Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் 3 மாத கைக்குழந்தையுடன் ஹெரோயின் விற்ற இளம்பெண் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இளம் பெண்ணை யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

அரியாலை, பூம்புகார் பகுதியை சேர்ந்த 33 வயதான பெண்ணொருவரே ஹெரோயினுடன் சிக்கினார். பிறருக்கு சந்தேகம் ஏற்படாத விதத்தில் தனது 3 மாத கைக்குழந்தையுடன் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்று, யாழ் மாவட்ட செயலகத்திற்கு  அண்மையான பிரதேசத்தில் வைத்து அவர் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படும் வேளை பெண்ணிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிராம் தூய ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இதன் பெறுமதி 5 தொடக்கம் 6 இலட்சம் ரூபாவாகும்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் ஹெரோயின் விற்பனையில் ஈடுபடும் உள்ளூர் தரகர்கள் தொடர்பிலும் கொழும்பு முகவர்கள் தொர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

https://pagetamil.com/2022/02/17/யாழில்-3-மாத-கைக்குழந்தைய/

  • கருத்துக்கள உறவுகள்

போதை வஸ்து  வியாபாரிகள், கைக்குழந்தையுடன் ஹெரோயின் வியாபாரம் செய்தால்,
கண்டு பிடிக்க மாட்டார்கள் என்று... இவரை தேர்ந்தெடுத்து இருக்கலாம்.  
ஆனாலும்... அப்பெண் செய்தது... மாபெரும் குற்றமே.

  • கருத்துக்கள உறவுகள்

களவு, விபசாரம் போன்ற தவறுகள் மன்னிக்கப்படலாம். ஆனால் இவ்வாறான கொலைக்கு சமானமான போதைப்பொருள் விற்பனை ஒருபோதும் மன்னிக்கப்படக்கூடாது. கடும் தண்டனை வழங்கப்படவேண்டும். இந்தோனேஷியா மலேசியா போன்ற நாடுகளில் இவ இருந்திருந்தால் கெலீம ஸ்வர்க ராஜ்ய தான்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பெண்ணின் கடந்த கால நடவடிக்கைகள் முதலில் தெரியணும் எடுத்தவுடன் கவுட்டு  கொட்டினது போல் சட்டங்களை அப்பாவி மனிதர்கள் மேல் பாயவிட கூடாது .

சிலவேளை அந்த குழந்தைக்கு பால்மா போன்ற அத்தியாவசிய பொருள்கள் வாங்க பணமில்லாமல் இருந்ததை பின்னால்  இருக்கும் மாபியா கும்பல் உபயோகப்படுத்தி இருக்கலாம் அல்லது ஆவா குறூப்பை பிடிக்க வக்கத்து  இருக்கும் இலங்கை போலீஸ் திணைக்களத்தின் செட்டப் பிடிப்பாக இருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

10 கிராம் தூய ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

 

18 hours ago, பெருமாள் said:

இதன் பெறுமதி 5 தொடக்கம் 6 இலட்சம் ரூபாவாகும்.

நம்மவர்கள் தானே வாங்குகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாலி said:

களவு, விபசாரம் போன்ற தவறுகள் மன்னிக்கப்படலாம். ஆனால் இவ்வாறான கொலைக்கு சமானமான போதைப்பொருள் விற்பனை ஒருபோதும் மன்னிக்கப்படக்கூடாது. கடும் தண்டனை வழங்கப்படவேண்டும். இந்தோனேஷியா மலேசியா போன்ற நாடுகளில் இவ இருந்திருந்தால் கெலீம ஸ்வர்க ராஜ்ய தான்!

