Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடைபெறும் அப்துல் கலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

""உன்னதமான 5 ஆண்டுகளை கழித்த பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து 25-ம் தேதி வெளியேறுகிறேன். எனக்கு உடைமை என இருப்பது 2 சூட்கேஸ்கள். அந்த 2 சிறிய சூட்கேஸ்களுடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியேறுவேன்'' என்று வியாழக்கிழமை கூறியுள்ளார் அப்துல் கலாம்.இந்திய இஸ்லாமிய கலாசார மையத்தில் வியாழக்கிழமை உரையாற்றிய கலாம், 2 சூட்கேஸ்களுடன் எனக்குச் சொந்தமான ஏராளமான புத்தகங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என உருக்கமாகக் குறிப்பிட்டார்.குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் (75) கலந்து கொள்ளும் கடைசிப் பொதுநிகழ்ச்சியாக இருக்கலாம் என்ற நிலையில் நாட்டு மக்களுக்கு அவர் தனது ஆலோசனைகளை வழங்கத் தவறவில்லை.""உள்நோக்கத்துடன் வழங்கப்படும் பரிசுப்பொருள்களைப் பெற்றுக் கொள்ளாதீர்கள்; குடும்பங்களை ஒழுக்க மதிப்பீடுகளுடனும், நல்ல குணங்களுடனும் உருவாக்குங்கள்'' என நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டார் கலாம்.எந்தப் பரிசுப் பொருள்களையும் ஏற்கக் கூடாது என தனது தந்தை கற்றுக் கொடுத்துள்ளதை குறிப்பிட்ட கலாம், முந்தைய நாள்கூட நன்கு பரிச்சயமான இருவர் பரிசாகத் தந்த 2 பேனாக்களை வருத்தத்துடன் திருப்பிக் கொடுத்துவிட்டதை வியாழக்கிழமை குறிப்பிட்டார்."மனுஸ்மிருதி' என்ற பழமையான இந்து நூலின்படி, பரிசுப் பொருள்களை ஏற்பதால் ஒருவர் தெய்வீக அருளை இழந்துவிடுகிறார் எனக் குறிப்பிட்டார் கலாம்.-தினமணி புதுதில்லி, ஜூலை 20:பரிசுப் பொருளும் பாம்பு கடியும் ஒன்றே: கலாம் பரிசுப் பொருளை பெற்றுக் கொள்வதும், பாம்புக்கடியும் ஒன்றே. அதை விவரிக்கவே முடியாது என குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வியாழக்கிழமை தெரிவித்தார்.இந்திய இஸ்லாமிக் கலாசார மையத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.ஏதேனும் ஓர் உள்நோக்கத்துடனேயே பரிசு அளிக்கப்படுகிறது. அது மிகவும் அபாயகரமானதும் கூட.சிறுவயதில் ராமேசுவரம் ஊராட்சித் தலைவர் தேர்தல் முடிவை அடுத்து தனது வீட்டிற்கு வந்த சிலர் பரிசுப் பொருள்களை கொடுத்துவிட்டுச் சென்றனர்.அவற்றைப் பெற்றதற்காக தனது தந்தை ஜனாப் அவுல் பகிர் ஜெய்னுலாப்தீனிடம் அடி வாங்கியதையும் கலாம் நினைவு கூர்ந்தார்.- தினமணி புது தில்லி, ஜூலை 20:

இப்படியும் ஒரு அரசியல்வாதியா?

  • கருத்துக்கள உறவுகள்

பணரீதியாகவும் சரி, இனரீதியாகவும் சரி அடிமட்டத்தில் உள்ள ஒருவன் நாட்டிற்கே தலைவனாகலாம் என்பதற்குக் கலாம் நல்லதொரு உதாரணம். நிறையப் பேருக்கு அவர் ஒரு மாதிரித் தலைவர். அவர் ஒரு உண்மையான இசுலாமியராக வாழ்ந்தார். ஆனால் மற்றய மதங்களையும் மதித்தார். அதன் மூலம் தன்னை உண்மையாளனாகக் காட்டினார்.

மற்றவர்களுக்காக, தன் மதத்தில் உள்ள பக்தியை அவர் விட்டுக் கொடுக்கவும் இல்லை. அது தான் பக்தி என்று உயர்த்திச் சொல்லவும் இல்லை. அது தான் அவரது அழகு.

