Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச ஊழியர்கள்... வேலை வாய்ப்பிற்காக, வெளிநாடு செல்ல சந்தர்ப்பம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம்

அரச ஊழியர்கள்... வேலை வாய்ப்பிற்காக, வெளிநாடு செல்ல சந்தர்ப்பம்.

பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர்களுக்கு ஜப்பான், போலாந்து மற்றும் ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் உள்ளன. அந்த வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு மொழி மற்றும் தொழில் பயிற்சி வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

திறமையான பணியாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சந்தைகளுக்கு உள்ளீர்க்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக இன்று (புதன்கிழமை) கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நிலவுகின்ற பொருளாதார பின்னடைவை எதிர்கொள்ளும் வகையில், அந்நியச் செலாவணி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

திறமையான பணியாளர்களை உருவாக்குவதன் மூலம், உயர் ஊதியம் பெறும் தொழில்களுக்கான வாய்ப்புகளை அதிகளவில் பெற்றுக்கொள்ள முடியும்.

ஐரோப்பா உட்பட பல நாடுகளில் தாதியர் சேவைகளுக்கு அதிக தேவை உள்ளது. ஜப்பானில் மட்டும் முதியோர் பராமரிப்பு மற்றும் உணவு விநியோகம் சார் துறையில் 350,000 இற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டுகிறது. அதற்கு ஜப்பானிய மொழி அறிவு கட்டாயம்.

தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை, தொழிற்பயிற்சி அதிகாரசபை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உள்ளிட்ட அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் ஜப்பானிய மொழி அறிவைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டங்கள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போது அரச சேவையில் உள்ள எந்தவொரு நபரும் அல்லது பல்நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஒரு ஊழியர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்வதற்கு உள்ள தடைகளை நீக்குவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அதில் சிரேஷ்டத்துவத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பணப்பரிமாற்றலுக்காக (Foreign remittances) வாகன அனுமதிப்பத்திரம், வீட்டுக் கடன்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு வசதிகளை வழங்குவதன் மூலம் அவர்களை ஊக்குவிக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தூதரகங்களின் பங்களிப்புடன் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1283851

  • கருத்துக்கள உறவுகள்

கெதியா சொல்லுங்க முடிவ கன பேர் ஓட காத்திருக்கானுகள் நானும் அதில் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கெதியா சொல்லுங்க முடிவ கன பேர் ஓட காத்திருக்கானுகள் நானும் அதில் 

இது ஓர் ஆலோசனை அல்ல, அத்துடன் இதனை இங்கு எழுதுவதும் சரியல்ல, ஆனால் அங்குள்ள நிலமையினை பார்க்கும் போது, எனது கடந்த கால அனுபவத்தினை கூறுகிறேன், மத்திய கிழக்கு நாடுதான் என்றில்லை கிழக்காசியாவிலும் வாய்புகள் உண்டு, முகவர்களுகு பணம் செலுத்த வேண்டியதில்லை.

எங்கெல்லாம் தமிழ் பேசும் மக்கள் உள்ளார்களோ அங்கு சென்றால் அவர்கள் உங்களை அரவணைப்பார்கள் ( எவ்வாறு மேற்கு நாடுகளில் இலங்கை தமிழர்கள் பிறநாட்டு தமிழர்களை அரவணைப்பது போல).

அது கடினமான பயணமாக இருக்கும், வேலை பெறுவதற்கு முன்னரான காலப்பகுதியினை தாக்கு பிடிக்க வேண்டும், கடினமான வேலைகள், அங்குள்ளவர்கள் செய்ய விரும்பாத நீண்ட கடினமான வேலைகள் இலகுவாகக்கிடைத்துவிடும், ஆனால் போவதற்கு முன் தொடர்புகள் எடுத்து விட்டு சென்றால் வசதியாகவிருக்கும், நான்  போன போது எந்த தொடர்போ, காசோ இல்லாமல் அவசரமாக சென்றதனால் மிகவும் கடினமாகவிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

போற எவரும் இனி திரும்பி வரப்போவதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

இது ஓர் ஆலோசனை அல்ல, அத்துடன் இதனை இங்கு எழுதுவதும் சரியல்ல, ஆனால் அங்குள்ள நிலமையினை பார்க்கும் போது, எனது கடந்த கால அனுபவத்தினை கூறுகிறேன், மத்திய கிழக்கு நாடுதான் என்றில்லை கிழக்காசியாவிலும் வாய்புகள் உண்டு, முகவர்களுகு பணம் செலுத்த வேண்டியதில்லை.

எங்கெல்லாம் தமிழ் பேசும் மக்கள் உள்ளார்களோ அங்கு சென்றால் அவர்கள் உங்களை அரவணைப்பார்கள் ( எவ்வாறு மேற்கு நாடுகளில் இலங்கை தமிழர்கள் பிறநாட்டு தமிழர்களை அரவணைப்பது போல).

அது கடினமான பயணமாக இருக்கும், வேலை பெறுவதற்கு முன்னரான காலப்பகுதியினை தாக்கு பிடிக்க வேண்டும், கடினமான வேலைகள், அங்குள்ளவர்கள் செய்ய விரும்பாத நீண்ட கடினமான வேலைகள் இலகுவாகக்கிடைத்துவிடும், ஆனால் போவதற்கு முன் தொடர்புகள் எடுத்து விட்டு சென்றால் வசதியாகவிருக்கும், நான்  போன போது எந்த தொடர்போ, காசோ இல்லாமல் அவசரமாக சென்றதனால் மிகவும் கடினமாகவிருந்தது.

நன்றி வாசி உங்கள் தகவலுக்கு பாரப்போம் சில மாதங்கள் இங்கிருந்து 

9 hours ago, விசுகு said:

போற எவரும் இனி திரும்பி வரப்போவதில்லை 

கன பேரின்  நிலை இலங்கையில் இருக்கக்கூடாது என்பதுவே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.