Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'முகமது நபியை அவமதிக்கும் யாரையும் கொலை செய்வோம்': அல்-கய்தா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • பிபிசி மானிட்டரிங்
  • .
7 மணி நேரங்களுக்கு முன்னர்
 

அல்கொய்தா

பட மூலாதாரம்,AQIS

முகமது நபியை "அவமதிக்கும்" யாரையும் கொலை செய்வோம் எனவும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் எனவும், அல்-கய்தாவின் தெற்கு ஆசிய கிளை எச்சரித்துள்ளது.

இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவை சேர்ந்த நூபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜின்டால் ஆகியோரின் முகமது நபி குறித்த சர்ச்சை கருத்துக்கு அல்-கய்தாவின் நேரடி எதிர்வினையாக இது உள்ளது.

முகமது நபிகள் குறித்த கருத்துக்கு இஸ்லாமிய நாடுகளின் எதிர்வினையைத் தொடர்ந்து, பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மா அக்கட்சியிலிருந்து சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டார். டெல்லி ஊடகப்பிரிவின் தலைவராக இருந்த நவீன் ஜின்டால் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்திய துணைக்கண்டத்தின் அல்-கய்தா (al-Qaeda in the Indian Subcontinent) என தம்மைத்தாமே அழைத்துக்கொள்ளும் இந்த ஜிகாதி குழு இதுதொடர்பாக உருது மற்றும் ஆங்கிலத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 7)அறிக்கை ஒன்றை, அதன் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களான டெலிகிராம், ராக்கெட்சாட், சிர்ப்வயர் ஆகியவற்றில் வெளியிட்டது.

அந்த அறிக்கையில், "சில தினங்களுக்கு முன்னர் இந்துத்துவாவின் பிரசாரகர்கள் முகமது நபி குறித்தும் அவருடைய மனைவி ஆயிஷா குறித்தும் இந்திய தொலைக்காட்சி சேனல் ஒன்றில் அவமதிக்கும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசியுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமது நபி குறித்த கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள அல்-கய்தா, "துடுக்குத்தனமான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துகளை கூறும் உலகின் வாய்கள், குறிப்பாக இந்துத்துவ தீவிரவாதிகள் ஆக்கிரமித்துள்ள இந்தியாவில்" கொலைகள் மற்றும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நிகழ்த்தப்படும் என, அல்-கய்தா எச்சரித்துள்ளது.

'மன்னிப்பு வழங்கப்படாது'

மேலும், முகமது நபியை இழிவுபடுத்துபவர்களுக்கு "மன்னிப்பு வழங்கப்படாது. இத்தகைய விவகாரத்திற்கு கண்டன வார்த்தைகள் மூலமாகவோ அல்லது வருத்தத்தின் மூலமாகவோ எதிர்வினையாற்றப்படாது" எனவும் அவை வன்முறை தாக்குதல்கள் மற்றும் பதிலடியால் மட்டுமே எதிர்கொள்ளப்படும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

"டெல்லி, பாம்பே, உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் உள்ள காவி தீவிரவாதிகள் (இந்து தேசியவாதிகள்) தங்களின் முடிவுக்காக இப்போது காத்திருக்கட்டும். அவர்கள் தங்கள் வீடுகளிலோ ராணுவ முகாம்களிலோ தஞ்சமடைய முடியாது," என அல்-கய்தா எச்சரித்துள்ளது.

இஸ்லாம் மற்றும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் பாதுகாவலராக தன்னை காட்டிக்கொள்ள இந்த அமைப்பு முயற்சிக்கிறது. மேலும், முகமது நபி கூறியதாக சொல்லப்படும் "காஸ்வா இ-ஹிந்த்' (Ghazwa e Hind) என்று குறிப்பிடப்படும் போர் ஒன்றில், இறுதியில் முஸ்லிம்கள் இந்தியாவை வெல்வார்கள் என்ற முழக்கத்தைத் தூண்டும்வகையிலும் அல்-கய்தா செயல்பட்டு வருகிறது.

முகமது நபியை "அவமதிக்கும்" யாரையும் கொல்வோம் என, முகமது நபி குறித்த சமீபத்திய கருத்துக்கு சம்பந்தமில்லாமல், இந்த அமைப்பு முன்னதாக மற்றொரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தது.