இன்று அவரைச் சிலர் திட்டுவதைக் காணமுடிகின்றது. ஒரே ஒரு காரணம் என்னவென்றால், அவரைத் தெரிவு செய்தது, பாஜக அரசு என்பது தான். இனம் பார்க்காத அவர் தெரிவினை, இனவெறியோடு இவர்கள் பார்க்கின்றார்கள். அவ்வளவே

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு இவர் போன்ற தலைவர்கள் தான் நிச்சயம் தேவை.இவர் ஆட்சியில் இருந்த இவ்வளவு காலமும் இந்தியாவின் பொற்காலம் என்று கூறினால் அது மிகையாகாது.

""உன்னதமான 5 ஆண்டுகளை கழித்த பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து 25-ம் தேதி வெளியேறுகிறேன். எனக்கு உடைமை என இருப்பது 2 சூட்கேஸ்கள். அந்த 2 சிறிய சூட்கேஸ்களுடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியேறுவேன்'' என்று வியாழக்கிழமை கூறியுள்ளார் அப்துல் கலாம்.

நீங்க எல்லாரும் சொல்லுவது சரி தான் பாருங்கோ நானும் ஒன்று சொல்லுறேன் இதையும் அவர் குறிப்பிடாம இருந்திருந்தார் என்றா அவர் பெரிய மனிசன் தான் சொல்லி காட்டிட்டார் பிறகு நம்மளை பொறுத்தவரை இவரும் எல்லாரை மாதிரி தான் அங்கே ஒருத்தர் கதைக்கவே மாட்டார் செய்து காட்டி கொண்டு இருப்பார் பாருங்கோ அவர் தான் கிரேட்......கிரேட்........கிரேட்

அப்ப நான் வரட்டா............. :P

தமிழ்மணத்தில் கலாமை கேவலபடுத்தி இடுக்கைகளை காணக்ககூடியதாக இருந்தது.... மிகவும் மனவேதனை படுத்திய செயலை இந்தியாவை தலை நிமிர வைத்தை கலாமை நோக்கி, அவர்கள் செய்திருக்க கூடாது இந்திய அரங்கில் மட்டும் அல்ல உலக அரங்கிலேயே தமிழன் அறிவாற்றலை தூக்கி நிறுத்தி எல்லா தமிழருக்கும் பெருமை சேர்த்த அறிவாளி கலாம்....

கலாம் என்னும் ஒருவரால் இந்தியன், தமிழன் எண்று பெருமை கொண்டவர்கள் அவரை சிறுமை படுத்தி தங்களை நண்றி அற்ற தமிழனாக காட்டி கொண்டனர்...!

வருவாய் தரும் பொறுப்புக்கள் சம்பந்தமான கோப்பில் நடுநிலையாளனாக கையெழுத்து போட்டதால் ஆழும் அரசின் கட்ச்சித் தலைவி சோனியாவை எதிர்த்து, அதுகாறும் சோனியாவின் கோபத்துக்கு ஆளாகி பதவி நீட்டிக்க முடியாமல் விலகிசெல்லும் ஒரு வீரனாகத்தான் எனக்கு கலாம் தெரிகிறார்...

Edited by தயா

சிறந்த தழிழ் குடிமகன் என்ற பெருமையை உலகெங்கும் எட்ட செய்து விட்டு பண்பாக ஓய்வு பெறும் தமிழரை வாழ்த்துவோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரையில் இந்த அரியாசனத்தில் அமர்ந்தவர்கள் பொம்மைகளாகிக் காட்சியளித்தனர். ஆனால் சுயபுத்தியுடனும், சுறுசுறுப்புடனும் செயற்பட்டு் உலகின் கவனத்தைப் பெற்று தனது நாட்டிற்குப் பெருமை தேடித்தந்தார்.

இந்திய சனாதிபதியாக உயர் அணு விஞ்ஞானி அப்துல் கலாம் பொறுப்பேற்றபோது உலகே அதிசயமாகப் பார்த்தது. அணு விஞ்ஞானி ஒருவர் இப்படியான பதவி ஒன்றை வகித்ததென்பது உலகத்தில் இதுதான் முதல் முறை. இவரது சுயமான முடிவெடுக்கும் திறன் இந்திய அரசியலாளர்களுக்கு சொல்ல முடியாத சங்கடங்களைக் கொடுத்திருக்கலாம். நேர்மையினால் தான் எடுத்த முடிவுகளில் சமரசம் கொள்ளாதிருந்தார். எதிர்காலத்தில் இந்தியா சிறப்பாக விளங்க உந்துதலைக் கொடுத்து விடைபெறுகிறார்.

