Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தின் நிலைமை குறித்து... கவலை வெளியிட்டார், மாவட்ட அரசாங்க அதிபர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

யாழ்ப்பாணத்தின் நிலைமை குறித்து... கவலை வெளியிட்டார், மாவட்ட அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் இறப்புகளும் அதிகரித்துச் செல்லும் நிலைமையே காணப்படுவதாக  மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கவலை வெளியிட்டுள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,  “பொதுமக்களும் சமூக பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டிய காலமாக இது காணப்படுகின்றது.

மேலும் வைத்தியசாலைகளில் கூட இட நெருக்கடி  ஏற்பட்டுள்ளது. எனவே இத்தகைய சூழ்நிலையினை அனைவரும் உணர்ந்து, தமது செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக புதிய வழிகாட்டலின் படி வழிபாட்டிடங்களில் ஒன்று கூடுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய குடும்ப நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள் ஆகியவற்றைக்கூட  மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கட்டுப்பாட்டுடன் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே புதிய சுகாதார நடைமுறையினை மக்கள் இறுக்கமாக பின்பற்றுவதுடன் அநாவசியமாக வீடுகளிலிருந்து வெளியேறுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

https://athavannews.com/2021/1235203

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் இறப்புகளும் அதிகரித்துச் செல்லும் நிலைமையே காணப்படுவதாக  மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கவலை வெளியிட்டுள்ளார்.

அனேகமாக வெளிநாட்டுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களும், சுற்றுலாப் பயனிகளுமே கொரோனாவை முதலில் தென்னிலங்கைக்குக் கொண்டுவந்தனர். பின்னர் அங்கிருந்து தமிழர் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதும், அனுப்பப்படுவது பற்றியும், யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த நண்பர்கள் உறவினர்களுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் மரணச் சடங்கில் கலந்துகொண்டதால் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

அனேகமாக வெளிநாட்டுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களும், சுற்றுலாப் பயனிகளுமே கொரோனாவை முதலில் தென்னிலங்கைக்குக் கொண்டுவந்தனர். பின்னர் அங்கிருந்து தமிழர் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதும், அனுப்பப்படுவது பற்றியும், யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. 

சுவிஸ் பாதிரியார் தான்…. “கொரோனாவை”   முதன் முதலில், வட மாகாணத்திற்கு அறிமுகப் படுத்தியவர்.

  • கருத்துக்கள உறவுகள்

 நீண்டநேரம் இன்று ஊருக்கு தொலைபேசினேன்.ஊரில் எங்கள் வீட்டுக்கு பக்கத்துவீட்டுக்கு சுகாதாரதுறையால் தனிமைபடுத்தும் பிரசுரம் ஒட்டப்பட்டு யாரும் அந்த பக்கம் போகவோ அவர்கள் வெளியில் வரவோ அனுமதியில்லை என்று அறிவித்திருக்கிறார்களாம், 

அந்தவீட்டு அக்காவோட தம்பி ஒருவர் பொடிபில்டிங் செய்து எப்பவுமே ராம்போ நினைப்பில்தான் உடம்பை வைச்சிருப்பாராம், அவர் அடிக்கடி கொரோனாவாவது மண்ணாங்கட்டியாவது சும்மா பயந்தால்தான் கொரோனா வரும் எண்டு சொல்லிக்கொண்டு அக்காவீட்டுக்கு அடிக்கடி வந்து போவாராம்,

திடீரென்று உடல்நலம்பாதிக்கப்பட்டு  ஆஸ்பத்திரிபோய் பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதியென்று அவர் வீட்டுக்கு அடுத்தநாள் அறிவித்தார்களாம், வெளியில் எங்கும் போககூடாது என்று சொல்லிவிட்டு உடனேயே ஆளை வீடுதேடிபோய் தூக்கி கொண்டுபோய் கோப்பாய் தனிமைபடுத்தும் நிலையத்தில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்களாம்.

தனிமைபடுத்தும் நிலையத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வழங்கப்படும் ஒரேயொரு நோயெதிர்ப்பு மருந்து கொத்தமல்லி தண்ணிதானாம்.

அங்குள்ளவர்கள் சொன்னார்கள் முன்பு முடக்கநிலை இருந்தபோது தெரு தெருவாய் ஆமி,காவல்துறையை போட்டாலும் எந்த அலுவலுகளும் இல்லாவிட்டாலும், குச்சு ஒழுங்கைகள் வீடுகளினூடாக அவர்களை உச்சி எங்காவது போய் வந்துட்டு எப்படி அவங்கள பேய் காட்டினம் எண்டும் கூட்டமாய் சேர்ந்து எப்படி போய் வந்தம் என்று பெருமையாய் பேசி சிரிப்பார்களாம்.

