Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில்... 60 பேர்கொண்ட குழு, வத்திக்கான் நோக்கி பயணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், 60 பேர்கொண்ட குழு வத்திக்கான் நோக்கி பயணம்!

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில்... 60 பேர்கொண்ட குழு, வத்திக்கான் நோக்கி பயணம்!

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், 60 பேர்கொண்ட குழு வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளது.

இன்று(வெள்ளிக்கிழமை) காலை குறித்த குழுவினர் வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளனர்.

இந்தக் குழுவில், கொழும்பு ஆயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ மற்றும் ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேரும் இந்தக் குழுவில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என பாப்பரசர் விடுத்த அழைப்புக்கு அமையவே குறித்த குழுவினர் வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளனர்.

https://athavannews.com/2022/1277841

  • கருத்துக்கள உறவுகள்

காலம் மாறுது காட்சிகள் மாறுது .....

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ? 

போஸ்ட் மொட்டம் றிப்போட் வாசிக்கிறதுக்கா ? 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இவ்வளவு காலம் தாழ்த்தி போர்ப்பாண்டவர் பாதிக்கப்பட்ட மககளை சந்திக்க விரும்புகிறார்?

கொல்லப்பட்ட மக்களின் கல்லறைகளில் வீழ்ந்து பாவ மன்னிப்பு கேட்பதற்கு. இந்த ஆண்டகை யும் அவர் தம் பரிவாரங்களும் கோத்தா பதவிக்கு வர வேண்டும் என்று விரும்பி, ஆதரவு கொடுத்தவர்கள்.

தமிழர்களை இனப்படுகொலை செய்த பேரினவாதிகளின் கூட்டம் தம்மை மட்டும் விட்டு வைக்கும் என்ற நம்பிக்கையை வைத்திருந்தமைக்கு அவர்கள் பாவ மன்னிப்பு கேட்க.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

ஏன் இவ்வளவு காலம் தாழ்த்தி போர்ப்பாண்டவர் பாதிக்கப்பட்ட மககளை சந்திக்க விரும்புகிறார்?

இந்தகர்தினால் உண்மைகளை இவ்வளவு காலமும் போப்பாண்டவருக்கு  மறைந்திருக்கலாம். இப்போ காலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. போரில் இறந்த பெருந்தொகையான மக்களின் ஆன்மாக்கள் திறக்காத கதவை, உயிர்ப்பின் நாளில், ஆண்டவன் சந்நிதியில்  இறந்த ஆன்மாக்கள் திறந்து உண்மையான கொலையாளிகளை (அப்போதும் இப்போதும்) யார் என அடையாளங்காட்டியுள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அன்று ஆலயங்களில் தஞ்சம் அடைந்த அப்பாவிகளை இலக்கு வைத்து, குண்டுகளை வீசி, ஆலயங்களை தரைமட்டமாக்கி, உயிர்களை தசையும் ரத்தமுமாக சிதற வைத்த போது, தனது மந்தைகளின் இழப்புக்காக இவர் குரல் எழுப்பி, துக்கம் கொண்டாடியிருந்திருந்தால்; உயிர்ப்பு நாளில் இறந்தவர்களின் இழப்பை இவரால் தடுத்திருக்க முடியும். ஆனால் பதிலுக்கு; இழப்புக்கு நிஞாயம் அல்லவா கற்பித்துக்கொண்டிருந்தார்? சிங்கள கிறிஸ்தவர்கள் தங்கள் கண்முன்னால் நடந்த கொடூரத்தை தட்டிக்கேட்க விளைந்தபின்னும் இவர் மௌனம் காக்க முடியாது, தானும் சேர்ந்து கிளம்பி விட்டார். ஆனால் இன்னும் போரில் இறந்த தன் மந்தைக்காக அழவோ, துக்கம் கொண்டாடவோ, வருத்தம் தெரிவிக்கவோ இவர் தயாராய் இல்லை. இது வெறும் போலித்தனம் அல்லது தன் பதவியை தக்க வைக்க எடுக்கும் பிரயத்தனம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.