Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டொலர் நெருக்கடியிலிருந்து மீள அரசாங்கம் போராட்டம் ; நிதி அமைச்சர் பசில் அவசரமாக டுபாய்க்கு விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டொலர் நெருக்கடியிலிருந்து மீள அரசாங்கம் போராட்டம் ; நிதி அமைச்சர் பசில் அவசரமாக டுபாய்க்கு விஜயம்

(லியோ நிரோஷ தர்ஷன்)

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை அதிகாலை டுபாய்க்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.  கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அதிகாலை 2.55 மணிக்கு பயணத்தை ஆரம்பித்த எமிரேட்ஸ் விமானத்திலேயே நிதியமைச்சர் டுபாய் நோக்கி சென்றுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் குறிப்பிட்டார். 

நாடு எதிர்க்கொண்டுள்ள அந்நிய செலாவணி நெருக்கடியை சீர் செய்யும் வகையில் நட்பு நாடுகளிடம் இலங்கை உதவிக்கரம் நீட்டிவருகின்ற நிலையில் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ துபாய்க்கு சென்றுள்ளார்.  

அது அவ்வாறிருக்க 2022 ஜனவரி மாதம் என்பது இலங்கைக்கு மிகவும் நெருக்கடியானதும்  தீர்க்கமானதுமான காலப்பகுதியாகும் என பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது. இந்த நெருக்கடியின் பின்னணியாக சர்வதேசத்திற்கு இலங்கை செலுத்த வேண்டிய கடன் தவணைகளையே குறிப்பிடுகின்றனர். 

சர்வதேச கடன் தவனை கொடுப்பனவாக 2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் அந்நிய செலாவணி இருப்பாக நாட்டில் 1.5 பில்லியன் டொலர்கள் மாத்திரமே உள்ளது. 

மறுப்புறம் அரசாங்கத்தின் வருவாய் துறையும் தேசிய உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த ஏற்றுமதி வருமானம் என்பனவும்  எதிர்பார்த்த அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்க வில்லை.

எனவே தான் அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதியை கூட அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளது. இது அரசாங்கத்தின் மிக மோசமான நிதி நெருக்கடியை வெளிப்படுத்துகின்றது. 

இவ்வர்று இறக்குமதிகள் சூன்யமாகி வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாது போகுமானால் தோல்வியடைந்த இராஜ்ஜியமாக இலங்கை சர்வதேசத்திற்கு அடையாளப்பட்டு விடும். எனவே இந்த நிலையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் போராடி வருகின்றது. 

இலங்கைக்கு அவசர உதவிகளை செய்ய கூடிய இந்தியா , சீனா உள்ளிட்ட அரபு நாடுகளிடம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அண்மைய இந்திய விஜயத்தின் போதும் நிதி ஒத்துழைப்புகள் குறித்து பேசப்பட்டுள்ளது. 

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே நிதியமைச்சர் அங்கு சென்றிருந்தாக தெரிவிக்கப்பட்டது.

மறுப்புறம் சீனாவிடம் 1,500 மில்லியன் கடனுதவிக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் சாதகமான பதில் கிடைக்க வில்லை. மாறாக அவ்வாறு 1,500 மில்லியன் டொலரை வழங்கினாலும் அத்தொகையினை எந்தவொரு தேவைக்கும் பயன்படுத்த கூடாது. 

அந்நிய செலாவணி இருப்பை உறுதிப்படுத்தும் வகையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் உதவி செய்ய முடியும் என்ற வகையிலேயே சீனா தரப்பின் பதில்கள் அமைந்துள்ளன. இவ்வாறானதொரு நிலையில் மிக குறுகிய காலத்திற்குள் பெரும் தொகையான டொலர்களை நாட்டுக்கு கொண்டு வரும் போராட்டத்தில் அரசாங்கம் சிக்குண்டுள்ளது. 

