Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நேற்றய போராட்டத்தின் பின்னணியில் கடும்போக்குவாதிகள் செயற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றய போராட்டத்தின் பின்னணியில் கடும்போக்குவாதிகள் செயற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

நேற்றிரவு வியாழக்கிழமை இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நுகோகொடை, ஜூபிலிகனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் திட்டமிட்ட கடும்போக்குவாதிகள் வன்முறைகளைத் தூண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இரும்புக் ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு, மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலவரக்காரர்கள் திட்டமிட்ட வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தியுள்ளமை கைது செய்யப்பட்ட நபர்கள் மூலம் தெரியவந்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம் என கோசமிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.(15)

 

http://www.samakalam.com/நேற்றய-போராட்டத்தின்-பின/

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம் என கோசமிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உல‌மா க‌ட்சி தலைவர் விடுத்துள்ள கோரிக்கை!

முஸ்லீம்களை சாட்டி... தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

ஜனாதிபதிக்கும், சிங்கள அரசுக்கும் முட்டுக் கொடுக்கும் 
உல‌மா க‌ட்சி தலைவர்.. மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்களை 
உடனடியாக... மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம், 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதும் இந்த சாத்தான் அரசுக்குத்தான் வக்காலத்து வாங்கும். ஆளான ஆளெல்லாம் செத்த மாட்டிலிருந்து உண்ணி இறங்கியதுபோல் இறங்கி கண்டிக்கிறார்கள். ஞான சார தேரர், மேவின் சில்வா, கூடவிருந்த அமைச்சர்கள். இது ஒரு முட்டாள்! ஆமா.... நம்ம வடக்கின் வசந்தம், கிழக்கின் விடிவெள்ளிகள், வியாழேந்திரன் சத்தத்தையே காணோம். பாவம். இனி எந்தக்கொப்புக்கு தாவுவார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

இப்போதும் இந்த சாத்தான் அரசுக்குத்தான் வக்காலத்து வாங்கும். ஆளான ஆளெல்லாம் செத்த மாட்டிலிருந்து உண்ணி இறங்கியதுபோல் இறங்கி கண்டிக்கிறார்கள். ஞான சார தேரர், மேவின் சில்வா, கூடவிருந்த அமைச்சர்கள். இது ஒரு முட்டாள்! ஆமா.... நம்ம வடக்கின் வசந்தம், கிழக்கின் விடிவெள்ளிகள், வியாழேந்திரன் சத்தத்தையே காணோம். பாவம். இனி எந்தக்கொப்புக்கு தாவுவார்கள்?

அங்கஜன் அறிக்கை விட்டிருக்கிறார். 
அது அவ்வளவு முக்கியம் இல்லை என்றபடியால்... 
இன்றைய செய்தியில் இணைக்கவில்லை. 
👇 நீங்கள் கேட்டதால், இதோ... அந்தச் செய்தி.👇  🙂

 

தற்போதைய பிரச்சினைக்கு எந்த தலைவரிடமும் உடனடி தீர்வு இல்லை – அங்கஜன்

தற்போதைய பிரச்சினைக்கு எந்த தலைவரிடமும் உடனடி தீர்வு இல்லை – அங்கஜன்

தற்போதைய பிரச்சினைக்கு எந்த அரசிடமும் எந்த தலைவரிடமும் உடனடி தீர்வு இல்லை. தற்போதுள்ள சிக்கலுக்குள் தீர்வு பெற வேண்டுமாக இருந்தால் நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் வன்முறை இல்லாமல் போராட்டங்களை மேற்கொண்டே தீர்வை பெறலாம் எனவும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இல்லம் முற்றுகையிடப்பட்டமை தொடர்பாக இன்றைய தினம் ஊரெழுவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், நேற்று ஒரு சில அசாதாரண சம்பவங்கள் ஏற்பட்டிருக்கின்றது. மிகப்பெரிய சவாலான நிலைமை இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கின்றது. விலைவாசிகள் உயர்ந்துள்ளது. எரிபொருளுக்கு தட்டுப்பாடு, மின்சாரம் இல்லை, வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இது மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றது. இயல்பு வாழ்க்கைக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.  இது மிகவும் கஷ்டமான விடயம்.

ஆனாலும் யாழ் மாவட்ட மக்களை பொறுத்தவரை இது புதிதல்ல. இது தெற்கு மக்களுக்கு புதியதொரு சம்பவமாகவே இருக்கும். நேற்று அதற்காக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்று  அது வன்முறையாக மாறி இருக்கின்றது.

கடந்த காலத்தில் நாங்கள் வன்முறையில் இருந்து வந்த மக்கள் மீண்டும் அதனை நோக்கிப் போக கூடாது என்பது என்னுடைய விருப்பம். மக்களுடைய போராட்டத்தின் வேதனையை உணரக்கூடியதாக இருக்கின்றது. போராட்டத்தை அமைதியாக செய்ய வேண்டும். வன்முறை இல்லாமல் போராட்டங்களை செய்து தீர்வை நோக்கி செல்ல முடியும்.

எந்த அரசிடமும் எந்த தலைவரிடமும் உடனடி தீர்வு இல்லை. தற்போதுள்ள சிக்கலுக்குள் தீர்வு பெற வேண்டுமாக இருந்தால் நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து எங்களால் முடிந்த ஆலோசனைகளை முயற்சிகளை வழங்கி ஒரு தீர்வை காண வேண்டுமே தவிர வன்முறை ஒருபோதும் தீர்வாகாது.

யாருக்கும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. யாருடைய உதவியாலும் மக்களால் நான் தெரிவு செய்யப்படவில்லை. மக்களால் மட்டுமே நான் தெரிவு செய்யப்பட்டேன். எந்த ஒரு அரசாங்கத்திற்கும் தலைவருக்கு வக்காலத்து வாங்க வேண்டியது எனது நோக்கமல்ல. தற்போதுள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு என்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் நான் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

https://athavannews.com/2022/1274276

 

  • கருத்துக்கள உறவுகள்

இவரே அவர்களுக்கு  பின்னால் அலைந்தவர் கத மட்டும் பெரிது

9 minutes ago, தமிழ் சிறி said:

யாருடைய உதவியாலும் மக்களால் நான் தெரிவு செய்யப்படவில்லை.

அதற்க்கு ஏன் சிங்கள கட்சியின் பிரதிநிதியாக போட்டியிட வேணும்? தமிழில் நல்ல பெயர் கிடைக்கேலயோ கட்சிக்கு சூட்ட?

12 minutes ago, தமிழ் சிறி said:

எந்த ஒரு அரசாங்கத்திற்கும் தலைவருக்கு வக்காலத்து வாங்க வேண்டியது எனது நோக்கமல்ல

வெகு விரைவில் நழுவி விடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் புலி பினாமிகளின் சதி- பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க முயற்சி ; முஸ்லீம் அடிப்படைவாதிகள் திட்டமிட்ட சதி

இன்னும் நிறைய வரும்..

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறையில் ஈடுபட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம் என கோசமிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.(15)

இதுக்கு சுடலையில்(கொரொனா நேரம்) செத்த முசுலிமுகளின் வெறும் பெட்டிதான்  எரிச்சது என்று சொன்ன நசீர் முகமது என்ன சொல்லப்பொகுது..கல்முனை சிவத்தத் தொப்பி  புலிகள் தான் முசுலிம் வேடத்தில் வந்தது என்று   வாய் கிழியக் கத்தப் போகுது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.