Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

6 ஆவது நாளாகவும்... தொடரும், மக்கள் எழுச்சிப் போராட்டம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

6 ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் !

6 ஆவது நாளாகவும்... தொடரும், மக்கள் எழுச்சிப் போராட்டம் !

கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று(வியாழக்கிழமை) ஆறாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த சனிக்கிழமை கொழும்பு, காலி முகத்திடலில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிய நிலையில், நேற்றும் கொட்டும் மழைக்கு மத்தியில் இரவோடு இரவாக மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்கின்றதோடு ஏராளமான இளைஞர் யுவதிகள் குறித்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

அதேபோன்று இன்று சித்திரை – தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையிலும் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1276513

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீருடையுடன், போராட்டத்தில் குதித்த... பொலீஸ்காரர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, outdoors and text that says 'இலங்கையில் இருவேறுபட்ட இனம் உள்ளது என்பதற்கான ஆதாரம். Am Tamil Guardian சிங்களவர் போராட்டம் கைகளில் துப்பாக்கிகள் இல்லை. தமிழர்கள் போராட்டம் ஆயுதங்களுடன் இராணுவம்.'

ஒரு நாடு
ஒரே சட்டம்
தமிழர்க்கு
ஒரு நீதி
சிங்களவர்க்கு
இன்னொரு நீதி!

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக உன்னிப்பாக கவனிக்கிறோம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, satan said:

மிக மிக உன்னிப்பாக கவனிக்கிறோம்!

 அண்டு தொடக்கம் உன்னிப்பாய் கவனிச்சு கவனிச்சு கண் கழண்டு விழுந்து போகப்போவுது கவனம்😂

  • கருத்துக்கள உறவுகள்

1) மூலவேர் இல்லாதபோராட்டம்...அது யாரென்பது கேள்விக்குறி..

2)அங்குள்ள வசதிகளை  பார்க்கும்போது இது ஒரு அரச ஆர்ப்பாட்டம்..

3) வங்குரோத்து நிலையை அறிவிக்குமுன்  உலகத்துக்கும் ,மக்களுக்கும் விடும் ரீல்...

4) எவ்வளவு கஸ் டப்பட்டும் தடுக்க முடியவில்லை என்பதைக் காட்ட ஒரு நாடகம்..

5)  பஞ்சம் ப ட்டினி...என்று போட்டு..5 ஸ்டார் சாப்பாடுதான் குடுபடுகுது...இதற்கு காசு எங்காலான்?

6) மெல்ல மெல்ல முசுலிம் எதிர்ப்பு நுழைக்கப்படுகிறது..நேற்று மிதி..இன்று குப்பைத்தொட்டி..

7)ஓருவார லீவு செலவற்ற பொழுது போக்கு..

😎 ஒருவாரம் நாங்கள் பார்த்தோம் ஒருவரும் பதவி ஏற்க வரவில்லை..எனவே ராசபக்ஸ்சக்கள்  ஆகிய நாமே பதவி ஏற்கின்றோம்...இனி எல்லாம் சுபமாக நடக்கும்

ஏறின விலை ஒன்றும் இறங்காது...இல்லாமல் போன சாமானும் வராது....

மொத்தத்தில் இது பக்ஸ்ஸ  குடும்பத்தின் கவுரவம் காப்பாற்ற நடந்த உல்லாச கொண்டாட்டம்..

 

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர் கப்பல்(எண்ணை) ஒன்று கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கிறது. 44 மில்லியன் டொலர் கொடுக்கப்பட்டால் மாத்திரம் எண்ணை இறக்கப்படும். 15 நாட்களாக தரித்து நிற்பதாகதாக சொல்லப்படுகிறது. தரித்து நிற்கும் ஒவ்வொரு நாளைக்கும் 15 ஆயிரம் டொலர்கள் தண்டப்பணமாக கொடுக்க வேண்டும்.

https://www.facebook.com/hishammvlog/videos/745223319821200

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

சிங்கப்பூர் கப்பல்(எண்ணை) ஒன்று கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கிறது. 44 மில்லியன் டொலர் கொடுக்கப்பட்டால் மாத்திரம் எண்ணை இறக்கப்படும். 15 நாட்களாக தரித்து நிற்பதாகதாக சொல்லப்படுகிறது. தரித்து நிற்கும் ஒவ்வொரு நாளைக்கும் 15 ஆயிரம் டொலர்கள் தண்டப்பணமாக கொடுக்க வேண்டும்.

