Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது.😍

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

இதை கொஞ்சம் சரி பாருங்கள் ..
எமது பழைய கோவில்கள் எல்லாம் ஊரி கல்லினால் கட்டபட்டவை 
இவை மிகவும் பலமான கற்கள் எளிதில் உடைக்க முடியாதது 

கோட்டை கற்களை நான் பார்த்து இருக்கிறேன் 
அவை கருங்கல்லும் இல்லை ஊரி  கல்லும் இல்லை 

அவற்றை போன்ற கற்களை ஊர்வக்கற்துறை பகுதிகளில் பார்த்து இருக்கிறேன் 

வேறு பகுதிகளில் நான் கண்டதில்லை ... 
இதை ஏதும் ஆராய்ச்சி செய்து நான் எழுதவில்லை 
மேலோட்டொமாக பார்த்ததை மட்டுமே எழுதுகிறேன் 

கோட்டை இரு கட்டங்களில் கட்டப்பட்டது. முதலில் போத்துகேயர், பின்பு ஒல்லாந்தர் பெருபித்து (பெருமளவில் அகழி, மற்றும் அந்த 5 கோண மூலைகளில் உள்ள காப்பு, தூர பார்க்க கூடிய அரண்கள்).  

அனால், ராஜதானியை மற்றும் அனறைய நகரை  சுற்றி உள்ள கோயில்கள் உடைக்கப்பட்டன என்றே சந்ததி வழியாக சொல்லப்பட்டு வந்து இருக்கிறது.

எல்லா கோயில்களும் உடைக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

மற்றது, இது பின்பு நான் ஊகித்தது, கோயில்களில் தூண்கள் உருளை வடிவத்தில் இருந்தால், அவை ஒல்லாந்த காலத்திலேயே கட்டப்பட்டு இருக்க வேண்டும். உருளைத் தூண்கள் ஒல்லாந்த கட்டிட கலையின் சிறப்பு அம்சம். 

  • Replies 74
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆறுமுக சுவாமி வாசல் கோபுரத்திற்கு எதிர்புறமாக உள்ள காணியை வேலி போட்டு அடைத்து அந்த காணிக்கு ஒரு சிறிய கோபுரம் மாதிரி ஒன்றை கட்டியிருக்கிறார் போல நினைவு. இம்முறை போன பொழுதுதான் பார்த்தேன். 

அத்துடன் இந்த காணிக்கு ஒரு பக்கம் கோவில் வீதி.. மற்றைய பக்கத்தில் கட்டடங்கள் வந்துவிட்டது

E5-DB35-FB-8213-4498-B0-F7-A0-F803453429

பற்றை காட்டை அகற்றிவிட்டு பெரிய மரங்களை விட்டு இருக்கிறர்கள். கிணற்றையும் திருத்தி கட்டிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Maruthankerny said:

இதை கொஞ்சம் சரி பாருங்கள் ..
எமது பழைய கோவில்கள் எல்லாம் ஊரி கல்லினால் கட்டபட்டவை 
இவை மிகவும் பலமான கற்கள் எளிதில் உடைக்க முடியாதது 

கோட்டை கற்களை நான் பார்த்து இருக்கிறேன் 
அவை கருங்கல்லும் இல்லை ஊரி  கல்லும் இல்லை 

அவற்றை போன்ற கற்களை ஊர்வக்கற்துறை பகுதிகளில் பார்த்து இருக்கிறேன் 

வேறு பகுதிகளில் நான் கண்டதில்லை ... 
இதை ஏதும் ஆராய்ச்சி செய்து நான் எழுதவில்லை 
மேலோட்டொமாக பார்த்ததை மட்டுமே எழுதுகிறேன் 

 

அன்மையில்(2018 - 2019), கோட்டைக்குள் Prof. Coningham புதைபொருள் ஆராய்ச்சியின் போது, கல் விக்கிரங்கள் அகப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

வேறு எதாவது மறந்து விட்டேனோ தெரியாது. வேறு கதைகள் வரும் பொது, நினைவு வரலாம்.

நல்லூருக்கு ஒவொரு முக்கியமான விடயத்திடற்கும் ஒவ்வொரு பரம்பரை இருந்தது. யுத்தத்தால் சில மாறி விட்டது

தலைமை குருக்கள் சந்ததி, சந்ததியாக குமாரசாமி குருக்கள். யுத்தம், பொருளாதர மாற்றங்கள் இதை  மாற்றி விட்டது.

இவர்கள் இப்போதும் இருப்பது (குமாரசாமி குருக்கள் இயற்கை எய்தி விட்டார்), மந்திரிமனை காணிக்கு பக்கமாக, பின்புறமாக.

இந்த விடயங்களை தெரிந்ததிற்கான காரணம், எனது குடும்பத்தின் நல்லூர் தொடர்பும்.

எனது அப்பாவின் வழியும், அம்மாவின் வழியும் தான், நல்லூருக்கு கொடி  சீலை கொடுப்பது.

