Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயார் – கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயார் – கூட்டமைப்பு

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயார் – கூட்டமைப்பு

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராகவே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எந்த அரசாங்கத்தோடும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அதற்காக கதவுகளை மூடியதில்லை என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விடுத்த அழைப்புக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கூட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் 13 சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தியதாக சிறிதரன் கூறினார்.

https://athavannews.com/2021/1249744

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயார் – கூட்டமைப்பு

இவ்வளவு காலமும் அது நடக்கவேயில்லையா? 😎

  • கருத்துக்கள உறவுகள்

நாம கடந்த 12 வருடமா வெட்டியாத்தான் இருக்கம். யாராச்சும் கூப்பிட்டுப் பேசுங்கப்பா. பிச்சை கூடப் போடுதில்ல சனம். 

இவற்ற மச்சான்.. இறைஞ்சிப் பெறுவதில்லை விடுதலை.. போராடிப் பெறுவதே விடுதலை.. வழியில் நிற்க..

இவர்.. கெஞ்சிப் பெறுவதே சலுகை.. போராட்டமாவது மண்ணாங்கட்டியாவது.. வழியில் நிற்கிறார்.. சம் சும் மாவை பாதையில். 

Edited by nedukkalapoovan

15 minutes ago, nedukkalapoovan said:

இறைஞ்சிப் பெறுவதில்லை விடுதலை.. போராடிப் பெறுவதே விடுதலை.. வழியில் நிற்க..

35 வருசத்துக்கு முன்பு இப்படி உசுப்பேற்றும் வசனங்களுக்கு மயங்கி உயரைக்கொடுக்க ஆயிரக்கணக்கான இளைஞர் வந்தனர். இப்ப நீங்க இப்படி எழுதிப்போட்டு சாப்பிட்டுவிட்டு வேலைக்கு போகவேண்டியது தான். ஒருவரும் இதில் மயங்க மாட்டாங்க. எல்லாம் பட்டறிவுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, tulpen said:

35 வருசத்துக்கு முன்பு இப்படி உசுப்பேற்றும் வசனங்களுக்கு மயங்கி உயரைக்கொடுக்க ஆயிரக்கணக்கான இளைஞர் வந்தனர். இப்ப நீங்க இப்படி எழுதிப்போட்டு சாப்பிட்டுவிட்டு வேலைக்கு போகவேண்டியது தான். ஒருவரும் இதில் மயங்க மாட்டாங்க. எல்லாம் பட்டறிவுதான். 

அப்பையும் தமிழீழம் தான் தமிழர்களுக்கு தீர்வு.. இரத்தத் திலகம்.. அடுத்த தீபாவளிக்கு இதோ தமிழீழம் மலருது.. என்றிட்டு.. 

மாடிவீட்டுக்கும் சொகுசு அறைகளுக்கும் ஹிந்தியாவிலும்.. கொழும்பிலும் கெஞ்சிக் கொண்டிருந்தது தான் நடந்தது. 

பஞ்சி பிடிச்சதுகள்.. கெஞ்சி என்ன எப்படியும் பிழைக்கத்தான் நினைக்குங்கள். அதுகளைச் சுற்றி ஒரு இனத்தின் உரிமையை.. வரலாற்றை வலுப்படுத்த முடியாது. சமூகமுன்னா.. ஆயிரம் விதமானதுகள் இருக்கத்தான் செய்யும். 

@nedukkalapoovanநீங்கள் கூறியது போல் பலவிதமான மக்கள் இருக்கதான் செய்வார்கள். ஆனால் நடைமுறை சாத்தியமான வழியில் சிந்திப்பதே உகந்தது. அதுவே எமது மக்களின இருப்பை தக்கவைக்கவும் தமிழரை இலங்கையில் பலப்படுத்தவும் உகந்த வழியாகும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.