Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருமுறை ஆய்வு செய்ய.........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை ஆய்வு செய்ய.........

வட்டி முதலாய் படர்ந்து விட்ட கடன்

கட்டி முடிக்க வேண்டும் தவணையோடு

பட்டு விட்ட கடனை சேர்ந்தே அடைக்க மனதினில்

தட்டிவிட்டதோர் சட்டென்ற ஒர் யோசனை

வெட்டியாய் வீட்டிலிருந்தே வெறுமனே

மெட்டி ஒலி பார்த்து மென்னுடலை

பொட்டலமாய் உருத்தெரியாமல் மாறிடாமலே

கட்டு மேனியை கட்டோடு வைத்திருக்க

எட்டு மணி நேர வேலைதனை

எட்டியே போய் செய்யலாமே

கட்டியதனால் கணவனார் உரைத்தலாலே

எட்டு மணி நேர வேலை இயல்பாய்

எட்டிரண்டாகி இயந்திரமாகிப் போனதில்

எட்டிப் பார்த்ததோ நோயும் நொடியும்தான்

கட்டியவனுக்கு நோய் என்றால்

கட்டியவள் காப்பாள் நிதம் பத்தியம்

கட்டியவளுக்கு நோய் என்றால்

கட்டியவன் காப்பானா பத்தியம்

அடுப்படி விசயம் அடுக்களை ஏறியே

எட்டிப்பார்த்து சந்தைக்கு வருகிறது

தட்டிக் கேட்பதற்காக இல்லை வீணை

மீட்டிப் பார்த்தே மீளாய்வு செய்வதற்காக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டியவனுக்கு நோய் என்றால்

கட்டியவள் காப்பாள் நிதம் பத்தியம்

கட்டியவளுக்கு நோய் என்றால்

கட்டியவன் காப்பானா பத்தியம்

கறுப்பி அக்கா கவிதை அருமை அதிலும் மேலே கூறிய வரிகள் அருமையிலும் அருமை.

கப்பி அக்காவின்ட கவிதையா கன நாளைக்கு பிறகு என்றாலும் சொல்ல தான் வேண்டுமா...........கவிதை பேஷ்.......பேஷ் ஆனா கப்பி அக்கா இந்த வரி எல்லாருக்கும் பொருந்துமா...........இல்லை சில பேருக்கும் மட்டும் தான் பொருந்தும் என்பது என் பார்வையில்.......... :)

கட்டியவனுக்கு நோய் என்றால்

கட்டியவள் காப்பாள் நிதம் பத்தியம்

கட்டியவளுக்கு நோய் என்றால்

கட்டியவன் காப்பானா பத்தியம்

கட்டியவனுக்கு நோய் என்றால்

கட்டியவள் காப்பாள் நிதம் பத்தியம்

கட்டியவளுக்கு நோய் என்றால்

கட்டியவன் காப்பானா பத்தியம்

[/quote

எல்லா ஆண்களையும் ஒரே தராசில் எடைபோடக்கூடாது

[எல்லா ஆண்களையும் ஒரே தராசில் எடைபோடக்கூடாது

அதிக ஆண்களுக்கு இது பேறுந்தும்,!!!

B)

கவிதை நன்றாக் உள்லலது கறுப்பி!!! :)

ஒருமுறை ஆய்வு செய்ய.........

கட்டியவனுக்கு நோய் என்றால்

கட்டியவள் காப்பாள் நிதம் பத்தியம்

கட்டியவளுக்கு நோய் என்றால்

கட்டியவன் காப்பானா பத்தியம்

நல்ல கணவன்(ஆண்களைக் காணாத பெண்களாக இருக்கிறீர்களே..)

எனக்குத்தெரிந்து..

சாரதியாகிய கணவன்..

சமயல்காரராகிய கணவன்..

துவையல்காரராகிய கணவர்(துணியை சொன்னேன்)

மொத்தத்தில் அ முதல் ஃ வரை செய்யும் வேலைக்காரராக(கோழைகளாக)

நிறைய ஆண்கள் இருக்கிறார்களே.. அவர்கள் பத்தியம் என்ன குழந்தை பெறக்கூட சம்மதிக்ககூடும்.

ஆனாலும் கபி ஆண்களிட்ட ரொம்ப எதிர்பார்க்கிறீங்க பாவம் உங்கள் கணவர் :)

ஒருமுறை ஆய்வு செய்ய.........

வட்டி முதலாய் படர்ந்து விட்ட கடன்

கட்டி முடிக்க வேண்டும் தவணையோடு

பட்டு விட்ட கடனை சேர்ந்தே அடைக்க மனதினில்

தட்டிவிட்டதோர் சட்டென்ற ஒர் யோசனை

வெட்டியாய் வீட்டிலிருந்தே வெறுமனே

மெட்டி ஒலி பார்த்து மென்னுடலை

பொட்டலமாய் உருத்தெரியாமல் மாறிடாமலே

கட்டு மேனியை கட்டோடு வைத்திருக்க

எட்டு மணி நேர வேலைதனை

எட்டியே போய் செய்யலாமே

கட்டியதனால் கணவனார் உரைத்தலாலே

எட்டு மணி நேர வேலை இயல்பாய்

எட்டிரண்டாகி இயந்திரமாகிப் போனதில்

எட்டிப் பார்த்ததோ நோயும் நொடியும்தான்

கட்டியவனுக்கு நோய் என்றால்

கட்டியவள் காப்பாள் நிதம் பத்தியம்

கட்டியவளுக்கு நோய் என்றால்

கட்டியவன் காப்பானா பத்தியம்

அடுப்படி விசயம் அடுக்களை ஏறியே

எட்டிப்பார்த்து சந்தைக்கு வருகிறது

தட்டிக் கேட்பதற்காக இல்லை வீணை

மீட்டிப் பார்த்தே மீளாய்வு செய்வதற்காக

கறுப்பி ஆண்களை கொஞ்சம் லேசாகத்தான் எடை போடுறீங்க..... என்றுதான் நினைத்தேன் ஆனால் எழுதுங்கள் என் கல்லறையில் எனும் கவியில் ஒரு ஆணாக நின்று சொல்லி இருக்கின்றீங்க .....

