Jump to content

அமெரிக்காவில் தடுப்பூசி ஏற்றாத மருத்துவ ஊழியர்கள் பணி நீக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் தடுப்பூசி ஏற்றாத மருத்துவ ஊழியர்கள் பணி நீக்கம்

ம.ரூபன்.

உலகில் 2020 ஜனவரி-2021 மே வரை கொவிட் நோயால் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மருத்துவத்துறை  ஊழியர்கள் மரணமானதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் குறையும்போது தற்போது ரஷ்யாவில் தொற்று அதிகரித்துள்ளது.

இந்நோய் பரவ காரணமான சீனாவில்  மீண்டும் தொற்று கூடியுள்ளது. அமெரிக்காவில்  மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி மருந்தை ஏற்றிக்கொள்கிறார்கள். எனினும் சில இடங்களில் கோவிட் தொற்றால் பலர் மரணமடைகின்றனர்.

கொரோனா ஆட்கொல்லி நோய் அமெரிக்காவிலேயே பல இலட்சம் பேரை காவு கொண்டு பொருளாதாரத்தையும் பாதித்து யுத்த கால சூழலைப்போல மக்களின் வாழ்க்கை காணப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் தோல்விக்கும்,பைடனின் வெற்றிக்கும் இதுவும் காரணம் பைடன் ஜனாதிபதியாக பதவிக்கு வந்ததும் தடுப்பு மருந்தை சகலரும் பெறுவதற்கு உடன் நடவடிக்கை எடுத்து, சகலரும் தடுப்பூசியை ஆர்வத்துடன் ஏற்றி வருகின்றனர்.

இந்நோய் தொற்றும் குறைந்து வரும்போது மருத்துவத்துறையில் சில ஊழியர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மறுத்து வருகின்றனர்.

பாதுகாப்பாக சிறுவர்கள் முதல் சகலரும் முக்கவசம் (Mask) அணிந்து சமூக இடைவெளியை பேணுகின்றனர். வர்த்தகநிலையங்கள்,உணவகங்கள், தேவாலங்கள், அலுவலகங்கள் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மாஸ்க் கட்டாயம் என அறிவித்தல்கள் உள்ளன.

அமெரிக்காவுக்கு 33 நாடுகளின் பயணத்தடை நவம்பர் 8 நீக்கப்படவுள்ளதுடன்  72 மணி நேரத்திற்கு முன்னர் பயணிகள் தடுப்பூசியை ஏற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Northwell-Health-768x511-1.jpg

இந்த நிலைமையில் நியூயோர்கில் (Northwell Health ) என்ற மிகப்பெரிய  தனியார் வைத்தியசாலையில் பணிபுரியும் 1,400 ஊழயர்கள் கொவிட்-19 தடுப்பு மருந்தை ஏற்ற மறுத்ததால் ஒக்டோபர் 6  பணிநீக்கப்பட்டனர். உலகில் எந்தவோரு நாடும் இதேபோல வேலை நீக்கும் நடவடிக்கையை மருத்து வத்துறை ஊழியர்களுக்கு எதிராக எடுத்திருக்காது.

நியூயோர்க்கின் வைத்தியசாலைகளில் பணிபுரியும் 92 வீதமான 450,000 ஊழியர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டதாக சுகாதாரப்பிரிவு கூறியுள்ளது.

Presbyterian Hospital  இல் 250 ஊழியர்களும், மேற்கு வேர்ஜினியாவில் இரு பெண் ஊழியர்களும் ஒக்டோபர் 22 இல் நீக்கப்பட்டனர்.(KAISER PERMANENT) என்ற மிகப்பெரிய சுகாதார பராமரிப்பு நிறுவனத்தில் 2,200 ஊழியர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

download__9_.jpg

செப்டம்பருக்குள் நியூயோர்க் (State) மாநில வைத்தியசாலைகளின் சகல ஊழியர்களும் கொவிட்- 19 தடுப்பூசியை கட்டாயம் எற்றிக்கொள்ள்வேண்டும் என  ஆளுநர் (Governor) அன்ட்ரூ கியூமோ உத்தரவிட்டிருந்தார்.

நியூயோர்க் நகரில் தடுப்பூசி ஏற்றாத 500 தாதிமாருக்கு  சம்பளமற்ற லீவு வழங்கப்பட்டது. ஹூஸ்டன் மெதடிஸ்ட் வைத்தியசாலையில் (Houston Methodist Hospital)  தாதிமார் தடுப்பூசி  உத்தரவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 26 தாதிகள் உட்பட 153 ஊழியர்கள் மருந்தை ஏற்ற மறுத்து நீக்கப்பட்டனர். இங்கு பணிபுரியும் 117 பேர் தடுப்பு மருந்தை ஏற்றும் உத்தரவுக்கு எதிராக  வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

கொலராடா கனியன்ஸ் வைத்தியசாலையில் (Colorada Canyons Hospital)-ஒரு தாதி நீக்கப்பட்டார்.