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கமும் இதற்காக செயற்படுகின்றமை வெளிப்பட்டுள்ளது. இறுதி தெரிவாக மத்திய கிழக்கு நட்பு நாடுகளிடம் உதவிப்பெற்றுக்கொள்ளும் வகையில் அவதானம் செலுத்தியுள்ளது. 

தற்போதைய நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் கலந்துரையாடுமாறு ஆலோசனைகள் வழங்கப்படுகின்ற போதிலும் அரசாங்கம் அந்த தீர்மானத்திற்கு இதுவரையில் வர வில்லை. 

ஆனால்  இறுதி தீர்வாக கூட சர்வதேச நாணய நிதியம் அமையலாம் என்பதும் ஆளும் தரப்பின் சிலரது கருத்தாகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/119134

  • கருத்துக்கள உறவுகள்

இவர், அமெரிக்கா செல்வதற்காக தானே டுபாய் போனார் என்று சொல்கிறது, வேறு இணையம்.

4 hours ago, கிருபன் said:

டொலர் நெருக்கடியிலிருந்து மீள அரசாங்கம் போராட்டம் ; நிதி அமைச்சர் பசில் அவசரமாக டுபாய்க்கு விஜயம்

கடன் கொடுத்த நாடுகளின் தூதரகங்களுக்கு முன் கோட்டபாய, மகிந்த மற்றும் அமைச்சர்கள் “ தள்ளுபடி செய் தள்ளுபடி செய், கடனை தள்ளுபடி செய்” என்று பதாகைகளை ஏந்தி போராட்டம் செய்யலாமே! 

😂😂

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில ஒரு நாட்டையும் மிச்சம் வைக்க மாட்டார்கள் போலுள்ளதே! புலியை அழிச்சுவிட்டோம் என்கிற மமதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல்  யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற துணிவில் ஆடிய ஆட்டம்  பிச்சை எடுக்க  கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. நாட்டுப்பற்றாளர் கூட்டம் ஓடிவரப்போகுது கண்டனியோ? குடுத்தனியோ என்று.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

உலகத்தில ஒரு நாட்டையும் மிச்சம் வைக்க மாட்டார்கள் போலுள்ளதே! புலியை அழிச்சுவிட்டோம் என்கிற மமதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல்  யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற துணிவில் ஆடிய ஆட்டம்  பிச்சை எடுக்க  கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

அங்க இலங்கையில் கோத்தாவுக்கு வாக்கை  அள்ளிவழங்கிய சிங்கள விவசாயிகள் எல்லாம் தண்ணீர் தாங்கி மீதும் வீட்டுக்கூரையின் மீதும் ஏறி குதிக்கப்போகிறோம் என்று சொல்லி ஆர்ப்பாட்டமாம், சிங்களவன் கூரை மீது ஏறினால் நல்ல சகுனம் மிகவிரைவில் நல்ல செய்தி எதிப்பார்க்கலாம் போல்  

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, அக்னியஷ்த்ரா said:

அங்க இலங்கையில் கோத்தாவுக்கு வாக்கை  அள்ளிவழங்கிய சிங்கள விவசாயிகள் எல்லாம் தண்ணீர் தாங்கி மீதும் வீட்டுக்கூரையின் மீதும் ஏறி குதிக்கப்போகிறோம் என்று சொல்லி ஆர்ப்பாட்டமாம், சிங்களவன் கூரை மீது ஏறினால் நல்ல சகுனம் மிகவிரைவில் நல்ல செய்தி எதிப்பார்க்கலாம் போல்  

இதைத்தான் ஐயா நானும் வெகு நாளாய் ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன் சிங்களமக்கள் விழித்தெழுந்தால் நமக்கு விடிவு பிறக்கும் என்பது எனது நம்பிக்கை அந்த வானம் அழுதார்த்தான் இந்தப்பூமியே சிரிக்கும்.

அது சரி! வெளிநாடுகளில் இருந்தும் சிங்களவர் வந்தும், வருவிக்கபட்டும் வாக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு குறையுமில்லையே ராசா? இப்ப இலங்கைக்கு வர பயப்படுகினமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.