Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வரிசை கட்டிய காளைகள் vs அடக்கத் துடிக்கும் இளைஞர்கள் - கள படங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வரிசை கட்டிய காளைகள் vs அடக்கத் துடிக்கும் இளைஞர்கள் - கள படங்கள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டு 2022

 

படக்குறிப்பு,

மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டு 2022

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டு 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஜல்லிக்கட்டில் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காளை உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என்று சுற்றுக்கு 30 மாடுபிடி வீரர்கள் களமிறங்குகின்றனர். முன்னதாக, ஜல்லிக்கட்டு தொடக்கத்தில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை எம்.பி எழுத்தாளர் சு வெங்கடேசன் உட்பட பலரும் அவனியாபுர ஜல்லிக்கட்டு தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

கோலாகலமாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியின் படங்கள் இதோ..

 

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கொடியசைத்து மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தார்.

 

படக்குறிப்பு,

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கொடியசைத்து மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரானபழனிவேல் தியாகராஜன், கொடியசைத்து புகழ்பெற்ற மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

 

வாடிவாசலில் இருந்து திமிறி வரும் காளையை, பாய்ந்து அடக்கும் இளைஞர்

 

படக்குறிப்பு,

வாடிவாசலில் இருந்து திமிறி வரும் காளையை, பாய்ந்து அடக்கும் இளைஞர்

மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டில், வாடிவாசலில் இருந்து திமிறி வரும் காளையை, பாய்ந்து அடக்க முயலும் இளைஞர்.

 

வாடிவாசலில் இருந்து மாடு பாய்ந்து வரும் போது ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டும் என்கிற விதியின் படி ஒருவர் மட்டுமே ஏறு தழுவும் காட்சி

 

படக்குறிப்பு,

வாடிவாசலில் இருந்து மாடு பாய்ந்து வரும் போது ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டும் என்கிற விதியின் படி ஒருவர் மட்டுமே ஏறு தழுவும் காட்சி

வாடிவாசலில் இருந்து காளை பாய்ந்து வரும் போது ஒருவர் மட்டுமே மாட்டைப் பிடிக்க வேண்டும் என்கிற விதியின் படி ஒருவர் மட்டுமே ஏறு தழுவும் காட்சி இதோ.

 

அடங்க மறுக்கும் காளை, அடக்க முனையும் இளைஞர் படை

 

படக்குறிப்பு,

அடங்க மறுக்கும் காளை, அடக்க முனையும் இளைஞர் படை

ஒருபக்கம் அடங்க மறுக்கும் காளைகள், மறுபக்கம் அடக்க முனையும் இளைஞர் படை. ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டி இரு தரப்பு.

 

மக்கள் ஆரவாரத்தோடு, இளைஞர்கள் வலையிலிருந்து திமிறி வரும் காளை

 

படக்குறிப்பு,

மக்கள் ஆரவாரத்தோடு, இளைஞர்கள் வலையிலிருந்து திமிறி வரும் காளை

ஜல்லிக்கட்டை காண, குறைவான மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும், காளைகளின் அதிரடி ஆட்டத்துக்கு பஞ்சமில்லை.

இருப்பினும் குறைவில்லாத மக்களின் ஆரவாரத்தோடு, இளைஞர்கள் வலையில் சிக்காமல் திமிறி வரும் காளை.

 

தொட்டுப் பார்... என தெறிக்கவிடும் கம்பீரத்தோடு வீரநடைபோடும் காளை

 

படக்குறிப்பு,

தொட்டுப் பார்... என தெறிக்கவிடும் கம்பீரத்தோடு வீரநடைபோடும் காளை

திமில் திமிற, உடலில் வலு புடைக்க தொட்டுப் பார் என தெறிக்க விடும் கம்பீரத்தோடு, எவரும் தொடவில்லை என்கிற திமிரோடு வீரநடைபோடும் காளை.

 

ஜல்லிக்கட்டுப் போட்டியை பாதுகாப்பாக நடத்தும் முனைப்பில் காவல் துறையினர்

 

படக்குறிப்பு,

ஜல்லிக்கட்டுப் போட்டியை பாதுகாப்பாக நடத்தும் முனைப்பில் காவல் துறையினர்

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை பாதுகாப்பாக நடத்தும் முனைப்பில் காவல் துறையினர்.

