Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய... பலர் முயற்சிப்பதாக சுமந்திரன் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய பலர் முயற்சிப்பதாக சுமந்திரன் குற்றச்சாட்டு

போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய... பலர் முயற்சிப்பதாக சுமந்திரன் குற்றச்சாட்டு

வடக்கில் நடத்திய போராட்டத்தை இந்தியாவிற்கு எதிரான போராட்டமாக சித்தரிக்க முயற்சிகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த கோரியே இந்த போராட்டம் இடம்பெற்றது என கூறினார்.

மீனவர்களுடைய போராட்டத்தினை வலுவிழக்கச் செய்கின்ற செயற்பாட்டில் பலர் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த தடைசட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நேற்றிரவு ஒரு இந்திய மீனவரின் உயிர் பிரிந்திருக்காது என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும் இந்த சட்டத்தினை மீறி உள்நாட்டிலும் தொழில் செல்பவர்களுக்கு எதிராகவும் இந்த சட்டத்தை பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2021/1245807

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தமிழர் போராட்டைத்தை ஐ.நா.சபையில் வழுவிழக்க செய்ததை விட இது பெரியவிடயம் அல்ல?

இதுவும் நீங்கள் சிங்களஅரசுக்கு ஆதரவாக செய்வது போல தான் தெரிகின்றது ....சிங்கள அரசு இந்தியாவுடன் உறவு வளர்க்க நீங்கள் தமிழ்நாட்டு தமிழருடன் பகை வளர்க்க முயற்சி செய்கின்றீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எமது கடல் போராட்டம் இந்தியாவிற்கு எதிரானது அல்ல!

October 19, 2021
 

 

நாம்  நடாத்திய போராட்டம் இந்தியாவிற்கு  எதிரான போராட்டம் அல்ல. சிலர்  எமது போராட்டத்தை இந்தியாவிற்கு எதிரானதாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழில் இன்றைய நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டத்தை  முறையாக நடைமுறைப்படுத்துமாறு கோரியே நாங்கள் கடல் போராட்டத்தை மேற்கொண்டிருந்தோம்.இந்த தடைசட்டம்  முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நேற்றிரவு  ஒரு இந்திய மீனவரின் உயிர் பிரிந்திருக்காது. எனவே இந்த சட்டம் ஒழுங்கான முறையில் உள்ளது, நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை தெளிவாக வெளிப்படுத்தினால்  இப்படியான அநாவசியமான இழப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம்.

இலங்கையில் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது என யாருமே நினைக்க கூடாது. இந்தத் தொழில்முறை தடை செய்யப்பட வேண்டும் என 2016 ம் ஆண்டு  இந்திய அரசு மற்றும் எமது அரசும்   ஒன்றாக   பேசி இரண்டு அரசாங்கங்களும் இணங்கியபடி இந்த தொழில் கடல் வளத்துக்கு பாதிப்பானது சுற்றுச்சூழலை பாதிக்கிறது என அடுத்தடுத்த தலைமுறைக்கு மீன் வளத்தினை இல்லாமல் செய்கிற விடயமாகும்.  இதனை எவர் செய்தாலும் அது தண்டனைக்குரிய  குற்றமாகும்.  இந்த  சட்டத்தினை மீறி  பலர் உள்நாட்டிலும் தொழில் செய்கிறார்கள்.

அவர்களுக்கு எதிராகவும் இந்த சட்டம் பயன்படுத்தப்படவேண்டும்.  விசேடமாக குருநகர் பகுதியில் இருக்கிறவர்கள் 6 வருடங்களுக்கு முதல் என்கூட பேசுற போது ஆறு மாதத்தில் நிறுத்தி விடுவோம் என கூறினார்கள். ஆனால் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார்கள்.  கடல் வளங்கள் அளிக்கப்படுவதும் தெரிந்து கொண்டும்  தொடர்ந்தும் செயற்படுகிறார்கள்.  உள்ளூர் மீனவர்களாக இருந்தாலும், வெளி மாவட்டங்களில் இருந்து எமது பிரதேசத்தில் தொழில்புரிபவர்களாக இருந்தாலும், அந்நிய நாட்டிலிருந்து வந்து தொழில் பவர்களாக இருந்தாலும் இந்தத் தொழில்முறை ஆனது சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