ரகுநாத மாப்பாண முதலியார் இப்போதுள்ள நல்லூரை கட்டிய போதும் ( பழைய நல்லூர் (நெல்லூர்) கோயில் இடிக்கப்பட்ட பின்,   அதாவது ஏறத்தாழ 100 வருடங்களுக்கு பின்பு), தொன்று தொட்டு வழங்கி வந்த மரபை மறக்கவில்லை, மறைக்கவில்லை.

இந்த கொடிசீலை வழங்குமாறு அழைக்கும் வைபவம், காளாஞ்சி கொடுப்பது என்று அழைக்கப்படும்.

இப்போதும், இது (காளாஞ்சி கொடுப்பது), தொன்று தொட்டு வழங்கி வந்த மாட்டு வண்டியில் சென்று கொடுக்கும் முறையிலேயே செய்யப்படுகிறது.

இப்பொது செய்வது, எனது அம்மம்மாவின், சகோதரரின் (அம்மம்மாவிலும் மூப்பு, அனால் அம்ம்மம்வை எனக்கு தெரியாது ஏனெனில் வருத்தத்தினால் இறந்துவிட்டார் இளவயதில் ,  அவரை எனக்கு நன்கு தெரியும்) மகனின் மகன், எனது ஆச்சியின் தங்கையின் மகனின் மகன்.   

இது இப்பொது தான் பகிரங்கமாக தெரிகிறது பலருக்கு, youtube ஆல். முன்பு, பொதுவாக இப்படி ஒரு வைபவம் நடப்பது பொதுவாக தெரியாது.   ஆனாலும், இதன் பின்னேயுள்ள வரலாறும், தாற்பரியம் தெரியாது.

முதியவர்கள் (ஒருவருமே இப்போது இல்லை) சொன்னது - ஆக குறைந்தது யாழ்ப்பாண இராச்சியம் நிறுவப்படத்தில் இருந்து அங்கு சந்ததியாக இருக்கிறோம்.

அனால், அவர்கள் சொல்லியது, அதற்கு முதலில் எமது சந்ததி அங்கு இருந்து இருக்க வேண்டும். அதன் (புராண) விளக்கத்தை பின்னு சொல்கிறேன்.

அதனால், அவர்கள் சொல்லியது அநேகமாக நடந்து இருக்க வேண்டும்.

இந்த காளாஞ்சி வைபவமும், கொடிச்சீலை கொடுக்கும் வைபவமும். முழுவதையும் பார்க்கவும். வேறு வேறான வருட வீடியோ, இரண்டாவதில், முழுமையாக இல்லை.

 

 

 

 

தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

@Kadancha, இந்த பரம்பரையினருக்கு இன்னொரு பெயரும் உள்ளதா? செங்குந்தா என்பதை விட? ஏனெனில் எனது தந்தை இந்த பகுதியில் உள்ளவர்களை வேறு பெயர் கொண்டு அழைப்பதாக முன்பு எங்களுக்கு கூறியிருந்தார். 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கோயிலில் ஓர் வழக்கம் இருந்தது.

அதாவது, வைரவர் மடைக்கு ஆடு வெட்டுவது. 

இதை சொன்னால் ஒருவரும் நம்ப மாட்டார்கள் இப்பொது. ஆனால், ஆடு வெட்டுவது நடந்தது. 

இதனுடன் தொடர்பு  பட்ட சுவாரசிய சம்பவம் ஒன்றும் நடந்தது. 

 ஆட்டு வெட்டுவதற்கு முதல் ஆட்டின் காதை  கூறி கத்தியால் கீறி, அந்த இரத்தம் வைரவர்  படையலுக்கு வைக்கப்படும்.      

வைரவர் மடை பூங்காவனத்துக்கு  அடுத்த நாள்.

ஆடு வெட்டுவதை நாவலர் வெகுவாக எதிர்த்தார். 

ஒருமுறை நாவலர், வைரவர் மடை நேரத்தில், ஆட்டுக்கு பதில் என்னை வெட்டுங்கள் என்று, வெட்டுபவர்களுக்கு குற்ற உணர்ச்சியை தூண்டும் வகையில் (இது வெட்டுவார்கள்  நினைத்தது), ஆட்டின் கதை கீறுவதை தடுக்க முற்பட, நாவலர் எதிரிபார்க்கவில்லை, வெட்டுபவர்களும் நாவலரை எதிர்ப்பார்கள் என்று.

வாக்குவாதம் முற்றி, வெட்டுவபவர்கள், சரி நாவலரை பிடி அவரின்  காதை  வெட்டுவோம் என்று  கத்தியை நாவலருக்கு நீட்ட, நாவலர் ஓடி விட்டார் என்று அந்த நேரதில் இருந்த பலருக்கு தெரிந்தும் பார்த்தும் இருந்தவர்கள் இருந்தார்கள் (இப்பொது ஒருவரும் இல்லை).