ஒகியோவில் "மாஸ்க்"அணிதல், தடுப்பூசி ஏற்றும் உத்தரவை  எதிர்த்து சிலர் வீதியில் போராட்டம் செய்தனர். நியூயோர்க்-ஸ்ரேற்றன் ஐலன்ட் பல்கலைக்கழ வைத்தியசாலைக்கு முன்பாகவும்  கடந்த ஆகஸ்ட் மாதம் தடுப்பூசிக்கு எதிராக சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தாதி ஒருவர் தடுப்பூசி ஏற்றி ஒவ்வாமையால் மயக்கமானதால், இவர்கள் தடுப்பூசியை ஏற்ற மறுப்பதாகவும் கூறப்படுகிறது.கொவிட்-19 சிகிச்சைக்கான பணிகளில் மருத்துவர்கள்,தாதியர்கள்,ஏனைய தரத்திலான ஊழியர்களும் தினமும் ஈடுபடுவதால் அவர்களின் குடும்பத்தினர்,சூழவுள்ளோர்  பாதுகாப்பு கருதி தடுப்பூசியை ஏற்றுவது மிகவும் அத்தியாவசியமானது என்று  (Northwell Health)  அதிகாரி பார்பரா ஒஸ்போர்ன் கூறியுள்ளார்.

வட கரோலினா மாநிலத்தில் 15 வைத்தியசாலைகளில் 35 ஆயிரம் ஊழியர்களில் தடுப்பூசி ஏற்றாத 175 பேர் நீக்கப்பட்டனர்.சிலர் தற்காலிகமாக நீக்கப்பட்டு  தடுப்பூசி ஏற்ற கால அவகாசமும் அளிக்கப்பட்டது.லொஸ் ஏஞ்சலில் தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு ஒக்டோபர் வரை அவகாசம் வழங் கப்பட்டது.

download__10_.jpg

பல வைத்தியசாலைகளில் கொவிட்  அச்சம் காரணமாக  சில ஊழியர்கள் சமூகமளிக்காததால் புதியவர்கள் நியமிக்கப்படுவதைப்போலவே வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களின் இடங்களுக்கும் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அல்பனி மருத்துவ நிலையத்தில் (Albany Medical Center) இல் தடுப்பூசி மருந்தை ஏற்றாத 204 ஊழியர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நியுயோர்க்கின் சில ஆசிரியர்களும்,கல்வித்துறை ஊழியர்களும் கோவிட்-19 தடுப்பூசி ஏற்றும் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனுவை மன்ஹற்றன் மாவட்ட நீதிபதி மேரி கே விஸ்கொசில் நிராகரித்து,தடுப்பூசி ஏற்றாது நோய் தொற்றால்  பிள்ளைகளும்,அவர்களின் குடும்பங்களுமே பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

மன்ஹற்றன் (Manhattan) நகரில் 95 வீதமான கல்வித்திணைக்கள ஊழியர்கள் தடுப்பூசி மருந்தை பெற்றுள்ளதாகவும் 3000 ஆசிரியர்கள் பெறவுள்ளதாகவும் நகர மேயர் பில் டி பிலாசியோ தெரிவித்தார்.

merlin_193356906_22e23faa-35f8-4cab-a8a2

United Airlines விமான நிறுவனத்தின் ஊழியர்களில் 593 பேர் தடுப்பூசியை  ஏற்ற மறுத்ததால் பணி நீக்கப்பட்டனர்.வேலை இழந்தவர்களுக்காக அரசு வழங்கும் நிவாரண உதவி கொடுப்பனவும் இவர்களுக்கு வழங்கப்படாது எனவும் இந்நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரி கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கொவிட்-19 காரணமாக மூடப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நிவாரண நிதி   (Unemployment Benifits) வழங்கப்பட்டது

இவ்வாறு மூடப்பட்ட பல நிறுவனங்கள்,வர்த்தக நிலையங்கள்,தொழிலகங்கள் மீண்டும் இயங்கத்தொடங்கியுள்ளன.

சி.என்.என் ஊடக நிறுவனத்தில் தடுப்பூசி ஏற்றாத மூன்று ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க சுகாதார செயலாளர் (அமைச்சு) சேவியர் பெக்கெறா சகலரும் கொவிட் தடுப்பூசி மருந்தை ஏற்றி, இந்நோயில் இருந்து பாதுகாத்து கொள்ள்ளுமாறு  மக்களை கேட்டுள்ளார்.
https://www.virakesari.lk/article/115947

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.