Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிலமும் புலமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்இணைய செய்தி ஆய்வு

நிலமும் புலமும் - ஆக்கம் சுகன்

சிங்கள அரசு கிழக்கில் தனது இராணுவ நடவடிக்கையை வெற்றி என பிரகடனப்படுத்தி ஆரவாரம் செய்து அதனூடாக புலிகளை சர்வதேசம் எவ்வாறு அணுக வேண்டும் என்று புதிய ஒரு அளவு கோலை முன்வைக்கின்றது.

இந்த அளவு கோலை வைத்தே உள்ளுர் அரசியலையும் நகர்த்தப் பார்க்கின்றது. அதே அளவு கோலை வைத்தே தான் செய்துகொண்டிருக்கும் அவலங்களையும் மறைக்கப்பார்க்கின்றது.

போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகாத வண்ணம் யுத்தத்தை முன்னெடுக்கும் போது சர்வதேசத்தில் இருந்து சர்ச்சைகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிவரினும், போரில் வென்று விட்டோம் என்ற பிரசங்கத்தால் அவ்வாறான சர்ச்சைகளை அபிவிருத்தி திட்டங்களாக மாற்றும் தந்திரமாக நடவடிக்கைகள் நகர்கின்றது.

மகிந்தர் கிழக்கைக் கைப்பற்றி வெற்றி பெற்று விட்டார் என்பது மகிந்தர் சார்ந்த அரசியலுக்கு பலம். புலிகளில் பிளவு ஏற்படுத்தியது நான்தான் அதனால் தான் மகிந்தர் வெற்றி பெற்றார் அல்லது இது வெற்றி அல்ல வேடிக்கை என்று ரணில் கூறுவது அவர் சார்ந்த அரசியல். அதிகாரப்பகிர்வு பற்றி வாயை திறக்கப்படாது மேலும் உடனே வடக்கையும் கைப்பற்றுங்கள் என்று கொக்கரிப்பது கெல உறுமய ஜே வி பியின் அரசியல் சார்ந்தது. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் சிங்களம் தமிழரை ஒழித்துக்கட்டுவதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்பது தெளிவு.

இதற்குள் ஒரு சிறு சலசலப்பாக ஒட்டுக்குழுக்களின் நடவடிக்கைகள். சிங்களம் எறிமிதித்து குற்றுயிரும் குலை உயிருமாக்கி விட்ட மக்கள் மத்தியில் சிங்களம் தூக்கிப்போட்ட எலும்புத்துண்டுகளால் ஒரு சிம்மாசனம் அமைத்து அந்த மக்களின் மன்னனாக வரவேண்டும் என்ற போட்டியில் அவர்கள்.

உலையை வை; பக்கத்து வீட்டில் போய் ஒரு சுண்டு அரிசி வாங்கி வாறன் சோறாக்கி சாப்பிடுவம் என்பது போல அதிகாரப்கிர்வையும் சமஷ்டி பற்றியும் பிதற்றிக்கொண்டு பிழைப்பு நடத்தும் சிறு கூட்டம் ஒரு புறம்.

சிங்களத்தின் இவ்வாறான நகர்வுகளை தங்கள் தங்கள் நலன்களுக்கேற்ப அனுசரிப்பதே சர்வதேசத்தின் தர்மம் என்றளவில் அவர்கள் நடவடிக்கைகள் உள்ளது. வாகரை இராணுவத்தால் முழுமையாக கைப்பற்ற முன்னம் அகாசியும் அமெரிக்க தூதரும் துள்ளி கொண்டு அங்கே வந்து விட்டனர்.

தற்போதும் பக்கத்து நாட்டிலிருந்து சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்க வரப்போறார்களாம். கிழக்கு வெற்றி க்கு பின் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி விரிவடையத்தொடங்கி விட்டது. இவ்வாறே ஏனைய அபிவிருத்திகளும் தொடங்கப்படும் என்பதை எதிர்பார்க்கலாம்.

கிழக்கின் கரையோரங்களில் சிங்களக்குடியேற்றங்களும் உயர் பாதுகாப்பு வலையம் என்றதன் அடிப்படையில் தமிழரின் பாரம்பரிய நிலம் பறிக்கப்படுவதும் குடும்பி மலை உச்சியில் புத்தர் சிலை நிறுவுவதும் என்று சிங்களம் எதை எங்கே எப்படி அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று அபிவிருத்திக்கு அடித்தளம் ஏற்கனவே போட்டாகி விட்டது.