வெட்டுபசவர்கள்  சொன்னது, நாவலர் தன்னை காட்டி கதை விடுகிறார், நாவலரின் நடிப்பை உடைப்பதா ற்கே தாம் கத்தியை நீட்டியதாகவும், உண்மையில் நாவலரின் காதலி வெட்டும் எண்ணம் அவர்களுக்கு இருக்கவில்லை என்றும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டு இரத்தத்தோடு சம்பந்தப்பட்ட இன்னொரு நிகழ்வும் இருக்கிறது.       

நல்லூரில் ஆடு வெட்டுவதை  முன்பு அறிந்து இருந்தாலும் மறந்து விட்டேன், இதை இப்பொது உயிருடன் உள்ள மிகவும் வயதாபன ஒருவரின் கதைக்கும் போதே, மாவிளக்கு ஆட்டு இரத்தம் சம்பந்தமான கதை வந்து  நினைவு படுத்தினார்.

நல்லூரில்  அல்லது மிகவும் புராதன முருகன் கோயிலில் (இது எனது அம்மா சொன்னது அப்போது - முழுவதையும் வாசிக்கவும்) மாவிளக்கு போடும் போது குங்குமம் பூசியே  மாவிளக்கு ஏற்றப்படும். 

அநேகமாக நான் அம்மாவுடன் போவது மாவிளக்கு போடுவதற்கு (இப்பொது மாவிளக்கு ஏற்றுவதற்கு நல்லூர் கோயில் நிர்வாகம் அனுமதிக்கிறதா என்பது தெரியவில்லை) .

தேனும், நெய்யும், தினை மாவுன் கலந்து மாவிளக்குகளை  மெழுகி விட்டு குங்குமம் பூசும் விதத்தை காட்டி, என்னை மிகுதியான மாவிளக்குகளிற்கு குங்குமம் பூசி அடுக்கி வைக்குமாறு சொன்னார்.

நான் குங்குமம் பூசாமல் அடுக்க, ஒரு விதமான கடியும் தொனியில் சொல்லி, குங்குமம் பூசி அடுக்குமாறு சொன்னார்.

எல்லாம் முடிந்து நான்  கேட்டேன் ஏன் குங்குமம் பூச வேண்டும் என்று, எனது அம்மா (எனது அமம்மா அவரிடம் சொன்னதாக)  சொன்னது முருகனுக்கு தினையும் ஆட்டு இரத்தமும் கலந்த நைவேத்தியம் வைத்து வழிபாடு இருந்ததாக. அதை தொடரும் வழிக்கே, குங்குமம் மாவிளக்குக்கு பூசப்படுவதாக.

பல காலத்தின் பின்ப எனது அம்மா, சைவ சமயம் மற்றும் பொருள் சொல்வதில் ஆழமாக ஈடுபட்ட பொது, ஒருமுறை திருமுரு காற்றுப் படையில் எனது அம்மா கண்டதை வாசித்த காட்டினார். திருமுருகாற்றுப் படையில் இருக்கிறது முருகனை வழிபட ஆடு இரத்தமும் தினையும் கலந்த நைவேத்தியம் வைத்து வழிபாடும் முறை. எனது அம்மா சொன்னது, வாய் வழியாக வழங்கி வந்த கதை உண்மையாகத் தன் இருக்க வேண்டும்.

அதனால், ஆடு வெட்டுவது முருக வழிபாட்டில் அநேகமாக இருந்து இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், இன்னொன்றையும் மறந்து விட்டேன். தாய் முன்பே சொல்லி இருந்தால் ஓர் தொடர்ச்சி இருக்கும்.

செம்மணியில் உள்ள வயல்கள் இப்போது தனியார் கையில் உள்ளதாயினும், முழு வயல்களுமே ஏதொ ஓர் கோயிலிலுக்கு சொந்தமாக இருந்து இருக்க வேண்டும். அநேகமாக அவை சிவன் கோயில்களாக இருந்து இருக்கும்.

இப்போதும் செம்மணிடயில் உள்ள வயல்களில் ஓர் பகுதி சட்ட நாதர் கோயிளுக்கும், வண்ணை வைதீஸ்வரன் கோயிலுக்கும் முதல் விளைச்சல் அனுப்புகிறார்கள் என்று நினைக்கிறன்.

அனால், செம்மணியில் உள்ள வயகல்ளில்  ஓர் பகுதி சிதம்பரம் கோயிலுக்கும் விளைச்சல் அனுப்பியதாக அப்போது இருந்த எனது பல முதுமையானவர்கள் சொல்லி அறிந்து இருக்கிறேன். - 1960 மற்றும் 70 தொடக்கம் வரை இது நடந்து இருக்க வேண்டும். பின்பு, பணம் கொடுத்ததாக. அதுவும் நின்று இருக்கும் என்று நினைக்கிறன். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kadancha said:

ஆம், இன்னொன்றையும் மறந்து விட்டேன். தாய் முன்பே சொல்லி இருந்தால் ஓர் தொடர்ச்சி இருக்கும்.

