Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவையும் கவனத்தில் கொள்ள வேண்டும் - நீதி அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி)

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகள் தொடர்பில் சட்ட திருத்தங்களை மாத்திரம் மேற்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியாது. இந்தியா எமது நட்பு நாடு என்ற ரீதியில் இரு தரப்பு இராஜதந்திர உறவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது என்கிறார் நீதி அமைச்சர் அலி சப்ரி.

இன்று தொடக்கம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நடமாடும் நீதிக்கான அணுகல் சேவை வேலைத்திட்டம் தொடர்பில் நேற்று நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு கடல் எல்லையில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகள் நீண்டகால பிரச்சினையாக காணப்படுகின்றது. நீதி அமைச்சு நேரடியாக தலையிட்டு இந்த விடயங்களை தீர்க்க முடியாது. 

மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகள் குறித்து இலங்கை கடற்படை, வெளிவிவகார அமைச்சு மற்றும் மீன்பிடித்துறை அமைச்சு ஆகியவற்றின் தலையீட்டுடனே இதனை முன்னெடுக்க முடியும். 

எனினும் இவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த நாம் எதிர்பார்கின்றோம். மீன்பிடித்துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவுடன் இது குறித்து பேசவுள்ளோம். அவசியமான சட்ட திருத்தங்களை செய்ய வேண்டும் என்றால் அதனையும் கலந்துரையாடல் மூலமாக முன்னெடுக்க தயாராக உள்ளோம்.

சட்ட திருத்தங்களை மாத்திரம் செய்து இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியாது. இராஜதந்திர உறவுமுறையும் இதில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. 

இந்தியா எமது நட்பு நாடு, அவர்களுடன் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்படுகின்றது என்றால் அது குறித்து ஆரோக்கியமாக கலந்துரையாடியே பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

 தனிச்சையாக எம்மால் இந்த விடயங்களை கையாள முடியாது என்பதையும் சகலரும் கவனத்தில் கொண்டே செயற்படுகின்றோம் என்றார். 

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவையும் கவனத்தில் கொள்ள வேண்டும் - நீதி அமைச்சர் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகள் தொடர்பில் சட்ட திருத்தங்களை மாத்திரம் மேற்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியாது. இந்தியா எமது நட்பு நாடு என்ற ரீதியில் இரு தரப்பு இராஜதந்திர உறவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது என்கிறார் நீதி அமைச்சர் அலி சப்ரி.

சிறீலங்காவில் நீதி உள்ளதா...? அது எங்கே இருக்கிறது...? என்னவடிவில் உள்ளது...? யார் அதனை வைத்திருக்கிறார்கள்...? அதற்கு ஒரு நீதி அமைச்சரும் உள்ளதுதான் வேடிக்கை. எங்கள் கள உறவுகள் யாருக்காவது இதுபற்றித் தெரியுமா....?? நான் அறிந்தளவில் வடகிழக்கைப் பிரிக்கவும், சிங்களப் படையிலுள்ள கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கவும் வந்து போனதாகக் கேள்வி.🤔 

  • கருத்துக்கள உறவுகள்

ஏலத்தில் மீன் பிடி வள்ளங்களை விற்பது யாருடைய முடிவு?

$500 மில்லியன் இந்தியா கொடுத்தவுடன் இப்படி ஒரு அறிக்கையை  விடுவது. நடைமுறையில் செய்வது வேறு.
 


மீனவர்கள் இரு நாட்டிலும் தமிழர்கள் என்பதால் இரு நாடுகளும் ஏதும் செய்யாமல் இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகள் தொடர்பில் சட்ட திருத்தங்களை மாத்திரம் மேற்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியாது. இந்தியா எமது நட்பு நாடு என்ற ரீதியில் இரு தரப்பு இராஜதந்திர உறவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது என்கிறார்

எமக்கு கடன் வழங்கும் வள்ளல் நாடு இந்தியா!

8 hours ago, பிழம்பு said:

இந்தியா எமது நட்பு நாடு, அவர்களுடன் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்படுகின்றது என்றால்

அது பெற்ற, பெறுகிற கடன்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சொல்ல தயங்குகிறார் நீதி அமைச்சர். இவரிடமே நீதியில்லை இவரிடம் எப்படி நீதியை எதிர்பார்ப்பது?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

எமக்கு கடன் வழங்கும் வள்ளல் நாடு இந்தியா!

அது பெற்ற, பெறுகிற கடன்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சொல்ல தயங்குகிறார் நீதி அமைச்சர். இவரிடமே நீதியில்லை இவரிடம் எப்படி நீதியை எதிர்பார்ப்பது?

நக்குண்டார் நாவிழந்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.