Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைனுக்கு... ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து, வழங்கப்பட வேண்டும்: ஐரோப்பிய ஆணையம் பரிந்துரை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்: ஐரோப்பிய ஆணையம் பரிந்துரை!

உக்ரைனுக்கு... ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து, வழங்கப்பட வேண்டும்: ஐரோப்பிய ஆணையம் பரிந்துரை!

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

‘ஐரோப்பிய மதிப்புகள் மற்றும் தரங்களுக்கு ஏற்ப வாழ உக்ரைன் தனது விருப்பத்தையும் உறுதியையும் தெளிவாக நிரூபித்துள்ளது’ என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறினார்.

பின்னர் ஒரு ட்வீட்டில், ‘ஐரோப்பியக் கண்ணோட்டத்திற்காக உக்ரேனியர்கள் இறக்கத் தயாராக உள்ளனர். அவர்கள் எங்களுடன் ஐரோப்பியக் கனவுடன் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.’ என உர்சுலா வான் டெர் லேயன் பதிவிட்டுள்ளார்.

அடுத்த வியாழன் மற்றும் வெள்ளியன்று பிரஸ்ஸல்ஸ் உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கத் தலைவர்கள் இந்த பரிந்துரையில் கையெழுத்திட இந்த முடிவு வழிவகை செய்கிறது.

உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆணையத்தின் நடவடிக்கையை வரவேற்று, இது ஒரு ‘வரலாற்று முடிவு’ என்று கூறினார்.

மேலும் அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘உக்ரைனின் வேட்பாளர் நிலை குறித்த நேர்மறையான ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் முடிவை நான் பாராட்டுகிறேன். ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் பாதையில் இது முதல் படியாகும், இது நிச்சயமாக எங்கள் வெற்றியை நெருக்கமாக கொண்டு வரும்’ என பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்தை நாடி வருகின்றது. ஆனால் ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து ஒன்றியத்தில் சேர முறையாக விண்ணப்பித்துள்ளது.

https://athavannews.com/2022/1287493

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய மதிப்புகள் மற்றும் தரங்கள்

 

75 ஆண்டுகளுக்கு சற்று குறைந்த காலத்திற்கு முன்பாக இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. அந்த சமயத்தில், 1945 இல், ஐரோப்பா முழுமையும் சின்னாபின்னமாகிக் கிடந்தது. கொலைக்களங்களிலும், நாஜி விசவாயு அறைகளிலும், மற்றும் குண்டுவீச்சுகளிலுமாய் 60 மில்லியனுக்கும் (60,000,000) அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர். இத்தகைய குற்றங்கள் இனியொரு முறை எப்போதும் நடக்கக் கூடாது என்று அப்போது கூறப்பட்டது. ஆனால் முதலாளித்துவம் ஜனநாயகம், செழுமை அல்லது அமைதிக்கு இணக்கமற்றது என்பது இன்று முன்னெப்போதினும் மிகவும் தெளிவாகிக் கொண்டிருக்கிறது.

மிக சக்திவாய்ந்த முதலாளித்துவ நாடான அமெரிக்காவின் தலைமையில் ஒரு அதி-வலது ஜனாதிபதி நின்று கொண்டு வட கொரியா, ஈரான், அணு-ஆயுத வல்லமை கொண்ட ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளை போரைக் கொண்டு அச்சுறுத்துகிறார். ஐரோப்பாவெங்கிலும் அதி-வலது கட்சிகள் மேலெழுச்சி காண்கின்றன. இத்தாலி, ஆஸ்திரியா, போலந்து, ஹங்கேரி, பின்லாந்து, பல்கேரியா, செக் குடியரசு, ஸ்லோவேக்கியா மற்றும் கிரீஸ் ஆகிய ஒன்பது நாடுகளில் அவை அரசாங்கத்தில் பங்கெடுத்துள்ளன; பிரான்சில் இரண்டாவது வலிமைமிக்க கட்சியாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்ததாக செய்தியில் சொன்னார்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் சேர்வதன் மூலம் உக்ரேனியர்களுக்கு நவீன பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்றார். அதனால் தானே  ஈழதமிழர்களும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் மேற்குலநாடுகளிலும் நிரந்தரமாக குடியேறினார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்ததாக செய்தியில் சொன்னார்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் சேர்வதன் மூலம் உக்ரேனியர்களுக்கு நவீன பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்றார். அதனால் தானே  ஈழதமிழர்களும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் மேற்குலநாடுகளிலும் நிரந்தரமாக குடியேறினார்கள்.

கண்ணு! உக்ரேனுக்கு இவ்வளவுகாலமும் இல்லாத பாதுகாப்பு அச்சுறுத்தல் இப்ப ஏன் திடீரண்டு வந்தது? :cool:

இப்போதும் புலம்பெயர்நாடுகளிலிருந்து தமிழர்களை நாட்டுக்கு அனுப்பிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அது பற்றி ஒரிரு வார்த்தைகள் உதிருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.😎

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை இலங்கைக்கு அனுப்பி கொண்டிருப்பது கவலையானது ஆனால் நவீன பாதுகாப்பான வாழ்க்கை இங்கே கிடைக்கும் என்பதற்காக முன்பு குடியேறிய தமிழர்கள் தங்களது விசுவாசத்தை துளியும் சம்பந்தமே இல்லாத சர்வாதிகாரி புரினுக்கு காட்டாமல் தாங்கள் வாழும் நாடுகளுக்கு காட்ட வேண்டும். அது இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் நன்மை தரும்.