செம்மணியில் உள்ள வயல்கள் இப்போது தனியார் கையில் உள்ளதாயினும், முழு வயல்களுமே ஏதொ ஓர் கோயிலிலுக்கு சொந்தமாக இருந்து இருக்க வேண்டும். அநேகமாக அவை சிவன் கோயில்களாக இருந்து இருக்கும்.

இப்போதும் செம்மணிடயில் உள்ள வயல்களில் ஓர் பகுதி சட்ட நாதர் கோயிளுக்கும், வண்ணை வைதீஸ்வரன் கோயிலுக்கும் முதல் விளைச்சல் அனுப்புகிறார்கள் என்று நினைக்கிறன்.

அனால், செம்மணியில் உள்ள வயகல்ளில்  ஓர் பகுதி சிதம்பரம் கோயிலுக்கும் விளைச்சல் அனுப்பியதாக அப்போது இருந்த எனது பல முதுமையானவர்கள் சொல்லி அறிந்து இருக்கிறேன். - 1960 மற்றும் 70 தொடக்கம் வரை இது நடந்து இருக்க வேண்டும். பின்பு, பணம் கொடுத்ததாக. அதுவும் நின்று இருக்கும் என்று நினைக்கிறன். 

கந்தர்மடத்தில் உள்ள சில காணிகள் சிதம்பரம் கோயிலுக்கும்,
வேறு ஒரு பகுதி காணிகள் நல்லூர் சிவன் கோவிலுக்கும் சொந்தமானது என்று…
எனது பாட்டி சொன்னது நல்ல நினைவில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

கந்தர்மடத்தில் உள்ள சில காணிகள் சிதம்பரம் கோயிலுக்கும்,
வேறு ஒரு பகுதி காணிகள் நல்லூர் சிவன் கோவிலுக்கும் சொந்தமானது என்று…
எனது பாட்டி சொன்னது நல்ல நினைவில் உள்ளது.

அது பாட்டி காலத்தில்....  இந்தியா, இலங்கை எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரே ராசா, ராணி கீழ் இருந்ததால் சாத்தியம் ஆகி இருந்தது. சுதந்திரத்தின் பின், வேறு, வேறு நாடுகள் ஆகியவுடன் அந்தந்த கோவில்களின், இலங்கையில் இருந்த முகவர்கள் சட்ட வலு இல்லாமல் ஆகியதால், இருந்தவர்கள், 10 வருசம் வாடகை செலுத்தாமல் அல்லது கோரப்படாமல் இருந்தால், அவ் ஆதனம் அவர்களுக்கே சொந்தம் என்ற தொடர்ந்து இலங்கை சட்டத்தில் இருந்த அதே பிரிட்டிஷ் சட்டத்தின் படி, சொந்தமாகியது.

சிவபெருமான், பேரருளுடன் அருளியது என்று ஸ்வாகா பண்ணியது.....  😇

பிள்ளைகள் இல்லாதவர்கள், குறிப்பாக, இந்தியாவில் உள்ள சிவன் கோவில்களுக்கு எழுதி வைத்தது.

இப்படி தான், நல்லூர் ஆறுமுகநாவலர், தமிழகத்தில், சிதம்பரம் கோவில் அருகே, வாங்கி, நிர்மாணித்து, நடாத்திய, நாவலர் யாத்திரிகள் மடம் உள்ளது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

அது பாட்டி காலத்தில்....  இந்தியா, இலங்கை எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரே ராசா, ராணி கீழ் இருந்ததால் சாத்தியம் ஆகி இருந்தது. சுதந்திரத்தின் பின், வேறு, வேறு நாடுகள் ஆகியவுடன் அந்தந்த கோவில்களின், இலங்கையில் இருந்த முகவர்கள் சட்ட வலு இல்லாமல் ஆகியதால், இருந்தவர்கள், 10 வருசம் வாடகை செலுத்தாமல் அல்லது கோரப்படாமல் இருந்தால், அவ் ஆதனம் அவர்களுக்கே சொந்தம் என்ற தொடர்ந்து இலங்கை சட்டத்தில் இருந்த அதே பிரிட்டிஷ் சட்டத்தின் படி, சொந்தமாகியது.

சிவபெருமான், பேரருளுடன் அருளியது என்று ஸ்வாகா பண்ணியது.....  😇

பிள்ளைகள் இல்லாதவர்கள், குறிப்பாக, இந்தியாவில் உள்ள சிவன் கோவில்களுக்கு எழுதி வைத்தது.

இப்படி தான், நல்லூர் ஆறுமுகநாவலர், தமிழகத்தில், சிதம்பரம் கோவில் அருகே, வாங்கி, நிர்மாணித்து, நடாத்திய, நாவலர் யாத்திரிகள் மடம் உள்ளது.