 

வாடிவாசலிலிருந்து வந்த வேகத்தில், இளைஞர்களுக்கு சவால்விடும் வீரக் காளை

 

படக்குறிப்பு,

வாடிவாசலிலிருந்து வந்த வேகத்தில், இளைஞர்களுக்கு சவால்விடும் வீரக் காளை

மாட்டைப் பிடிக்க சூழ்ந்திருக்கும் இளைஞர்களுக்கு சவால்விடும் பாணியில், வாடிவாசலிலிருந்து வந்த வேகத்தில், கால்களைக் கொண்டு மண்ணைக் கோரி இளைஞர்களுக்கு சவால்விடும் வீரக் காளை.

 

பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர்

 

படக்குறிப்பு,

பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர்

கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் முனைப்பில் விவரங்களைச் சரிபார்க்கும் காவல் துறை அதிகாரிகள்.

 

வாடிவாசல் வழி காளைகளை விட காத்திருக்கும் காளை மாடுகள் & மாடு வளர்ப்பவர்கள்

 

படக்குறிப்பு,

வாடிவாசல் வழி காளைகளை விட காத்திருக்கும் காளை மாடுகள்

மாதக் கணக்கில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார் செய்த தங்கள் காளைகளை, வாடிவாசல் வழி போட்டிக்கு அனுப்ப வரிசையில் நிற்கும் காளைகள் மற்றும் காளை வளர்ப்பவர்கள்.

ஜல்லிக்கட்டை விறுவிறுப்பாக்கும் வர்ணனையாளர் மைக் சரவணன் - காணொளி

காணொளிக் குறிப்பு,

ஜல்லிக்கட்டை வேறு தளத்துக்கு எடுத்துச் செல்லும் வர்ணனையாளர் மைக் சரவணன்

ஜல்லிக்கட்டில் 'கெட்டவன்' - அதிரடிக்கு பெயர் பெற்ற மதுரை காளை - காணொளி

காணொளிக் குறிப்பு,

காளையின் பெயர் 'கெட்டவன்' - பல ஜல்லிக்கட்டில் அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்திய மாஸ் காளை

ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் 17 வயது இளம் தமிழ்ப் பெண் - காணொளி

காணொளிக் குறிப்பு,

ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் 17 வயது இளம் தமிழ்ப் பெண்

https://www.bbc.com/tamil/india-59990577

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பராய்  இருக்கும், நேரில் பார்த்ததில்லை......!  👍

நன்றி ஏராளன் .....! 

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு. இளம் தமிழ்ப் பெண் கட்டப்பொம்மன் காலத்து வெள்ளையம்மாளை நினைவூட்டுகிறாள்.🤗

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதில் பலமுறை பார்த்து ரசித்துள்ளேன்.

சிலிர்ப்பூட்டும்படி இருக்கும்.👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலமேடு ஜல்லிக்கட்டு: திமில் குலுங்க இளைஞர்களோடு மல்லுகட்டிய கம்பீரக் காளைகள் - கள படங்கள்

4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

வீரர்களை அருகில் கூட அண்ட விடாமல் அசால்ட் காட்டிய கம்பீரக் காளை

 

படக்குறிப்பு,

வீரர்களை அருகில் கூட அண்ட விடாமல் அசால்ட் காட்டிய கம்பீரக் காளை

மதுரை பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது. இதில் 21 காளைகளை பிடித்த பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் முதலிடத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது. அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடர்ந்து அடுத்த போட்டி ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறவுள்ளது.பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி, இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டி விறுவிறுப்பாக நடந்தது. வாடிவாசலில் சீறிக்கொண்டு காளைகள் வருவதும் அவற்றைப் பிடிக்க மாடுபிடி வீரர்கள் களமாடியதும் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பை கூட்டிக் கொண்டே இருந்தன.தலா ஒரு மணி நேர சுற்றில் 30 வீரர்கள் என்கிற கணக்கில் மொத்தம் ஏழு சுற்றுகளாக போட்டி நடந்தது.

