Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளை... புத்துயிர் பெற முயற்சி செய்த,  இந்தியர்களின்... சொத்துக்கள் பறிமுதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை புத்துயிர் பெற முயற்சி செய்த இந்தியர்களின் சொத்துக்கள் பறிமுதல்

விடுதலைப் புலிகளை... புத்துயிர் பெற முயற்சி செய்த,  இந்தியர்களின்... சொத்துக்கள் பறிமுதல்

விடுதலைப் புலிகளை மீண்டும் புத்துயிர் பெறச்செய்யும் ஒரு பகுதியாக, போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு இந்தியர்களின் 359 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை இந்திய அமலாக்க பிரிவு பறிமுதல் செய்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி இந்திய கடற்பரப்பில் கடலோர காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட இலங்கை படகில் இருந்து 300 கிலோ போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்ட நிலையில் வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஆறு வீடுகள், வாகனங்கள், சுரேஷ் ராஜ் ஏ, சத்குணம் என்கிற சபேசன், ரமேஷ் ஏ மற்றும் சௌந்தர் என்ற சவுந்தரராஜன் ஆகியோரின் பணம் மற்றும் வங்கி வைப்புத்தொகைகள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

படகில் கடத்தப்பட்ட போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள், சுரேஷ் ராஜ், சத்குணம் மற்றும் அவர்களது நண்பர்களுக்காகவும், அந்த போதைப்பொருள் விற்பனையின் ஊடாக வருமானம் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த வருமானத்தில் மேலதிக போதைப் பொருள்களை வாங்குவதற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை புத்துயிர் பெறச்செய்வதற்காகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளமையும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சுரேஷ் ராஜ் ஏ. மற்றும் சத்குணம் ஆகியோர் முன்பு போதைப்பொருள் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் என்றும், சௌந்தரராஜன் மீது கிரிமினல் வழக்கும் நிலுவையில் இருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://athavannews.com/2022/1276380

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை புத்துயிர் பெறச்செய்வதற்காகவும்

  புலிகளின் காலத்தில் உலகில் சிங்களம் சரிவைச் சந்திக்கும் போதெல்லாம் புலிகளைக் காட்டி தன்னை நிலைப்படுத்திய காலம்போய் இப்போது அந்நப்பாத்திரத்தை, சிறிலங்காவைக் காக்கத் தான்(கிந்தியா) ஏற்றுள்ளதுபோல் உள்ளது. புலிகளின் மௌனிப்புத் தமிழரைவிட இவர்களுக்குத் தமது அரசியலைச் செய்ய இடையூறாக உள்ளதுபோல் இருக்கிறது. 'றோ' என்ற நாசகார அமைப்பு கிந்தியாவிலும், தமிழீழத்திலும் செய்த அநியாயங்களுக்கு தண்டிக்கப்படாமல் இருப்பதே இதுபோன்ற திசைதிருப்பல்களையும் திருகுதானங்களையும் செய்ய வைக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

 கடந்தகாலங்களில், புலம்பெயர் தேசங்களில் போதை வஸ்துக்கடத்தலில் ஈடுபட்ட பலர் தங்களை விடுதலைப்புலிகளே போதைவஸ்துக்கடத்தலில் ஈடுபட வற்புறுத்தியதாக விசாரணையில் சொன்ன வரலாறும் இருக்கு, இல்லாதுவிட்டால் ஊரில் உள்ள எமது உறவுகளுக்கு ஆபத்து என நாங்களும் இதற்கு ஒப்புக்கொண்டோம் எனக் கூறிய கதையும் இருக்கு. பின்லாந்தில் ஒருவர் ஏஜன்சிக்காரணுக்குக் காசு கொடுக்காமல் ஏமாத்த அவரை ஏஜன்சிக்காரனது உறவு மிரட்ட அவர்போய் உவர் இயக்கத்துக்குக் காசு கேட்டுத் தொந்தரவு செய்கிறார் என போலீசுக்குப்போய் அவர்கள் மாதக்கணக்கில உள்ளுக்க இருந்ததும் எனக்குத் தெரியும் அச்செய்தி அப்போதைய மாலை நேரப்பத்திரிகைகளில் கருணா அப்போது அடிபாட்டில  நிக்குறமாதிரி இருக்கும் படத்துடன் தலைப்புச்செய்தியாக வந்ததும் உண்மை. அவர்கள் பிறகு புலிக்கு நாங்கள் காசு சேர்க்கிறது இல்லை உண்மையாகச் சேர்க்கிறது இவர்கள்தான் என ஒரு பட்டியலை வெளியிட்டு அவர்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் இப்பவும் இருக்கிறார்கள்.

