Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடும்பி மலையொன்றும் கொடியவரின் சொத்தல்ல

Featured Replies

குடும்பி மலையொன்றும் கொடியவரின் சொத்தல்ல.

கனடாவிலிருந்து பவித்திரா-

குடும்பி மலையொன்றும் கொடியவரின் சொத்தல்ல.

கும்மாள மிட்டுக் கூக்குரலி டுதல்தான்

வடுவினை மறைக்க வலுவற்றோர் புரிகின்ற

வஞ்சனைச் செயல்களே வருத்தம் வேண்டாம்

படுகுழியிற் தாம்வீழ்ந்த பரிதாப நிலைதனை

பாரறியும் இழிவினை மறைத்திட வேண்டியே

சடுதியாய் வகுத்த சூழ்ச்சியில் நின்றுமே

தலைமைச் சிங்களம் தடுமாறி நிற்கிறது!

மலைகள் பாறைகள் மருவிய நீர்நிலைகள்

மலர்கள் மணம்வீசும் அடர்ந்த காடுகள்

கலைகள் கழனிகள் கலப்பை பிடித்துழும்

கண்ணியம் நிறைமாந்தர் கனிவுறை உழவர்

தலைவன் கொள்கையே தமக்கெனக் கொண்ட

தண்மைமிகு உளம்கொள் திராவிட மக்கள்

நிலைபெற்று நிமிர்வுடன் நேர்மையில் நின்று

நெடுங்காலம் வாழ்கின்ற நிலமன்றோ குடும்பிமலை!

விடுதலைப் புலிகளின் வீரத்தை மதிப்பிட

விண்ணுலகத் துறையும் தேவராலும் முடியாது

கடுகதி வாழ்வினில் உலகினை ஆளும்

காற்றினிற் சாய்ந்திடும் நாணல்களும் அறிந்திடார்

விடுதலைப் போரினை முன்னெ டுக்கின்ற

வேறெந்த அணியும் புரிந்திட மாட்டார்.

கெடுதிக்காய் ஆட்சிக் கட்டிலில் அமாந்த

கொடிய தலைமைக்கு எவ்வாறு முடியும்?

வெற்றி தமக்கென வெறிகொள் சிங்களம்

வீம்பு பேசி வீணே மகிழ்கிறது

கற்றனர் பாடங்கள் கடந்தகால வாழ்வினில்

கண்ணியம் தொலைத்த சந்திரிகா ஆட்சியில்

பற்றிய யாழ்ப்பாணம் தம்பக்கம் சாய்ந்ததெனப்

பெரிதாய் விழாக்கள் பற்பல கொண்டாடி

நெற்றியடி வாங்கி நிலைதனை உணர்ந்தனர்

நெருக்கடியில் இந்தியரின் உதவியை நாடினர்.

மரபுவழிப் போரினை மாண்புடன் புரிந்த

மட்டக் களப்பினில் மன்புகழ் தீரர்

கரந்தடி முறைதனிற் களத்தினை இயக்கக்

குடும்பிமலை விலகல் கைகொடுத்து நிற்கிறது

சிரமம் பலவின்றிச் செருக்குறு சிங்களத்தைச்

சுற்றிநின்று சீர்குலைத்துச் சிறைப்படுத்தி யவர்

பரப்புரை கள்தம்மைப் பொய்யுரை களாக்கிப்

பாரெங்கும் அறிந்து உணர்ந்திடச் செய்வர்.

தானைத் தலைவனின் எண்ணங்கள் ஒருபோதும்

தப்பாது அவர்தம் எதிர்வுகள் தோற்காது

சேனைகள் சிந்திய குருதியின் சுவடுகள்

சீர்மிகு ஈழத்தில் உலர்ந்திட முன்னரே

வானரங்கள் தொலைத்து விடியலங்கு பிறக்கும்

வண்ணத் தமிழீழம் மலர்ந்து வாழ்வளிக்கும்

மானமிகு மாவீரா மழையென இறங்கி

மலர்தூவி வாழ்த்தி மறுபடியும் பிறப்பர்.

