத்தை தொடர்ந்து செய்து வரும் நிர்வாகிகள் பாராட்டுக்குரியவர்கள்.

இதில பலரால் முன்வைக்கப்பட்ட அணுகுமுறைகளில் சில தற்போதைய தேவைகளிற்கு உதவலாம். கலைஞனை கனகாலமாக களத்தில் காணவில்லை.

கலைஞன் இனிமேல் வரமாட்டார்.அவர் அண்மையில் முரளி எனும் பெயரில் உலா வந்தவர்.தற்போது வேறு ஒரு பெயரில் உலாவுவதாக கேள்வி :wub:

மன்னிக்கவும்.. தினமும் செய்திகள் வாசிப்பது தவிர நான் முன்புபோல் எழுதக்கூடிய நிலமையில் தற்போது இல்லை. வேறு பெயர்களில் வருவதில்லை. நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும்.. தினமும் செய்திகள் வாசிப்பது தவிர நான் முன்புபோல் எழுதக்கூடிய நிலமையில் தற்போது இல்லை. வேறு பெயர்களில் வருவதில்லை. நன்றி!

மன்னிக்கவும் மாப்பு.உங்களுக்கு என்ன நடந்தது?படிப்பா?அல்லது வேறு ஏதும் பிரச்சனையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.