இன்றைய போட்டியில் 729 காளைகள் போட்டியில் பங்கெடுத்தன. சரியாக மாலை 5 மணிக்கு போட்டி நிறைவடைந்தது.இதன் முடிவில் முதலிடம் பிடித்த வீரராக பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் அறிவிக்கப்பட்டார். நான்காவது சுற்றில் களத்துக்கு வந்த்து 21 காளைகளை பிடித்தார். 2020, 2021ஆம் ஆண்டுகளிலும் இவர் முதலிரண்டு இடங்களை பிடித்திருந்தார். இப்போது மூன்றாவது முறையாக வென்ற இவருக்கு தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது.சிவகங்கை புலியூரைச் சேர்ந்த சூறாவளி என்ற காளைக்கு, சிறந்த காளைக்கான முதல் பரிசு வழங்கப்பட்டது. அதன் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாமிடம் பிடித்த மாடுபிடி வீரராக குருவித்துறையைச் சேர்ந்த கார்த்திக் ராஜா அறிவிக்கப்பட்டார். இவர் 11 மாடுகளை பிடித்துள்ளார். இவருக்கு திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

மூன்றாம் இடம் பிடித்த வீரராக மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா தேர்வானார்.

முன்னதாக காலை 11.30 மணியளவில் விதிகளை மீறி சிலர் காளைகளை வாடிவாசலின் பின்பகுதியில் அவிழ்த்து விட முயன்றனர். அவர்களை தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர். இந்த போட்டியில் ஆள் மாறாட்டம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் இருவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

ஜல்லிக்கட்டு

 

படக்குறிப்பு,

பிரபாகரன், முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் - பொதும்பு கிராமத்தைச் சேர்ந்தவர்

 

ஜல்லிக்கட்டு

 

படக்குறிப்பு,

கார்த்திக் ராஜா, இரண்டாமிடம் பிடித்த மாடுபிடி வீரர்

தமிழ்நாட்டையே ஜல்லிக்கட்டுப் போட்டியில் பரவசப்படுத்திய பாலமேடு ஜல்லிக்கட்டுப் படங்கள் இதோ.

 

திமிலைப் பிடிப்போரை, உதறிவிட்டு கம்பீர நடைபோடும் கட்டுடல் காளை

 

படக்குறிப்பு,

திமிலைப் பிடிப்போரை, உதறிவிட்டு கம்பீர நடைபோடும் கட்டுடல் காளை

பாலமேடு ஜல்லிக்கட்டில், தன் திமிலைப் பிடிக்கும் வீரர்களை எல்லாம், உதறிவிட்டு கம்பீர நடைபோடும் கட்டுடல் காளை.

 

போட்டியில் பங்கு பெற காத்திருக்கும் காளைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள்

 

படக்குறிப்பு,

போட்டியில் பங்கு பெற காத்திருக்கும் காளைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் தங்கள் காளைகளை அவிழ்த்துவிட காத்திருக்கும் காளை மாட்டு உரிமையாளர்கள்.

 

ஒருவரை உதறவிட்டு, மற்றொருவரிடமிருந்து விடுவித்துக் கொள்ள முனையும் காளை

 

படக்குறிப்பு,

ஒருவரை உதறவிட்டு, மற்றொருவரிடமிருந்து விடுவித்துக் கொள்ள முனையும் காளை

ஒருவரின் பிடியை உதறவிட்டு, மற்றொருவரின் பிடியிலிருந்து விடுபட துள்ளிக் குதிக்கும் வலிமையான காளை.

 

மின்னல் வேகத்தில் திமில் குலுங்க ஓடும் காளைக்கு ஈடு கொடுத்தோடும் இளைஞர்கள்

 

படக்குறிப்பு,

மின்னல் வேகத்தில் திமில் குலுங்க ஓடும் காளைக்கு ஈடு கொடுத்தோடும் இளைஞர்கள்

வாடிவாசலிலிருந்து வெளி வந்த காலை மின்னல் வேகத்தில் திமில் குலுங்க ஓடுகிறது. மறுபக்கம் காளைக்கு ஈடு கொடுத்து திமிலை அணைத்த படி ஒரு இளைஞரும் ஓடுகிறார்.

 

ஒரு காளை, ஒரு இளைஞர்

 

படக்குறிப்பு,

ஒரு காளை, ஒரு இளைஞர்

ஒரு காளை, ஒரு இளைஞர், திமிலோடு மோதி விளையாடி ஜல்லிக்கட்டுப் போட்டியை சூடேற்றிய தருணம்.

காணொளிக் குறிப்பு,

ஜல்லிக்கட்டை வேறு தளத்துக்கு எடுத்துச் செல்லும் வர்ணனையாளர் மைக் சரவணன்

 

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை கண்டு களிக்க வந்த பார்வையாளர்கள்

 

படக்குறிப்பு,

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை கண்டு களிக்க வந்த பார்வையாளர்கள்

கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை கண்டுகளிக்க வந்த பார்வையாளர்கள்.