அது தொடர்ச்சியாக தடுக்கப்பட வேண்டும். என்பதுதான் உண்மையான விடயம். நாங்கள் நடத்திய போராட்டத்தினை இந்தியாவிற்கு  எதிரான  போராட்டமென  சித்தரிப்பதற்கு பலர் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு இந்தியாவுக்கு எதிரான போராட்டம் அல்ல. இந்திய அரசாங்கமே 2016ஆம் ஆண்டு தடை செய்யப்படவேண்டிய தொழில்முறை என உத்தியோகபூர்வமாக கூட்டறிக்கையில் அறிவித்து இருக்கின்றது.

ஆகவே இது இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடும் தான் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு என்று வேண்டுமென்றே ஒரு கதையினை கட்டி இந்த மீனவர்களுடைய போராட்டத்தினை வலுவிழக்கச் செய்கின்ற செயற்பாட்டில்  பலர் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதை முற்றாக நிராகரிக்கின்றோம். இந்தத் தொழிலை யார் செய்தாலும்  தடுக்கப்பட வேண்டும். என்பதுதான் எமது கோரிக்கை.  இந்த சட்டத்தில் இருக்கின்ற படியால் அந்த சட்டத்தை அமுல்படுத்துமாறு தான் கோரிக்கை விடுக்கின்றோம்

https://globaltamilnews.net/2021/167458

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ ஏதோ நடந்திருக்கு!
அது சரி போர் என்ற சொல் பிடிக்காத சனநாயகவாதி எல்லோ!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

என்னமோ ஏதோ நடந்திருக்கு!
அது சரி போர் என்ற சொல் பிடிக்காத சனநாயகவாதி எல்லோ!

மகிந்தா சொல்லி கொடுத்திருப்பார்.....போர் என்று சொல்ல சொல்லி

தலைமை பதவி வேணுமல்லோ அது தான் சவுண்ட் விடுகிறார் ...தமிழருக்கு உரிமை கிடைக்காவிடில் மனிதவெடி குண்டாக மாறுவேன் என அறிக்கை விட்டாலும் ஆச்சரியப்பட தேவையில்லை....

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களிற்காக அரசியல் செய்யும் கட்சிகள் இந்திய அரசு கோபிக்குமே என எண்ணி எமது உரிமையினை அடைவு வைப்பதாகவும் தேர்தல் காலம் வரும்போது இந்த தலைவர்கள் நாடிவரும்போது தகுந்த பதுலடி கிடைக்கும் என மீனவர்கள் கூறிவருகின்றனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கெதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தில் பங்கு கொண்டால் இந்தியா தம்மீது கோபம் கொள்ளும் நிலை ஏற்படும் எனத் தெரிவித்து கூட்டமைப்பின் தலைவர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்ளாது ஓடி ஒளிவதாக ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 கடல் பேரணி வெற்றிகரமாக நகர்த்த வண்ணம் உள்ளதாக ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

12 hours ago, கிருபன் said:

 நாங்கள் நடத்திய போராட்டத்தினை இந்தியாவிற்கு  எதிரான  போராட்டமென  சித்தரிப்பதற்கு பலர் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு இந்தியாவுக்கு எதிரான போராட்டம் அல்ல.

தலை சுற்றுகிறது எனக்கு மட்டுமா? இதன் பொருளை யாரேனும் தெரிந்தால் விளங்கப்படுத்துங்களே!

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏ தமிழ் மக்கள் பார்த்து
வச்ச தமிழ் தேசியம் எனக்கு புடிக்கல
தமிழ் தேசியம் கொஞ்சம் புடிச்சாலும்
பேச புடிக்கல பேச
நினைச்சாலும்  புலியை நினைக்க‌
புடிக்கல புலியை புடிச்சாலும்
சேர்ந்து வாழ புடிக்கல
மாத்தையா உன்னை மட்டும் புடிக்குது
உன் சிறிலங்கா தேசியம் மட்டும் புடிக்குது (2)
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.