Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண மக்களுக்கு சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் விடுத்துள்ள வேண்டுகோள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாண மக்களுக்கு சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் விடுத்துள்ள வேண்டுகோள் !

எம்.நியூட்டன்

அத்தியாவசிய தேவை தவிர்த்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர்மேலும் தெரிவிக்கையில் , 

நாட்டில் தற்போது கொரோனா தொற்று  பரவலானது அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. குறிப்பாக மேல் மாகாணத்தை பொறுத்த வரை இறப்புகள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.

அதிலும் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கடந்த சில வாரங்களாக நோய் அறிகுறிகளுடன் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றார்கள்.

Ketheeswaran.JPG

இது ஒரு ஆபத்தான விடயம் எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவை தவிர்ந்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். சுகாதார அமைச்சு, சுகாதாரத் திணைக்களம் என்பன ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளன.

வடக்கு மாகாணத்தில் உள்ள ஒன்பது கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களும் நிரம்பிக் காணப்படுகின்றன. அத்தோடு கொரோனா நோயாளர்களை பராமரிக்க ஏற்படுத்தப்பட்ட வைத்தியசாலை விடுதிகளும் நிரம்பிக் காணப்படுகின்றன.

யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை ஒன்று கூடல்கள் அதாவது இந்து ஆலயங்களில் நடாத்தப்பட்ட நிகழ்வுகளின் காரணமாக பல தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எனவே எதிர்வரும் காலத்தில் இவ்வாறான ஒன்றுகூடல்கள் மற்றும் நிகழ்வுகளை தவிர்த்து பொதுமக்கள் வீடுகளில் இருத்தல் சிறந்தது.

அதேபோல மேல் மாகாணத்தில் தற்போது இறப்பு வீதம் அதிகரித்துள்ளது. அதே நிலைமை எமது வடக்கு மாகாணத்திலும் இனி வருங்காலத்தில் ஏற்படலாம்.

எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுதல் மிகவும் அவசியமாகும். அத்தோடு மேல் மாகாணத்தில் வீடுகளில் கொரோனா நோயாளர்களை வைத்து பராமரிக்கும் செயற்திட்டம் பரீட்சார்த்தமாக செயல்படுத்தப்படுகின்றது.

அந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால் ஏனைய மாகாணங்களுக்கும் அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.
 

https://www.virakesari.lk/article/111029

 

சனம் கேட்டுட்டாலும்.

4 தினங்களுக்கும் முன் என் தம்பி முறையானவனுடன் தொலைபேசியில் கதைக்கின்றேன்.

நான்: எப்படி இருக்கின்றாய்

அவன்: 3 நாளா ஒரே உடம்பு வலி, காச்சல், தொண்டை நோவு

நான்: கொரனாவாக இருக்கும். போய் செக் பண்ணிப் பார்

அவன்: ம்ம்ம்... என்னோட வேலை செய்தவனுக்கும் இப்படி இருந்தது. செக் பண்ணி பார்த்து கொரனா என்று கண்டு பிடித்தவுடன் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு கொண்டு போய் விட்டார்கள்

நான்: அப்ப அவனுக்கு வந்திட்டு என்றால் உனக்கும் அதே தான் வந்திருக்கும். வாயில் சுவை ஏதும் இருக்கா

அவன்: இல்லை அண்ணா.. சுவையே இல்லை

நான்: அப்ப ஓடிப் போய் செக் பண்ணு

அவன்: இல்லை.. கொரனா என்றால் என்னை தூக்கிக் கொண்டு போய் 14 நாட்களுக்கு பிறகுதான் விடுவார்கள்

நான்: உனக்கு கைக்குழந்தை இருக்கு. உன் அம்மாவுக்கும் 70 வயது.

அவன்: ஓம் அண்ணா... அதனால தான் என்னை நானே தனிமைப் படுத்தி உள்ளேன்.

என்று சொல்லியன் அடுத்ததாக

"அண்ணா அம்மாவுடன் கதையுங்கோ' என்று சொல்லி தான் இதுவரைக்கும் கதைத்துக் கொண்டு இருந்த போனை தாயிடம் கொடுக்கின்றான்.

