Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அச்சுப் பலகாரம்

Featured Replies

dsc01716ir7.jpg

dsc01715qf9.jpg

dsc01713nc3.jpg

dsc01714rv0.jpg

தேவையான பொருட்கள்:

கோதுமை மா 03 கப்

அரிசிமா 01 கப்

வறுத்த உழுத்தம்மா 01 கப்

சீனி 03 கப்

செய்முறை:

கோதுமை மா, அரிசிமா, உழுத்தம்மா இவற்றை 03:01:01 விகிதத்தில் ஒன்று சேர்த்து (இந்த விகிதத்தில் தான் இன்று கலந்தோம்) தேவையான அளவு சுடுநீர் விட்டு, சிறிதளவு உப்பும் விட்டு இடியப்பம் பிழிவதற்கு குழைப்பது போல் மாவை குழைக்க வேண்டும். பின் முறுக்கு உரலில், விருப்பமான வடிவை உடைய அச்சை போட்டு பின் பிழிய வேண்டும். இதை பிழிந்து மேசை ஒன்றின் மீது இட்டபின் (மேசை சுத்தம் இல்லையென்றால் பேப்பர் விரிக்கலாம்) கத்தியால் சிறிய, சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு கொதிக்கும் எண்ணைச் சட்டியில் இறக்கி எடுக்க வேண்டும்.

பிழிந்த மாவை வெட்டும் போது பொறுமையாக அழகாக வெட்ட வேண்டும். மேலே படத்தில் நான் அவசரத்தில் அவற்றை வெட்டியதால் பார்ப்பதற்கு கொஞ்சம் வடிவில்லாமல் இருக்கின்றன.

இங்கு, கோதுமை மா 03 கப், அரிசிமா 01 கப், வறுத்த உழுத்தம்மா 01கப் - மொத்தம் 05 கப் மா பாவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரை கப் தண்ணீரை கொதிக்க வைத்துவிட்டு பின் சுடுநீரினுள் 03 கப் சீனியை கொட்டி கரைத்து பாணி ஆக்கவேண்டும். சீனியை பாணியாக்கும் போது கரிப்பிடித்து எரிய விடக்கூடாது. இறுதியில் இந்த பொரி(றி?)ந்த அச்சுப் பலகாரத்தினுள் சீனிப்பாணியை ஊற்றி அதனுடன் கலக்க வேண்டும்.

இந்த அச்சுப்பலகாரத்தை செய்வதில் சிக்கலான விடயம் மாவை பிழிந்து, பின் வெட்டி அடுப்பில் போட்டு எடுப்பதே. மாவை குழைப்பது சின்ன வேலை. வெட்டிய சிறிய துண்டுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி எமக்கு துன்பமும் தரக்கூடும்.மேலும் அச்சு உரலின் அடியில் ஒழுங்காக நிற்காவிட்டால் நாம் மாவை பிழியும்போது அடிப்பகுதியினூடாக இரண்டு, மூன்று வழிகளில் அது பீய்ச்சிக்கொண்டு வெளியே வந்து காரியத்தை சொதப்பிவிட்டுவிடும். இதனால் திரும்பவும் உரல்களை பிரித்து மீண்டும் ஆரம்பத்தில் இருந்து பிழியும் செய்முறையை தொடங்க வேண்டிவரும்.

இன்று இதை செய்யும்போது பகிடி என்னவென்றால் நான் முதல் தரம் மாவை உரலில்போட்டு பிழிந்தபின் திரும்பவும் அச்சை கழற்றி போட மறந்துவிட்டேன். பிறகு இரண்டாம் தரம் பிழிந்தபோது அது அப்படியே no02 இல் வருவது போல மா பெரிய வடிவத்தில் உரலினூடாக வெளியே வந்தது. என்னடா இது கருமம் என்று பரிசோதித்து பார்த்தால் அந்த அச்சு உரலில் மேற்பகுதியில் ஒட்டிப்பிடித்துக்கொண்டு இருந்தது. உரலின் அடிப்பகுதி அச்சின்றி பெரிய ஓட்டையாய் இருந்தது. பிறகு மேற்பகுதியில் ஒட்டி இருந்த அச்சை கழற்றி உரலில் மாவை நசிக்கும் பகுதியின் அடியில் சொருகி மீண்டும் பிழிந்தேன்.

