Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் நீதிமன்ற எல்லைக்குள் ஒரு வாரத்திற்கு மாவீரர் நாளை அனுஷ்டிக்கத் தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நீதிமன்ற எல்லைக்குள் ஒரு வாரத்திற்கு மாவீரர் நாளை அனுஷ்டிக்கத் தடை

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு, யாழ். நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

Courts.JPG

கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சார்பில் இந்த மனுக்கள் வெள்ளிக்கிழமை (20)  யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

முன்னர் கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் அமைந்துள்ள  இராணுவத்தின் 512 பிரிகேட் தலைமையகத்துக்கு முன்பாகவும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சூழலிலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய எல்லையிலும் மாவீரர் நாளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அந்த மனுவில் கூறப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 120ஆவது பிரிவுக்கு அமையவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும், இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்றும் இதனைத் தடை செய்யுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.

இந்த மனு  யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நிதவான்  வி.ரி. சிவலிங்கம் முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நாளைமறுதினம்  21 ஆம் திகதி தொடக்கம் வரும் 28ஆம் திகதிவரை ஒரு வாரத்துக்கு நடத்த தடை உத்தரவு நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/117492

  • கருத்துக்கள உறவுகள்

சிரமதானம் செய்யலாம், மர நடுகை செய்யலாம், வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கலாம், அன்னதானம் கொடுக்கலாம், இப்படி பல பயனுள்ள காரியங்களை மாவீரர் வாரத்தில் செய்யலாம்.

நீதி மன்ற தடைகளை மேன்முறையீடு செய்து அதை ஆவணப்படுத்தலாம். இதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உதவலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வருடம் கொரோனா சட்டத்துக்குள் வந்த தடைகள் இப்போ.. பயங்கரவாத தடைச் சட்டம்..  குற்றவியல் தடை சட்டம் என்று தடை நிரந்தரமாகும் வகைக்கு வலுப்படுத்திச் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தமிழர்களைக் கொண்டே தமிழர்களின் உரிமையை பறிக்கும் செயல் நன்கு அமுலாகி வருகிறது.

செயலில் இல்லாத ஒரு இயக்கத்தின் பெயரால் குறித்த இயக்கத்தின் சார்பில்.. எந்த பயங்கரவாதச் சம்பவங்களே பதிவாகாத நிலையில்.. பயங்கரவாத தடை சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்க யாழ் நீதிமன்றம் உட்பட வடக்குக் கிழக்கு நீதிமன்றங்கள்.. நீதிக்கு அப்பாற்பட்டு.. சிங்கள ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் சிங்கள பொலிஸ்.. மற்றும் இராணுவத்தின் எடுபிடிகள் போல செயற்படுவது குறித்து அங்குள்ள.. கொலரை இழுத்து விடும் சட்டாம்பிகள் மூச்சும் விடாமல் இருப்பதேனோ..??!

யாழில்.. வடக்குக் கிழக்கில் உள்ள நீதிபதிகளுக்கு சர்வதேச மனித உரிமைகள் குறித்த அறிவு இருக்கா இல்லையா.. எப்படி இவர்கள் நீதிபதியானார்கள்..?????! 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலி பயங்கரவாதிகளை அழித்தோம் என்றீர்கள்.

மனிதாபிமான நடவடிக்கை மூலம் யாழ் மக்களை புலி பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டோம் என்றீர்கள்.

 சாலைகள் கட்டுமானங்கள் நவீன வசதிகள், சுகபோகங்கள் எல்லாம் தமிழருக்கு ஏற்படுத்தி கொடுத்தோம் என்று வேறு கூறினீர்கள்.

போர் முடிந்து ஒரு தசாப்தம் கடந்தாயிற்று. முழுக்க முழுக்க உங்கள் முற்றுகைக்குள் இருந்தாலும் 

 ஒரு மக்கள் கூட்டம்   தமது இனமான போராளிகளை மறக்க முடியாது வருடா வருடம் தீபமேற்ற முனைகிறது நினைவேந்தல் செய்ய துடிக்கிறது என்றால்.

இன்னும் எத்தனை தடைகள்  நீங்கள்  போட்டாலும். ..

வெளியே எரியும் அகல்விளக்குகளை அதிகார பலம் கொண்டு நீங்கள் அணைத்தாலும், உள்ளே எரிகின்ற தீயை ஒருபோதும் அணைக்க முடியாது என்பதே மண்ணின் நிலவரம்.

எத்தனை வசதிகள் ஏற்படுத்தி கொடுத்து மயக்க நினைத்தாலும் என்றைக்கும் சிங்கள அதிகார வர்க்கத்தையும் அதன் அடிவருடிகளையும் மாவீரர் நினைவால் அந்த மண் வெறுத்து நிற்கும் என்பதே யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

சிரமதானம் செய்யலாம், மர நடுகை செய்யலாம், வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கலாம், அன்னதானம் கொடுக்கலாம், இப்படி பல பயனுள்ள காரியங்களை மாவீரர் வாரத்தில் செய்யலாம்.

நீதி மன்ற தடைகளை மேன்முறையீடு செய்து அதை ஆவணப்படுத்தலாம். இதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உதவலாமே.

 

யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் குருதி பற்றாக்குறை உள்ளது என அண்மையில் ஒரு செய்தி வாசித்தேன். மாவீரர் வாரத்தை முன்னிட்டு ஆர்வம் உள்ளவர்கள் இரத்ததானம் செய்யலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

புலி பயங்கரவாதிகளை அழித்தோம் என்றீர்கள்.

மனிதாபிமான நடவடிக்கை மூலம் யாழ் மக்களை புலி பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டோம் என்றீர்கள்.

இதுவெல்லாம் அவர்கள் கூற்று. பாதிக்கப்பட்டவர்கள் ஆமோதிக்கவில்லை. அவர்கள் இன்னும் தம் வீரர்களை தேடுகிறார்கள். காரணம் அவர்களுக்கான சுதந்திரத்தை எதிரி பறித்ததாலேயே எங்கள் உறவுகளை, இளைய சந்ததியை நாம் இழந்தோம்.

9 hours ago, valavan said:

சாலைகள் கட்டுமானங்கள் நவீன வசதிகள், சுகபோகங்கள் எல்லாம் தமிழருக்கு ஏற்படுத்தி கொடுத்தோம் என்று வேறு கூறினீர்கள்.

தாங்கள்ஆடிய ஊழியாட்டத்தை மறைக்க விரித்த கம்பளங்கள். 

10 hours ago, nedukkalapoovan said:

எப்படி இவர்கள் நீதிபதியானார்கள்..?????! 

பணம் பாதாளம் மட்டும் பாயும்! அல்லது பதவி பறி போய்விடும் என்கிற பயம். புலிகளை அழித்து விட்டோம் என விழா எடுக்கிறீர்கள், பாடம் நடத்துகிறீர்கள், பாராட்டுகிறீர்கள், கோபுரங்களை கட்டுகிறீர்கள். பின் எதற்கு மக்கள் தங்கள் உறவுகளை நினைவு கூரும் சுதந்திரத்தை பறிக்கிறீர்கள்? ஜனநாயக நாட்டில் மக்களுக்கு தம் உறவுகளை நினைவு கூரும் உரிமையில்லையா? என கேள்வி கேட்க திராணியில்லை நீதிபதிகளுக்கு! ஏழைகளை தண்டிப்பதற்கே அவர்கள் நீதிபதிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.