முகமது நபிகள் குறித்த சர்ச்சை கருத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் சிலர் கோபமடைந்து, போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், அல்-கய்தாவின் இந்த செய்தி வந்துள்ளது.

'முகமது நபியை அவமதிக்கும் யாரையும் கொலை செய்வோம்': அல்-கய்தா - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்பு…. ஹூசைன் என்ற முஸ்லீம் ஓவியர்,
சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்த போது… வந்த எதிர்ப்பை அடுத்து,
அவருக்கு அடைகலம் கொடுத்தது… மத்திய கிழக்கில் உள்ள ஒரு முஸ்லீம் நாடு.
மற்ற மதங்களை… அவமதிக்கும் போது, முஸ்லீம்களுக்கு இனிப்பாக இருப்பது ஏன்?

அண்மைய பிரச்சினைக்கும்…. சிவலிங்கத்தை, ஆண் குறி போல் உள்ளது என்று,
ஒரு முஸ்லீம் சொன்னதற்கு பதிலடியாகத்தான்… முகமதுநபியை விமர்சித்தார்கள்.
உடனே… 57 முஸ்லீம் நாடுகள் தமது எதிர்ப்பை காட்டுகின்றார்கள்.

சிவலிங்கத்தையும், சரஸ்வதியையும் அவர்கள் விமர்சிக்கலாம் என்றால்…
இது.. ஏன் முடியாது? 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

சில வருடங்களுக்கு முன்பு…. ஹூசைன் என்ற முஸ்லீம் ஓவியர்,
சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்த போது… வந்த எதிர்ப்பை அடுத்து,
அவருக்கு அடைகலம் கொடுத்தது… மத்திய கிழக்கில் உள்ள ஒரு முஸ்லீம் நாடு.
மற்ற மதங்களை… அவமதிக்கும் போது, முஸ்லீம்களுக்கு இனிப்பாக இருப்பது ஏன்?

அண்மைய பிரச்சினைக்கும்…. சிவலிங்கத்தை, ஆண் குறி போல் உள்ளது என்று,
ஒரு முஸ்லீம் சொன்னதற்கு பதிலடியாகத்தான்… முகமதுநபியை விமர்சித்தார்கள்.
உடனே… 57 முஸ்லீம் நாடுகள் தமது எதிர்ப்பை காட்டுகின்றார்கள்.

சிவலிங்கத்தையும், சரஸ்வதியையும் அவர்கள் விமர்சிக்கலாம் என்றால்…
இது.. ஏன் முடியாது? 

உங்கள் உதாரணம் தொடர்பாக எனக்கு டவுட்டு இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

உங்கள் உதாரணம் தொடர்பாக எனக்கு டவுட்டு இருக்கிறது. 

என்ன டவுட்டு… என்று சொன்னால்தானே, அதை கிளியர் பண்ணலாம். 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

என்ன டவுட்டு… என்று சொன்னால்தானே, அதை கிளியர் பண்ணலாம். 😁

M. F. Husain

 
Maqbool Fida Husain[2] (17 September 1915 – 9 June 2011)[3][4] was an Indian artist known for executing bold, vibrantly coloured narrative paintings in a modified Cubist style.[5] He was one of the most celebrated and internationally recognised Indian artists of the 20th century.[5] He was one of the founding members of Bombay Progressive Artists' Group. M.F. Husain is associated with Indian modernism in the 1940s. His early association with the Bombay Progressive Artists' Group used modern technique, and was inspired by the "new" India after the partition of 1947. His narrative paintings, executed in a modified Cubist style, can be caustic and funny as well as serious and sombre. His themes—sometimes treated in series—include topics as diverse as Gandhi, Mother Teresa, the Ramayana, the Mahabharata, the British Raj, and motifs of Indian urban and rural life. In September 2020, his painting titled “Voices”, auctioned for a record $2.5 million.[6]

Husain's later works have stirred controversy, which included nude portrayals of Hindu deities, and a nude portrayal of Bharat Mata. Right-wing organisations called for his arrest, and several lawsuits were filed against him for hurting religious sentiments. He remained in a self imposed exile from 2006 until his death in 2011, accepting Qataricitizenship in 2010.

இப்போ சரி என நினைக்கிறேன். 