Marlboro rot

பாவம் அந்த இளம்பெண் கெரோயின் பொதிகளில், போதைப்பொருள் கொல்லும் என்று எழுதி, வெளிப்படையாகவே விற்றிருந்தால் பிரச்சனையே வந்திராது. 😋🤗

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, வாலி said:

களவு, விபசாரம் போன்ற தவறுகள் மன்னிக்கப்படலாம். ஆனால் இவ்வாறான கொலைக்கு சமானமான போதைப்பொருள் விற்பனை ஒருபோதும் மன்னிக்கப்படக்கூடாது. கடும் தண்டனை வழங்கப்படவேண்டும். இந்தோனேஷியா மலேசியா போன்ற நாடுகளில் இவ இருந்திருந்தால் கெலீம ஸ்வர்க ராஜ்ய தான்!

நாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள்....போதை பொருளை வைத்திருந்தாலோ,போதை பொருளை அருந்தியிருந்தாலோ .....போதை தெளிந்தவுடன் புத்திமதி கூறி அவர்களை திருத்தி ஒரு பக்கட் போதை பொருளையும் கொடுத்து மன்னித்து விடுவோம் ...அது தான் நாங்கள் அவர்களுக்கு காட்டும் "கெலீம ஸ்வர்க ராஜ்ய"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

நாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள்....போதை பொருளை வைத்திருந்தாலோ,போதை பொருளை அருந்தியிருந்தாலோ .....போதை தெளிந்தவுடன் புத்திமதி கூறி அவர்களை திருத்தி ஒரு பக்கட் போதை பொருளையும் கொடுத்து மன்னித்து விடுவோம் ...அது தான் நாங்கள் அவர்களுக்கு காட்டும் "கெலீம ஸ்வர்க ராஜ்ய"

அந்த பெண்ணுக்கு தண்டனை வேணும் அதுவும் தீர விசாரித்து   அந்த பெண்ணிடம் விற்க  கொடுத்த திமிங்கிலம் அரசியல் செல்வாக்குடன் சொகுசாக உலா வந்துகொண்டு இருக்கும் போதை வியாபாரம் எந்தகாலத்திலும் அனுமதிக்க முடியாத ஒன்று .அந்த பெண்ணின் கைபேசியில் இரண்டாம் மூன்றாம் நிலையில் உள்ள திமிங்கிலம்கள் தொடர்பு எண் கட்டாயம் இருக்கும் அவர்களை பிடித்து விசாரிக்கும் முறையில் விசாரிக்க உண்மை வரும் .

அதைவிட்டு பிடிபட்ட பெண்ணுக்கு மாத்திரம் கடும் தண்டனை கொடுப்பது இன்னும் பலர் உள்ளே வருவினம் மெயின் திமிங்கிலம் இன்னும் சிங்கள இனவாத  அரச ஆசியுடன் உலா வரும் எது நல்லது என்று முடிவெடுத்து கொள்ளுங்கள் .

மாட்டுக்கள்ளன் ஆட்டுக்கள்ளனுக்கு அந்த இடத்திலே கட்டி வைத்து அடித்தால் தான் அடுத்தமுறை வராயினம் இந்த விடயம் அதுபோல் அல்ல இனத்தையே கருவறுக்கும் செயல் மெயின் திமிங்கிலம் மாட்டுப்படணும் .

  • கருத்துக்கள உறவுகள்

போதைப்பொருள் என்பது வடக்கில் நான் அறிவது புலிகள் நயவஞ்சகமாக அழிக்கப்பட்ட பின்தான். வேண்டுமென்றே நமது இளம் சமுதாயத்தை, கலாச்சாரத்தை சீரழிக்க  குறி வைத்து புகுத்தப்பட்டது.  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

போதைப்பொருள் என்பது வடக்கில் நான் அறிவது புலிகள் நயவஞ்சகமாக அழிக்கப்பட்ட பின்தான். வேண்டுமென்றே நமது இளம் சமுதாயத்தை, கலாச்சாரத்தை சீரழிக்க  குறி வைத்து புகுத்தப்பட்டது.  

கஞ்சா வழக்கில் கைது செய்யப் பட்டவர்களை விடுவிக்க….
சுமந்திரனே வழக்காடிய கேவலமும் நம் மண்ணில் நடந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.