Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் கைதிகள் தண்டனை காலத்தை விட விசாரணை என நீண்ட காலம் சிறையில் இருக்கின்றனர். அருட்தந்தை மா.சத்திவேல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகள் தண்டனை காலத்தை விட விசாரணை என நீண்ட காலம் சிறையில் இருக்கின்றனர். அருட்தந்தை மா.சத்திவேல்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் தண்டனை காலத்தை விட விசாரணை என நீண்ட காலம் சிறையில் இருக்கின்றனர்.

IMG_20211023_154429.jpg

என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (03.12.2021) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மதங்களுக்கிடையில் பகைமையை தூண்டியதாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் ஆளுநர் அசாத்சாலி அவர்கள் விசாரணை முடிவுற்ற நிலையில் குற்றங்கள் நிரூபிக்கப்படாததன் காரணமாக 8 மாத குறுகிய கால எல்லைக்குள் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இவ் விடுதலை செயற்பாட்டினை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வரவேற்கின்றது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் இவ்வாறு நிறைவுற சட்டமா அதிபர் திணைக்களமும், நீதிமன்றமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்ட அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பை சேர்ந்த கதிரவேற்பிள்ளை கபிலன் கைது செய்யப்பட்டு 12 வருடங்கள் கடந்த நிலையில் குற்றம் சுமத்தப்பாடாது இவ்வருடம் அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். இது பயங்கரவாத தடை சட்டத்தை கொடூரத்தை உலகுக்கு வெளிக்காட்டியது.

இதேபோன்று இதே சட்டத்தால் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகாலம் விசாரணை என இழுத்தடிப்பு செய்து கொண்டிருப்பதால் கைதிகளும், குடும்ப உறவுகளும் அவர்கள் மீது அக்கறை கொண்டோரும் உளவியல் ரீதியில் சித்திரவதையை அனுபவிக்கின்றனர். இதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் பலர் இறந்தும் உள்ளனர். இதனை இறப்பு என்று கூறுவதைவிட பயங்கரவாத தடைச்சட்டம் மேற்கொண்ட கொலை எனவும் கூறலாம்.

அதுமட்டுமல்ல பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக தன்னுடைய பிள்ளைகளை நீண்டகாலம் காண முடியாமலும், அவர்களுடையடைய எதிர்காலம் தெரியாத நிலையிலும் நோய்குட்பட்ட பல பெற்றோர்கள் இறந்துள்ளனர். சிதைவுற்ற குடும்பங்களும் உள்ளனர். இதற்கான முழுப்பொறுப்பையும் பயங்கரவாத தடைச்சட்டத்தை கடந்த 40 வருட காலமாக பாதுகாத்துவரும் அனைத்து ஆட்சியாளர்கள் மட்டுமல்ல அதற்கு உடந்தையான எதிர்க்கட்சிகளும் ஏற்றாக வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் தண்டனை காலத்தை விட விசாரணை என நீண்ட காலம் சிறையில் இருந்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் உரையாடபட்டுள்ளது ஆதலால் இவர்களின் விடுதலை துரிதப் படுத்தப்பட வேண்டும். அது மட்டுமல்ல மனித உரிமை பறிக்கும், உயிர்களை பறிக்கும் மனித முகமற்ற கொடிய பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும். அதுவரை இச்சட்டம் அரசியல் நோக்கங்களுக்காக பாவிக்கப்படாதிருப்பதை ஆட்சியாளர் உறுதி செய்தலும் வேண்டும்.

அண்மையில் வடக்கிற்கு விஜயம் செய்த ஒரே நாடு ஒரே சட்ட செயலணியின் தலைவர் ஞானசார தேரர் "அரசியல் கைதிகளை ஜனாபதி விடுதலை செய்வதாக என்னிடம் கூறினார் "அது உண்மையெனில் உடனடியாக அதனையும் செய்ய வேண்டும். அரசியல் நோக்கம் கருதி காலம் தாழ்த்தாது ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.
 

 

https://www.virakesari.lk/article/118356

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உண்மையை  விளங்கி கொள்ள எமது அரசியல்வாதிகளுக்கு நேரமில்லை நாடு நாடாய் திரிந்து  நாலு பேருக்கு முன்னாள்  மைக்குடன் தோன்றி சிங்களவர் விருப்பத்துக்கு மாறாய் நடக்க மாட்டேன் என்று சொல்வதிலே படு பிசி .🤣

விடுதலை செய்து விட்டால் சிங்களவர் கோபிப்பினம் அதனால் அதுபற்றி கதைக்க மாட்டினம் .

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, பெருமாள் said:

இந்த உண்மையை  விளங்கி கொள்ள எமது அரசியல்வாதிகளுக்கு நேரமில்லை நாடு நாடாய் திரிந்து  நாலு பேருக்கு முன்னாள்  மைக்குடன் தோன்றி சிங்களவர் விருப்பத்துக்கு மாறாய் நடக்க மாட்டேன் என்று சொல்வதிலே படு பிசி .🤣

விடுதலை செய்து விட்டால் சிங்களவர் கோபிப்பினம் அதனால் அதுபற்றி கதைக்க மாட்டினம் .

சிறையின் சாவியைக் கையில் வைத்துக் கொண்டா தமிழ் அரசியல்வாதிகள் பேசாமல் இருக்கிறார்கள்? ரணில் காலத்திலேயே இவ்விடயத்தில் எதுவும் செய்ய இயலவில்லையென்றால் தற்போது செய்ய ஒன்றுமில்லை!

ஆனால், நா.க.த அரசின் பிரதமர் தமிழ் அரசியல் கைதிகள் பற்றி சில வாரங்கள் முன்பு குறிப்பிட்டதையும் சேர்த்து உரையாடுங்கள் . எவருக்கும் இது பட்டியலில் முதன்மையான பிரச்சினையில்லை என்பதை அது காட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாரிய பொறுப்பு உண்டு.
வருடக்கணக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்துக்கு இவர்களின் ஆதரவை பார்க்கும் போதே இவர்களின் மக்கள் மீதான கரிசனை புரிந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாரிய பொறுப்பு உண்டு.
வருடக்கணக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்துக்கு இவர்களின் ஆதரவை பார்க்கும் போதே இவர்களின் மக்கள் மீதான கரிசனை புரிந்து விடும்.

தெரிவு செய்யப் பட்ட பிரதிநிதிகளுக்கான பொறுப்பை மறுக்கவில்லை. காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவுகள் சார்ந்த அமைப்பொன்று தேர்தல் நேரம் நடந்து கொண்ட விதமும் அவர்களை ஒரு அரசியல் அழுத்தக் குழுவாக அடையாளம் காண வைத்து விட்டது. இப்படியான நிலையில் இந்த அமைப்புகளை ஆசுவாசப் படுத்துமுகமாக நடந்து கொள்வதை விட நேரடியாகவே அரச அமைப்புகளுடன் ஒரு ஏற்பாட்டிற்கு வந்து தான் தீர்வு காண முடியுமென நினைக்கிறேன்.

பொது மன்னிப்பு என்பது அரசியல் கைதிகளைப் பொறுத்த வரை தீர்வுப்பட்டியலில் இருக்க வேண்டும்.    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.