Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் அரசாங்கத் தரப்பில் இணையும் சாத்தியம்: கொழும்பு ஊடகம்.

Featured Replies

நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் அரசாங்கத் தரப்பில் இணையும் சாத்தியம்: கொழும்பு ஊடகம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் அரசாங்தரப்பில் இணைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கிசோர் அடிக்கடி காணப்படுவதாகவும் அரசாங்க தரப்பு அமைச்சர்களுடன் அவர் ஒன்றாக இருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டு களிப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

-Pathivu-

அதுக்கான வைய்ப்பு இல்லை இவர்கள் கற்பனை ஒன்றின் முல்லம் பிரச்சனைகளை ஆரம்பிக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள் போல???????

அரச தரப்பு அமைச்சர்களை உளவு பார்ப்பதற்காய் இருக்கும்!

இந்த அரசாங்கத்தில் தமிழ் நாடாள மன்ற உறுப்பினர்கள் இணைவது கற்பனை செய்ய முடியாத விசயம். இப்படியான செய்திகள் மூலம் சாணக்கியன் சொல்வது போல் உளவு பார்கின்ற செயலாக இருக்கும். கடந்த வாரம் கூட்டணி விடுத்த கண்டனத்தை பலவீனப்படுத்த வெளிவடப்படும் செய்திகளே இவைகள்.

கடந்த வாரம் வெளியான கண்டனம்

....................................................................

அரசாங்கத்தில் நாங்கள் இணைவதா? தலை முடியைக்கூட உங்களால் எடுக்க முடியாது: ஜெயராஜூக்கு த.தே.கூ. கடும் கண்டனம்

சிறிலங்கா அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒருபோதும் இணையவே மாட்டோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலை முடியைக்கூட உங்களால் எடுக்க முடியாது என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் பேசியதாவது:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைய உள்ளதாக அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்திருப்பதை நாம் வன்மையாக மறுக்கிறோம். கண்டிக்கின்றோம்.

நாம் உங்களைப் போல் சாதாரண அரசியல்வாதிகளல்ல. நாம் அரசியல் போராளிகள். நாம் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவே இந்நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 பேரில் எவரையும் அரசாங்கம் பக்கம் இழுக்கும் உங்கள் பகல் கனவு வெறும் கேலிக்கூத்தாக மட்டுமே இருக்கும்.

எம்மில் ஒரு உறுப்பினரையாவது முடிந்தால் அரசாங்கத்தின் பக்கம் எடுத்துப் பார்க்குமாறு சவால் விடுக்கிறோம். எமது உறுப்பினர்களை மட்டுமல்லஇ அவர்களின் தலை மயிரைக்கூட உங்களால் எடுக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு உறுப்பினரும் ஒருபோதும் மகிந்த அரசாங்கத்தின் பக்கம் வரமாட்டார்கள். எங்களை விலைக்கு வாங்க முடியாது.

இத்தகைய சூழ்நிலையில் எமது உயிருக்கு ஏதாவது ஆபத்து வருமானால்இ அரசாங்கமே அதற்கு பொறுப்பாகும் என்றார் அவர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை:

எமது உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் இணையவிருப்பதாக அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியிருப்பதை நான் மறுப்பதோடு கவலைப்படுகிறேன்.

அமைச்சர் ஒருவர் இப்படி பேசியிருக்கக்கூடாது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவே நாம் இங்கு வந்துள்ளோம்.

எம்மால் முடியாவிட்டால் வீட்டுக்கு போவோமே தவிரஇ அரசாங்கத்துடன் ஒருபோதும் இணையமாட்டோம் என்றார்.

செய்தி மூலம் புதினம்.

சிவநாதன் கிசோர் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் அரசியற் கட்சியைச் சாராதவர்கள்.

சமூகத்திலிருந்து மக்களுக்காக உழைத்தவர்களே அடையாளம் காணப்பட்டு வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருந்தனர்.

எனவே இவர்கள் கொள்கையை மறந்து எதிரியின் காலில் மண்டியிடுவார்கள் என நாம் எண்ணக்கூடாது.

எனினும் இந்தச் செய்தி குறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கவனம் செலுத்தவேண்டும். வேண்டுமென்றே கூட்டமைப்பில் குழப்பம் விளைவிக்க வேண்டுமென்பதற்காகக் கூட இப்படி சிங்களத் தரப்பால் செய்திகள் வெளியிடப்பட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா மாவட்டத்தின் செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் பணிப்பாளராக இருந்த கிசோர் ஏற்கனே சந்திரிக்கா ஆட்சியில் அவரது சாரதி புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டுக் காரணமாக கைது செய்யப்பட்டபோது, கிசோரும் பின்னர் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டிருந்தார். இன்றைக்கு அவர் வயதை விட முதுமைத் தோற்றம் காட்டுவதற்குக் காரணம் அன்று சிறிலங்கா அரசு கொடுத்த கடுமையான சித்திரவதையே காரணமாகும்.