இப்ப சிதம்பரம் தில்லை நடராஜப்  பெருமானே....
தன்ரை காணியை, திரும்ப  தரச் சொல்லி கேட்டால், 
வாள் வெட்டுத்தான்  விழும்.   🤣

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

இப்ப சிதம்பரம் தில்லை நடராஜப்  பெருமானே....
தன்ரை காணியை, திரும்ப  தரச் சொல்லி கேட்டால், 
வாள் வெட்டுத்தான்  விழும்.   🤣

வரட்டும், வரட்டும். துன்னூறு வாங்கிப் பூசிக்கொண்டு.... காணியை கொடுத்திரலாம்.... என்ன வெவசாயம் செய்யப்போறீங்கோ சாமி எண்டு விசாரிச்சிரிலாம்... 😁

  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2022 at 17:09, Nathamuni said:

பிள்ளைகள் இல்லாதவர்கள், குறிப்பாக, இந்தியாவில் உள்ள சிவன் கோவில்களுக்கு எழுதி வைத்தது.

 

போத்துக்கேயருக்கு பின்பே, இப்படி எழுதி கொடுத்தது சரியாக இருக்கும்.

அனால், நீங்கள் சொன்னது நல்லம், ஏனெனில், பல கிளை  கதைகள் எனது நினைவுக்கு வருகிறது. 

முழு இராச்சியமுமே (சைவ) சமயம் மற்றும் கோயில்களின் சொத்தாக இருந்தது என்றும் . இராச்சியம் கோயில் மற்றும் மதத்தின் பாதுகாவர் என்றே நிலையில், காணிகளை உரிமம் மாற்றம் செய்யும் உரிமை சமயத்தின் பெயராலேயே இராச்சியத்துக்கு வந்தது என்றும்.  

ஏனெனில், பழைய நல்லூர் (நெல்லூர்) கோயில் இருந்த இடத்தில, இப்பொது St James  Church இருக்கும் இடத்தில் ஓர் உரிமம் பிரச்னை இருக்கிறது. அரசி வேதத்துக்கு மாறிய    பின் Church கட்டுவதற்கு கொடுத்ததாக. அனால், மாறியதும்    காணி உரிமம் மாற்றம் செய்யும் உரிமையை அரசி இழந்து விட்டதாகவும், அதனால், St James Church க்கு அந்த காணி உரிமம் இல்லை என்றும். இதை எனது முதியவர்கள், அவர்களுக்கும் வாய்வழியாக சொல்லப்பட்டு வந்துள்ளது.  

அனால், போத்துக்கேயர் ஆட்சியில் கத்தோலிக்கத்துக்கு மாறியவர்கள் அனைவர்க்கும் இது பொருந்தும்.

ஏனெனில், அவர்களின் காணி, அவர்களுக்கு இராச்சியதால் வழங்கப்பட்டு இருந்தால், அது அவர்கள் சைவ சமயத்தினர் என்ற அடிப்படையிலேயே காணி உரிமம் கொடுக்கப்பட்டு இருந்து  இருக்க வேண்டும்.


அனால் சங்கிலி மதம் மாறவில்லை என்றும்,போத்துக்கேயர், அரசிக்கு , காணியை தந்தால் சங்கிலியை உயிருடன் விடுவதாக சொல்லி, காணியை அரசி எழுதிய பின், அரசியை ஏமாற்றி சங்கிலியை சிரச்சேதம்  செய்தது  நடந்தது என்றும்  ஓர் வாய் வழி கதை இருக்கிறது.

அனால், போத்துகேய வரதலற்று குறிப்புகள் சொல்கிறது, சிரப் சேதத்தை போது, சங்கிலி, அரசனகா இருப்பதை காட்டிலும் இயேசுவின் கூலியாக சாவதே மேல் என்று சொல்லியே சிரச்சேதத்தை  வாங்கியதாகவும் (இது பின்பு அறிந்தது, இது வாய்வழி கதை இல்லை).

இது உண்மையாக இருப்பதற்கு இடம் இருக்கிறது, மன்னாரில் நடந்ததை வைத்து பார்த்தால். 

இதுவரையும், மன்னாரில் சங்கிலியன் (இது சங்கிலியன் 1, செகராசசேகரம்) மதம் மாறியோரை சிரச்சேதம் செய்ததாக. அவரது மகனும் கத்தோலிக்கத்துக்கு மாறியதால் மனையும் சங்கிலியன் சிரப் சேதம் செய்ததாகவுமே (போத்துகேய) குறிப்புகள் இருக்கிறது. 

அனால், போத்துக்கேயேரே அங்கு இருந்தவர்களை Church கட்டுவதற்கு  அத்திவாரத்துக்கு பலியாக இடுவதற்கு  சிரச் சேதம் செய்ததாக, ஏனெனில், அவர்கள் போத்துக்கேயரை எதிர்த்ததால். சங்கிகிலியன் முதலில் மகனை அனுப்பியதாகவும், போத்துக்கேயர் மகனை உள்வீட்டு சூழ்ச்சியால் பிடித்து கொன்று  விட்டு, சங்கிலியன் மீது பழியை போட்டு விட்டார்கள் என்றும் கதை இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

கந்தர்மடம்  என்ற பெயரிலேயே தெரிகிறது அது சைவ சமயம் மற்றும் கோயிகளுடன் தொடர்புபட்ட இடம் என்று. 

