Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏறாவூர் பொலிசார் இளைஞர்களை தாக்கிய சம்பவம் -தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏறாவூர் பொலிசார் இளைஞர்களை தாக்கிய சம்பவம் -தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

 (திருக்கோவில் நிருபர்)
ஏறாவூர் பொலிஸார் பொதுமக்களை தாக்கிய சம்பவத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
நாட்டையும் நாட்டு பொதுமக்களையும் பாதுகாப்பாக வழிநடாத்துகின்ற இந்த பாதுகாப்பு தரப்புக்கள் இவ்வாறு மிருக்கத்தனமாக தாக்குதல் நடாத்தினால் பொதுமக்கள் யாரை நாடி போவது எனவே இத்தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; தெரிவித்தார்.
Attack-300x150.png
ஏறாவூரில் இரு இளைஞர்களை; மீது பொலிசார் தாக்குதல் நடாத்திய சம்பவத்தை கண்டித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; ஊடக அறிக்கை ஒன்றை இன்று சனிக்கிழமை (23) வெளியிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே ஏறாவூர் மைலம்பாவெளி பகுதியில் நேற்றைய தினம் இரு இளைஞர்கள் வீதி போக்குவரத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு போக்குவரத்து பொலிசார் ஒருவரால் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற் கொண்டிருந்தார் உண்மையிலே இந்த மூர்கத்தனமான தாக்குதலை முதலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது
அதேவேளை மாவட்டத்திலே அப்பாவிகள் மீது இப்படி பொலிசாருடைய அடாவடித்தனங்கள் இடம்பெற்றுவருகின்றது அண்மையிலே வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் தாக்கப்பட்டனர் அதேவேளை இருதயபுரம் பகுதியில் ஒரு இளைஞன் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவ்வாறு சட்டம் இருக்கத்தக்கதாக மனித உரிமை மீறல்கள் மனித குலத்துக்கு எதிரான சம்பவங்களை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்
இவ்வாறே தொடர்ந்து பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றது இந்த தாக்குதல்களை பார்க்கும் போது சம்பவங்களை பொலிசார் கையாளத் தெரியாது தங்களுக்கு ஏற்ற விதத்தில் கையாளுகின்றார்கள்.
எனவே மாவட்டதிலுள்ள பொலிஸ் அதிகாரிகள் பொலிசாரை சிறந்த முறையில் வழிநடாத்த தவறியதலாலும் மனித உரிமையை பாதுகாத்தல்;, பொதுமக்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் தொடர்பாக பொலிசாருக்கு பயிற்சி அளிக்கப்படாதனாலேயே இவ்வாறு பொலிசார் பொதுமக்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொள்ளுகின்றனர்.
வடக்கு கிழக்கிலே பொலிசார் நீண்ட நாட்களாக இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது எனவே இப்படியான தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.  இந்த  சம்பவத்தில் தொடர்புடையவருக்கு எதிராக  உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் பாதிக்கப்பட இளைஞர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். அதேவேளை இப்படியான சம்பவங்கள் இனிமேல் இடம்றெதாது என பொலிஸ் மா அதிபர் உறுதிப்படுத்தவேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
 

https://thinakkural.lk/article/145110

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை போலீஸ்காரர் கைது, இடைநீக்கம்: பொது இடத்தில் இரு இளைஞர்களை மோசமாகத் தாக்கிய வழக்கில் நடவடிக்கை

47 நிமிடங்களுக்கு முன்னர்
இலங்கை போக்குவரத்துப் போலீஸ்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இலங்கை போக்குவரத்துப் போலீஸ். சித்தரிப்புப் படம்.

இலங்கையில் இளைஞர்கள் இருவரை மனிதாபிமானமற்ற முறையில், பொது இடத்தில் வைத்து தாக்கிய போக்குவரத்து போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, குறித்த போலீஸ் உத்தியோகஸ்தர் பணியிருந்து இடைநிறுத்தப்பட்டதாக அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தில் நேற்று (அக்டோபர் 22) இளைஞர்கள் இருவரை போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தாக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

இந்த வீடியோவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியனும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததோடு, "போலீசார் அராஜகம் மட்டக்களப்பில் தொடர்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன், ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு இது கேட்குமா என்று பொருள்படும் ஒரு குறிப்பையும் அவர் இட்டிருந்தார்.

