Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"குட் ஜாப்".. கண்ணாமூச்சி ஆடிய சிவசங்கர் பாபாவை.. டெல்லியில் வளைத்தது எப்படி.. போலீஸ் மாஸ் ஆபரேஷன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"குட் ஜாப்".. கண்ணாமூச்சி ஆடிய சிவசங்கர் பாபாவை.. டெல்லியில் வளைத்தது எப்படி.. போலீஸ் மாஸ் ஆபரேஷன்!

Shyamsundar IPublished:June 16 2021, 12:51 [IST]

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கும் மாணவிகள், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகாரில்தான் சிவசங்கர் பாபா தேடப்பட்டு வந்தார். அங்கு மாணவிகளிடம் பாலியல் ரீதியாக இவர் அத்துமீறியதாக புகார் வைக்கப்பட்டது.

கைது

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டிய நிலையில், தான் கண்டிப்பாக கைது செய்யப்படுவோம் என்று தெரிந்ததும் உடனே சிவசங்கர் பாபா டேராடூன் தப்பி சென்றார். அங்கு தனது உடல்நிலை சரியில்லை என்று கூறி, முன் ஜாமீன் வாங்கும் திட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அதற்குள் தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. எஸ். பி விஜயகுமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இந்த புகார்கள் விசாரிக்கப்பட்டது.

டேராடூன்

கேஸ் தனது கைக்கு வந்ததும் வேகமாக ஆக்சனில் இறங்கிய எஸ்பி விஜயகுமார் உடனே தனிப்படை அமைத்தார்., டேராடூனுக்கு சிவசங்கர் பாபாவை பிடிக்க இந்த தனிப்படை அனுப்பப்பட்டது. சிபிசிஐடி டிஎஎஸ்பி குணவர்மன் தலைமையில் ஒரு டீம் இதற்காக நேற்று இரவே டேராடூன் கிளம்பி சென்று, இன்று காலை அங்கு ரீச் ஆனது. ஆனால் போலீஸ் வருவதை எதிர்பார்த்த சிவசங்கர் பாபா, அங்கிருந்து எஸ்கேப் ஓடி விட்டார்.

நேபாளம்

இவருக்கு ஏற்கனவே லுக் அவுட் நோட்டிஸ் இருப்பதால் விமான நிலையம் வழியாக எங்கும் செல்ல முடியாது. இதனால் தரை வழியாக இவர் நேபாளம் செல்லும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வந்தன. நேபாளத்தில் இவருக்கு ஆசிரமம் இருப்பதால் அங்குதான் செல்வார் என்று சந்தேகிக்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு சிபிசிஐடிக்கு இது தொடர்பாக முக்கியமான தகவல்கள் சில கிடைத்துள்ளன.

விசாரணை

டெல்லியில் இருக்கும் சில சோர்ஸ்கள் மூலம் சிவசங்கர் பாபா அங்கே வர வாய்ப்புள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவமனையில் நடத்தப்பட்ட விசாரணையிலும், சிவசங்கர் பாபா மருத்துவமனையில் பேசிக்கொண்ட சில விஷயங்களையும் வைத்து அவர் டெல்லிக்குதான் செல்கிறார் என்ற துப்பு துலக்கப்பட்டது. நேபாளம் செல்வது போன்ற பிம்பத்தை ஏற்படுத்திவிட்டு, டெல்லியில் தலைமறைவாகும் திட்டத்தில் பாபா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆக்சன்

இது தொடர்பாக டெல்லி போலீஸ் சோர்ஸ் தங்களுக்கு கிடைத்த தகவல் மூலம் சிபிசிஐடிக்கு உதவி செய்த நிலையில், டெல்லியில் பாபா எங்கே இருக்கிறார் என்ற உறுதியான இடம் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் சில நாட்களுக்கு பின் பாபா பிரஸ் மீட் கொடுக்கும் திட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக தீரன் பட பாணியில் ஓமாவை போலீசார் தேடி செல்வது போல் சிபிசிஐடி போலீசார் டெல்லி சென்று சிவசங்கர் பாபாவை தட்டி தூக்கி உள்ளனர்.

