Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்நாடு வந்த இலங்கை அகதிகள்: “ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 1,000க்கு விற்றால் எப்படி வாழ்வது?”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு வந்த இலங்கை அகதிகள்: “ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 1,000க்கு விற்றால் எப்படி வாழ்வது?”

5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தமிழகம் வந்தவர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் இருந்து 60 இலங்கை தமிழர்கள்; தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை 9 மாத கை குழந்தை உட்பட 5 குடும்பத்தை சேர்ந்த மேலும் 15 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர்.

இலங்கை உள்நாட்டுப் போரின்போது இலங்கைத் தமிழர்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்ள அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழ்நாட்டுக்கு வந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடி மிக அருகில் இருப்பதே இதற்குக் காரணம்.

அதேபோல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இலங்கை தமிழர்கள் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் உள்ள தீவிர கண்காணிப்பையும் மீறி ஃபைபர் படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவு கடற்கரையில் இருந்து ஒரு ஃபைபர் படகுகளில் யாழ்ப்பாணம் மாவட்டம் ஆணைக்கோட்டம் மற்றும் காக்கா தீவை சேர்ந்த யோகன், மாலா, கதிரமலை, ஜெயராம், பேபி ஷாலினி என 9 மாத கை குழந்தை உட்பட 5 குடும்பத்தை சேர்ந்த 15 இலங்கை தமிழர்கள் திங்கட்கிழமை அதிகாலை 3 மணி அளவில் தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரையில் வந்து இறங்கினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் போலீசார் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்த பிபிசி தமிழிடம் பேசிய யோகன், 'இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.'

 

தமிழகம் வந்தவர்கள்

'ஒரு கிலோ பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதால் எப்படி வாங்கி சாப்பிட முடியும். மருத்துவ பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை. தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் காய்ச்சல், தலை வலிக்கு 4 ஆயிரம் வரை வசூல் செய்கிறார்கள்.'

"இலங்கையில் தற்போது உள்ள நிலை நீடித்தால் இலங்கையில் பட்டினி சாவு ஏற்பட்டு அனைவரும் உயிரிழக்க நேரிடும். எனவே உயிரை காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்தோம்," என இலங்கை தமிழர் யோகன் தெரிவித்தார்.

விசாரணைக்குப் பின் இந்த 15 பேரும் மண்டபம் அகதி முகாமில் ஒப்படைக்கபட்டார்கள்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடங்கியது முதல் மார்ச் 22 முதல் இன்று வரை 75 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/india-61216375

இவைகள் இந்தியா போன காசுல சும்மா இருக்கிற நிலத்திலேயே  ஏன் 10 கண்டு நட  இயலாது

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, lusu said:

இவைகள் இந்தியா போன காசுல சும்மா இருக்கிற நிலத்திலேயே  ஏன் 10 கண்டு நட  இயலாது

எல்லாம் நீண்ட கால திட்டமிடல்..

3 hours ago, lusu said:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, lusu said:

இவைகள் இந்தியா போன காசுல சும்மா இருக்கிற நிலத்திலேயே  ஏன் 10 கண்டு நட  இயலாது

 

அது அவர்கள் தொழில் இல்லைப்போல....😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அது அவர்கள் தொழில் இல்லைப்போல....😁

கிழக்கு மாகாணத்தில் இருந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்து வடக்கு நோக்கி வந்த விவசாயிகளுக்கு நிலம் இல்லாமல் போனதால் நாளடைவில் அவர்கள் வேறு தொழில்களுக்குப் மாறிவிட்டன்ர். 

இந்தியாவை நோக்கி சென்றவர்களில் பெரும்பங்கினர் இவர்களே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Kapithan said:

கிழக்கு மாகாணத்தில் இருந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்து வடக்கு நோக்கி வந்த விவசாயிகளுக்கு நிலம் இல்லாமல் போனதால் நாளடைவில் அவர்கள் வேறு தொழில்களுக்குப் மாறிவிட்டன்ர். 

இந்தியாவை நோக்கி சென்றவர்களில் பெரும்பங்கினர் இவர்களே. 

அங்கு குத்தகைக்கு  நிலம் எடுத்து விவசாயம் செய்யக்கூடிய நிலை இன்றும் உண்டு.

அந்தக்காலம் தொடக்கம் வசதி உள்ளவனுக்கும் வசதி இல்லாதவனுக்கும் முயற்சி இருந்தது.இன்று அது இல்லை. 
பச்சைமிளகாய் அவசியமுமில்லை.😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அங்கு குத்தகைக்கு  நிலம் எடுத்து விவசாயம் செய்யக்கூடிய நிலை இன்றும் உண்டு.