போலீஸ் தாக்குதல்
 
படக்குறிப்பு,

இளைஞர் மீது போலீஸ் தாக்குதல்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர பதவி வகிப்பதும், அந்த அமைச்சின் கீழேயே போலீஸ் திணைக்களம் வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சரத் வீரசேகர

பட மூலாதாரம்,SARATH VEERASEKARA

 
படக்குறிப்பு,

சரத் வீரசேகர

இதனையடுத்து மேற்படி சம்பவம் தொடர்பில் நேற்று பேசிய அமைச்சர் சரத் வீரசேகர; "பொதுமக்களைத் தாக்குவதற்கு போலீஸாருக்கு அதிகாரமில்லை" என்றும், "சட்டத்தை அமல்படுத்துவதுதான் போலீஸாரின் பணி" எனவும் தெரிவித்திருந்தார். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் மா அதிபர் மற்றும் கிழக்கு மாகாணத்துக்கான சிரேஷ்ட பிரதிப் போலீஸ் மா அதிபர் ஆகியோரை அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்த சம்பவத்தில் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் இருவரே இவ்வாறு தாக்கப்பட்டனர்.

ஏறாவூர் போலீஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றிய போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகவே குறிப்பிட்ட காணொளியில் தெரிகிறது.

தாக்குதலுக்கான பின்னணி

போலீஸ் தாக்குதல்

குறித்த பகுதியில் விபத்தொன்று நடைபெற்றதாகவும், அந்த விபத்து நடந்த இடத்தை - அளந்து அடையாளப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மேற்படி இளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் அந்த இடத்தை மிகவும் வேகமாகக் குறுக்கறுத்து கடந்த சென்றுள்ளனர் என்றும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிக்கிறார்.

இதன்போது போலீஸாரின் அளவை நாடா - அந்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிளில் மாட்டி இழுபட்டுச் சென்ற போதிலும், அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதாகவும் அமைச்சர் கூறுகிறார்.

இதனையடுத்தே, அந்த இளைஞர்களை குறித்த போலீஸ் உத்தியோகஸ்தர் விரட்டிச் சென்று - பிடித்து தாக்கியுள்ளார் எனக் குறிப்பிட்ட அமைச்சர் "அவ்வாறு தாக்குவதற்கு குறித்த போலீஸ் உத்தியோகஸ்தருக்கு உரிமை கிடையாது" எனவும் தெரிவித்தார்.

இன்று (23) கைது செய்யப்பட்ட மேற்படி போலீஸ் உத்தியோகஸ்தர், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி நடக்கவுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-59022473

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

குறித்த பகுதியில் விபத்தொன்று நடைபெற்றதாகவும், அந்த விபத்து நடந்த இடத்தை - அளந்து அடையாளப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மேற்படி இளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் அந்த இடத்தை மிகவும் வேகமாகக் குறுக்கறுத்து கடந்த சென்றுள்ளனர் என்றும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிக்கிறார்.

சிறு பிள்ளைத்தனமான விளக்கம். விபத்து நடந்த பகுதியை போக்குவரத்துக்கு தடை செய்திருக்க வேண்டுமோ இல்லையோ? வாகன ஓட்டுனர்களுக்கு தெரியும்படி அறிவிப்பு பலகை வைத்து இருக்க வேண்டுமோ இல்லையோ? ஒரு போலீஸ்காரர் மட்டும் பணியில் இருந்துள்ளார், இது யாரின் பிழை? தங்களது பிழைக்கு பொதுமக்களை தாக்குவதும் விளக்கம் கொடுப்பதும் இதற்கு போலீஸ் எதற்கு? சாதாரண குண்டர் படை போதுமானதே.

  • கருத்துக்கள உறவுகள்

வேறொன்றுமில்லிங்க....
 உள்ளூர் பொறிமுறைக்காக உளுந்தும் கூடவே எலிப்புழுக்கையும் காயுது ..  🤣

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்பற்றவருக்கு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பதவி வேற.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.