மாற்றம்

கிடைத்த துப்புகளின் அடிப்படியில் சரியான லொகேஷனை கண்டுபிடித்து, அவரை கைது செய்துள்ளனர். கொஞ்சம் உடைகள் மற்றும் தோற்றத்தை மாற்றி பாபா டெல்லியில் தலைமறைவாகி இருக்கிறார். இவரை டெல்லியில் வளைத்த போலீஸ் இன்று மாலையே சென்னைக்கு கொண்டு வர உள்ளது. இவருடன் இருந்த சில உதவியாளர்களும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://tamil.oneindia.com/news/tamilnadu/how-sivasankara-baba-arrested-by-tamilnadu-cbcid-police-in-delhi/articlecontent-pf560466-424123.html?utm_medium=Mobile&utm_source=OI-TA&utm_campaign=home-select-city

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் புகார்: சிவசங்கர் பாபா டெல்லியில் கைது

 

பாலியல் புகார்: சிவசங்கர் பாபா டெல்லியில் கைது

டேராடூனில் இருந்து தப்பிச்சென்ற சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.
பதிவு: ஜூன் 16,  2021 12:14 PM மாற்றம்: ஜூன் 16,  2021 12:23 PM
புதுடெல்லி,

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர்.  

இதனை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. 

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிக்கியுள்ள சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படை போலீசார் நேற்று டேராடூன் விரைந்தனர். ஆனால், இன்று காலை சிபிசிஐடி போலீசார் டேராடூனில் உள்ள அந்த குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்றபோது சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தப்பியோடிய சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், டேராடூனில் இருந்து தப்பியோடிய சிவசங்கர் பாபாவை தமிழக சிபிசிஐடி போலீசார் தற்போது டெல்லியில் கைது செய்துள்ளனர். தெற்கு டெல்லியின் காசியாபாத்தில் சிவசங்கர் பாபா பதுங்கி இருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து டெல்லி போலீசாருக்கு சிபிசிஐடி போலீசார் தகவல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட சிபிசிஐடி போலீசார் டெல்லியின் காசியாபாத் பகுதியில் உள்ள சித்தரஞ்சன் என்ற இடத்தில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை மடக்கிப்பிடித்தனர். சிவசங்கர் பாபாவை கைது செய்ய டெல்லி போலீசாரும் உதவினர்.

டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா இன்று அல்லது நாளை சென்னை அழைத்து வர சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் நடத்தும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/06/16121440/CBCID-Police-Arrested-Shiv-Shankar-Baba-in-Delhi.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தா (@2Nithi) | Twitter

சிவசங்கர் பாபா... மூன்று நாள் கூட, ஒழித்து இருக்க முடியாமல்... பிடிபட்டு விட்டிடார்.
நித்தியானந்தா வருடக் கணக்கில்... தண்ணி காட்டிக் கொண்டு இருப்பதால்..
பாபா... நித்தியிடம்,  "ரியூஷன்" எடுத்திருக்கலாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

நித்தியானந்தா (@2Nithi) | Twitter

சிவசங்கர் பாபா... மூன்று நாள் கூட, ஒழித்து இருக்க முடியாமல்... பிடிபட்டு விட்டிடார்.
நித்தியானந்தா வருடக் கணக்கில்... தண்ணி காட்டிக் கொண்டு இருப்பதால்..
பாபா... நித்தியிடம்,  "ரியூஷன்" எடுத்திருக்கலாம். 🤣

நித்தியிடம் மாணவராக பாபாவுக்கு தகுதி இல்லையே?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கற்பகதரு said:

நித்தியிடம் மாணவராக பாபாவுக்கு தகுதி இல்லையே?

பாபாவுக்கு... இருக்கிற தகுதிகள் போதுமே..... :grin:
வேறு, என்ன வேண்டும்.? 🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'ஒரு காமக்கொடுரனை இப்படி உட்கார வைத்து மணியாட்டி கற்பூரம் காட்டுவதெல்லாம் ஆகம் விதியில அடங்குமா அய்யர்மாரே... கலாய்ச கலாட வாங்க MEMES'

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.