வானலையில் வந்துசெல்லும் வளர்மிகு உறவினரே!

வாயாரக் கருத்துரைக்கும் ஆய்வா ளர்களே!

ஆனமட்டும் விடயங்கள் ஆராய்ந்து பொருளறிந்து

அளவோடு உரைத்திடுவீர்! அவசர முடிவெதற்கு?

தேனகம் நமக்கேதான் தடுமாற்றம் நீங்கிடுவீர்!

தோல்வியும் எமக்கல்ல தோற்றமும் நிலையல்ல

ஈனமிகு உள்ளத்தில் இசைவிலா மொழிபகர்

இழிநிலைச் சிங்களத்தின் இடர்பகை உணர்ந்திடுவீர்!

அன்பார்ந்த தமிழினமே! ஆணித் தரமாய்

ஆன்றவெம் தமழீழம் மலரும் என்கின்ற

இன்னுயிர் எண்ணத்தை என்றும் நெஞ்சத்தில்

இருத்தி நாளும் இறைவனை வணங்கித்

தன்வாழ்வை எமக்காய்க் கொடையாய் ஈய்ந்த

தங்கத் தலைவனுடன் போராளி களில்

நன்றென நம்பிக்கை நலமே வைப்பீh!

நாளையே நம்மீழம் மலருமெனக் கொள்வீர்!

பவித்திராவின் மரபுக் கவிதைகள் வாசிப்பதற்கு மிக நன்றாக இருக்கும்.

வானலையில் வந்துசெல்லும் வளர்மிகு உறவினரே!

வாயாரக் கருத்துரைக்கும் ஆய்வா ளர்களே!

ஆனமட்டும் விடயங்கள் ஆராய்ந்து பொருளறிந்து

அளவோடு உரைத்திடுவீர்! அவசர முடிவெதற்கு?

தேனகம் நமக்கேதான் தடுமாற்றம் நீங்கிடுவீர்!

தோல்வியும் எமக்கல்ல தோற்றமும் நிலையல்ல

ஈனமிகு உள்ளத்தில் இசைவிலா மொழிபகர்

இழிநிலைச் சிங்களத்தின் இடர்பகை உணர்ந்திடுவீர்!

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் தான் கவிதை எழுதிட்டாரோ எண்டு ஓடோடி வந்து பார்த்தால்..............

ஆனாலும் அழகான கவிதை ஒன்று சுவைத்ததில் ஆனந்தம்.

நல்ல ஒரு கவிதை குடும்பிமலை மீண்டும் எங்கள் கையில் வரும் அப்போதும் எழுதுங்கள் எங்கள் வீரர்களை வாழ்த்தி............................

அழகான கவியை இணைத்த மோகண் அண்ணாவிற்கு நன்றிகள்........... :o

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகளில் பவித்திராவின் கவிதை கொஞ்சம் வித்தியசமானதாகும்..இதன் தரத்தை அறிந்து யாழில் பதிவுசெய்த மோகனுக்கு நன்றி...

சமகால நிகழ்வுக்கவிதை இணைத்த மோகன் அண்ணாவுக்கு நன்றி

இணைப்பிற்கு நன்றி மோகன் அண்ணா

வடுவினை மறைக்க வலுவற்றோர் புரிகின்ற

வஞ்சனைச்செயல்களே வருந்த வேண்டாம்

அற்புதமான உண்மை வரிகள்

பவித்திராவிற்கு எனது மனதார்ந்த வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதையை பிரசவித்த பவித்திராவுக்கும் அதை பத்திரமாக இங்கு எடுத்துவந்த மோகன் ஐயாவுக்கும் நன்றிகளுடன் வாழ்த்துக்களும் உரித்தாகுக.இலக்கியன் கூறிய மாதிரி நல்லதொரு சமகாலக்கவிதை B)

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி

இணைப்பிற்கு நன்றி....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.