பி/கு: எழுத்துப்பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். பிளிதலா அல்லது பிழிதலா சரி என்று தெரியவிலை. இதே போல் குழைத்தலா அல்லத் குளைத்தலா சரி என்றும் தெரியவில்லை.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அச்சுப்பலகாரத்தைத் தான் தேடிட்டு இருந்தேன்.

குறிப்புக்கு நன்றி.

ஆனால் இந்த மாவை சுடுதண்ணி விட்டுத்தானே குழைப்பாங்க.

சீனி பாகு காச்சனுமே.எனக்கு இந்த சீனி பாகு காச்சறது தான் பிரச்சனை. சரியாவே வரமாட்டுங்குதே.

சீனி பாகு காச்சுறது எப்படிணு யாராவது சொல்லங்களேன்.

  • தொடங்கியவர்

ஓம் சுடுதண்ணி விட்டுத்தான் குழைக்க வேணும். இடியப்பம் சுடுதண்ணியிலதானே குழைப்பீனம்? சீனி பாணி காச்சிறது கஸ்டம் இல்லை. சிறிதளவு தண்ணீரை கொதிக்க வைத்துவிட்டு பின் அதனுள் சீனியை கொட்டி (தாராளமாக கொட்டலாம் :lol: )கரைக்கவேண்டும். பின் அந்த பொரி(றி?)ந்த அச்சுப் பலகாரத்தினுள் சீனிப்பாணியை ஊற்றவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சுடுதண்ணி விட்டுத்தான் குழைக்க வேணும். இடியப்பம் சுடுதண்ணியிலதானே குழைப்பீனம்? சீனி பாணி காச்சிறது கஸ்டம் இல்லை. சிறிதளவு தண்ணீரை கொதிக்க வைத்துவிட்டு பின் அதனுள் சீனியை கொட்டி (தாராளமாக கொட்டலாம் :lol: )கரைக்கவேண்டும். பின் அந்த பொரி(றி?)ந்த அச்சுப் பலகாரத்தினுள் சீனிப்பாணியை ஊற்றவேண்டும்.

எவ்வளவு என்று அளவு வேணுமே

  • தொடங்கியவர்

அதாவது இங்கு

கோதுமை மா 03 கப்

அரிசிமா 01 கப்

வறுத்த உழுத்தம்மா 01கப்

மொத்தம் 05 கப் மா பாவிக்கப்பட்டுள்ளது. இதற்கு..

அரை கப் நீரினுள் 03 கப் சீனி இடப்பட்டு கரைக்கப்பட்டு பாணி ஆக்கப்பட்டது. சீனியை பாணியாக்கும் போது கரிப்பிடித்து எரிய விடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கலைஞன்.

இன்னும் இரண்டு நாட்களில் செய்து விட்டு வருகிறேன் அச்சுப் பலகாரத்தோடு.

குருவே இதற்கு பெயர் அச்சுப் பலகாரமா வேற பெயர் ஏதாவதும் இருக்குதோ............உது எனக்கு நல்லா விருப்பம் இங்கே கடையில தான் வாங்கி சாப்பிடுறனான்...........உங்களின்ட படத்தை பார்த்த போது வீட்டை செய்து இருகிறீங்க போல தெரியுது சிஷ்யனுக்கும் கொஞ்சம் அனுப்பி விடலாம் தானே...........படத்தை பார்க்க வாய் ஊறுகிறது குருவே......... ;)

Edited by Jamuna

அச்சுப்பலகாரம் விளக்கமும் நல்லா இருக்கு. படம் போட்டு விளக்கி இருக்கிறீங்க. சாப்பிடணும் போல இருக்கு. :P

