Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பதில் நீதவானின் காரினால் விபத்துக்குள்ளான ஓய்வுபெற்ற பரியோவான் கல்லூரி ஆசிரியர் உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
AVvXsEjinauSvdN-MV2UfcxIAes8Nscrk6c7Fx9QwHbFOvafwff79b_SktRy-lL6J682kfCYnI303i5ONvwfWjDdOBb2HbilDsuklUHOAARYsfkHxyroVnlTtPC0qzgQsGhcKutHMxNaDY9WM4w7xVhGMhXzD1r78RidhfnBIqcloUodXw3468Nqm2K3P8tKtg=s320


யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பிரபல அளவையியல் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

 யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரான வேலுப்பிள்ளை யுகபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

நேற்றைய தினம் இரவு மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதியில் பதில் நீதிவான் ஒருவருடைய கார் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சடுதியாக காரின் கதவு திறக்கப்பட்டுள்ளது.

அந்நேரம் அந்த வீதியால் பயணித்த ஆசிரியர் காரின் கதவு மீது மோதி வீதியில் விழுந்துள்ளார். அதன்போது, பின்னால் வந்த பேருந்து முதியவர் மீது மோதியுள்ளது.

குறித்த ஆசிரியர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற உடன் காயம் அடைந்தவரை வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்க விபத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என உயிரிழந்த ஆசிரியரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதேவேளை, குறித்த பதில் நீதவானும், அவரது சாரதியும் இன்றைய தினமே பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில், பதில் நீதவானின் சாரதியும், பேருந்து சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் பதில் நீதவானின் காரினால் விபத்துக்குள்ளான ஓய்வுபெற்ற ஆசிரியர் உயிரிழப்பு! - Tamilnews1

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பிழம்பு said:
நேற்றைய தினம் இரவு மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதியில் பதில் நீதிவான் ஒருவருடைய கார் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சடுதியாக காரின் கதவு திறக்கப்பட்டுள்ளது.

அந்நேரம் அந்த வீதியால் பயணித்த ஆசிரியர் காரின் கதவு மீது மோதி வீதியில் விழுந்துள்ளார். அதன்போது, பின்னால் வந்த பேருந்து முதியவர் மீது மோதியுள்ளது.

அநியாய சாவு. கார் கதவை திறக்கும் போது… பின்னுக்கு உள்ள நிலமையை பார்த்து திறக்க வேண்டும் என்பது கூட, பதில் நீதவானுக்கு தெரியவில்லையா?

சரி.. விபத்து நடந்து விட்டது. உயிருக்கு போராடியவரை, உடனடியாக வைத்திய சாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன்?

சென்ற வருடமும்…. இதே போல், துவிச் சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மாணவன் மீது, வீதியில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கார் கதவை திறந்த போது.. அந்த மாணவன் அதில் மோதி, இறந்த சம்பவம் நடந்தது.

இப்படியானவர்களை… கடுமையாக தண்டித்து, உரிய இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

1 hour ago, தமிழ் சிறி said:

அநியாய சாவு. கார் கதவை திறக்கும் போது… பின்னுக்கு உள்ள நிலமையை பார்த்து திறக்க வேண்டும் என்பது கூட, பதில் நீதவானுக்கு தெரியவில்லையா?

 

எனக்கு மிகப் பிடித்த ஆசிரியர்களில் ஒருவர். அளவையியல் ஆசிரியராக இருப்பினும் 10 ஆம் வகுப்பில் எமக்கு தமிழ் கற்பித்தார். இவரால் தான் எனக்கு தமிழ் எழுத ஆவல் ஏற்பட்டது.

பாடசாலை ஆசிரியர்களில் கலாநிதிப் பட்டம் வாங்கிய ஆசிரியர்கள் குறைவு. ஆனால் யுகபாலசிங்கம் சேர் கலாநிதிப் பட்டம் வாங்கிய ஆசிரியர். தான் படிப்பிக்கும் துறையில் நூல்களையும் எழுதியுள்ளார். அவர் இரண்டு புதிய நூல்களை எழுதிக் கொண்டு இருக்கும் போது தான் விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

 

1 hour ago, தமிழ் சிறி said:

 

சரி.. விபத்து நடந்து விட்டது. உயிருக்கு போராடியவரை, உடனடியாக வைத்திய சாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன்?