  • கருத்துக்கள உறவுகள்

இது எனது அவதானமும் முடிவும், போத்துகேய குறிப்புகள் சொல்வது பொய் அல்லது திரிபு என்று.

போத்துக்கேய குறிப்பு சொல்வது, சங்கிலியனுக்கான சிரச்சேதம், மன்னாரில் கத்தோலிக்கத்துக்கு மாறியவர்களை சங்கிலியன் செய்ததன் காரணமாக.

அது நடந்த போது ஆட்சியில் இருந்தது (மன்னாரில் கத்தோலிக்கத்துக்கு மாறியவர்களை சங்கிலியன்) , சங்கிலியன் 1 (செகராசசேகரம்).  

அனால் போத்துக்கேயர் பிடித்தது சங்கிலி (சங்கிலி குமாரன்), அவரை சங்கிலியன் 2 என்று இப்பொது அழைக்கும் வழக்கம் வந்து விட்டது.

போத்துக்கேயர் சங்கிலிக்கு (சங்கிலி குமாரன்) சிரச் சேதம் செய்தது, சங்கிலியன் 1 ((செகராசசேகரம்) ஆல்  மன்னாரில் கத்தோலிக்கத்துக்கு மாறியவர்களை சிரப் சேதம் செய்ததுக்கு என்பதி பொய்யாக, திரிப்பாக உள்ளது.

இதில் எனது உறவினர்களும், சங்கிலியின் படையினராக,  குடும்பம், குடும்பமாக அழிக்கப்பட்டு இருப்பார்கள் என்று நம்புகிறேன். முதியவர்களும் அது நடந்து இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஏனென்றால், போத்துக்கேயர் எதிர்த்தவர்களை, அரசோடு நின்றவர்களை,   தொடர்பு உள்ளவர்களை, ஏன் அவர்களது சட்டங்களை மீறியவர்களை  குடும்பம் குடும்பமாகவே அழித்தனர். அதனால், தெளிவான தொடர்பு இல்லாமல் இருக்கிறது. 

அனால், வரலாறு எச்சங்கள் இருக்கும். இந்த எச்சம் இப்பொதும்  தொடர்வது, நல்லூர் சூரன் போரில்.  

  • கருத்துக்கள உறவுகள்

முந்தைய பதிவில் சொன்ன வரலாற்று எச்சம் பற்றி  சொல்லுவதற்கு காரணம், இப்போதுள்ள நல்லூரை 1700 களில், ஒல்லாந்த ஆட்சியில், மீண்டும் கட்டும் போது, இந்த இரண்டும், கொடி சீலை வழங்குதல் (முன்னைய பதிவுகளில் youtube இணைப்பு), மற்றது  சூரன் போரில் முடி வீரர்களாக (நவ வீரர்களை) பிரதிநிதிப்பதும் நினைவு (இதை ஓரளவு விளக்குகிறேன்) மீண்டும் முக்கிய (வரலாற்று நினைவு) சடங்குகளாக கட்டி எழுப்பப்பட்டது.

இதில்  கிளைக்  கதைகள்  உள்ளது நினைவு வந்ததால் சொல்லிவிட்டு, மீண்டும் சூரன் போர், அதன் வரலாற்று முக்கியத்துவம் பற்றி பார்க்கலாம்.  

உங்களுடைய கேள்விக்கு, வரலாற்று (புராண வரலாறு கூட) ஊடான பதிலாக அடுத்த 2-3 பதிவுகளில் இருக்கும்.

On 9/4/2022 at 15:35, பிரபா சிதம்பரநாதன் said:

@Kadancha, இந்த பரம்பரையினருக்கு இன்னொரு பெயரும் உள்ளதா? செங்குந்தா என்பதை விட? ஏனெனில் எனது தந்தை இந்த பகுதியில் உள்ளவர்களை வேறு பெயர் கொண்டு அழைப்பதாக முன்பு எங்களுக்கு கூறியிருந்தார். 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2022 at 15:35, பிரபா சிதம்பரநாதன் said:

@Kadancha, இந்த பரம்பரையினருக்கு இன்னொரு பெயரும் உள்ளதா? செங்குந்தா என்பதை விட? ஏனெனில் எனது தந்தை இந்த பகுதியில் உள்ளவர்களை வேறு பெயர் கொண்டு அழைப்பதாக முன்பு எங்களுக்கு கூறியிருந்தார். 

செங்குந்தர் என்பவர்கள் - ஒரு வகை சாதிய  பிரிப்பு என நினைக்கிறேன். நெசவு தொழில் செய்பவர்கள் - கைகுழவர் என்பது இன்னொரு பெயர் (சாதிய பெயர் தரவுக்காக மட்டுமே பயன்படுத்த பட்டுள்ளது). குல தெய்வம் முருகன்.

தமிழ் சாதியாக மட்டும் அல்லாமல் தெலுங்கு சாதியாகவும் செங்குத்த முதலியார் என்று உள்ளார்கள். அவர்கள் முருகனை செங்கல்வராயன் என்ஐழைப்பர்.

