Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்கள் கைதுக்கு தமிழகத்தில் உண்ணாவிரதம் : அமைச்சர் டக்ளஸின் கருத்துக்கும் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் கைதுக்கு தமிழகத்தில் உண்ணாவிரதம் : அமைச்சர் டக்ளஸின் கருத்துக்கும் கண்டனம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 68 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்கச்சிமடத்தில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

vlcsnap-2021-12-22-15h22m16s526.png

கடந்த சனி,ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய மூன்று நாட்களிலும் புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 68 மீனவர்களையும் அவர்களது 10 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறையில் அடைத்துள்ளனர். 

இதற்கு கண்டனம் தெரிவித்த ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்யக் கோரி இன்று தங்கச்சிமடத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

vlcsnap-2021-12-22-15h20m47s868.png

மேலும் எதிர்வரும் 31 ஆம் திகதி மீனவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ள நிலையில் மீனவர்களை விடுதலை செய்யாத பட்சத்தில் எதிரவரும் 1 ஆம் திகதி தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்துள்ளனர்.

இன்று நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில்  சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் இந்த  உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

vlcsnap-2021-12-22-15h20m31s410.png

இந்நிலையில் நேற்று யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் இலங்கை  மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எல்லை தாண்டும் தமிழக  மீனவர்கள் மீது நடவடிக்கை தொடரும் எனவும், அதே நேரத்தில் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை அரசுடமையாக்கப்படும் என தெரிவித்தார். 

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், எல்லை தாண்டி வரும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் இலங்கை அரசை கண்டிக்கிறோம். 

vlcsnap-2021-12-22-15h19m56s117.png

தமிழ்  அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கைது நடவடிக்கை தொடரும், படகுகள் அரசுடமையாக்கபடும்  என தெரிவித்ததற்கு வன்மையான கண்டிக்கத்தை பதிவு  தெரிவித்துள்ளனர்.
 

https://www.virakesari.lk/article/119501

 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், எல்லை தாண்டி வரும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் இலங்கை அரசை கண்டிக்கிறோம். 

களவுக்குப் போவினமாம், கையும் களவுமா களவைப் பிடிச்சு நடவடிக்கை எடுத்தால் கள்ளர்கள் சார்பில் கண்டிப்பினமாம். 😂

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் யாருமே கடல் வளம் பற்றிய சிந்தனை அறவே இல்லாமலோ அல்லது கடல் வளத்தை அழிக்கும் நோக்கத்திலோ செயற்படுகிறார்களா?!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுகொன்றாலோ காயப்படுத்தினாலோ அல்லது கைது செய்தாலோ  வராத எதிர்ப்பு இம்முறை வந்திருக்கு காரணம் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கு படகு முதலாளிகள் யார் என்று இங்கு மீண்டும் மீண்டும் சொல்லதேவையில்லை பிரச்சனைக்கு ஒரே தீர்வு எல்லைதாண்டும் படகுகளை பறிமுதல் செய்தாலே காணும் இலகுவாக பிரச்சனை  முடியும் அனால் இரண்டு பக்க அரசியல்வாதிக்கும் நேரத்துக்கு தகுந்தாற் போல் இந்த பிரச்சனை தேவை எனவே முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

இலங்கை கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுகொன்றாலோ காயப்படுத்தினாலோ அல்லது கைது செய்தாலோ  வராத எதிர்ப்பு இம்முறை வந்திருக்கு காரணம் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கு படகு முதலாளிகள் யார் என்று இங்கு மீண்டும் மீண்டும் சொல்லதேவையில்லை பிரச்சனைக்கு ஒரே தீர்வு எல்லைதாண்டும் படகுகளை பறிமுதல் செய்தாலே காணும் இலகுவாக பிரச்சனை  முடியும் அனால் இரண்டு பக்க அரசியல்வாதிக்கும் நேரத்துக்கு தகுந்தாற் போல் இந்த பிரச்சனை தேவை எனவே முடியாது .

👏🏾👏🏾👏🏾

ஒவ்வொரு முறை வரும் போதும் படகுகளை (வள்ளங்களை அல்ல) பறிமுதல் செய்து. உடனடியாகவே ஏலம் விட வேண்டும். ஆனால் இந்திய மீனவருக்கு மீண்டும் விற்க கூடாது.

ஒரு துன்பமும் கொடாமல் கடலில் வைத்தே மீனவர்களை வள்ளங்களில் திருப்பி அனுப்பி விட வேண்டும்.

6 மாதம் இப்படி செய்ய எல்லாம் சரி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/12/2021 at 18:26, goshan_che said:

👏🏾👏🏾👏🏾

ஒவ்வொரு முறை வரும் போதும் படகுகளை (வள்ளங்களை அல்ல) பறிமுதல் செய்து. உடனடியாகவே ஏலம் விட வேண்டும். ஆனால் இந்திய மீனவருக்கு மீண்டும் விற்க கூடாது.

ஒரு துன்பமும் கொடாமல் கடலில் வைத்தே மீனவர்களை வள்ளங்களில் திருப்பி அனுப்பி விட வேண்டும்.

6 மாதம் இப்படி செய்ய எல்லாம் சரி வரும்.

ஈழத் தமிழினத்தையும் தமிழகத் தமிழர்களையும் சிண்டுமுடியவைக்கப் பெரும் பிரயத்தனம் நடக்கிறது. இதனை பேசாமல் சிறீலங்கா அரசைக் கையாள விட்டு தமிழ் அரசியல்வாதிகள் விலத்தியிருப்பதே இப்போதைக்கு நன்மை. எமக்கென முழுமையான அதிகாரமுள்ள மாகாணசபை இருந்தால் அப்போது இருதரப்பும் உரியமுறையில் உரையாடிக் கடல்வளப்பாதுகாப்பிற்கான கூட்டுச் செயலணிகளை நிறுவி உரியமுறையிற் கையாளமுடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.