அது சரி, சிவலிங்கம்  என்பது ஆண் என்பதும் அதன் அடியில் இருப்பது பெண்குறி என்பதும் (இன விருத்தியும் அதன் செழிப்பும் -இயற்கையுடன் இணைந்த வழிபாட்டு முறை) மேலெழுந்தவாரியாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதானே. இதில் கோபப்பட என்ன இருக்கிறது ? 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்களின் மீது பா.ஜ.க, ஆர். எஸ். எஸ் மதவெறி தாக்குதல் களை தொடுக்கும் போதெல்லாம் முஸ்லீம் நாடுகள்  அதற்கு எதிராக எதுவும் செய்யவில்லை.

ஆனால் முகம்மது நபி பற்றிய விமர்சனத்துக்கு மட்டும் ஆவேசப்படுகிறார்கள். 

அதே போல் இலங்கையில் இந்து மதத்தை சேர்ந்த தமிழ் மக்கள் மீது இலங்கை இனவெறி அரசு தாக்குதலை தொடுத்த போதெல்லாம் அதற்கு ஒத்தாசையாக இருந்து வருகின்ற  இந்து பயங்கரவாதம் மதவெறி அரசு தேவையற்ற  உதவக்கரை  மத விடயங்களுக்கு மட்டுமே  முக்கியத்துவம் கொடுக்கிறது. 

மத வெறியின் டிசைன் அப்படி.

மத வேறி என்பது  முஸ்லீம் என்றாலும்  இந்து என்றாலும் ஒரே விதமான கோர முகம் கொண்டதே. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்களின் மீது பா.ஜ.க, ஆர். எஸ். எஸ் மதவெறி தாக்குதல் களை தொடுக்கும் போதெல்லாம் முஸ்லீம் நாடுகள்  அதற்கு எதிராக எதுவும் செய்யவில்லை.

ஆனால் முகம்மது நபி பற்றிய விமர்சனத்துக்கு மட்டும் ஆவேசப்படுகிறார்கள். 

அதே போல் இலங்கையில் இந்து மதத்தை சேர்ந்த தமிழ் மக்கள் மீது இலங்கை இனவெறி அரசு தாக்குதலை தொடுத்த போதெல்லாம் அதற்கு ஒத்தாசையாக இருந்து வருகின்ற  இந்து பயங்கரவாதம் மதவெறி அரசு தேவையற்ற  உதவக்கரை  மத விடயங்களுக்கு மட்டுமே  முக்கியத்துவம் கொடுக்கிறது. 

மத வெறியின் டிசைன் அப்படி.

மத வேறி என்பது  முஸ்லீம் என்றாலும்  இந்து என்றாலும் ஒரே விதமான கோர முகம் கொண்டதே. 

மதவெறி பற்றி சரியாக சொல்லியுள்ளீர்கள். அரபு நாடுகளின் இப்போதைய ஒன்றுபட்ட எதிர்ப்பிற்கு, வெறும் இந்தக் கருத்து மாத்திரம் காரணமல்ல, பிஜேபி முஸ்லிம்களுக்கு 8 வருடங்களாக செய்வதை பார்த்துக்கொண்டு இருந்து விட்டு தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கும்போது சேர்ந்து அடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மற்ற விடயங்களில் அரபு நாடுகளினால் சும்மா மூக்கை முடியாது, இது நல்ல சந்தர்ப்பம். காவிகளுக்கு இன பாசம் அதிகம், நாங்கள் என்னதான் இந்துக்கள் என்று கத்தினாலும் ஒன்றும் நடவாது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2022 at 06:03, நீர்வேலியான் said:

பிஜேபி முஸ்லிம்களுக்கு 8 வருடங்களாக செய்வதை பார்த்துக்கொண்டு இருந்து விட்டு தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கும்போது சேர்ந்து அடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.மற்ற விடயங்களில் அரபு நாடுகளினால் சும்மா மூக்கை முடியாது

தற்போது ரஷ்யாவால் குறைக்கப்பட்ட விசேட விலையில் பெற்றோலை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெருமளவு வாங்குகின்றது.முன்பு முஸ்லிம் நாடுகளில் இருந்து பெருமளவு வாங்கியது.முகமதுவை பற்றி உண்மையை சொன்னதை சாட்டாக வைத்து பெற்றோலால் ஏற்பட்ட கசப்பை தான் வெளிபடுத்தியுள்ளன  முஸ்லிம் நாடுகள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.