வந்த கப்பலை இறக்குமதி செய்யாமல்...
தாமதித்து நிற்கும் ஒவ்வொரு நாளைக்கும்,
33.000 அமெரிக்க டொலர், 
தண்டப் பணமாக செலுத்த வேண்டும், என எங்கோ வாசித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அறிவுச் செம்மலுகள்! இறக்குமதிக்கு பணம் இல்லையென்றால் ஏன் வரவழைப்பான்? இப்போ இறக்குமதி பணம், தண்டப்பணம். இந்தச் சாதாரண அறிவில்லாதவர்கள் கையில் நாட்டை ஒப்படைத்தது யார் தவறு? வேண்டாம் என்று துரத்தியவர்கள் ஏன் மீண்டும் கொண்டு வந்தார்கள்  இவர்களை? மக்களின் பெலயீனத்தை சாதகமாக்கி மீண்டும் குந்தினார்கள். இப்போ போக மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள். மீண்டும் இந்த கதிரையில் தாங்கள் இருக்கபோவதில்லை என்பது உறுதியானபடியால்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் அழுத்தங்களுக்கு அடிபணிய போவதில்லை என அரசியல்வாதிகள் அறிவிப்பு! அப்படியானால் இவர்கள் மக்களின் ஆணையை பெற்று ஆட்சிக்கு வரவில்லை என்று கொள்ளலாமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, satan said:

மக்களின் அழுத்தங்களுக்கு அடிபணிய போவதில்லை என அரசியல்வாதிகள் அறிவிப்பு! அப்படியானால் இவர்கள் மக்களின் ஆணையை பெற்று ஆட்சிக்கு வரவில்லை என்று கொள்ளலாமா?

போர் வெற்றி கண்ணை மறைக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎14‎-‎04‎-‎2022 at 13:45, தமிழ் சிறி said:

May be an image of 1 person, outdoors and text that says 'இலங்கையில் இருவேறுபட்ட இனம் உள்ளது என்பதற்கான ஆதாரம். Am Tamil Guardian சிங்களவர் போராட்டம் கைகளில் துப்பாக்கிகள் இல்லை. தமிழர்கள் போராட்டம் ஆயுதங்களுடன் இராணுவம்.'

ஒரு நாடு
ஒரே சட்டம்
தமிழர்க்கு
ஒரு நீதி
சிங்களவர்க்கு
இன்னொரு நீதி!

இந்த ஒப்பீடே பிழை ...தமிழ் மக்கள் அரசுக்கு எதிராய் ஆயுதத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை . அரசும், தமிழருக்கு எதிராய் ஆயுதங்களை பாவித்தது .
இப்போ நடக்கும் போராட்டம் தனியே சிங்களவர்களுக்கு ஆனது மட்டும் இல்லை . தவிர இப்ப தான் தொடங்கி இருக்கு ...அகிம்சை வழியில் தொடங்கிய போராட்டம் வேறு வடிவங்களுக்கும்  மாறலாம்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

இந்த ஒப்பீடே பிழை ...தமிழ் மக்கள் அரசுக்கு எதிராய் ஆயுதத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை . அரசும், தமிழருக்கு எதிராய் ஆயுதங்களை பாவித்தது .
இப்போ நடக்கும் போராட்டம் தனியே சிங்களவர்களுக்கு ஆனது மட்டும் இல்லை . தவிர இப்ப தான் தொடங்கி இருக்கு ...அகிம்சை வழியில் தொடங்கிய போராட்டம் வேறு வடிவங்களுக்கும்  மாறலாம்.

 

இன்று காலையில்... இராணுவ வாகனங்கள்  அங்கு வந்து, 
ஏதோ.. ஒரு செய்தி, சொல்லி விட்டு போயுள்ளது.
விரைவில்... அவர்களை, விரட்டி அடிக்கலாம் என நினைக்கின்றேன்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.