Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம், சர்வதேச விமான நிலையம் ஊடாக... ஜூலை 1 ஆம் திகதி முதல், விமான சேவை ஆரம்பம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

வன்னியர் பிறந்த இடம் மதுரை. வளர்ந்த இடம் சென்னை. வேலை செய்யிற இடம் டுபாய்.😁

தவறு,

பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரைதான், புகுந்ததுதான் வேலை நிமித்தமாக சென்னை & அமீரகம்.! 😉

12 minutes ago, ஏராளன் said:

மதுரைக்கும் விமான சேவையைத் தொடங்குங்கப்பா, நம்ம வன்னியன் அண்ணா வந்து போக!

மேகக் கூட்டத்துக்குள் விலகும் "மதுரை விமான நிலையம்..!" 😍

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ராசவன்னியன் said:

மேகக் கூட்டத்துக்குள் விலகும் "மதுரை விமான நிலையம்..!" 😍

அரசியல்களை தவிர்த்து தமிழர்கள் என்று பார்க்கையில் தமிழ்நாட்டு தமிழர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். 
ஒரு காலத்தில்(போருக்கு முன்) தமிழ்நாட்டு மக்கள் வாழ்க்கை போல் எனது வாழ்க்கையும் இருக்கும் என கனவுகள் இருந்தது. ஏனெனில்  பள்ளியில் படிக்கும் போது தமிழ்நாட்டு/கோவில்கள் பற்றிய வரலாறுகள் நிறைய படித்து விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

 

இது மதுரை விமான நிலையத்திலிருந்து விமானம் மேலெழுந்து மாநரின் மேல் பறக்கும்போது எடுக்கபட்ட காணொளி.

திருப்பரங்குன்றம் மலை, பசுமலை, காணொளியில் 03:45நிமிடம் வரும்போது மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில் மலை என அனைத்தையும் காணலாம்.

யாழ்ப்பாணத்தையும் இப்படி காணும் காலம் வரவேண்டும்..! 😎

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

 

இது மதுரை விமான நிலையத்திலிருந்து விமானம் மேலெழுந்து மாநரின் மேல் பறக்கும்போது எடுக்கபட்ட காணொளி.

திருப்பரங்குன்றம் மலை, பசுமலை, காணொளியில் 03:45நிமிடம் வரும்போது மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில் மலை என அனைத்தையும் காணலாம்.

யாழ்ப்பாணத்தையும் இப்படி காணும் காலம் வரவேண்டும்..! 😎

 

 

வரும். நீங்களும் வருவீர்கள்😎

ஊரில் பெற்றோல் இல்லாமல் மாட்டுபட்டுடுவேனோ எண்டு பயமா கிடக்கு இல்லாட்டில் இப்பவே கிளம்பிவிட ரெடிதான். 

ஆனால் ஏனோ தெரியவில்லை திருச்சி போல் மதுரை விமான நிலையத்தை தரமுயர்த்த தயங்குகிறது ஒன்றிய அரசு. 

Edited by goshan_che
மைய - ஒன்றிய

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

யாழ்ப்பாணத்தையும் இப்படி காணும் காலம் வரவேண்டும்..! 😎

கடலுக்கால் கொண்டுவந்து இறக்கி
கடலுக்காலேயே ஏற்றிவிடுவார்கள்.

இல்லாவிட்டால் பக்கத்தில் இருக்கும் ராணுவ வளங்களை படம் பிடித்துவிடுவார்களே?

ஆனபடியால் யாழ்ப்பாணத்தை படமெடுக்கும் சந்தர்ப்பம் கிடையாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். விமான நிலையத்தில் இருந்து... ஜூலை 1ஆம் திகதி முதல் சர்வதேச விமான சேவைகளை, ஆரம்பிக்க திட்டம்!

இந்தியாவிற்கு அப்பால் புதிய வணிக விமானங்களை ஈர்க்கும் திட்டத்துடன், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜூலை 1ஆம் திகதி முதல் மீண்டும் சர்வதேச விமானங்களை ஆரம்பிக்க  திட்டமிடப்பட்டுள்ளது.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை ஆய்வுச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

இதன்போது, ஜூலை 1 முதல் சர்வதேச விமானங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் மற்றும் சர்வதேச விமான நிறுவன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பலாலி விமான நிலையம் இந்தியாவின் ஆதரவுடன் மீள் அபிவிருத்தி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2019 இல் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக மீண்டும் திறக்கப்பட்டது.

ஆரம்பத்தில், இந்தியாவின் எலையன்ஸ் ஏர் சென்னையில் இருந்து பலாலிக்கு வாரந்தோறும் மூன்று விமானங்களை நடத்தியது. இருப்பினும் ஆண்டின் இறுதியில் அது திடீரென நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், சர்வதேச விமான நிலையமாக தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கும் இந்தியாவிற்கு அப்பால் புதிய இடங்களுக்கு பறக்கும் விமான நிறுவனங்களை கவரும் வகையில் இந்த விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும் என்று டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

தற்போதுள்ள ஓடுபாதையில் 75 இருக்கைகள் கொண்ட விமானங்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்பதால், இந்திய உதவியுடன் ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்கான அடிப்படை பணிகளை தொடங்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், விமான நிலைய வளாகத்தில் டியூட்டி ஃப்ரீ மையத்தை ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தியுடன், யாழ். குடாநாட்டிற்குத் திரும்பவும் வளர்ந்து வரும் வர்த்தக வாய்ப்புகளில் முதலீடு செய்யவும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு டி சில்வா பகிரங்க அழைப்பை விடுத்துள்ளார்.

https://athavannews.com/2022/1287878

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.