Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னிறுத்தி ஜனாதிபதிக்கு ஆதரவாக பௌத்த பிக்குகள் பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)

 

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், 'போலியான போராட்டங்களை நம்பி சிங்கள, பௌத்த மக்கள் ஆணையின்மீது கைவைக்கவேண்டாம்' என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக்கொண்ட கோஷத்துடன் பௌத்த பிக்குகளால் நேற்றைய தினம் கொழும்பில் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பில் அமைந்துள்ள தாமரைத்தடாக முன்றலில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணியில் மகாசங்கத்தேரர்கள் உள்ளிட்ட பௌத்த தேரர்களும் சமூகவலைத்தள செயற்பாட்டாளர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Image

'போலியான போராட்டங்க்ளை நம்பி சிங்கள, பௌத்த மக்கள் ஆணையின்மீது கைவைக்கவேண்டாம்' என்ற வசனம் அச்சிடப்பட்ட பதாகையைத் தாங்கியவாறு அமைதியான முறையில் பேரணியாகச்சென்ற பௌத்த பிக்குகள் விகாரமகாதேவி பூங்காவை அண்மித்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள புத்தர்சிலைக்கு மலர்தூவி வழிபட்டனர்.

அதனைத்தொடர்ந்து அங்கு கருத்து வெளியிட்ட பௌத்த பிக்கு ஒருவர் பின்வருமாறு கூறினார்:

அனைத்து இனமக்கள் அமைதியான முறையில் ஒன்றிணைந்து வாழ்ந்த இந்த நாட்டில், மேற்குலக நாடுகளின் சதித்திட்டங்களில் அகப்பட்டு, அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, இரவிரவாக நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றுகூடி திட்டமிட்டுவிட்டு, அதிகாலை 2 மணிக்குப் போராட்டத்தில் குதிப்பவர்களை பௌத்த மகாசங்கம் நம்பிவிடும் என்று எவரேனும் கருதுவார்களாயின், அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

 கடந்த காலங்களில் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டன, புலனாய்வுத்துறை அதிகாரிகளும் பௌத்த பிக்குகளும் சிறையில் அடைக்கப்பட்டார்கள், வடக்கிற்குச் செல்லமுடியாத நிலையேற்பட்டது. 

எமது வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இடங்களும் பாரம்பரிய அடையாளங்களும் அழிக்கப்பட்டன. 

அவற்றைப் பாதுகாப்பதற்காகவே நாங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்புவிடுத்தோம். ஆனால் இன்று அவருக்கு வாக்களித்த 69 இலட்சம் பேருக்கு எதிராக ஒரு கூட்டம் வீதியில் இறங்கியிருக்கின்றது. 

ஆகவே தாம் தெரிவுசெய்த ஜனாதிபதியை விரட்டுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்ற செய்தியை அந்த 69 இலட்சம் பேரும் வீதியில் இறங்கி உரக்கச்சொல்லவேண்டிய நேரம் வந்திருக்கின்றது என்றார்.

இருப்பினும் மீண்டும் சிங்கள, பௌத்த மக்களிடையே இனவாதத்தையும் பேரினவாத சிந்தனைகளையும் தூண்டி, அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து இனமக்களும் ஒற்றுமையுடன் முன்னெடுத்துவரும் போராட்டத்தை சீர்குலைப்பதற்கு முயலும் கடும்போக்குவாத சக்திகளின் நடவடிக்கைகளில் ஒன்றே இதுவென்று சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னிறுத்தி ஜனாதிபதிக்கு ஆதரவாக பௌத்த பிக்குகள் பேரணி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

சபாஸ்...நியாயமான கேள்வி...விடாதையுங்கோ..இப்பதான் உங்களுக்கு விளங்கியிருக்கு...உங்கை 2 பகுதி நாடு பிடிக்கவும்..அரபு உலகம் அமைக்கவும் பிரதமர் மாளிகையில் கூட்டம் வைக்கினம்...விட்டியளோ  எல்லாம் போயிடும்...முழுப்பேரும் காவியைச் சுத்திக் கொண்டு கால் பேசுக்குப் போங்கோ....நடக்கிறதைப்பாக்க நாங்கள் இங்கை டிவி க்கு முன்னாலை இருக்கிறம்...நீங்கள் இப்ப லேட்டு..😆😁😃

Edited by alvayan

இக் கூட்டத்தில் காலிமுகத் திடலில் போராட வந்துவிட்டு நோன்பு திறந்த முஸ்லிம் மக்கள் மீது கடும் கோபத்துடன் திட்டும் காணொளி ஒன்றை இன்று பார்த்தேன் (கள உறவு ஒருவர் தான் அனுப்பி வைத்தார்). அத்துடன் மல்கம் ரஞ்சித் மீதும் கடும் கோபம் இருப்பதை காண முடிந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பேரணி அடி வாங்கினால் நிலை மாறும்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில் இப்பிடி ஒரு பேரணி நடப்பது நல்லது. இன்னும் கொஞ்சநாளில்  பட்டினி கூடும்போது, மக்களின் கோபம் இவர்கள் மேல் திரும்பலாம், இவர்களின் நோக்கம் புரிய வைக்க கூடியதாக இருக்கும்.

   

  • கருத்துக்கள உறவுகள்

சரியான போட்டி

மதவாதம், இனவாதம் பல்லிளிக்க பிக்குகள் களத்தில் குதிச்சாச்சு. இவர்களாலும் அரசியல் கதிரையில் குந்தியவர்களாலும்தான் நாடு அழித்தது என்று ஆற்றாமையில் குமுறும் சாதாரண சிங்கள மக்களின் மனநிலையை அண்மையில் நிறையவே தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.