இன்று இதை செய்யும்போது பகிடி என்னவென்றால் நான் முதல் தரம் மாவை உரலில்போட்டு பிழிந்தபின் திரும்பவும் அச்சை கழற்றி போட மறந்துவிட்டேன். பிறகு இரண்டாம் தரம் பிழிந்தபோது அது அப்படியே no02 இல் வருவது போல மா பெரிய வடிவத்தில் உரலினூடாக வெளியே வந்தது. என்னடா இது கருமம் என்று பரிசோதித்து பார்த்தால் அந்த அச்சு உரலில் மேற்பகுதியில் ஒட்டிப்பிடித்துக்கொண்டு இருந்தது. உரலின் அடிப்பகுதி அச்சின்றி பெரிய ஓட்டையாய் இருந்தது. பிறகு மேற்பகுதியில் ஒட்டி இருந்த அச்சை கழற்றி உரலில் மாவை நசிக்கும் பகுதியின் அடியில் சொருகி மீண்டும் பிழிந்தேன்.

ஹீஹீ நல்ல பகிடி.

அதுசரி குருவே ஏதும் விஷேசமா வீட்டில்? :huh::lol:

Edited by வெண்ணிலா

கலைஞன் நன்றி உங்களுடைய அச்சு பலகாரத்திற்கு.

கோதுமை மா அவித்தது பாவிக்கவேண்டுமா அல்லது அவிக்காமலும் பாவிக்கலாமா ( பச்சை மா)

  • தொடங்கியவர்

கருத்துச் சொன்ன அனைவருக்கு நன்றி! அவித்த மாதான் பாவிக்க வேண்டும். பச்சை மாவில் ரொட்டி அல்லவா சுடுவார்கள்? பிறகு அது பசை ஒட்டத்தான் சரிவரும்.. :huh:

அச்சுப் பலகாரம் என்பது இதுவல்லவே. இதை சீனி முறுக்கு அல்லது சிப்பிப் பலகாரம் என்று கூறுவார்கள். எனக்கு மிகவும் பிடிக்கும்.

அச்சுப் பலகாரம் என்பது, இரும்பிலான அச்சு போன்ற ஒன்றை மாவில் தோய்த்து கொதிக்கும் எண்ணைக்குள் வைத்து பொரிப்பார்கள். மாவில் பல நிறக் கலவைகளைக் கலந்து, பூக்கள் போன்ற வித்தியாசமான அச்சுக்களில் செய்யும்போது அழகாக இருக்கும்.

இணையவன் அண்ணா சிப்பி பலகாரம் என்று சொல்லுறவை அது தான் நானும் குருவிட்ட கேட்டனான்........அச்சுபலகாரம் என்றா என்ன எப்படி இருக்கும் என்று யாரும் சொல்லுங்கோவேன்........ :huh:

  • தொடங்கியவர்

ஆ... இதுக்கு பெயர் வேறையா? உரலில அச்சு போட்டு தானே இத செய்யுறம்? சரி, நான் இன்னும் விசயம் அறிந்தவர்களிடம் கேட்டுவிட்டு இந்த பதார்த்தத்துக்கு என்ன பெயர் என்று சொல்கின்றேன்... நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

அச்சுப் பலகாரம் என்பது இதுவல்லவே. இதை சீனி முறுக்கு அல்லது சிப்பிப் பலகாரம் என்று கூறுவார்கள். எனக்கு மிகவும் பிடிக்கும்.

அச்சுப் பலகாரம் என்பது, இரும்பிலான அச்சு போன்ற ஒன்றை மாவில் தோய்த்து கொதிக்கும் எண்ணைக்குள் வைத்து பொரிப்பார்கள். மாவில் பல நிறக் கலவைகளைக் கலந்து, பூக்கள் போன்ற வித்தியாசமான அச்சுக்களில் செய்யும்போது அழகாக இருக்கும்.

இதைத்தான் சொல்வாங்க கொக்கிஸ் எண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பாணத்தில் அநேகர் இதை அச்சு பலகாரம் என்று தான் கூறுவர் எனக்கும் இதெண்டா உயிர்.....நன்றிகள் கலைஞன்... :huh::lol::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்வது கொஞ்சம் கஸ்டம்.

