Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் மாவீரர் தினத்துக்கு... தடைகோரி, பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மாவீரர் தினத்துக்கு தடைகோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

யாழில் மாவீரர் தினத்துக்கு... தடைகோரி, பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

மாவீரர் தினத்துக்கு தடைகோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நீதிமன்றத்தில் சாவகச்சேரி, கொடிகாமம் பொலிஸாரால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி, சாவகச்சேரி நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) கோரிக்கை முன்வைத்தனர்.

இதன்போது வழக்கை விசாரித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் யூட்சன், பெயர் குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருப்பதாலும் இலங்கையின் சட்டம் இயற்றுகின்ற உயரிய சபைகளில் இருப்பதாலும் இலங்கையின் சட்டம் தொடர்பாக தெளிவாக அறிந்திருப்பார்கள்.

ஆகவே  அவர்கள் மீது சட்டத்தை மீறுவார்கள் என்ற அடிப்படையில் பொலிஸாரின் கோரிக்கையை ஏற்று தடையுத்தரவு பிறப்பிக்க முடியாது.

ஆனால் பெயர் குறிப்பிட்டவர்களும் ஏனையவர்களும் இலங்கையின் சட்டங்களை மீறி ஏதாவது நடவடிக்கைகளை முன்னெடுத்தால், கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸாருக்கு அதிகாரம்  இருக்கின்றது.

அதனால், பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, குறித்த நபர்களுக்கு எதிராக தடையுத்தரவை வழங்க முடியாது என்று தெரிவித்து, குறித்த கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

குறித்த வழக்கில் பெயர் குறிப்பிட்டவர்கள் சார்பாக சட்டத்தரணி மணிவண்ணன், சட்டத்தரணி சதீஸ்வரன், சட்டத்தரணி குகனேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1251545

  • கருத்துக்கள உறவுகள்

இதனை பின்பற்றுவார்களா ஏனைய நீதிபதிகள்? அல்லது கிளிப்பிள்ளை போல போலீசார் சொல்வதை திருப்பிச் சொல்வார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பொலிஸாரினால் முன்வைக்கப்பட விண்ணப்பங்களை சாவகச்சேரி, மல்லாகம் மற்றும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து கட்டளையிட்டன.

 

விண்ணப்பங்களில் பிரதிவாதிகளினால் குறிப்பிடப்பட்டுள்ளோர் குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவை மற்றும் கோவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி செயற்பட்டால் நடவடிக்கை எடுக்க முடியும்.

எனினும் குற்றமிழைக்கப்படலாம் என்ற அடிப்படையில் தடை உத்தரவு கட்டளை வழங்க முடியாது” என்று விண்ணப்பங்கள் நீதிவான் நீதிமன்றங்களினால் தள்ளுபடி செய்யப்பட்டன.

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற எல்லைக்குள் உள்ள இரண்டு பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், மல்லாகம் நீதிவான் நீதிமன்ற எல்லைக்கு உள்பட்ட 8 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் பருத்தித்துறை நீதிமன்ற எல்லையில் உள்ள 3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளினால் இந்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

குற்றவியல் நடவடிக்கை சட்டத்துக்கு அமைவாகவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும், இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்றும் இதனைத் தடை செய்யுமாறும் பொலிஸார் கோரியிருந்தனர்.

தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொதுமக்களை அணிதிரட்ட முடியாது என்றும் பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்

விண்ணப்பங்களின் பிரதிவாதிகளாக அரசியல் கட்சி பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமகன்கள் சிலர் பெயரிடப்பட்டிருந்தனர்.

இந்த விண்ணப்பங்களின் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டு நேற்று பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன மாவீரர் நாள் நினைவேந்தலை அனுமதித்தால் பெரும் ஆபத்து என்று பொலிஸார் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணிகள் பொலிஸாரின் விண்ணப்பங்கள் அடிப்படையற்றவை என்றும் மன்று தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிமன்றங்கள், குற்றவியல் நடவடிக்கை சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டம் மீறப்பட்டால் நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என்று சுட்டிக்காட்டி விண்ணப்பங்களை நிராகரித்தன.

அதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரினால் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்று தடையுத்தரவை கடந்த வெள்ளிக்கிழமை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://seithy.com/breifNews.php?newsID=275272&category=TamilNews&language=tamil

மாவீரர் தினத்துக்கு தடை உத்தரவு வழங்குமாறு கோரி, ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு பொலிஸார் இணைந்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு, இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

 

அறுவருக்கு எதிராக மாவீரர் நினைவேந்துலுக்கு தடை விதிக்க கோரி, மேற்குறிப்பிட்ட இரண்டு பொலிஸ் நிலையங்களால், நீதிமன்றுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வழக்கை, இன்று விசாரித்த ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான், குறித்த நிகழ்வு நடைபெறும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிடாடிருந்தார்.

அத்துடன், குறித்த அறுவரும், இலங்கையின் சட்டத்திட்டங்களை மீறுவார்களேயானால், அவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், நீதவான் தெரிவித்தார்.

குறித்த வழக்கில், சிரேஷ்ட சட்டத்தரணி சிறீகாந்தா, சிரேஷ்ட சட்டத்தரணி சுகாஷ், சட்டத்தரணி ராகினி நடராசா சட்டத்தரணி வெலீனா, சட்டத்தரணி நிரோசன் மற்றும் சட்டத்தரணி சுதர்சினி ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

https://seithy.com/breifNews.php?newsID=275307&category=TamilNews&language=tamil

23 hours ago, satan said:

இதனை பின்பற்றுவார்களா ஏனைய நீதிபதிகள்? அல்லது கிளிப்பிள்ளை போல போலீசார் சொல்வதை திருப்பிச் சொல்வார்களா?

சாத்தான் நீங்க சொன்னது எல்லா நீதிபதிகளுக்கும் கேட்குது.

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசம்! ஆனால் முல்லைத்தீவில் நடந்த ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணி தென்பகுதியில் இருந்து இங்கு வந்து கூட்டம் நடத்துது. அதுக்கு ஒருத்தரும் தடை கோரி நீதிமன்றம் போறேல்லை. போலீசுக்கே நீதி நிஞாயம் தெரியேல்லை, இதில மக்களுக்கு எப்படி நிஞாயம் வழங்கப்போகினம்?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, satan said:

சந்தோசம்! ஆனால் முல்லைத்தீவில் நடந்த ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணி தென்பகுதியில் இருந்து இங்கு வந்து கூட்டம் நடத்துது. அதுக்கு ஒருத்தரும் தடை கோரி நீதிமன்றம் போறேல்லை. போலீசுக்கே நீதி நிஞாயம் தெரியேல்லை, இதில மக்களுக்கு எப்படி நிஞாயம் வழங்கப்போகினம்?

பௌத்த சிங்களவர்களவர்கள் மட்டுமே மக்கள் என்ற கொள்கையுடைய அரசின் பொலிஸிடம் நீங்கள் அதை எதிர்பார்க்கலாமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.