அதுக்கு பலனாக கொரோனா இப்போ பேய் காட்டுது என்று நினைக்கிறேன். எனது உறவினர்களிலேயே சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சிறுவர்கள் உட்பட குடும்பமாக தனிமைபடுத்தபட்டவர்களும் இருக்கிறார்கள்.

ரகசியமாய் குறுக்கு ஒழுங்கைகளினால் போய் திவசம், பூப்புனிதநீராட்டு,அந்தியேட்டி, குழுவாக காட்ஸ் விளையாட்டு திருமணம் என்று இப்போதும் அனுமதிக்கப்பட்டதவிட அதிகளவில் ஒன்று கூடிக்கொண்டே இருக்கிறார்களாம்.

ஆமி முந்தி இப்படி திரியுறவர்களை வயரால் வெளுதது கலைச்சவனாம் , இப்போ அவனும் பெரிசா கண்டுக்கிறது இல்லையென்று ஊரில் உள்ளவர்கள் சொன்னார்கள்.

எங்கள் மக்கள் இந்த நெருக்கடியான நேரம் என்ன செய்யவேண்டும் எப்படி இருக்கவேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும் இலங்கையில் ஏனைய பகுதி மக்களைவிட படிப்பறிவும் பட்டறிவும் அதிகமாவே உள்ளவர்கள் அவர்கள். நான் செத்துபோவேன் என்று நானே கவலைபடாதபோது மற்றவர்களும் சட்டங்களும் அதிகாரங்களும் எதுவுமே செய்ய முடியாது.

சிங்கள இடங்களில் இந்தியா சில மாசங்கள் முன்பு இருந்ததுபோல் நிலமை உள்ளதாம் இரவில் ஊரடங்கு சட்டம்போட பிளான் பண்ணினார்களாம், அதுக்கு பிக்கு ஒருவர் என்ன வெளவாலுக்கும் ஆந்தைகளுக்குமா ஊரடங்கு சட்டம் போடுகிறீர்கள் என்றாராம், இன்னொரு பிக்கர் உங்களை ஆட்சியில் இருத்தியதே சிங்கள மக்கள் செய்த பெரிய தவறு என்று புலம்பியிருக்கிறாராம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்பும், கட்டுப்பாடும் இல்லாதவர்கள் ஒட்சிசன் குடுவையை பொருத்தும்  போது தான்  யோசிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலமைக்கு அரசும் மக்களும் 50-50 பொறுப்பு.
பொதுசனம் நிலமையின் தீவிரத்தை புரிந்தும் புரியாத மாதிரி நிகழ்வுகளை நடத்துவது மிகமோசமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, valavan said:

ஆமி முந்தி இப்படி திரியுறவர்களை வயரால் வெளுதது கலைச்சவனாம் , இப்போ அவனும் பெரிசா கண்டுக்கிறது இல்லையென்று ஊரில் உள்ளவர்கள் சொன்னார்கள்.

 ஏனுங்கோ பச்சை மட்டை அடிக்கு அடங்கின சனமா இப்பிடி அடம் பிடிக்குதுகள்?????
அது அடிக்ககிறவன் அடிக்க எல்லாம் சரிவரும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 ஏனுங்கோ பச்சை மட்டை அடிக்கு அடங்கின சனமா இப்பிடி அடம் பிடிக்குதுகள்?????
அது அடிக்ககிறவன் அடிக்க எல்லாம் சரிவரும்....

சொல்லுறவர்கள் சொன்னால்.... தான், 
எங்கள் மக்கள், சொல்வழி  கேட்பார்கள் போலுள்ளது. 

புலிகள்.. இல்லாத குறை, 
மக்கள் மத்தியில்... பல  அசட்டையீனங்களை  ஏற்படுத்தி விட்டது.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 ஏனுங்கோ பச்சை மட்டை அடிக்கு அடங்கின சனமா இப்பிடி அடம் பிடிக்குதுகள்?????
அது அடிக்ககிறவன் அடிக்க எல்லாம் சரிவரும்....

இயக்கம் பச்சை மட்டை அடி எதுக்கு, ஏரியா பொறுப்பாளர் ஒரு அறிக்கை விட்டாலே போதும் மூச்சு காட்டாமல் இருந்து பழகிய சனம் இன்று இப்படி.

நான் நினைக்கிறன் சிங்கள ஏரியாவில் அவங்கட ஆக்கள் மிக பெரிய அளவில் பாதிப்படைஞ்சும் இறந்தும் போகேக்க  கரி தமிழனுகள் ஹொந்தாயா இருக்கவேணுமோ நல்லா பரவட்டும் என்று எண்டு ஆமி கண்டுக்காமல் விட்டிருப்பான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.