Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமாதானப் பேச்சா? இராணுவ நடவடிக்கையா? விடுதலைப் புலிகளே தீர்மானிக்க வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானப் பேச்சா? இராணுவ நடவடிக்கையா? விடுதலைப் புலிகளே தீர்மானிக்க வேண்டும்

வீரகேசரி நாளேடு

அரசாங்கம் கிழக்கை கைப்பற்றியுள்ள நிலையில் எதிர்காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்துவதா ? அல்லது மேலும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதா? என்பதனை விடுதலை புலிகளே தீர்மானிக்கவேண்டும். அவர்களின் கைகளிலேயே அனைத்தும் தங்கியுள்ளன. பேச்சுவார் த்தைகளை ஆரம்பிக்கும் செயற்பாடு புலிகளின் அறிவிப்பிலேயே தங்கியுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அரசாங்கமும் விடுதலை புலிகளும் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது இரகசிய உடன்படிக்கையொன்றை செய்துகொண்டனர் என்று கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. இது வெறுமனே அரசியல் இலாபம் நோக்கி செய்யப்படும் பிரசாரமாகும். எனவே இவ்விடயம் குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு அவசியமில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

கேசரிக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது :

அரசாங்கம் கிழக்கை தற்போது முழுயைமாக கைப்பற்றியுள்ளது. ஆனால் அரசாங்கம் கிழக்கில் வெற்றி பெற்றுள்ளது என்பதற்காக சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபாடு காட்டாது என்று அர்த்தமில்லை. பேச்சுவார்த்தை மூலமே இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

இருப்பினும் அரசாங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபாடு காட்டவேண்டுமா ? அல்லது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமா? என்பதனை விடுதலை புலிகளே தீர்மானிக்கவேண்டும். அவர்களின் செயற்பாடுகளிலேயே அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தங்கியுள்ளன. புலிகள் பேச்சுக்கான சமிக்ஞையை வெளிக்காட்டுவார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கம் புலிகளுடன் இரகசிய உடன்படிக்கை செய்துகொண்டதாகவும் புலிகளுக்கு நிதி வழங்கியதாகவும் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களில் எந்தவிதமான உண்மையுமில்லை. முன்னாள் அமைச்சர்களான ஸ்ரீபதி சூரியாராச்சி மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் அமைச்சுப்பதவிகளிலிருந்து விலக்கப்பட்ட பின்னரே இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அவர்கள் நாட்டை நேசிக்கின்றவர்கள் என்றால் அத்துடன் இரகசிய உடன்படிக்கை உண்மை என்றால் 2005 ஆம் ஆண்டே இதனை வெளிப்படுத்தியிருக்கலாமே ? ஏன் அவ்வாறு செய்யவில்லை. இதன் மூலம் இது அரசியல் ரீதியான பொய்க்குற்றச்சாட்டு என்பது தெளிவாகின்றது.

இலங்கை அரசியல் வரலாற்றில் இவ்வாறான பொய்க்குற்றச்சாட்டுக்கள் மிக அதிகமாகவே இடம்பெற்றுள்ளன. எனவே இவ்வாறான விடயங்களுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்கவேண்டிய அவசியமில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் அவர் விடுதலை புலிகளுக்கு நிதி வழங்கினார் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால் அப்போது அவ்விடயம் குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியினர் ஏன் கோரவில்லை ? என்று கேட்கின்றோம்.

ஓ...................... அப்படியா டலஸ் அழகப்எருமாள் ( :huh::lol::lol: ) இராணுவ சமநிலையில் இருந்து சொல்கிறீர்களோ? பொறுங்கோ.......... பொறுங்கோ................ பேசுவம் :P :P :P :o:D

உங்கள் நோக்கம் நிறைவேறினால்தானே புலிகள்வைத்த பொறியில் நீங்கள் சிக்கியதாக அர்த்தம். உலகமும் இவர்களும் ஒன்றை மறந்துவிட்டார்கள். ஒப்பனைக்கு இனி எதுவும் நடக்காது. அது ஒரு பெரிய களம் கிழக்கைப் போரின்றி விடுவிக்கும். உலகம் இந்த அதிசயத்தைக் காணப்போகின்றது. இது கோலிவூட்டில் திரைப்படமாகக் கூட வெளிவரலாம்.

தயாரிப்பு, திரைக்கதை, இயக்கம், இசை தேசியத் தலைவர்.

அடப்பாவிகளா? குடும்பிமலையைப் பிடிச்சுப்போட்டு, இதுவேறையா?

போரா? சமாதானமா? இதில் என்ன வேண்டும் என்பதை எப்பவோ தீர்மானித்த பின்னர்தானே உங்கடை மகிந்தரை பதிவிக்கு வர வழிவிட்டம்.

எங்கடை தீர்மானத்திற்கு வலுச்சேர்க்கும் நடவடிக்கைகளைத்தான் மாவிலாற்றில் இருந்து குடும்பிமலை வரை மகிந்த ஐயா செய்து கொண்டிருக்கிறார். இன்னும் கொஞ்சக் காலம் பொறுங்கோ நாங்க எடுத்த தீர்மானம் என்ன உங்களிற்கு விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

"போரா சமாதானமா" இது தமிழ் மக்களின் "டயலாக்" என்று நினைக்கின்றேன்.தலைவர் ஏற்கனவே முடிவு எடுத்துப்போட்டார்.அழுக பொருமா திரும்ப கின்ட காடினில் இருந்து தொடங்குகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கத்தால் போர் நடத்தவும் முடியாது, ஆட்சியை நடத்தவும் முடியாது. ஆகவே அவசரமாக சமாதான நாடகம் ஆடவேண்டிய கட்டாயம் ஒன்றுள்ளது.

அதே நேரத்தில் சிங்கள மக்கள் மத்தியில் தான் போரில் பலமான, சமமான நிலையில் இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டிய ஒரு தன்மானப் பிரச்சினையும் உண்டு.

ஆகவே தான் புலிகளினால் அதிகளவு எதிர்ப்பு காட்டாத ஒரு இடத்தை தெரிவு செய்து அதை பலமான போராட்டத்தின் பின்பு கைப்பற்றியதாக ஒரு நாடகம் ஆடுகின்றது.

இப்போ புலிகளிடம் தூதும் அனுப்பப்பட்டுவிட்டதாக செய்திகளும் தெரிவிக்கின்றன...

இனிமேல புலிகளின் அரசியல் வித்தையை பொறுத்திருந்து பார்ப்போம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.