வீரவாகு, Singha bahu என்ற தமிழ், தெலுங்கு, சிங்கள பெயர்கள் - இந்த சாதியினரின் என்கிறார்கள். 

பேரறிஞர் அண்ணா ஒரு வழியால் செங்குந்த முதலியார் என்பார்கள். 

யாழில் முன்னர் ஓடிய பல “தெலுங்கு” திரிகளில் ஒன்றில் இவை குறித்து சிலாகிக்கபட்ட நியாபகம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் கிளளைக் கதைகள், விட்டால்  மறந்து விடுவேன்.

இப்போதுள்ள நல்லூர் தேரில் பீடத்தின்  (உள்ளே) , போத்துக்கேயருக்கு முன்பு இருந்த தேரில் இருந்த பெரும் மரத் துண்டு ஓன்று இருப்பதாக ஓர் கதை இருக்கிறது.

அதை போத்துக்கேயரிடம் இருந்து மறைத்து, நல்லூரை மீண்டும் கட்டும் போது கொடுத்தது, இப்பொது  கொடி  வழங்குபவரின் (அதாவது இப்பொது சிறிய தேர் வைத்து கொடியை நல்லூருக்கு கொண்டு வருபவர்கள் (youtube இல் இருப்பது), அதாவது எனது அம்மாவின் வழி) முனைய சந்ததி.

இப்போதுள்ள, கொடி கொண்டு செல்லப்படும்  சிறிய  தேர் (youtube இல் இருப்பது), போத்துக்கேயருக்கு முன்பு இருந்த தேரின் அழிவு எச்சத்தை மறைத்து, பாதுகாத்து, அந்த எச்சங்களை அடி பீடத்தில் உள்ளே  வைத்து கட்டப்பட்டதாக.

இதை, எனது அம்மம்மாவின் சகோதரரும் அவ்வப்போது சொல்லி இருக்கிறார்.

இரண்டுமே, நடந்து இருக்கலாம். பெரிய மரப்பகுதியை பகுதியை நல்லூர் மீண்டும் கட்டப்படும் போது  (இப்போதுள்ள) நல்லோர் தேருக்கு கொடுத்து விட்டு, மிகுதி  பகுதிகளை கொண்டு கொடி கொண்டு செல்லப்படும் (அவர்களின்) தேரை கட்டி இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2022 at 08:18, goshan_che said:

செங்குந்தர் என்பவர்கள் - ஒரு வகை சாதிய  பிரிப்பு என நினைக்கிறேன். நெசவு தொழில் செய்பவர்கள் - கைகுழவர் என்பது இன்னொரு பெயர் (சாதிய பெயர் தரவுக்காக மட்டுமே பயன்படுத்த பட்டுள்ளது). குல தெய்வம் முருகன்.

தமிழ் சாதியாக மட்டும் அல்லாமல் தெலுங்கு சாதியாகவும் செங்குத்த முதலியார் என்று உள்ளார்கள். அவர்கள் முருகனை செங்கல்வராயன் என்ஐழைப்பர்.

வீரவாகு, Singha bahu என்ற தமிழ், தெலுங்கு, சிங்கள பெயர்கள் - இந்த சாதியினரின் என்கிறார்கள். 

பேரறிஞர் அண்ணா ஒரு வழியால் செங்குந்த முதலியார் என்பார்கள். 

யாழில் முன்னர் ஓடிய பல “தெலுங்கு” திரிகளில் ஒன்றில் இவை குறித்து சிலாகிக்கபட்ட நியாபகம்.

 

கைகுழவர்.. அப்படித்தான் இருக்கவேண்டும் என நினைக்கிறேன். ஏன் அப்படி அழைக்கிறார்கள் என சரியாக தெரியாது. ஆனால் அவர்களில் அனேகமானோர் சைவர்கள். 

ம்ம்ம.. வீரவாகு என்ற பெயர் இந்த மரபினரை குறிக்கலாம் என இன்றுதான் அறிந்தேன்.. 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2022 at 15:41, பிரபா சிதம்பரநாதன் said:

வீரவாகு என்ற பெயர் இந்த மரபினரை குறிக்கலாம் என இன்றுதான் அறிந்தேன்.. 

 

நேரம் கிடைத்தமையால், மீண்டும் பதிய ஆரம்பிக்கிறேன். ஏதாவது, கேள்விகள் இருந்தால் முடியும் வரை பொறுக்கவும். 

முதலில் சில குறிப்புகள்.

1) சாதி பற்றி கதைக்க வேண்டி வரும் - வரலாற்றுக்குக்காக. அதனால், வாசிக்கும் எவரினதும் சாதிகள் பாதிக்கப்படும் ஆயின், அது வரலாற்றில் நடந்தது, நான் அறிந்த படி இங்கு பதிவது (குறிப்பு: என்னுடைய முதியவர்கள் எவருமே எந்த   சாதிகளை தாழ்த்தி சொன்னதாக என்னிடம் நினைவு இல்லை).

