Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தக்க தருணத்தில் உதவிகளை மேற்கொள்வதே நட்புக்கு அழகு – இலங்கைக்கான இந்திய துணை தூதுவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தக்க தருணத்தில் உதவிகளை மேற்கொள்வதே நட்புக்கு அழகு – இலங்கைக்கான இந்திய துணை தூதுவர்

ஒருவருக்கு கஷ்டம் வருகின்ற போது யார் வந்து தக்க தருனத்தில் உதவிகளை செய்கிறார்களோ அது தான் நட்புக்கு அழகு.அந்த உதவியையே தக்க தருனத்தில் இந்திய அரசு மன்னார் மீனவர்களுக்கு தற்போது மேற்கொண்டுள்ளது என இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜன் தெரிவித்தார்.

இந்திய அரசின் உதவியுடன் மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு பொதிகள் கையளிக்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது உரையாற்றுகையிலேயே இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜன் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “நட்பு என்பது ஒருவருக்கு கஷ்டம் வருகின்ற போது யார் வந்து தக்க தருனத்தில் உதவிகளை செய்கிறார்களோ அது தான் நட்புக்கு அழகு.தாய் ஒருவர் தனது குழந்தையின் தேவையை யாரும் கூறாமல் எவ்வாறு தெரிகின்றதோ அவ்வாறுதான் இந்த உதவியும் அமைகின்றது.

தற்போது கொரோனா காலமாக இருக்கலாம்.பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.இந்த நேரத்தில் குறித்த உதவி தக்க தருனத்தில் செய்ய வேண்டி உள்ளது.

இன்றைய நிகழ்வு ஒரு ஆரம்பமே.முதலீட்டிற்கும்,வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கும் குறிப்பாக மீனவ சமூகத்தின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

அவற்றை சமீப காலத்தில் நிறைவேற்ற இருக்கின்றோம். யாழ்ப்பாணம், கிளிநொச்சி,மன்னார் ஆகிய மாவட்டங்களில் குறித்த உதவியை மீனவ சமூகத்திற்கு வழங்கி உள்ளோம்.இதே போன்று முல்லைத்தீவிலும் வழங்க உள்ளோம்.எமது கருத்துக்கள் மேடைப் பேச்சாக இருக்காது.

எமக்கு பக்க பலமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருக்கின்றார். அவருக்கும்  நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் திணைக்கள தலைவர்கள்,மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள்,மீனவர்கள்” என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1272215

  • கருத்துக்கள உறவுகள்

அழகு .. அழகு சாதனம்ங்கள் எல்லாம் ஒருபுறம் கிடக்கட்டும்.. முதல்ல அங்கால உள்ள மீனவர்களுக்கு GPRS கருவிய கொடும் ஐயா..

"ஒண்ணும் தெரியாத பாப்பா .. உள்ள போட்டாளாம் தாப்பா.. "

கணக்கா எல்லை தெரியல என்டு சீனை போடுவினம்..

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தமிழ் சிறி said:

ஒருவருக்கு கஷ்டம் வருகின்ற போது யார் வந்து தக்க தருனத்தில் உதவிகளை செய்கிறார்களோ அது தான் நட்புக்கு அழகு.

திருக்குறளை நன்றாக மனனம் செய்துகொண்டு வந்து ஒப்புவிக்கிறார். வயிற்றிலே அடிப்பினமாம் பிறகு கஸ்ரம், நட்பு, உதவி என்று கட்டுப் போடுவினமாம். உந்த நடிப்புக்கு ஒன்றும் பஞ்சமில்லை. எங்கே சீனன் உதவி செய்து தங்களுக்கு எதிராய் வந்துவிடுமோ என்று, உந்த கஸ்ரம்  நட்பு என்று பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கொண்டு துடிக்க துடிக்க கொல்லும்போது உந்த நட்புக்கு என்ன நடந்தது? அது தூங்கியதோ? வயிற்றுப்பிள்ளை நழுவி விழ என்னமா உருகுகிறானுகள். மவனே நீ அனுபவிக்கும் காலம் தூரமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எமது எல்லைக்குள் வந்து மீன் பிடிக்காமல் விட்டாலே எமது மீனவர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

இலங்கைக்கான இந்திய துணை தூதுவர்

என்னப்பா பள்ளிக்கூட பொடியன் மாதிரி கிடக்கு? ☺️

Bild

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

என்னப்பா பள்ளிக்கூட பொடியன் மாதிரி கிடக்கு? 

நானுந்தான், மேலுள்ள படத்தை பாத்திட்டு யாரோ எ/ எல்  பொடியன் கவிதை வாசிக்கிறான் என்று நினைத்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.