அந்தக்காலம் தொடக்கம் வசதி உள்ளவனுக்கும் வசதி இல்லாதவனுக்கும் முயற்சி இருந்தது.இன்று அது இல்லை. 
பச்சைமிளகாய் அவசியமுமில்லை.😁

(என்னுடைய நடை.ஒறை அனுபவத்தைக் கூறினேன்.)

பெட்டி படுக்கையுடன் ஓடி வந்தவர்களிடம் குத்தகைக்கு கொடுப்பதற்கு என்ன  இருக்கப்போகிறது. 1990ல் இருந்து இவற்றை நடைமுறையில் பார்த்துள்ளேன். 

அதுதவிர, என்னுடைய சொந்த உறவினர்களுக்கே இங்கிருந்துதான் தென்னை வை , முருங்கை வை என்று சொல்ல வேண்டி இருக்கிறது. எனது நண்பன் தனது  மைத்துனருக்கு tractor வாங்கி கொடுத்துவிட, அதற்கு அவர் நாளாந்தம் கழுவிப் பூசை செய்கிறாரே தவிர வயலில் இறங்கக் காணோம். 

முயற்சி இன்று எங்கள் மக்கள்  மத்தியில் அறவே அழிந்துவிட்டது. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

எண்பத்தி மூன்றாமாண்டு கொழும்பில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு வந்த நம்ம மலையக சகோதரர்கள் வன்னியில் விவசாயம் செய்து முன்னேறி இருப்பதை, நாம் இடம்பெயர்ந்து வாழ்ந்த காலத்தில் கண்டு கேட்டறிந்துள்ளேன். அந்தக்காலத்தில் காந்தீயம் சிலருக்கு உதவியதாக கூறினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

எண்பத்தி மூன்றாமாண்டு கொழும்பில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு வந்த நம்ம மலையக சகோதரர்கள் வன்னியில் விவசாயம் செய்து முன்னேறி இருப்பதை, நாம் இடம்பெயர்ந்து வாழ்ந்த காலத்தில் கண்டு கேட்டறிந்துள்ளேன். அந்தக்காலத்தில் காந்தீயம் சிலருக்கு உதவியதாக கூறினார்கள்.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களில் அனேகர் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். அவர்களின் வெற்றிடம் இன்னும் நிரப்பபப்படவில்லை. அதனால் வன்னியில் அனேக நிலங்கள் பயன்படுத்தப்படாமல் அழிந்துவருகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2022 at 22:57, lusu said:

இவைகள் இந்தியா போன காசுல சும்மா இருக்கிற நிலத்திலேயே  ஏன் 10 கண்டு நட  இயலாது

 

எங்கே நீங்கள் 10 கன்றை வைத்து  படம் போட்டுக்காட்டுங்கள் பார்ப்பம் இங்கே ஒரு மூடை பசளை ,எண்ணெய்  விலை அடிக்கடி ஏற்படும் நோய்களுக்கு விவசாயத்தை கைவிட்டவர்கள் அதிகம் ( வேளாண்மை )  இதையெல்லாம் யோசிக்க மாட்டீர்களா என்ன?

On 26/4/2022 at 03:43, குமாரசாமி said:

அது அவர்கள் தொழில் இல்லைப்போல....😁

என்ன குமாரசாமி அண்ணை நீங்களுமா  😏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கே நீங்கள் 10 கன்றை வைத்து  படம் போட்டுக்காட்டுங்கள் பார்ப்பம் இங்கே ஒரு மூடை பசளை ,எண்ணெய்  விலை அடிக்கடி ஏற்படும் நோய்களுக்கு விவசாயத்தை கைவிட்டவர்கள் அதிகம் ( வேளாண்மை )  இதையெல்லாம் யோசிக்க மாட்டீர்களா என்ன?

வீட்டுத்தோட்டம் செய்ய இயற்கையான பசளை சிறந்தது.
கத்தரிக்காயிலை புழு கூடுகட்டினாலும் அந்த கத்தரிக்காய் சுத்தமானது சுகாதாரமானது. 😁

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்ன குமாரசாமி அண்ணை நீங்களுமா  😏

தோட்டம் செய்யிறதும் கொஞ்சம் மரியாதை இல்லாத தொழில் கண்டியளோ 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.