புலிகளை ஆயுதம் ஏந்திப்போராடு என கொத்தாவும் இந்தியாவும் மேற்குலக நாடுகளும் துண்டைக் கடந்து சத்தியம் செய்து கேட்டாலும் இனிமேல் அவர்கள் ஆயுதத்தைக் கையில எடுக்கமாட்டார்கள்.

காரணம் அவர்கள் ஆயுதம் ஏந்தியதற்கான நோக்கம் நிறைவேறிவிட்டது என அவர்கள் நினைத்து, மக்களது கைகளில் தமது போராட்டத்தை வழிநடத்தச் சொல்லி ஒப்படைத்துவிட்டார்கள் ஆனால் புலிகள் நினைத்த மக்கள் நாங்கள் இல்லை அவர்கள் வேறு யாரோ நீங்கள் அப்படி நினைத்தால் நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது என,

தேசியத்தலைவர் பிறந்த ஊரை உள்ளடக்கிய உடுப்பிட்டித்தொகுதியில் அதி கூடிய பெரும்பான்மை வாக்குகளைப் போட்டு மகிந்தவின் அடியை உண்ணும் அங்கஜன் இராமநாதனை தமது பிரதிநிதியாகத் தெரிவுசெய்ததன்மூலம் கூறிவிட்டார்கள்.

இதுக்குமேல் எழுத எனக்கு நேரமில்லை காரணம் கனபேரிடம் சொல்லிவைத்திருந்தனான் இளைய தளபது விஜையின் பீஸ்ட் படத்துக்கு கலரியிலயாவது எந்தவிலை கொடுத்தாவது ஒரு ரிக்கற்றாவது எடுத்துத் தாங்கோடா என இவ்வளவு தட்டுப்பாட்டிலும் ஒரு ரிக்கற்கூட எடுக்க முடியவில்லை எனக்கூறிவிட்டாங்கள் படம் தொடங்கிற நாளைக்குமுதல் எப்படியாவது ஒரி ரிக்கற் எடுத்திடவேண்டும் சாப்பாட்டுச் சாமன் டொலர் பால் மா தட்டுப்பாடாவத் மசி...........வது. பக்கத்து வீட்டில தனியனானக் கட்டி நிக்கிற அரிக்கன் ஆட்டிலயாவது ஒரு நூறுமில்லை பாலைக்கறந்து இளையதளபதியின் கட்டவுட்டுக்கு ஊத்திப்பிறவிப் பயனடையாமல் இருக்க நான் என்ன அஜித் ரசிகன் என நினைச்சியளோ.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய கடைசிப் பத்திதான் என்னை இம்பிரஸ் பண்ணியிருக்கு. இங்கும் ஓடும் தியேட்டர்லதான் பார்க்கவேணும். பார்ப்பம்.பால் இருக்கு. அபிஷேகம் மட்டும் செய்யேலாது, துப்பரவு பண்ணுறவர்கள் தும்புகட்டையால அடிப்பார்கள்.........மற்றதெல்லாம் கேட்டு கேட்டு சொல்லி சொல்லி சலிச்சுப் போய் விட்டது.......!  🤔

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியனை ஒரு பொருட்டாகக் கருதி கருத்தெழுதுவதே சுத்த அபத்தம்.

😏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.