கண்ணுக்கு தெரியாமல் வாழும் கண்காணிப்பு குழு கொலை விழ விழ தமிழர்களின் சாவுகளை எண்ணி தனது கடமையை செய்து கொண்டிருக்கின்றது. இவர்கள் செயற்பாடுகள் சிங்களத்துக்கு தூபம் காட்டும் பூசாரிகள் போலானதே. வாகரை மக்களை தமது சொந்த நிலங்களில் இருந்து மல்ரிபரல் மற்றும் கிபிர் கொண்டு வெளியேற்றிய போது தோபினூர் ஒமர்சன் சொன்னார் மக்கள் வெளியேற புலிகள் தடுக்கின்றார்கள் என்று. ஏன் வெளியேறுகின்றனர் எப்படி வெளியேற்றப்படுகின்றனர் என்பதெல்லாத்துக்கும் சாட்சியாக தமிழர்கள் உடலங்கள் சிதறிக்கிடக்கின்ற வேளையில் இப்படிச் சொன்னார். இன்னமும் அங்கே கண்காணித்துக்கொண்டுள்ளனர். ஒரு வேளை புலிகள் பாரிய அளவில் நில மீட்பு யுத்தத்தை தொடங்கினால் திடுக்கிட்டு எழும்பியது போல் எழும்பி, புலிகள் யுத்த நிறுத்த மீறல் செய்கின்றார்கள் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட மக்களோ அன்றாடம் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கு

நல்ல ஆக்கம் சுகன் பாராட்டுகளும் நன்றிகளும் ஒவ்வொரு வாரமும் யாழின் சொந்த ஆக்கமாக இவ்வாறான ஆய்வுகள் வெளிவருவது மகிழ்சி

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தேசத்தில் சில புல்லுருவிகள் கருத்துக்களின் இறுதியான எல்லை போல் "இங்கே இருந்து எதற்கு கத்துகின்றீர்கள் அங்கே போய் போராட வேண்டியது தானே என்பார்கள்" என்று குரலை வேறெரு பாணியில் அடக்க முற்படுவார்கள்.

சிட்னியில் சிலரைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள், ஊர்வலங்கள், கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. கலந்து கொள்பவர்களைப் பார்த்து' நீங்கள் சுயனாலவாதிகள். ஊரில இருந்து சண்டை பிடித்திருக்கலாமே. கூட்டங்களில் கலந்து கொள்பவர்களினைப் பார்த்து தான் புலிகளும் சண்டை பிடிக்கிறார்கள். இதனால் தான் தமிழர்கள் பலர் இறந்துள்ளார்கள்' என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு சிங்களவர்கள் அடிப்பது கொலை செய்வது , கற்பளிப்புக்கள் செய்வது தெரியாது. அல்லது தெரிந்தும் தெரியாது போல நடிக்கிறார்கள். எமக்காகப் போரிட்டு உயிர்நீத்த மாவீரர்களுக்கு வணக்கம் செய்ய இவர்கள் மாவீரர் நிகழ்வுக்கு செல்லமாட்டினம். ஆனால் சிட்னியில் நடைபெறும் இந்திய சுதந்திர தின நிகழ்வுக்கு செல்லுவினம். வான்புலிகளின் வரவைக் கண்டு தமிழை நேசிக்கும் அனைவரும் மகிழ, இந்த எதிர்ப்புவாதிகள் 'இதனால் தான் இனி சிங்களவன் தமிழர் பகுதியில் குண்டு போடப் போகிறான்' என்று ஒலமிடுகிறார்கள். இவ்வளவு காலமும் சிங்களவன் குண்டு போடும் போது அது பற்றிக் கவலைப் படுவதில்லை. ஈழத்தில் என்ன நடக்கிறது என்பதை ஊடகங்களின் மூலம் அறியிர எண்ணமுமில்லை. சன் தொலைக்காட்சி பார்த்து நடிகைகள், நடிகர்கள் இறக்கும் செய்திகள் அறிந்து அழுகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஓயாது குரல் கொடுத்து தாயக விடுதலைப்போரை முழுமை பெறச் செய்ய வேண்டும்.

சமகாலத்துக்கு ஏற்ற ஆய்வு.

மேலும் தொடருங்கள் சுகன்.

  • 2 weeks later...

புலிகளின் பாச்சலை எதிர்பார்த்து தூங்கிக் கொண்டிருக்கும் தமிழர்கள் படிக்க வேண்டிய கட்டுரை. தாயகத்தில் புலியாக மாறித்தான் போராட வேண்டுமென்பதில்லை. வெளிநாடுகளில் நாம் முன்னெடுக்க வேண்டிய போராட்டங்களில் எமது பங்களிப்பு இன்னும் அதிகமாக இருக்க வேண்டும்.

ஆக்கத்திற்கு நன்றிகள் சுகன்.

கறுப்பி கந்தப்பு ஈழவன் இணையவன் உங்கள் ஆதரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றிகள்

அன்புடன்

சுகன்

நல்ல ஒரு ஆக்கம் சுகன் அண்ணா இன்றைய காலகட்டதிற்கு தேவையான ஆய்வு வாழ்த்துகள்....... :rolleyes:

அவசியமான நேரத்தில் பயனுள்ள கட்டுரை. இப்பொழுதுதான் வாசிக்க முடிந்தது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் கடமையை நினைவுபடுத்துகிறது. ஆக்கபூர்வமான பணிகளில் எம்மவர்கள் புலத்தில் செயற்படும்போது - அது விடுதலைப் போராட்டத்திற்கு மேலும் பலம் சேர்க்கும்.

தொடர்ந்து நிறையவே எழுதுங்கள் சுகன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.