அச்சித்திரவதையைத் தாங்கியபோதும் தன்னிலை மாறாதவர், இன்றைக்குச் சிங்கள அரசோடு இணைய வேண்டிய ஆளாக இருக்க மாட்டார் என்றே நான் கருதுகின்றேன்.

இத்தனை மக்களின் சாவுகளுக்குக் காரணமான மகிந்த அரசோடு, சேர்வது என்பது தான் வந்த, வருவதற்குக் காரணமான மக்கள் சமூதாயத்துக்குச் செய்கின்ற ஏமாற்று வேலையாகும் என்பதை அவர் உணர முடியாதவராக என்றைக்கும் இருக்கவாய்பில்லை.

சிங்கள அரசு இவ்வாறன கதைகளை உருவாக்கி, சந்தேகக் கண்ணோடு எமக்குள் எம்மவரைப் பார்க்கச் செய்கின்ற சதியாக இது இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட நாட்டு செய்தியள............ உங்களளவு இல்லாட்டியும் கொஞ்சம் படிக்கிறனான். இப்ப வரைக்கும் நடந்ததுகள வச்சு பாக்கேக்க............. இலங்கை அரசாங்கம் அல்லாட்டி இலங்கை புலனாய்வு பிரிவ நடத்துற உளவியல் போரில இதுவும் ஒண்டெண்டே சொல்லோணும்..... அதோட கிசோர் அண்ணாமேல புலனாய்வு பிரிவின்ர கண் விழுந்திருக்கு எண்டுறதுக்கான வெளிப்படையான அறிகுறியாவே இத பார்க்கோணும். ஏற்கனவே எச்சரிகைகளுக்குள்ளாகினவை......

கடத்தப்படவோ............... சுட்டுக்கொல்லப்படவோ முடியும்................. அதன்பின்னர் அரசாங்கத்தில இணைய இருந்தவர் எண்ட செய்தியோடு போராளியனில பழியபோட்டு தங்கட பக்கத்துக்கு அரசாங்கம் நியாயம் கூறும்.................... இது ஏற்கனவே நடந்த சம்பவங்களோட ஒத்துப்போற மாதிரி இருக்கு :huh::(

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட நாட்டு செய்தியள............ உங்களளவு இல்லாட்டியும் கொஞ்சம் படிக்கிறனான். இப்ப வரைக்கும் நடந்ததுகள வச்சு பாக்கேக்க............. இலங்கை அரசாங்கம் அல்லாட்டி இலங்கை புலனாய்வு பிரிவ நடத்துற உளவியல் போரில இதுவும் ஒண்டெண்டே சொல்லோணும்..... அதோட கிசோர் அண்ணாமேல புலனாய்வு பிரிவின்ர கண் விழுந்திருக்கு எண்டுறதுக்கான வெளிப்படையான அறிகுறியாவே இத பார்க்கோணும். ஏற்கனவே எச்சரிகைகளுக்குள்ளாகினவை......

கடத்தப்படவோ............... சுட்டுக்கொல்லப்படவோ முடியும்................. அதன்பின்னர் அரசாங்கத்தில இணைய இருந்தவர் எண்ட செய்தியோடு போராளியனில பழியபோட்டு தங்கட பக்கத்துக்கு அரசாங்கம் நியாயம் கூறும்.................... இது ஏற்கனவே நடந்த சம்பவங்களோட ஒத்துப்போற மாதிரி இருக்கு :huh::(

இப்பதில் நியாயமான சந்தேகம்

சென்ற முறை ரவிராஜ் கொல்லப்பட்ட போதும், அவர் சொல்லாத ஒன்றைச் சென்னதாகச் சொல்லி, புலிகளைத் திட்டியபடியால் தான் கொல்லப்பட்டார் என்று ரம்புக்கல கதைத்திருந்தார். ஆனால் அதில் என்னவென்றால் அவர் கொல்லப்படுவதற்கு சில மணித்துளிகளுக்கு முதல் சிங்கள ஊடகமொன்றில் புலிகளை ஆதரித்தும், மகிந்த அரின் கொடுங்கோல், மற்றும் யாழ்பாணத்துக்கான தடையை எதிர்த்தும் கடுமையாகச் சாடிய பின்னர் தான் கொல்லப்பட்டிருந்தார்.

அவ்வாறே கிசோருக்குக் குறி வைக்கின்ற சிங்கள அரசு, முதலே இப்படி ஒரு கதையைக் கட்டி விட்டு, ஏதும் செய்தால் புலிகளின் மீது பழி விழலாம் எனச் சதி செய்கின்றது போல.

திரு கிசோர் அவர்கள், தன் பாதுகாப்பில் கூடிய சிரத்தை எடுப்பது மிக அவசியம்.

பூனைக்குட்டி, மற்றும் தூயவனின் கருத்துப்படி இந்தச்செய்தியின் பின்னணியில் நாசாகாரத் திட்டம் இருக்கலாம்.

சிவநாதன் கிசோர் தனது பாதுகாப்பில் நிச்சயம் கவனம் செலுத்தவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.