Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்புத்துறைமுகம் மீதான அமெரிக்காவின் நாட்டத்தை மறைமுகமாக வெளிப்படுத்தினார் விக்டோரியா நூலண்ட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)

இலங்கைக்கு வருகைதந்திருந்த அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நூலண்ட், நாட்டின் சிவில் சமூகப்பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்துகொண்டதுடன் இதன்போது கொழும்புத்துறைமுகத்தின்மீது அமெரிக்கா கொண்டிருக்கக்கூடிய நாட்டத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நூலண்ட் தலைமையில் பாதுகாப்புக் கொள்கைகளுக்கான துணைச்செயலர் அமன்டா ஜே டொரி மற்றும் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் டொனால்ட் லூ உள்ளிட்ட மூவரடங்கிய உயர்மட்ட இராஜதந்திரிகள் குழு கடந்த செவ்வாய்கிழமை இலங்கையை வந்தடைந்தது.

Image

நாட்டை வந்தடைந்த அமெரிக்க இராஜதந்திரிகள் குழு புதன்கிழமை (23) இலங்கையிலுள்ள சிவில் சமூகப்பிரதிநிதிகளுடன் சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்தது. 

இச்சந்திப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களான கலாநிதி ஜெஹான் பெரேரா, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, ரூகி பெர்னாண்டோ, ஹஷின், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இச்சந்திப்பின்போது பயங்கரவாதத்தடைச்சட்டம், காணாமல்போனோரின் குடும்பங்களின் தற்போதைய நிலை, சிங்கள பௌத்த தேசியவாதம், இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்த விக்டோரியா நூலண்ட வெறுமனே 24 மணிநேரம் மாத்திரமே நாட்டில் தங்கியிருந்தார். 

Image

இருப்பினும் அக்காலப்பகுதியில் அவர் கொழும்புத்துறைமுகத்திற்குச்சென்று அதனையும் பார்வையிட்டிருந்தார். சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது அவர் இதுகுறித்து பிரஸ்தாபித்ததுடன், அதன்மூலம் கொழும்புத்துறைமுகத்தின்மீது அமெரிக்கா கொண்டிருக்கக்கூடிய நாட்டத்தையும் மறைமுகமாக வெளிப்படுத்தினார்.

அதேவேளை இச்சந்திப்பின்போது பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் திருத்தங்கள் போதுமானவையல்ல என்றும் அச்சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும் என்றும் சில காட்டமான கருத்துக்களை சிவில் சமூகப்பிரதிநிதிகள் முன்வைத்தனர்.

அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டம் அரசாங்கத்தினால் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுகின்றமை குறித்தும் அண்மையில் அச்சட்டத்தின்கீழ் வடக்கைச்சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் தன்னிச்சையாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறித்தும் அவர்கள் விக்டோரியா நூலண்டிடம் எடுத்துக்கூறினர்.

அவற்றை செவிமடுத்த அவர், பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய மேலதிக திருத்தங்கள் என்னவென்று கேட்டறிந்துகொண்டார்.

அடுத்ததாக பொருட்களின் விலையதிகரிப்பு, அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாடு உள்ளடங்கலாக தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் சிவில் சமூகப்பிரதிநிதிகள் தெளிவுபடுத்தியதுடன் அரசாங்கத்தின்மீது மக்கள் வெறுப்படைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த ஒருசிலர், அரசாங்கத்தின் செயற்பாடுகள் இவ்வாறிருப்பினும் இன்னும் இருவருடகாலத்திற்கு இந்த அரசாங்கமே பதவியிலிருக்கப்போகின்றது என்றும் அதற்கான ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டினர்.

ஆகவே இந்த அரசாங்கம் சரியான பாதையில் செயற்படுவதற்கான அழுத்தத்தையும் பங்களிப்பையும் சிவில் சமூக அமைப்புக்கள் வழங்கவேண்டியது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

அத்தோடு அண்மையில் சிவில் சமூகப்பிரநிதிகளைச் சந்திப்பதற்கு வெளிவிவகார அமைச்சு அழைப்புவிடுத்திருந்தமை குறித்தும் அதன்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர உள்ளிட்டோரைச் சந்தித்துக் கலந்துரையாடும் வாய்ப்புக்கிட்டியமை குறித்தும் விக்டோரியா நூலண்ட் தலைமையிலான அமெரிக்க இராஜதந்திரிகளிடம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.

மேலும் அரசாங்கம் சர்வகட்சி மாநாட்டை நடத்தியமை வரவேற்கத்தக்க நகர்வென்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவேண்டும் என்று ஜனாதிபதி உண்மையிலேயே விரும்புகின்றமை வெளிப்படையாகத் தென்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர்கள், அம்மாநாட்டில் கடந்தகால அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்தமை குறித்து ஜனாதிபதி பகிரங்கமாக மன்னிப்புக்கோரியமையின் ஊடாக பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அனைவரினதும் பங்களிப்பைப்பெற அவர் எத்தனிப்பதைப் புரிந்துகொள்ளமுடிவதாகவும் குறிப்பிட்டனர்.