இதயத்தை முத்தமிட்ட உன் அழகிய

உதடுகள் விஷம் செறிந்த தேன் துளிகள்

விழியாலே மொழிபேசும் கிளிமொழியாலே என்

விழி பிதுங்கிட வைத்த பைங்கிளியே

மை எழுதும் கண்ணாலே தினம் தினம்

பொய்யெழுதி பொய்மைக்கு முன்னுரை உரைத்தவளே

போதும் போதும் இந்த பொல்லாத உலகமிதில்

பெண்ணொன்று வேண்டாம் இனி எனக்கு

பெண்ணை நம்மாதே பேயாய் அலைந்திடுவாய்

நம்பியவன் கதி நாயாய் நடைப்பிணமாய்

நடுச்சாமத்திலும் தலையணை நனைத்திடும்

நரகப் பொழுதிலும் புலம்புகின்றேன் அவள் பெயரை

என்ன கருத்துச் சொல்வதென்று தெரியாது தவிக்கின்றேன் ..... அதனால் தப்பீட்டீங்க .... :P

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு வந்து கொண்டிருக்கிறார் கொஞ்சம் பொறுங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்து சொன்ன இன்னிசை , யமுனா , சிவா , இனியவள் , விகடகவி , பாலன் , ஈழப்பிரியன் ஆகியோருக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கணவன்(ஆண்களைக் காணாத பெண்களாக இருக்கிறீர்களே..)

எனக்குத்தெரிந்து..

சாரதியாகிய கணவன்..

சமயல்காரராகிய கணவன்..

துவையல்காரராகிய கணவர்(துணியை சொன்னேன்)

மொத்தத்தில் அ முதல் ஃ வரை செய்யும் வேலைக்காரராக(கோழைகளாக)

நிறைய ஆண்கள் இருக்கிறார்களே.. அவர்கள் பத்தியம் என்ன குழந்தை பெறக்கூட சம்மதிக்ககூடும்.

ஆனாலும் கபி ஆண்களிட்ட ரொம்ப எதிர்பார்க்கிறீங்க பாவம் உங்கள் கணவர் :)

சாரதியாக , சமையல்காரராக, துவையல்காரராக இருந்துட்டுப் போகட்டும் விகடகவி. அது பிரச்சனை இல்லை. மனைவியின் நலனில் அக்கரை காட்டாம இருந்தா என்ன செய்யிறதுங்க.

இப்படித்தான் அண்மையில் ஒரு பெண் இறந்து போனா.

நோய் தெரியாமலே வாழ்ந்து, வேறு ஏதொ நோய் எண்டு செக் பண்ண போகத்தான் தெரிந்திருக்கு.

கூட வாழ்ந்த கணவனாவது கவனித்து கூட்டிக்கொண்டு போயிருக்கலாமே எண்டு நினைக்கத் தோன்றியது.

அதுதான் மனதில் உள்ளதை எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு வந்து கொண்டிருக்கிறார் கொஞ்சம் பொறுங்கோ.

:lol::):D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு வந்து கொண்டிருக்கிறார் கொஞ்சம் பொறுங்கோ.

இவர் இப்போ ரொம்ப பிஸிங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
சாரதியாக , சமையல்காரராக, துவையல்காரராக இருந்துட்டுப் போகட்டும் விகடகவி. அது பிரச்சனை இல்லை. மனைவியின் நலனில் அக்கரை காட்டாம இருந்தா என்ன செய்யிறதுங்க. இப்படித்தான் அண்மையில் ஒரு பெண் இறந்து போனா. நோய் தெரியாமலே வாழ்ந்து, வேறு ஏதொ நோய் எண்டு செக் பண்ண போகத்தான் தெரிந்திருக்கு. கூட வாழ்ந்த கணவனாவது கவனித்து கூட்டிக்கொண்டு போயிருக்கலாமே எண்டு நினைக்கத் தோன்றியது.அதுதான் மனதில் உள்ளதை எழுதினேன்.
பொஞ்சாதி குத்துக்கல்லாட்டம் இருக்கேக்குள்ளயே வேலைக்காரனாட்டம் எத்தின வீட்டுக்காரங்கள் இருக்கானுவ.. :lol:
இவர் இப்போ ரொம்ப பிஸிங்கோ.
உங்களுக்கு எப்பிடித் தெரியும்?!!ஓ... விளங்கீட்டுது.. அதுக்குத்தான் பாட்டெழுதி இந்தப்பாடா??!! :P அதுசரி ... என்ன சுகமில்லை உங்களுக்கு..!
  • கருத்துக்கள உறவுகள்

கப்பி அக்கா என்ன கவிதையா எழுதுறீங்க ஆனால் எல்லாம் கவியும் நல்லா இருக்கு வாழ்த்துகள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.