அவாவும் "பிள்ளை 3 நாள் அடுத்தடுத்து தோய்ந்தவன்...அதுதான் காச்சல்" என்றார்

நான் தலையில் அடித்து விட்டு அதற்கு மேல் ஒன்றும் கதைக்கவில்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நிழலி said:

சனம் கேட்டுட்டாலும்.

4 தினங்களுக்கும் முன் என் தம்பி முறையானவனுடன் தொலைபேசியில் கதைக்கின்றேன்.

நான்: எப்படி இருக்கின்றாய்

அவன்: 3 நாளா ஒரே உடம்பு வலி, காச்சல், தொண்டை நோவு

நான்: கொரனாவாக இருக்கும். போய் செக் பண்ணிப் பார்

அவன்: ம்ம்ம்... என்னோட வேலை செய்தவனுக்கும் இப்படி இருந்தது. செக் பண்ணி பார்த்து கொரனா என்று கண்டு பிடித்தவுடன் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு கொண்டு போய் விட்டார்கள்

நான்: அப்ப அவனுக்கு வந்திட்டு என்றால் உனக்கும் அதே தான் வந்திருக்கும். வாயில் சுவை ஏதும் இருக்கா

அவன்: இல்லை அண்ணா.. சுவையே இல்லை

நான்: அப்ப ஓடிப் போய் செக் பண்ணு

அவன்: இல்லை.. கொரனா என்றால் என்னை தூக்கிக் கொண்டு போய் 14 நாட்களுக்கு பிறகுதான் விடுவார்கள்

நான்: உனக்கு கைக்குழந்தை இருக்கு. உன் அம்மாவுக்கும் 70 வயது.

அவன்: ஓம் அண்ணா... அதனால தான் என்னை நானே தனிமைப் படுத்தி உள்ளேன்.

என்று சொல்லியன் அடுத்ததாக

"அண்ணா அம்மாவுடன் கதையுங்கோ' என்று சொல்லி தான் இதுவரைக்கும் கதைத்துக் கொண்டு இருந்த போனை தாயிடம் கொடுக்கின்றான்.

அவாவும் "பிள்ளை 3 நாள் அடுத்தடுத்து தோய்ந்தவன்...அதுதான் காச்சல்" என்றார்

நான் தலையில் அடித்து விட்டு அதற்கு மேல் ஒன்றும் கதைக்கவில்லை.
 

காய்ச்சல்

இருமல்

தடிமன் போல  நினைக்கிறார்கள்??

இது  உயிர்க்கொல்லி நோய்😪

  • கருத்துக்கள உறவுகள்

1990 களின் ஆரம்பத்தில்..  சொறீலங்காவில் இருந்த எயிட்ஸ் தாக்கம்.. வடக்குக் கிழக்கு தமிழர் தாயகத்தில் இருக்கவில்லை.. (ஒரு சில வெளிநாட்டு வரவாளர்கள் இனங்காணப்பட்டதை தவிர).

காரணம்.. அன்று விடுதலைப்புலிகள் மருத்துவத்துறையினராலும்... பாடசாலை மாணவர்கள்.. பிறகு சமூக... சுகாதாரக்..கழகங்கள்.. மற்றும் மருத்துவத்துறை சார்ந்தோராலும் மக்கள் விளங்கிக் கொள்ளத்தக்க வகையில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் தான். 

ஆனால்.. இந்தக் கொரானா நெருக்கடி அவ்வாறு கையாளப்படாமல்.. இராணுவ சிந்தனையின் பால் ஆக்கிரமிப்பு அதிகார துஷ்பிரயோகத்தோடு கையாளப்படுவதால்..  வைரஸ் பரவலும்.. அதிகரித்து.. மக்களும் அதிக பாதிப்பை கண்டு வருகின்றனர். மக்களுக்கு வைரஸ் பற்றிய சரியான விளக்கமும் வழங்கப்படுவதாக இல்லை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்க பார்றா பகிடியை??, சுவாசத்தில் பரவும் கொரனாவும் சில உடற்சுரப்புகளின் நேரடித் தொடர்பினால் பரவும் எச்.ஐ.வியும் ஒண்டென்ற மாதிரி கதையைப் பின்னி விட்டார் நெடுக்கர்!

விபரம் தெரியாத மக்கள் இதை வாசித்தால் கொண்டம் போட்டுக் கொண்டு, வக்சீன் எடுக்காமல் வெளியால திரியப் போகுதுகள்!😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.