 

பிடிப்பது ஒருவரோ, இருவரோ, எவரையும் பார்க்காமல் துள்ளிக் குதித்தோடும் காளை

 

படக்குறிப்பு,

பிடிப்பது ஒருவரோ, இருவரோ, எவரையும் பார்க்காமல் துள்ளிக் குதித்தோடும் காளை

வாடிவாசலில் இருந்து வந்தது தான் தெரியும், பிடிப்பது ஒருவரோ, இருவரோ, எவரையும் பார்க்காமல் துள்ளிக் குதித்தோடும் அற்புக் காளை.

 

விடாபிடியாய் காளையைத் துரத்தும் இளைஞர், கண்ணில் வேகத்தோடு பாய்ந்தோடும் காளை

 

படக்குறிப்பு,

விடாபிடியாய் காளையைத் துரத்தும் இளைஞர், கண்ணில் வேகத்தோடு பாய்ந்தோடும் காளை

பிடித்த பிடியை விடாத இளைஞர், பிடியை பிரிக்கும் நோக்கில் கண்ணில் வேகத்தோடு திமிறித் தெறித்தோடும் காளை.

 

வீரர்களை அருகில் கூட அண்ட விடாமல் அசால்ட் காட்டிய கம்பீரக் காளை

 

படக்குறிப்பு,

வீரர்களை அருகில் கூட அண்ட விடாமல் அசால்ட் காட்டிய கம்பீரக் காளை

வாடிவாசலிலிருந்து புறப்பட்ட காளை, மாடுபிடி வீரர்களை அருகில் கூட அண்ட விடாமல் அசால்ட் காட்டிய கம்பீரக் காளை.

 

வாடிவாசல் வழி களம் காண, தங்கள் வாய்ப்புக்காக காத்திருந்த காளைகள்

 

படக்குறிப்பு,

வாடிவாசல் வழி களம் காண, தங்கள் வாய்ப்புக்காக காத்திருந்த காளைகள்

பாலமேடு ஜல்லிக்கட்டில், வாடிவாசல் வழி களம் கண்டு இளைஞர்களைத் தெறிக்க விட, தங்கள் உரிமையாளர்களோடு காத்திருந்த காளைகள்.

https://www.bbc.com/tamil/india-60008769

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டில் ஆறுதல் பரிசை ஏன் மறுத்தேன்?' - 16 வயது மதுரை மாணவி யோகதர்ஷினி பேட்டி

  • நடராஜன் சுந்தர்
  • பிபிசி தமிழுக்காக
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஜல்லிக்கட்டு

 

படக்குறிப்பு,

யோகதர்ஷினி

"மற்றவர்களை எப்படி பார்க்கிறீர்களோ அவ்வாறே என்னைப் பாருங்கள். நான் ஒரு பெண் என்பதால் என்னை மட்டும் ஏன் தனியாக பார்க்கிறீர்கள்? அனைவருக்கும் பின்பற்றப்படும் விதிமுறைகளைத்தான் எனக்கும் பின்பற்றப்பட வேண்டும். பெண் பிள்ளை என்று என்னைத் தனித்துப் பார்க்க வேண்டாம்," என்று ஜல்லிக்கட்டில் தன் காளையைக் கட்டவிழ்த்த யோகதர்ஷினி கூறுகிறார்.

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி முத்து என்பவரின் மகள் யோகதர்ஷினி. 16 வயதே ஆகும் இவர் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். யோகதர்ஷினியின் குடும்பத்தில் அவரது முன்னோர்கள் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை வளர்த்து வந்தனர். இவரது தந்தை மற்றும் அண்ணன் ஆகியோரைத் தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக யோகதர்ஷிணி ஜல்லிக்கட்டு போட்டிக்குக் காளைகளைக் களமிறக்கி வருகிறார்.

இந்த ஆண்டு நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 'வடமுகத்து கருப்பு' என்று பெயரிடப்பட்ட அவரது காளை பங்கேற்றது. காளை வாடிவாசலிலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்டதும், மாணவி யோகதர்ஷினியின் காளையை இருவர் சேர்ந்து பிடித்தனர். இருவர் சேர்ந்து ஒரு காளையைப் பிடிப்பது விதிமுறையை மீறியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் காளையைப் பிடிமாடு என்று அறிவித்த ஒருங்கிணைப்புக் குழு, அந்த பரிசு விழா குழுவைச் சேரும் என்று அறிவித்தனர். மேலும் காளையைக் கட்டவிழ்த்த யோகதர்ஷிணிக்கு ஆறுதல் பரிசு அளிப்பதாக விழா குழு தெரிவித்தது.

