Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13வது திருத்தச் சட்டத்தினை... அமுல்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அண்ணாமலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13வது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அண்ணாமலை

13வது திருத்தச் சட்டத்தினை... அமுல்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அண்ணாமலை

இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய பா.ஜ. கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை  தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை  கருத்திற்கொண்டு அண்டை நாடான இந்தியா இலங்கைக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்குகின்றது. எரிபொருள் மருந்து மற்றும் பண உதவி போன்ற பல்வேறுபட்ட உதவிகளை இந்த அரசாங்கத்திற்கு இந்திய அரசு வழங்கி வருகின்றது.

அதேபோலத்தான் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு நமது இந்திய நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரால் அண்மைய இலங்கை விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் நடைமுறைத்தப்படும் சாத்தியம் உள்ளது.

அதே போல இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நிலையானது விரைவில் சுமுகமான நிலையை எட்ட இறைவன் அருள் புரிய வேண்டும். அதேபோல் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா வருவோருக்கு  கடுமையான சட்டங்களை பிரயோகிக்க வேண்டாம் என  அறிவுறுத்தியுள்ளோம்.

இலங்கை மக்களை தமிழ் மக்களை  தொப்புள் கொடி உறவுகளை மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் நேசக்கரம் நீட்டி பார்க்கின்றோம்.

தென் இந்திய மீனவர்களால்  வடபகுதி மீனவர்கள்  பாதிப்பினை எதிர்நோக்குகிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அது உண்மைதான். அது கட்டாயமாக தீர்க்கப்பட வேண்டிய விடயம்தான். ஆனால் சிறையில் இருப்பதற்காக எந்த இந்திய மீனவனும் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதில்லை ஏதோ ஒரு தவறால்  வருகின்றார்கள். அது தொடர்பில் உரிய கவனம் எடுக்கப்படும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1279619

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 6 people and text that says 'சஞ்சீவி மலையை அனுமன் சுமந்ததுபோல, இலங்கையை சுமக்க பிரதமர் மோடி தயாராக இருக்கிறார் அண்ணாமலை (BJP) அண்ணாமலை mt lankans MEMES'

சஞ்சீவி மலையை, அனுமான் சுமந்தது போல... 
இலங்கையை சுமக்க, மோடி தயாராக இருக்கிறார். - அண்ணாமலை.-

  • கருத்துக்கள உறவுகள்

 

Edited by Kapithan

  • இணையவன் changed the title to 13வது திருத்தச் சட்டத்தினை... அமுல்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அண்ணாமலை
  • கருத்துக்கள உறவுகள்

இந்hக் காணொளியை கடைசி 10 நிமிடமாவது கேட்டுப் பாருங்கள்.

13வது திருத்த சட்டத்தை தோலுரித்து காட்டுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 13ல் என்ன இருக்கு என்று இவருக்கு தெரியுமோ?  தொண்டமானின் ஆள்  இவரைச் சிக்கெனப் பிடித்திருக்கிறார்.....அதாவது இது நம்ம ஆளு.. ஒரு மானில கடட்சித் தலைவருக்கு மோடியின் அளவுக்கு மரியாதை.. எங்கடா போகுது...

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, alvayan said:

இந்த 13ல் என்ன இருக்கு என்று இவருக்கு தெரியுமோ?  தொண்டமானின் ஆள்  இவரைச் சிக்கெனப் பிடித்திருக்கிறார்.....அதாவது இது நம்ம ஆளு.. ஒரு மானில கடட்சித் தலைவருக்கு மோடியின் அளவுக்கு மரியாதை.. எங்கடா போகுது...

பாஜக மாநிலக் கட்சியல்ல,  இந்தியாவை ஆளும் தேசியக் கட்சி.  அண்ணாமலை மாநில மட்டத்திலான தலைவரானாலும் அவரை அனுப்பியிருப்பது பாஜக.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அண்ணாமலை யாருமல்ல திரு ரஜனிகாந் அவர்களை அரசியலுக்கு இழுக்க முயற்சித்து அவர் வராமல் போக அதன்பின்பு கர்நாடகாவைச்சேர்ந்த ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாக வேலை செய்து அரசியலுக்காக தனது வேலையை விட்டுட்டு இப்போ தமிழ்நாட்டில் பா ஜா கா வின் செயலாளராக நியமிக்கப்பட்ட ஒரு கர்நாடகாக்காரன் கர்நாடகாவில் ஒரு கூட்டத்தில் நான் முதலில் ஒரு கன்னடன் அதன்பின்பே மற்றவை எல்லாம் எனக்கூறியவர், இப்போ இரண்டு நாளைக்கு முன்பு தயா மோகன் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார் விடுதலைப்புலிகளது அரசியல்துறை எனக்கூறி அவருக்கு இந்தியாவால் கொடுக்கப்பட்டிருக்கும் அசைண்மென்ட் என்னவெனில் இப்போ விடுதலைப்புலிகள் எனும் பெயரில் புலம்பெயர் தேசங்களில் யாரும் அரசியல் நடத்துவதில்லை காரணம் அதைத் தடை செய்துவிட்டார்கள் ஆகவே எங்களுக்கு ஒத்துவராத புலம்பெயர் அமைப்புகளை ஓரங்கட்ட வேண்டுமெனில் நீ போய் விடுதலைப் புலிகள் பெயரில் அறிக்கை விடு அதன் பின்பு எல்லாரையும் புலம்பெயர் தேசங்களில் லாடஙட்டுவாங்கள் அதுக்குப்பின்பு நாங்கள் இந்திய நலனுக்கான காய் நகர்த்தல்களை தமிழர்கள் நடுவில் செய்வம் என்பது ஒரு புறம் இருக்க இந்தக்கன்னடத்துக்காரனை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியிருக்கு இந்தியா அண்ணாமலை வெறுமனே பா ஜ கா காரன் மட்டுமல்ல தமிழக ஆளுநர் ரவிபோல ஒடு இந்திய உளவுத்துறையின் வேலைகளைச் செய்துமுடிக்கும் உளவாளியுமாகும். நாகலாந்தில் ஆளுநர் ரவி செய்த அட்டூழியம் கொஞ்சநஞ்சமில்லை இப்போ தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார் அதுபோல் எல் முருகன் எனும் தலித்தை பா ஜா க தன்னுடன் வைத்திருந்தாலும்  காஞ்சி மடத்தில் உள்ள பிராமணியை இருநூறு மீற்றர் தொலைவிலவைத்துப்பார்க்கவே அனுமதி கிடைத்தது

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, karu said:

பாஜக மாநிலக் கட்சியல்ல,  இந்தியாவை ஆளும் தேசியக் கட்சி.  அண்ணாமலை மாநில மட்டத்திலான தலைவரானாலும் அவரை அனுப்பியிருப்பது பாஜக.

இதுபோல சுவாமியும் வந்தவர்..ஜெயசன்கரும் வந்தவர்..13 ..16 ஆக மாறினதா..?

  • கருத்துக்கள உறவுகள்

13 திருத்தம் தொடர்பாக ஈழத்தமிழருக்கு யார் மூலமாக சொல்லியனுப்புகிறார்கள் ?

அவருக்கு தமைலகத்திலேயே செருப்பைக் காட்டுகிறார்கள். அப்படியான ஒருவரைக்கொண்டு ஈலத்தில் ஒரு செய்தி சொல்லப்படுகின்றதென்றால் 13 க்கும் ஈழத் தமிழருக்கும் இந்தியா கொடுக்கும் முக்கியத்துவம் என்ன ? 

☹️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.