Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா மரண விவகாரம் : அதிமுக அரசின் அறிவித்தலுக்கு அமையவே சிசிடிவி கேமராக்களை நீக்கியதாக அப்பலோ தெரிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா மரண விவகாரம் : அதிமுக அரசின் அறிவித்தலுக்கு அமையவே சிசிடிவி கேமராக்களை நீக்கியதாக அப்பலோ தெரிவிப்பு!

ஜெயலலிதா மரண விவகாரம் : அதிமுக அரசின் அறிவித்தலுக்கு அமையவே சிசிடிவி கேமராக்களை நீக்கியதாக அப்பலோ தெரிவிப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்கு வந்தபோது அவரின் தனிப்பட்ட விடயங்களை காப்பதற்காக அப்போதைய அரசு சிசிடிவி கேமராக்களை விலக்க கோரியதாகவும், இதன்காரணமாகவே சிசிடிவி கேமராக்கள்  நீக்கப்பட்டதாவும் அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னிலையாக விலக்களிக்க வேண்டும் என அப்பலோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது  ஆறுமுகசாமி ஆணையத்தின்  ஒட்டுமொத்த அணுகுமுறையும் தவறாக உள்ளதாகவும், மருத்துவ ரீதியிலான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் மேற்கொள்ளவில்லை எனவும்  அப்பலோ மருத்துவமனை நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது.

அரசியல் தலைவர்கள் பலர் விசாரிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் மருத்துவர்களை மட்டும் விசாரணை செய்வது ஒருதலை பட்சமானது எனவும் அப்பலோ மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்கு வந்தபோது அவரின் தனிப்பட்ட விடயங்களை காப்பதற்காக அப்போதைய அரசாங்கம் சிசிடிவி கேமராக்களை விலக்குமாறு கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1246892

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

ரைட்டு.. ஆரம்பிச்சிடுச்சு… 

சசி கலாவையும்… சேர்த்து, அமுக்கப் போகிறார்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சசி கலாவையும்… சேர்த்து, அமுக்கப் போகிறார்கள் போலுள்ளது.

எனக்கெண்டா இந்தம்மாவை போட்டுத் தள்ளியிருக்கிறார்கள் போலுள்ளது.

முதலாவது, ஒரு பதவியிலிருக்கும் பெண் முதல்வர், சிறை போவது இந்தியாவுக்கே அவமானம்.

இரண்டாவது, அம்மா..... எடப்பாடி போன்ற கொலைப் பின்புலம் இருந்தவர்களை அருகில் வைத்திருந்ததுடன், அவர்களை அவ்வப்போது அவமதித்தும் வந்துள்ளார். அம்மாவை கிளப்பினால், கொத்துச்சாவி நம் கையில் என்றும் நிணைத்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, Nathamuni said:

எனக்கெண்டா இந்தம்மாவை போட்டுத் தள்ளியிருக்கிறார்கள் போலுள்ளது.

முதலாவது, ஒரு பதவியிலிருக்கும் பெண் முதல்வர், சிறை போவது இந்தியாவுக்கே அவமானம்.

இரண்டாவது, அம்மா..... எடப்பாடி போன்ற கொலைப் பின்புலம் இருந்தவர்களை அருகில் வைத்திருந்ததுடன், அவர்களை அவ்வப்போது அவமதித்தும் வந்துள்ளார். அம்மாவை கிளப்பினால், கொத்துச்சாவி நம் கையில் என்றும் நிணைத்திருக்கலாம்.

பாம்பின் கால் பாம்பறியும் எண்டது போல திமுகவுக்கு  கட்டாயம் எல்லாம் தெரிஞ்சிருக்கும்.ஏதோ ஆதாரம் இருக்கிற படியாலதான் தோண்ட வெளிக்கிடுறார்கள்.

ஏற்கனவே கொலை என்ற கதைகள் வந்துவிட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

எனக்கெண்டா இந்தம்மாவை போட்டுத் தள்ளியிருக்கிறார்கள் போலுள்ளது.

முதலாவது, ஒரு பதவியிலிருக்கும் பெண் முதல்வர், சிறை போவது இந்தியாவுக்கே அவமானம்.

இரண்டாவது, அம்மா..... எடப்பாடி போன்ற கொலைப் பின்புலம் இருந்தவர்களை அருகில் வைத்திருந்ததுடன், அவர்களை அவ்வப்போது அவமதித்தும் வந்துள்ளார். அம்மாவை கிளப்பினால், கொத்துச்சாவி நம் கையில் என்றும் நிணைத்திருக்கலாம்.

ஜெயலலிதா… அப்பலோ வைத்தியசாலையில் இருக்கும் போதே, அவரை சசிகலா கூட்டம் அடித்து இருப்பதாகவும், படியில் இருந்து தள்ளி விட்டதாகவும் சில கதைகள் அப்போது உலாவியது.

எல்லாவற்றையும் பார்க்கும் போது… அவரை, ஏதோ விதத்தில் கொல்ல வேண்டும் என்று பலர் திட்டமிட்டு உள்ளதாக தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கையும் விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.