சென்ற வருடமும்…. இதே போல், துவிச் சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மாணவன் மீது, வீதியில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கார் கதவை திறந்த போது.. அந்த மாணவன் அதில் மோதி, இறந்த சம்பவம் நடந்தது.

இப்படியானவர்களை… கடுமையாக தண்டித்து, உரிய இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

சேர், தன் 13 வயது பேத்தியுடன் செல்லும் போதுதான் விபத்து நடந்தது. இந்த பதில் நீதிமான், இரத்த வெள்ளத்தில் கிடந்த தாத்தாவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க அந்த 13 வயதேயான பேத்தியை சாரதியுடன் மட்டுமே அனுப்பி வைத்து "இரத்தம் காரில் படக் கூடாது" என்று எச்சரித்தும் உள்ளார். விபத்து நடந்தவுடனேயே அனுமதிக்க அனுப்பவும் இல்லை. பொலிஸ் நிலையத்தில் அவரது உறவுகள் அழுது முரண்படும் போது, பல தமிழ் சட்டத்தரணிகள் இந்த நீதிமானுக்காக சமாதானம் பேச முயன்றுள்ளனர். அத்துடன் அடுத்த நாள்தான் சாரதியை அழைத்துக் கொண்டு போய் நீதிமான் பொலிசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பேரூந்து சாரதியில் முழுப்பழியையும் போட முயல்கின்றனர் இப்ப.

  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த கேவலம் கெட்ட பதில் அநீதிமான்? பெயர் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

"இரத்தம் காரில் படக் கூடாது"

 அவரது பெயர் கங்காதரன்- சட்டத்தரணி பதில் நீதவான் முல்லைத்தீவு.

இந்த மனிதன் ஒரு கடைந்தெடுத்த படித்த ஒரு சுத்து மாத்து பேர்வழி. இவர் முல்லைத்தீவு, தண்ணீர் ஊற்று இடத்தை சேர்ந்தவர் என  அறிவோம்.

கள்ள காணிக்கு உறுதி முடிப்பது முதல் ,வட்டிக்கு காசு கொடுத்து காணிகளை தனதாக்கும்  முயற்சியை அங்குள்ள சட்டத்தரணிகள் உடன் கன கச்சிதமாக செய்து முடிப்பவர்.

கள்ள உறுதி முடிப்பதில் இவரது பங்கு அளப்பரியது.

வெளிநாடுகளில் உள்ள சுத்துமாத்து பேர்வழிகளும் கொழும்பை தளமாக கொண்டு இயங்குகின்ற பிரபலமான சட்டத்தரணிகள் உதாரணமாக புவிதரன் உட்பட இவரது சகாக்கள் கூட்டம் பெரியது.

 

முல்லைத்தீவு பகுதிகளில் இவரது படித்த அடாவடித்தனத்தை முன்னிறுத்தி யாழ்ப்பாணம், கொழும்பு உள்பட்ட சட்டத்தரணிகள் நிறைய காணிகளை  மாற்றி உள்ளார்கள் இவர்களைப் பற்றிய முறைப்பாடுகள் நிறைய இருக்கின்றது.

 

இந்த பின்னூட்டத்தில் எந்தவிதமான பிரதேசவாதமும், இனவாதமும் இல்லை என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

 

 

 

 

பல தமிழ் சட்டத்தரணிகள் இந்த நீதிமானுக்காக சமாதானம் பேச முயன்றுள்ளனர்

இவர்கள் நேர்மையானவர்களாக இருப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை, நிச்சயமாக இவர்கள் ஏதோ ஒரு விதத்தில் இவருக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள்.

 தப்பித்து விடுவார்கள்.

 

யார் அந்த கேவலம் கெட்ட பதில் அநீதிமான்? பெயர் என்ன?

பெயர் கங்காதரன்- சட்டத்தரணி பதில் நீதவான் முல்லைத்தீவு

  • கருத்துக்கள உறவுகள்

யுகத்தார் ( யுகபாலசிங்கம்) ஒரு சிறந்த மேடை பேச்சாளர் ஆவார், தமிழ் தேசிய உணர்வாளர் கூட. நாம் படிக்கும் காலங்களில் இயக்கம் கூட்டம் வைக்க வந்தால், தனத்தார்( அதிபர்) உட்பட ஆசிரியர்கள் அனைவரும் ஒளிந்து விடுவார்கள், சேர் தான் அவர்களை வரவேற்று கூட்டத்தை முன் நடத்துவார். 
சேரின் ஆத்மா சாந்தியடைவதாக.😢

Edited by zuma

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.