2) சிங்களவரில்  இருப்பவர்கள் பற்றி, அது பிறிம்பாக பாராக்கப்பட வேண்டும். ஆனாலும், இந்த பதிவின் முடிவில் அதற்கு சாத்தியக் கூறுகள்  இருக்கமுடியாது என்பது  தெரிய வேண்டி வரும்.  (குறிப்பு: எப்படி நிறத்தை வைத்து race, இனம் பற்றி சொல்ல முடியாதோ, அப்படியே பெயரை வைத்து குறிப்பிட்டவரக்ள்  இந்த குழுமத்தை சேர்த்தவர்கள் என்று சொல்ல முடியாது - இது வெளிப்படை).

3)  முதியோர் முன்பு சொன்னதையும் (அதாவது, 80, 90 களில், எனது அம்மா,அப்பாவுக்கு (பிறந்தது 1925) அவர்களின் முதியவர்கள் சொல்லியாது என்று சொல்லி  எனது அம்மா, அப்பா சொல்லியது), மற்றும்  இப்பொது உயிரோடு உள்ள முதியவரக்ள் சொல்வதையும் பதிகிறேன்.

4) நான் தேடி அறிந்தவைகள்.

தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kadancha said:

நேரம் கிடைத்தமையால், மீண்டும் பதிய ஆரம்பிக்கிறேன். ஏதாவது, கேள்விகள் இருந்தால் முடியும் வரை பொறுக்கவும்.

ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்கள் இவற்றை எழுதுவதே மகிழ்ச்சியான ஒரு விடயம். 

நன்றி கடஞ்சா!!

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kadancha said:

தொடரும்

தொடருங்கள் .அறிய ஆவலாக உள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2022 at 10:41, பிரபா சிதம்பரநாதன் said:

கைகுழவர்.. அப்படித்தான் இருக்கவேண்டும் என நினைக்கிறேன். ஏன் அப்படி அழைக்கிறார்கள் என சரியாக தெரியாது. ஆனால் அவர்களில் அனேகமானோர் சைவர்கள். 

கல்வியன்காட்டு பகுதியில் இந்த சாதியினர் இப்போதும் இருக்கிறார்கள்.

கல்வியன்காட்டு சந்தையை முன்னர் கைக்குழ சந்தையென்றும் அழைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எல்லோரிடமும் ஓர் கேள்வி. 

நீந்கள் ஒரு போதுமே உங்கள் முதியவர்கள், அம்மா, அப்பா, உறவினர்கள் என்று எவரிடமும் குறிப்பிட்ட இடத்தில் எள்ளளவு காலம் இருக்கிறோம்,  எப்படி வந்தோம், தனிப்பட்ட முறையில் நீங்கள் யார் (முனைய சந்ததி) என்று கேள்வி கேட்கவில்லையா நீங்கள் விபரம் அறிந்த  நாட்களில் இருந்து ( 8 - 10 வயதில் இருந்து).

முதியவர்கள், உறவினர்கள், அம்மா, அப்பா சொன்னது எல்லாம், கூப்பிட்டு வைத்து இது தான் வரலாறு என்று  சொல்லியது இல்லை. நான் அறிந்தது, அவ்வப்போது கதைக்கும்  போது வரும்.

எனது நினைவு, 6-7 வயதில். அது, ஒருமுறை எனது சகோதரங்கள் என்னத்த தூண்டுவதற்காக நாம் இருந்த வீட்டில் உனக்கு தரமுடியாது என்று  பகிடி பண்ணி, இது யாரின் வீடு என்று நான் கேட்க, அது எனது, அம்மம்மாவின் முன்னைய சந்ததி வீடு என்று எனது  ஓர் மூத்த சகோதரம் சொல்ல, அதில் சண்டையும் வந்து, பின் அதில் இருந்து ஆரம்பித்தது.    

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

 

முதலில் எல்லோரிடமும் ஓர் கேள்வி. 

நீந்கள் ஒரு போதுமே உங்கள் முதியவர்கள், அம்மா, அப்பா, உறவினர்கள் என்று எவரிடமும் குறிப்பிட்ட இடத்தில் எள்ளளவு காலம் இருக்கிறோம்,  எப்படி வந்தோம், தனிப்பட்ட முறையில் நீங்கள் யார் (முனைய சந்ததி) என்று கேள்வி கேட்கவில்லையா

 

பெரும்பாலும் எல்லோருமே இந்த கேள்வியை கேட்டிருப்பார்கள் என்றுதான் நம்புகிறேன்.. ஆனால் முன்னைய சந்ததியில் எந்த காலம் வரை (great great great grandparents) என்பது அவரவருக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பொறுத்தே அமையும் என நினைக்கின்றேன்..

என்னைப் பொறுத்த வரையில் எனது அப்பு/அம்மம்மா(அம்மா வழி)யிடம் இருந்து அவர்களது முன்னைய சந்ததியைப் பற்றி அறிந்தாலும் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் போக முடியவில்லை. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.