இச்சந்திப்பின்போது தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான நாட்டத்தைக் காண்பிக்காத அமெரிக்க இராஜதந்திரிகள், உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்கும் திட்டத்தை அரசாங்கம் கொண்டிருப்பது குறித்தும் சுட்டிக்காட்டினர். அத்தோடு பொருளாதார நெருக்கடிகளைக் கையாள்வதற்கு வழங்கவிருக்கும் நிதியுதவி உள்ளிட்ட விசேட உதவிகள் குறித்தும் அவர்கள் இதன்போது பிரஸ்தாபித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கொழும்புத்துறைமுகம் மீதான நாட்டத்தை மறைமுகமாக வெளிப்படுத்தினார் விக்டோரியா நூலண்ட் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

கொழும்புத்துறைமுகத்தின்மீது அமெரிக்கா கொண்டிருக்கக்கூடிய நாட்டத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

சீனாவினது கடல்நகரத்திட்டத்தையொட்டியதாகத் தமிழரை அழிக்க உதவிதற்கான பங்கை நேரடியாக் கேட்காம மறைமுகமாக் கேட்கிறாவாக்கும். ஆனா ஒருவித்தியாசம். இதை கோத்தாட்டை நேரடியாக் கேட்காம சுற்றிவளைச்சு மனித உரிமைக்காரற்ற சாட்சியோடை கேட்கிறா. தமிழினத்தையும் அவர்களது ஆயுதபலத்தையும் அழிக்க உதவியதை வைத்து இன்று நாட்டை மேற்கும் கிழக்குமாகப் பங்குபோடும் நிலை. இந்த அவலநிலையிலும் சிங்கள இனவாதத்தின் நீட்சி தொடர்கிறது. எரியும் வீட்டில் என்ன புடுங்கலாம் என்று அலைகிறது நாடுகள். தமிழரைத் தமது தலைவிதியைத் தீர்மானிக்க விடுவதன் ஊடாக சிங்களமும் தமிழும் தலைநிமிரமுடியுமென்பதை உணரமாட்டார்களளென்பதை உதய கமன்பிலவினுடைய கருத்து உணர்த்துகிறது. மொத்தத்தில் இருள்சூழ்நிலைதான் தொடரப்போகிறது. உலகவங்கியூடாக வளைத்துப்போடும் முடிவோடு மேற்குக் காய்களை(விக்டோரியா நூலண்ட்) நகர்த்துகிறது. அந்தத் திட்டத்தின் ஒருபகுதியாகக் கண்துடைப்பிற்கான சந்திப்பேயன்றிப் பெரிய மாற்றங்கள் நிகழவாய்ப்பில்லை. தமிழினத்தின் அமைதிவழிப்போராட்டங்களைத் தனிக்கும் உத்தியும் ஆகும். இவையெல்லாம் கோத்தாவின் ஒப்புதலோடு நடப்பதாகவே தோன்றுகிறது. ஒரு கட்டத்தின் பின் இலங்கைத் தீவானது இன்னொரு மியான்மாராகினாலும் ஆச்சரியப்படமுடியாது. 

நன்றி

Edited by nochchi
பிழைதிருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nochchi said:

இவையெல்லாம் கோத்தாவின் ஒப்புதலோடு நடப்பதாகவே தோன்றுகிறது

 

11 hours ago, பிழம்பு said:

அரசாங்கம் சர்வகட்சி மாநாட்டை நடத்தியமை வரவேற்கத்தக்க நகர்வென்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவேண்டும் என்று ஜனாதிபதி உண்மையிலேயே விரும்புகின்றமை வெளிப்படையாகத் தென்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர்கள்,

 

11 hours ago, பிழம்பு said:

இச்சந்திப்பின்போது பயங்கரவாதத்தடைச்சட்டம், காணாமல்போனோரின் குடும்பங்களின் தற்போதைய நிலை, சிங்கள பௌத்த தேசியவாதம், இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

ஆடு நனையுது என்று அழுததாம் ஓநாயொன்று! சீனா பெற்றதோடு போதுமாம், பக்கத்துவீட்டு அண்ணாவுக்கும் போதுமாம் கவனிப்பு மட்டும் தொடருமாம். இப்போ இவா, இன்னும் யார்யார் வரிசையில் காத்திருக்கிறார்களோ நுழைவதற்கு? ஆனால் சிங்களவனுக்கு மூழ்கும்வரை புத்திவராது.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பருத்தித்துறை துறைமுகம் சும்மாதானே கிடக்கு.....வேணுமெண்டால் எடுக்கட்டுமன் 😎

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

பருத்தித்துறை துறைமுகம் சும்மாதானே கிடக்கு.....வேணுமெண்டால் எடுக்கட்டுமன் 😎

பருத்துறைவடைக்கு அமெரிக்காவிலை மவுசென்றால், ஏற்றுமதி செய்யலாமென்றால்  சாத்தியமென்றுதான் நினைக்கிறன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.