மானிட நேசிப்புடன் மனிதனாக வாழும் இவரது எளிமையான வாழ்வு பலரின் கவனத்தைப் பெற்றதொன்று. தமிழுக்கும், தமிழர்வாழ்வியலுக்கும் பெருமை சேர்க்கும் இவரது வாழ்வுக்கு தமிழ்பேசும் உலகு நன்றியுடன் நினைவுகூறும்.

கலாம் ஐயா,

வாழ்க வளமுடன்! தொடரட்டும் தங்கள் மானிடத் தொண்டு!! என வாழ்த்துகிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலாமின் விளக்கவுரையுடன் திருக்குறள்

விரைவில் வெளியீடு

ஜூலை 20, 2007

டெல்லி: குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் விளக்கத்துடன் கூடிய திருக்குறள் நூல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

கன்னியாகுமரி வரலாறு மற்றும் கலாச்சார மையம் இந்த திருக்குறளை உருவாக்கியுள்ளது. 400 திருக்குறள்களை தேர்வு செய்து அவற்றுக்கு கலாம் பொழிப்புரை எழுதியுள்ளார். இந்த திருக்குறள் நூல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

ஆங்கிலம் மற்றும் தமிழில் இந்த நூல் உருவாகியுள்ளது. கன்னியாகுமரி வரலாறு மற்றும் கலாச்சார மையத்தைச் சேர்ந்த குழு நேற்று இதுதொடர்பாக கலாமை டெல்லியில் சந்தித்துப் பேசியது.

பின்னர் குழுவின் தலைவர் டாக்டர் பத்மநாபன் செய்தியாளர்களிடம் பேசுகையில், நூலை எழுதி முடித்து விட்டதாக கலாம் தெரிவித்தார் என்றார் அவர்.

கலாமின் பதவிக்கலாம் வருகிற 24ம்தேதி முடிவடைகிறது. அதன் பின்னர் கலாம் பொழிப்புரையுடன் கூடிய திருக்குறள் நூல் வெளியீட்டு விழா நடைபெறும் எனத் தெரிகிறது.

திருக்குறள் மீது தீராப்பற்று கொண்டவர் கலாம். தனது பேச்சுக்களின்போது திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுவது அவரது வழக்கம். நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்திலும் கூட குறளை மேற்கோள் காட்டிப் பேசுவார் கலாம்.

கடந்த 2004ம் ஆண்டு கன்னியாகுமரி வரலாறு மற்றும் கலாச்சார மையம், கலாமுக்கு பஞ்சலோகத்தால் ஆன திருவள்ளுவர் சிலையைப் பரிசாக அளித்தது. 133 கிலோ எடை கொண்ட அந்த சிலையை குடியரசுத் தலைவர் மாளிகையின் வரவேற்பு அறையில் 2004ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி நிறுவினார் கலாம்.

-thatstamil.oneindia.in

நான் மதிக்கும் மிகப்பெரிய மனிதர்களில் ஒருவர் கலாம்

விஞ்ஞான அறிவும், தமிழ் பற்றும், தாய் நாட்டுப்பற்றும், மத சமத்துவமும்

ஒன்று சேர அமைந்த இவர் போன்ற பல அப்துல் கலாம்கள்

எங்கள் தலைவர் காலத்தில் தமிழீழத்தில் தோன்ற வேண்டும்

என்பதே என் அவா

இப்படியும் ஒரு அரசியல்வாதியா?

கலாம் அரசியல்வாதி அல்ல ஒரு சிறந்த இந்திய குடிமகன் அதுவும் ஒரு தமிழர் பெரும்பாலான இந்தியர்களால் விரும்பப்பட்டவர் இந்தியவரலாற்றில் இரண்டு பெரிய கட்சிகளிடையே ஒருமனதான தீர்மானமாக இவரை ஜனாதிபதவிக்கு ஏற்றியதாகத்தான் இருக்க வேண்டும்

அப்துல்கலாம் சிறந்த மனிதருக்கான ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். இவர் இன்று பலரின் உதாரணபுருஷராகவும் இருக்கின்றார். மீண்டும் இவர் கல்விப்பணியில் தன்னை அர்ப்பணிப்பது அவரது கனவு இந்தியாவை நிச்சயம் கட்டியெழுப்ப உதவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11 தோட்டங்களைப் பிரிகிறேன்... கலாம் உருக்கம்

திண்டுக்கல் பல்கலையிலும் பணியாற்ற திட்டம்

ஜூலை 21, 2007

டெல்லி: ராஷ்டிரபதி பவனில் நான் உருவாக்கிய 11 தோட்டங்களைப் பிரிகிறேன் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சோகத்துடன் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் கலாம், நேற்று பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்களை ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்துப் பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் கலாம் தனக்கே உரிய பாணியில் படு உற்சாகமாக பதிலளித்தார்.