இதனை யோகதர்ஷிணி வேண்டாம் என்று நிராகரித்துச் சென்றுவிட்டார். கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியிலும் இதே போன்று அறிவித்த பரிசை நிராகரித்தார்.

எங்கள் வீட்டில் பாரம்பரியமாக காளை வளர்க்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக நான் ஜல்லிக்கட்டுக்குக் காளையைக்‌ கொண்டு செல்கிறேன். அதேபோன்று இந்த ஆண்டும் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்குக் காளையை அழைத்துச் சென்றேன் என்று பிபிசி தமிழிடம் யோகதர்ஷினி தெரிவித்தார்.

"நான் அழைத்துச் சென்ற காளை புதியது. அது இதுவரை வாடிவாசலைப் பார்த்ததில்லை. இந்த ஆண்டுதான் முதல் முறையாகக் களமிறங்கியது. சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இருவர் காளையைக் கட்டியதால், பிடிமாடு என்று அறிவித்தனர். அப்போது அறிவித்த ஆறுதல் பரிசை வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்," என்கிறார் அவர். முந்தைய ஆண்டுகளில் இவரது வேறு ஒரு காளை ஜல்லிக்கட்டில் நான்கு முறை வென்றுள்ளது.

கடந்த ஆண்டும் இதே போன்று ஆறுதல் பரிசு அறிவிக்கப்பட்டு, அதைத் தாம் மறுத்ததாகக் கூறுகிறார் மாணவி யோகதர்ஷினி.

"கடந்த ஆண்டு ஒருவர் காளையைப் பிடித்தார். அப்போது ஆறுதல் பரிசாகப் பட்டு சேலை வாங்கிக்கொள்ளுமாறு அழைத்தனர். அதனை வேண்டாம் என்று மறுத்தேன். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் இரண்டு பேர் காளையை பிடித்தும், அதைப் பிடிமாடு என்று அறிவித்தனர். இப்போதும் எனக்கு ஆறுதல் பரிசாக தங்கக் காசு வழங்குவதாக அறிவித்தனர். அதை வேண்டாம் கூறிவிட்டு வந்தேன்."

 

BBC

"ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் எந்த காளைகளும் அவை பிடிக்கப்பட்டால் ஆறுதல் பரிசு வழங்க மாட்டார்கள். காளை வென்றால் காளை உரிமையாளருக்கு பரிசு, காளை பிடிக்கப்பட்டால் வீரருக்கு பரிசு. இவைதான் வழக்கமாக நடைபெற்று வருகிறது. நானும் அவர்களுடன் சேர்ந்துதான் மாட்டை அவிழ்க்கிறேன். இதில் நான் பெண் பிள்ளையாக மாட்டைக் கட்டவிழ்க்கிறேன், நான் துவண்டு விடக்கூடாது என்பதற்காக ஆறுதல் பரிசு அறிவித்தனர். எனக்கு அது வேண்டாம்.

எப்பொழுதும் போல மற்றவர்களுக்கு என்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதோ அவை எனக்கும் பொருந்தும். அதே விதிமுறையை என்னிடமும் பின்பற்றுங்கள். என் மாடு வென்றால் பரிசை ஏற்கிறேன்," என்றார் அவர்.

தாம் ஒரு பெண்ணாக மாட்டை அவிழ்ப்பதால் மட்டுமே எனக்கு ஆறுதல் பரிசு அளிப்பதாக கூறுகிறார் யோகதர்ஷினி.

"என்னை மட்டும் ஏன் தனித்துப் பார்க்கிறீர்கள்? நானும் அனைவரையும் போல்தான் காளையை விடுகிறேன். என் காளை வென்றால் நான் வாங்கும் பரிசில் ஒரு நியாயம் உள்ளது, என் காளை பிடிமாடாக ஆகிவிட்டதால் எனக்கு ஆறுதல் பரிசு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்," எனத் தெரிவித்தார் யோகதர்ஷினி.

https://www.bbc.com/tamil/india-60021982

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.