கறுப்பி அக்கா சொன்ன மாதிரி சீனி பாணி காச்சுறது கஸ்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

குருஜி! நீங்கள் படத்தில் மாவைக் குழைத்துப் பின் பிழிந்து காட்டியிருப்பது சாட்ச்சாத் அச்சுப் பலகாரமேதான்.

நன்பர் இனையவன் குறிப்பிட்டதை தோட்டச்சு அல்லது கொக்கீஸ் என்று சொல்வார்கள்.

இவையெல்லாம் எமது பாரம்பரிய தமிழ்ப் பலகாரங்களாகும். :lol::o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் இதை சிப்பி என்டு தான் சொல்லுறனாங்கள். எனக்கு இது சரியான விருப்பம் ஆனா செய்ய தெரியாது.

செய்முறை தந்ததுக்கு நன்றி மாப்பி. செய்து பார்த்துவிட்டு எப்படி டேஸ்ட் என்டு சொல்லுறன். :lol:

கறுப்பி அக்கா சொன்ன மாதிரி சீனி பாகு காய்ச்சுறது தான் கஷ்டம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது அச்சுப்பலகாரம் அல்ல.அதன் வடிவம் வேறு.படத்தில் காட்டப்பட்டுள்ளவை முறுக்கு வகைகளைச்சார்ந்தவையே இணையவன் கூறியது போல் சீனிமுறுக்கு அல்லது சிப்பி என அழைப்பார்கள்.ஆனால் சில ஊர்களில் சிப்பி பலகாரமும் வேறு வடிவிலிருக்கும். வடிவமைப்புக்காக வாழைமடலில் வைத்து உருட்டி எடுப்பார்கள்

  • தொடங்கியவர்

கு.சா அண்ணா நீங்கள் எதை சொல்லுறீங்கள் என்று விளங்கிது. கலியாணவீடுகளில் ஊரில் அவற்றை கொடுப்பார்கள். வெளிநாட்டு கலியாணவீடுகளில் இவற்றை காண்பது மிகவும் அரிது. நான் வெளிநாடு வந்து அவற்றை ஒரு இடமும் சாப்பிட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. என்றாலும் நான் கூறிய இந்த பதார்த்தத்தையும் அச்சுப் பலகாரம் என்றுதான் அழைக்கின்றார்கள். பலரிடம் கேட்டு பார்த்தேன். அச்சுப் பலகாரம் என்று தான் சொன்னார்கள். அச்சு இல்லாமல் இதை செய்ய முடியாது தானே? உரலில் அச்சை போட்டுத்தானே இந்த பலகாரத்தை செய்கின்றோம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா அண்ணா நீங்கள் எதை சொல்லுறீங்கள் என்று விளங்கிது. கலியாணவீடுகளில் ஊரில் அவற்றை கொடுப்பார்கள். வெளிநாட்டு கலியாணவீடுகளில் இவற்றை காண்பது மிகவும் அரிது. நான் வெளிநாடு வந்து அவற்றை ஒரு இடமும் சாப்பிட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. என்றாலும் நான் கூறிய இந்த பதார்த்தத்தையும் அச்சுப் பலகாரம் என்றுதான் அழைக்கின்றார்கள். பலரிடம் கேட்டு பார்த்தேன். அச்சுப் பலகாரம் என்று தான் சொன்னார்கள். அச்சு இல்லாமல் இதை செய்ய முடியாது தானே? உரலில் அச்சை போட்டுத்தானே இந்த பலகாரத்தை செய்கின்றோம்?

உங்களுக்கு விளங்குது எனக்கு விளங்குது கனக்க கதைக்க வெளிக்கிட்டால் கவுண்டன் செந்தில் பகிடி மாதிரி அதுதான் இது இதுதான் அது எண்டு சொல்ல வெளிக்கிடுவினம் :rolleyes: போதுவாய் பாக்கப்போனால் வாழைமடலும் ஒருவகை இயற்கையான அச்சுத்தானே :( இனிமேல்க்காலத்திலை இடியப்பமெல்லாம் நூடில்ஸ்சாகா மாறி விடும். :angry: இதுதான் அது அதுதான் இது :( ஊருக்கு ஊர் வித்தியாசம் B)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.