உங்களது பதவிக்காலத்தில் உங்களை மிகவும் சோதனைக்குள்ளாக்கிய இக்கட்டான சூழ்நிலை எது என்ற கேள்விக்கு கலாம் பதிலளிக்கையில், ஆதாயம் தரும் பதவிகளுக்கு விதி விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவில் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பியதே எனது சோதனை நேரம் என்றார்.

இந்தியக் குடியரசுத் தலைவர்களிலேயே ஒரு சட்ட மசோதாவை நாடாளுமன்றத்துக்கு மீண்டும் திருப்பி அனுப்பியவர் கலாம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் 2ம் முறை போட்டியிட விரும்பவில்லை என்ற கேள்விக்கு, ஒருமித்த எண்ணத்திற்குத்தான் நான் எப்போதுமே ஆதரவு அளிப்பேன். எனது பெயருக்கு ஒருமித்த ஆதரவு காணப்படவில்லை. எனவே நான் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை. எனது பெயரை வைத்து ராஷ்டிரபதி பவன் அரசியலாக்கப்படுவதை நான் விரும்பவில்லை என்றார் கலாம்.

அடுத்த கேள்விக்கு கலாம் பதிலளிக்கையில், யார் அடுத்த ஜனாதிபதியாக வந்தாலும் அவர் மக்கள் ஜனாதிபதியாகத்தான் இருக்க வேண்டும். ராஷ்டிரபதி பவன், மக்கள் பவனாகத்தான் இருக்க வேண்டும் என்றார்.

அப்சல் குருவின் கருணை மனு குறித்த கேள்விக்கு, அதில் பல நடைமுறைகள் உள்ளன. அவற்றை இன்னும் அப்சல் குரு தாண்டவில்லை என்றார்.

பேட்டியை முடிக்கும்போது, ராஷ்டிரபதி பவனின் 11 தோட்டங்களை நான் இழக்கப் போகிறேன். இருந்தாலும் என்ன, கற்பனையில் அதை நினைத்துக் கொண்டே இருப்பேன். கற்பனைகள் மிக அழகானவை என்றார் தனது வெள்ளைச் சிரிப்புடன் கலாம்.

மொகல் தோட்ட வளாகத்தில் கலாம் உருவாக்கியவைதான் இந்த 11 தோட்டங்களும். ஒவ்வொரு வகை மலர்கள், பழங்கள், மூலிகைகள் அடங்கியவை இந்த தோட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் கலாம் அண்ணா பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியராகப் பணியாற்றவுள்ளார். அதுதவிர மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் உள்ள கிராமியப் பல்கலைக்கழம், பீகாரில் உள்ள நாலந்தா பல்கலைக்கழகம், திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரத்தில் உள்ள வானவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் கலாம் கெளரவப் பேராசிரியராகப் பணியாற்றத் திட்டமிட்டுள்ளாராம்.

பேட்டிக்கு வந்திருந்த 150 பேருக்கும் கலாம் தேநீர் விருந்தளித்தார். பின்னர் ஒவ்வொரு செய்தியாளருக்கும் கை குலுக்கினார்.

சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்த அப்துல் கலாம்!

முன்னதாக கலாம் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை சந்தித்து கலந்துரையாடினார். அவருக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.

2002ம் ஆண்டு குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர் உச்சநீதிமன்றத்திற்கு விசிட் செய்தார் கலாம். அதேபோல பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ள அவர் நேற்று மாலை 4 மணிக்கு உச்சநீதிமன்றம் சென்றார்.

அங்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதிகளை அவர் சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்த கலாம், நீதிபதிகளுடன் பேசினார். பின்னர் கலாமுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.

மூலம் -thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

திரு. நேருஜி போல் குழந்தைகளிடமும் பாசத்துடன் அதிக நேரத்தையும் செலவிட்ட மிக நல்ல மனிதர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.