  • கருத்துக்கள உறவுகள்

Ukraine மக்களுக்கு எப்பொழுதுமே ஏனைய ஐரோபிய நாடுகளின் பால் பேரன்போன்றும் கிடையாது. ஒரு காலத்தில் ஜெர்மனியை எதிர்த்தார்கள். பின்னர் அவர்களோடு கூட்டு சேர்ந்து சோவியத்தை எதிர்த்தார்கள்,அங்கு அன்றும் இன்றும் குறிப்பிட்ட மக்கள் யூதர்களை தொடர்ந்து வெறுக்கவே செய்கிறார்கள். எல்லாம் எந்தப்பக்கம் போனால் தமக்கு எது வாசியோ அதற்காக்கத் தான். என்ன ஒரு வித்தியாசம் என்றால் ரஷியன்ஸ்ஸை விட கொஞ்சம் பழக சௌகரியம் ஆனவர்கள். எந்த வெள்ளைத்தோல் இல்லாத மனிதரையும் தம்மை விட ஒரு படி குறைத்தே மதிப்பிடும் மனோபாவம் உள்ளவர்கள். செர்பியர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் என்று கனக்க இல்லை. எனக்கு தமிழ் நண்பர்களை விட ukraine நண்பர்கள் அதிகம் என்பதால் இதை தெளிவோடு சொல்ல முடியும்.

Edited by பகிடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பகிடி said:

Ukraine மக்களுக்கு எப்பொழுதுமே ஏனைய ஐரோபிய நாடுகளின் பால் பேரன்போன்றும் கிடையாது. ஒரு காலத்தில் ஜெர்மனியை எதிர்த்தார்கள். பின்னர் அவர்களோடு கூட்டு சேர்ந்து சோவியத்தை எதிர்த்தார்கள்,அங்கு அன்றும் இன்றும் குறிப்பிட்ட மக்கள் யூதர்களை தொடர்ந்து வெறுக்கவே செய்கிறார்கள். எல்லாம் எந்தப்பக்கம் போனால் தமக்கு எது வாசியோ அதற்காக்கத் தான். என்ன ஒரு வித்தியாசம் என்றால் ரஷியன்ஸ்ஸை விட கொஞ்சம் பழக சௌகரியம் ஆனவர்கள். எந்த வெள்ளைத்தோல் இல்லாத மனிதரையும் தம்மை விட ஒரு படி குறைத்தே மதிப்பிடும் மனோபாவம் உள்ளவர்கள். செர்பியர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் என்று கனக்க இல்லை. எனக்கு தமிழ் நண்பர்களை விட ukraine நண்பர்கள் அதிகம் என்பதால் இதை தெளிவோடு சொல்ல முடியும்.

பகிர்விற்கு... நன்றி பகிடி.
எனக்கு... உக்ரேன் ஜனாதிபதி செலென்ஸ்கியின்ரை மூஞ்சையையும்,
உருட்டு கதைகளையும் பார்த்தவுடனேயே... தெரிந்தது,
உக்ரேன்காரர் எல்லாரும், பக்கா....  ஜில்மால் காரங்கள் எண்டு. 😂

உவங்களுக்கு...  பாடம் படிப்பிக்க, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தான்... சரியான ஆள். 👍   

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழர்களை இலங்கைக்கு அனுப்பி கொண்டிருப்பது கவலையானது ஆனால் நவீன பாதுகாப்பான வாழ்க்கை இங்கே கிடைக்கும் என்பதற்காக முன்பு குடியேறிய தமிழர்கள் தங்களது விசுவாசத்தை துளியும் சம்பந்தமே இல்லாத சர்வாதிகாரி புரினுக்கு காட்டாமல் தாங்கள் வாழும் நாடுகளுக்கு காட்ட வேண்டும். அது இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் நன்மை தரும்.

உப்பிட்டவரை உயிருள்ளவரை நினை என்பதற்கு அமைய எனக்கு நன்றி விசுவாசம் என்றும் உண்டு.

ஐரோப்பாவிலும் இடதுசாரி வலதுசாரி கட்சிகள் உண்டு. உக்ரேனுக்கு ஆயுத விநியோகம் செய்வதை எதிர்ப்பவர்களும் உண்டு. உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையக்கூடாது என எதிர்ப்பவர்களும் உண்டு. உக்ரேன் நேட்டோவில் இணையக்கூடாது என்பவர்களும் உண்டு. ஜேர்மனிய மக்களில் ரஷ்ய சார்பு மக்களும் கட்சிகளும் இருக்கின்றன.அதே போல் ரஷ்ய எதிர் மக்களும் கட்சிகளும் இருக்கின்றன.

எனவே.....
நன்றி விசுவாசத்திற்காக உக்ரேன் நாசிகளுக்கு சார்பாக கருத்து எழுத வேண்டிய அவசியம் எனக்கில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.